Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panthaya Purakkal
Panthaya Purakkal
Panthaya Purakkal
Ebook120 pages45 minutes

Panthaya Purakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இணைய தளத்தில் வெளியாகும் என்னுடைய 7-வது சிறுகதைத் தொகுப்பு “பந்தயப் புறாக்கள்”. குடும்பக் கதை, சமூகக் கதை, காதல் கதை, நட்புக் கதை, என்று பல்வேறு வகை கதைகள் இத்தொகுப்பில் இருந்த போதும் “பந்தயப் புறாக்கள்” என்னும் குடும்பக் கதையின் பெயரையே தொகுப்பிற்கு வைக்கப்பட்டதன் காரணம், குடும்பக் கதையிலும் சஸ்பென்ஸை கதையின் கடைசி நொடி வரையிலும் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபிக்கும் கதை என்பதாலேயே.
ஒரு சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் கதைகள் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு கருத்தோ, படிப்பினையோ எடுத்துரைக்கப்படுமானால் அத்தொகுப்பு முழுமையான வரவேற்பை நிச்சயம் பெறும். அதே நேரம் அவ்வாறு எடுத்துரைக்கப்படும் கருத்து பூடகமாகவோ, கடின வார்த்தைகள் மூலமாகவோ, எடுத்துரைக்கப்படும் போது அவை பாமர மக்களைச் சென்றடைவதில் சிறு தள்ளாட்டம் ஏற்படுவதுண்டு. அதை தவிர்க்கும் எண்ணத்திலேயே இத் தொகுப்பின் எல்லாக் கதைகளும் சாதாரண வழக்கு மொழியிலேயே புனையப்பட்டுள்ளன.
கேபிள்காரன், என்னும் ஒரு பாத்திரத்தை நாம் நம் அன்றாட வாழ்வில் அனுதினமும் சந்திக்கின்றோம். அவனை ஒரு எந்திரமாக மட்டும் பார்க்கும் சமுதாயத்திற்கு அவனுக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கின்றான், என்பதைக் கூறும் விதமாய் படைக்கப்பட்ட கதை “கேபிள்காரன்”. இதன் பின்புலத்தில் உள்ள ஒரு ரகசியம் என்ன்வென்றால், அது ஒரு நிஜக்கதை. அந்தப் பாத்திரம் ஒரு நிஜப் பாத்திரம். அதன் காரணமாகவே, அக்கதையில் அந்தப் பாத்திரத்தின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
நிதானமாய் வாசியுங்கள். நிச்சயம் நெகிழ்வூட்டும்.
வணக்கம்.
இவண்,
முகில் தினகரன்
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580130005603
Panthaya Purakkal

Read more from Mukil Dinakaran

Related to Panthaya Purakkal

Related ebooks

Reviews for Panthaya Purakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panthaya Purakkal - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    பந்தயப் புறாக்கள்

    Panthaya Purakkal

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பந்தயப் புறாக்கள்.

    2. நிஜத்தின் நிழல்

    3. எங்க வீட்டு சர்வெண்ட்

    4. தெரு ஓவியன்

    5. கேபிள்காரன்

    6. இன்னார்க்கு இன்னாரென்று"

    7. இது என் சொத்து

    8. திண்ணை

    9. சைவ மனசு

    10. மூக்கு

    11. நேரில் கடவுள்

    12. புலியாகவே இருக்கட்டும்... புலி

    13. சம்பளம்

    14. சேய் மனசு

    15. சொத்துக்கு சொத்தாக!

    16. தார் சாலை மனசு

    17. வாய்ப்பாடு

    18. ஒரே ஹீரோ

    19. ஒரே நாளில் வராது!

    20. கூடு திரும்பாத பறவை...

    என்னுரை

    இணைய தளத்தில் வெளியாகும் என்னுடைய 7-வது சிறுகதைத் தொகுப்பு பந்தயப் புறாக்கள். குடும்பக் கதை, சமூகக் கதை, காதல் கதை, நட்புக் கதை, என்று பல்வேறு வகை கதைகள் இத்தொகுப்பில் இருந்த போதும் பந்தயப் புறாக்கள் என்னும் குடும்பக் கதையின் பெயரையே தொகுப்பிற்கு வைக்கப்பட்டதன் காரணம், குடும்பக் கதையிலும் சஸ்பென்ஸை கதையின் கடைசி நொடி வரையிலும் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபிக்கும் கதை என்பதாலேயே.

