Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Checkka Sivantha Thangam
Checkka Sivantha Thangam
Checkka Sivantha Thangam
Ebook109 pages1 hour

Checkka Sivantha Thangam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த விஷயம் - சில்லறை நகை விற்பனையில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஒழுங்கீனங்கள். இந்த நாவல் அந்த மனக்குறையை போக்குகிறது. வரிசையாக மூன்று கொலைகள் மூன்று பேரை கொல்ல செய்த இடங்களில் மூன்று வெவ்வேறு சினிமா ஸ்டில்கள். ஸ்டில்களை வைத்து மோப்பம் பிடித்ததில் கொலைகள் தங்கம் தொடர்பாக நடக்கிறது என தெரித்து கொள்கிறான் டியாரா. கொலையாளிகள் பிடிபட்டார்களா?வாசித்துத் தெரிந்துக் கொள்வோம்.

Languageதமிழ்
Release dateNov 5, 2022
ISBN6580111009219
Checkka Sivantha Thangam

Read more from Arnika Nasser

Related to Checkka Sivantha Thangam

Related ebooks

Related categories

Reviews for Checkka Sivantha Thangam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Checkka Sivantha Thangam - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    செக்கச் சிவந்த தங்கம்

    Checkka Sivantha Thangam

    Author :

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    கதைசுருக்கம்

    நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த விஷயம்- சில்லறை நகை விற்பனையில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஒழுங்கீனங்கள். இந்த நாவல் அந்த மனக்குறையை போக்குகிறது.

    வரிசையாக மூன்று கொலைகள்

    1. நடிகர் ஸ்யாம் சுந்தர்

    2. நடிகை பாகிரதி

    3. நடிகர் மிஹார் பாலேகர்

    மூன்று பேரை கொல்ல செய்த இடங்களில் மூன்று வெவ்வேறு சினிமா ஸ்டில்கள். ஸ்டில்களை வைத்து மோப்பம் பிடித்ததில் கொலைகள் தங்கம் தொடர்பாக நடக்கிறது என தெரித்து கொள்கிறான். டியாரா.

    கோவையில் மிகப்பெரிய நகைக்கடை முற்றுகையிடப்பட்டு இருநூத்தி சில்லரை பேர் பணயம் கைதிகளாக வைக்கப்படுகின்றனர்.

    நடிகர் நடிகையரை கொன்றவர்களும் நகைக்கடையை முற்றுகை யிட்டவர்களும் ஒன்றுதான் என அறிகிறான் டியாரா.

    முற்றுகையாளர்கள் இரு டிமாண்ட் வைக்கின்றனர்.

    ஒன்று : மத்தியஅரசு தங்கத்திற்கான ஜிஎஸ்டியையும் தங்க இறக்குமதி வரியையும் குறைக்கவேண்டும்.

    இரண்டு : மாநிலஅரசு தங்கவிற்பனையை ஒழுங்குபடுத்தும் விதமாய் பத்துஷரத்துகளை கொண்ட அவசர சட்டம் இயற்றவேண்டும்.

    முற்றுகையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல நடிக்கின்றன அரசுகள். கமாண்டோக்களால் முற்றுகையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

    மீண்டும் நகைவியாபாரம் அமோகமாக நடக்கிறது.

    சில முறைகேடுகள் சித்துபாத் கதை போல முடிவில்லாமல் தொடரும்.

    1

    சென்னை. தியாகராய நகர்.

    வெங்கட்ராமன் தெரு.

    ஏழாயிரம் சதுர அடியில் அந்த பங்களா கட்டப்பட்டிருந்தது. பங்களா ஒரு அரண்மனை போல காட்சியளித்தது. வெளிவாசல் ஒரு கோட்டையின் கதவுகள் போல வடிவமைக்கப்பட்டிருந்தது, பங்களாவுக்குள் நுழைந்ததும் வலப்பக்கம் ஒரு தோட்டம் வண்ண வண்ண மலர்களால் பூத்துக்குலுங்கியது. நான்கு டாபர்மேன் நாய்கள் தோட்டத்தில் உலவின,

    பங்களாவின் உள்சுவர்களில் வேட்டையாடப்பட்ட மிருகங்களின் தலைகள் பாடம் செய்யபட்டு டிஸ்பிளே செய்யப்பட்டிருந்தன.