    ஒரு சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் கதைகள் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு கருத்தோ, படிப்பினையோ எடுத்துரைக்கப்படுமானால் அத்தொகுப்பு முழுமையான வரவேற்பை நிச்சயம் பெறும். அதே நேரம் அவ்வாறு எடுத்துரைக்கப்படும் கருத்து பூடகமாகவோ, கடின வார்த்தைகள் மூலமாகவோ, எடுத்துரைக்கப்படும் போது அவை பாமர மக்களைச் சென்றடைவதில் சிறு தள்ளாட்டம் ஏற்படுவதுண்டு. அதை தவிர்க்கும் எண்ணத்திலேயே இத் தொகுப்பின் எல்லாக் கதைகளும் சாதாரண வழக்கு மொழியிலேயே புனையப்பட்டுள்ளன.

    கேபிள்காரன், என்னும் ஒரு பாத்திரத்தை நாம் நம் அன்றாட வாழ்வில் அனுதினமும் சந்திக்கின்றோம். அவனை ஒரு எந்திரமாக மட்டும் பார்க்கும் சமுதாயத்திற்கு அவனுக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கின்றான், என்பதைக் கூறும் விதமாய் படைக்கப்பட்ட கதை கேபிள்காரன். இதன் பின்புலத்தில் உள்ள ஒரு ரகசியம் என்ன்வென்றால், அது ஒரு நிஜக்கதை. அந்தப் பாத்திரம் ஒரு நிஜப் பாத்திரம். அதன் காரணமாகவே, அக்கதையில் அந்தப் பாத்திரத்தின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    நிதானமாய் வாசியுங்கள். நிச்சயம் நெகிழ்வூட்டும்.

    வணக்கம்.

    இவண்,

    முகில் தினகரன்

    கோயமுத்தூர்.

    1. பந்தயப் புறாக்கள்.

    த பாருங்க மாப்ள... எங்க பரம்பரைல தலைச்சன் குழந்தைகள் எல்லாமே பெண் குழந்தைகதான்... அதனால... என் தங்கச்சி கலாவுக்கும் நிச்சயம் பெண் குழந்தைதான் பொறக்கப் போவுது கலாவின் அண்ணன் பரந்தாமன் உற்சாகமாய்ச் சொல்ல,

    அதுதான் இல்லைங்கறேன்... எங்க வம்சத்துல எல்லாருக்குமே முதல் குழந்தை ஆண் குழந்தைதான்... அதனால கண்டிப்பா என் மனைவியும் ஒரு ஆண் குழந்தையைத்தான் எனக்குப் பெத்துக் குடுக்கப் போறா... குணசேகரன் தன் மனைவியின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னான்.

    தன் அண்ணனுக்கும், கணவனுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த சந்தோஷ உரையாடலை புன்சிரிப்புடன் ரசித்தபடி ஆஸ்பத்திரி கட்டிலில் அமர்ந்திருந்தாள் கலா. அவள் கை அவளையுமறியாமல் தன் நிறை வயிற்றைத் தடவியது.

    ம்ஹூம்... நீங்க வேணாப் பாருங்க மாப்ள பெண் குழந்தைதான். இது பரந்தாமன்.

    பாவம்... ஏமாறப் போறீங்க... ஆண் குழந்தைதான் பிறக்கப் போவுது இது குணசேகரன்.

    சரி... பந்தயம் வெச்சுக்குவோமா மாப்ள? சொடுக்குப் போட்டுக் கேட்டார் பரந்தாமன்.

    தாராளமா

    எவ்வளவு வெச்சுக்கலாம்? நீங்களே சொல்லுங்க

    ம்ம்... எப்படியும் ஜெயிக்கப் போறவன் நான்தான்... அதனால தோற்கப் போற நீங்களே சொல்லுங்க குறுஞ்சிரிப்புடன் சொன்னான் குணசேகரன்.

    அவனுடைய அந்தக் குறுஞ்சிரிப்பு பரந்தாமன் மனதில் ஒரு கோப அலையைத் தட்டி விட, எனக்கெல்லாம் எத்தனை ஆனாலும் குடுக்கறதுக்கு வக்கிருக்கு... அதனால பாவம் நீங்களே உங்க வசதிக்கேற்ப நிர்ணயம் பண்ணிக்குங்க மாப்ள என்றான்.

    அப்படின்னா... நான் வக்கில்லாதவனா? வெடுக்கென்று கேட்டான் குணசேகரன். முகத்தில் மெலிதாய் எரிச்சல்.

    அப்பத் தொகையைச் சொல்ல வேண்டியதுதானே? ஆயிரமா? லட்சமா?ன்னு

    பரந்தாமன் கேட்ட தொணி குணசேகரனுக்கு ரோஷத்தை உண்டாக்கி விட, ஒரு லட்சம் பந்தயம்... ரெடியா? என்றான் கத்தலாய்.

    ஆடிப் போனாள் கலா.

    ஓ.கே... சம்மதம் என்று அவசரமாய்ச் சொல்லி விட்ட பரந்தாமன், ஒரு விநாடி யோசித்து விட்டு, மாப்ள... ஒரு சின்ன சந்தேகம்! ஏற்கனவே ஸ்கேன் பார்த்து... இன்ன குழந்தை!ன்னு தெரிஞ்சுக்கிட்டுப் பந்தயம் கட்டலையே? தன் சந்தேகத்தைக் கேட்டான்.

    சேச்சே... அப்படியெல்லாம் ஃப்ராடு பண்ற வம்சமில்லை எங்களோடது என்றான் குணசேகரன்.

    படக்க்குன்னு ஒரு லட்சம் வரை போயிட்டீங்களே? அதான் கொஞ்சம்... பரந்தாமன் நம்பிக்கை இல்லாமல்தன் தங்கையைப் பார்க்க, அவளும் இல்லைண்ணா... நாங்க ஸ்கேனெல்லாம் எதுவும் பார்க்கலை!என்று கூறும் விதமாய் இட, வலமாய்த் தலையாட்டினாள்.

    தங்கை பொய் சொல்ல மாட்டாள், என்பதில் உறுதி கொண்டவன், ஓ.கே! இது வரை ஸ்கேன் பார்க்கலைங்கறதை நம்பறேன்... அதே மாதிரி இனிமேலும் பார்க்கக் கூடாது... அதுதான் பந்தயத்தோட நிபந்தனை... என்ன சம்மதமா?

    சரி... பார்க்க மாட்டோம்... ஆனா பந்தயத்துல தோத்துட்டு... சும்மா வாய்ப் பேச்சுக்குத்தான் சொன்னேன்... வெளையாட்டுக்குத்தான் சொன்னேன்னு சமாளிக்கக் கூடாது... குணசேகரன் தன் மைத்துனனை நம்பாமல் கேட்டான்.

    அய்யய்ய... அந்த மாதிரி ஆளு நானில்லை மாப்ள... வாக்குச் சுத்தமான ஆளு!

    எப்படி நம்பறது? நக்கலாய் குணசேகரன் கேட்டு விட,

    ஹூம்... பொறக்கப் போற அந்தக் குழந்தை மேல சத்தியம்யா... போதுமா? பரந்தாமன் விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கத்த,

    நடுங்கிப் போனாள் கலா. பிரசவத்திற்கு டாக்டர் குறித்த நாளைக்கு மூன்று தினங்கள் முன்னதாக வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிப் படுத்திருந்தவளுக்கு அந்த இருவரின் விவாதமும், பந்தயமும் ஒரு அச்சத்தையே உருவாக்கியது. "கடவுளே... இதுல யார் ஜெயிச்சாலும் இன்னொருத்தருக்கு மனக்கசப்பு வந்துடுமே...! அப்படித்தான் பந்தயம் கட்டின தொகையாவது சின்னத் தொகையா? போனாப் போகுதுன்னு விட்டுடறதுக்கு... ஹூம்... ஆவேசத்துல ரெண்டு பேரும் லட்சத்துக்கல்ல போயிட்டாங்க! நிச்சயமா

    Enjoying the preview?
    Page 1 of 1