    தோட்டத்தில் ஒரு சிறு பிள்ளையார் கோயில் இருந்தது,

    பழம்பெரும் நடிகர் எழில்வரதனின் பங்களா அது, அவரின் மரணத்துக்கு பின் அவரின் மகன் நடிகர் ஷ்யாம் சுந்தர் குடும்பமும் பேரன் நடிகர் மகாதேவ் குடும்பமும் வசிக்கின்றன.

    ஷ்யாம் சுந்தர் அப்பாவை போல கரிஷ்மா உள்ள நடிகரல்ல, ஆனால் அறுபது வயதுக்குள் 200 படங்களை நடித்து முடித்தவர். கனத்த உடல்திரேகம் காரணமாக நான்கு வருடங்களாக சினிமாவில் நடிப்பதில்லை.

    ஷ்யாம்சுந்தர் வயது 61 உயரம் 5அடி 7அங்குலம் எடை 120கிலோ. பேசும்போது அப்பாவின் குரலை இமிடேட் செய்வார். அரசியல்வாதிகளை யாரையும் பகைத்துக் கொள்ளமாட்டார். சிரித்தால் இரு கன்னங்களில் குழி விழும். விருந்தோம்பலில் சிறந்தவர்.

    ஒரு ட்யோட்டா பார்ச்சூனர் பங்களா வாசலில் வந்து நின்றது.

    செக்யூரிட்டி பீகார்தமிழில் வினவினான். யாரை பாக்கனும்-

    காரில் வந்தவர் தாடியை நீவிக்கொண்டார்.நெய்பொம்மை ஷ்யாம் சுந்தரை பாக்கனும்!

    அறுபத்தியோரு வயது கிழவனை நெய்பொம்மை என்கிறானே… ஷ்யாம் சுந்தரின் பழைய ரசிகனாய் இருப்பானோ?

    என்ன விஷயம்?

    நான் எடுக்கப்போற படத்துக்கு ஹீரோவா புக் பண்ணப் போறேன்!

    ‘அட பைத்தியக்காரா! இந்த ஆளு நடிச்சு எந்த படம் ஓடுச்சு? முப்பது வருஷத்துக்கு முன்னாடி வர வேண்டியவன் இப்ப வரானே!’

    சார்கிட்ட ஏற்கனவே போன்ல பேசி அப்பாயின்மென்ட் வாங்கிட்டீங்களா?

    பேசிட்டேன்பா… கதவைத்திற!

    பெரும் சப்தத்துடன் ரிமோட் இயக்கி கதவைத்திறந்து விட்டான் செக்யூரிட்டி.

    கார் உள்ளே பாய்ந்தது.

    ஏற்கனவே போர்டிகோவில் இரு கார்கள் நின்றதால் காரை இடதுபக்கம் தள்ளி நிறுத்தினார் வந்தவர்.

    காரிலிருந்து இறங்கினார். கையில் சூட்கேஸ் வைத்திருந்தார்.

    மெதுவாக உள்ளே நடந்தார்.

    பங்களா பணியாள் தென்பட்டான். ஜுனியரை பாக்கனுமா? சப்ஜுனியரை பாக்கனுமா?

    ஷ்யாம்சுந்தர் சாரை பாக்க வந்திருக்கேன். ஏற்கனவே அவர்கிட்ட பேசிட்டேன்!

    பங்களா முழுக்க சாம்பிராணி புகை கமழ்ந்தது.

    ஒவ்வொரு அறை வாசலிலும் யானை பொம்மைகள் காவல் காத்தன.

    மாடியில் இருக்கிறார் போங்கள்!

    மாடிபடிகளில் நடந்தார் வந்தவர்.

    அறைக்கதவை மும்முறை நளினமாக தட்டினார்.

    யெஸ் கமின்!

    இரவாடையில் இருந்தார் ஷ்யாம்சுந்தர்.

    வணக்கம். என் பெயர் கிருஷ்ணதாஸ்! நேற்று உங்களுக்கு போன் பண்ணியது நான்தான்

    பொள்ளாச்சி கிருஷ்ணதாஸ்! உக்காருங்க உக்காருங்க!

    வந்தவர் ஷ்யாம்சுந்தர் எதிரில் அமர்ந்தார்.

    "நான் இருபதுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்யும் தொழிலதிபன். என் வருட டர்ன்ஓவர் 500கோடி. எனக்கு கதைகவிதைகள் எழுதுவதில் ஆர்வம்

    Enjoying the preview?
    Page 1 of 1