Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naplesil Sankarlal
Naplesil Sankarlal
Naplesil Sankarlal
Ebook151 pages1 hour

Naplesil Sankarlal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பயணத்தின் போது தமிழ்வாணன் ஒரு பெரும் பணக்காரனான லக்கி லூசியானவை சந்திக்கிறார். இவர் இத்தாலியில் இருக்கும் நேபிள்ஸ்யை சார்ந்தவர். அந்த சந்திப்பின் போது தமிழ்வாணனிடம், தான் மிக பெரிய ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறுகிறார். அவருக்கு உதவுவதற்காக, தமிழ்வாணன் சங்கர்லாலிடம் தொலைபேசியில் விஷயத்தை கூறி அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறார். அதை தொடர்ந்து சங்கர்லால் நேபிள்ஸ் நோக்கி பயணமாகிறார். பொதுவாக நேபிள்ஸ் வெளிநாட்டினவருக்கு அத்தனை பாதுகாப்பானதில்லை. சங்கர்லாலுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ள நீங்கள் சங்கர்லாலுடன் நேபிள்ஸ் செல்ல தயாராகி இந்த நாவலை தொடருங்கள்!

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136605872
Naplesil Sankarlal

Read more from Tamilvanan

Related to Naplesil Sankarlal

Related ebooks

Reviews for Naplesil Sankarlal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naplesil Sankarlal - Tamilvanan

    http://www.pustaka.co.in

    நேபிள்ஸில் சங்கர்லால்

    Naplesil Sankarlal

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    நேப்பிள்சில் சங்கர்லால்

    இந்தத் தொடர்கதையில் வரும் பெயர்கள்:

    லக்கி லூசியானோ

    பெர்கஸ்

    மரியா

    ஹெலன்

    காஸ்மன்

    அன்னா

    கோர்டஸி

    ஒனாஸிஸ்

    ராயல் ஓட்டல்

    காப்ரிஸ் க்ளப்

    1

    உலகத்திலுள்ள மாபெரும் குற்றவாளிகளையெல்லாட கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் சங்கர்லாலின் பெயர், ஐரோப்பா முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்த இந்த வேளையில்...

    அவர்,

    நேப்பிள்ஸுக்குப் போயிருக்க வேண்டாம்.

    ஹாங்காங்கில் அவர் துப்பறிந்த ஆற்றலும், பெர்லினில் அவர் காட்டிய திறமையும், உலகத்தின் மாபெரும் குற்றவாளிகளையெல்லாம் நடுங்க வைத்துக் கொண்டிருந்தன!

    சங்கர்லால் உயிருடன் இருந்தால் இனிமேல் தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்த மாபெரும் குற்றவாளிகள், சங்கர்லாலை எப்படியாவது ஒழித்துக்கட்டத் திட்டமிட்டிருப்பதாகப் பிரிட்டனிலிருந்து வரும் ஒரு பத்திரிகை ஒரு பெரிய தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டிருந்தது!

    இந்தப் பத்திரிகையின் தலைமை நிருபர், துணிந்து கொடியவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து, அவர்களுடன் இரகசியமாகத் தொடர்பு கொண்டு செய்திகளைச் சேகரிப்பவர். ஆகையால், இந்தப் பத்திரிகையில் வரும் செய்திகள் எப்போதும் உண்மையானவையாகவே இருக்கும்!

    என்றாலும்,

    சங்கர்லால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கலங்கவில்லை!

    சங்கர்லாலுக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காகவே சங்கர்லால் டோக்கியோ வந்து தங்கியிருக்கிறார். டோக்கியோவில் வந்து தங்கியிருந்த போதிலும், உலகம் முழுவதிலிருந்தும் அவருக்கு அடிக்கடி விரைந்த செய்திகள் வந்தன, வந்து கொண்டே இருந்தன. ஏதாவது ஒரு வழக்கைத் துப்பறியும்படி எல்லா நாடுகளிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. எந்த நாட்டில் கொலை நடக்கவில்லை! எந்த நாட்டில் கொள்ளை நடக்கவில்லை!

    சங்கர்லால், பெர்லினிலிருந்து திரும்பியதும், மறுநாளே ஒரு கைப்பெட்டியுடன் இத்தாலி நாட்டிலுள்ள நேப்பிள்ஸுக்குப் புறப்பட முன்னேற்பாடானார்.

    சங்கர்லாலின் மனைவி இந்திரா வியப்புடன் அவரைப் பார்த்தபோது, எனக்கு ஒரு வாரம் ஓய்வு வேண்டும். நேப்பிள்ஸுக்குப் போவதைப் பற்றி எவரிடமும் மூச்சு விடாதே! என்றார்.

    நன்றாக இருக்கிறது. பெர்லினிலிருந்து வந்ததும் வராததுமாக நேப்பிள்ஸ் என்ன வேண்டியிருக்கிறது? பெர்லினிலிருந்து அப்படியே நேப்பிள்ஸுக்குப் போய்விட்டு வந்திருக்கலாமே! என்று மிகச் சினந்துகொண்டாள் இந்திரா. அதே நேரத்தில் அவளுக்கு அழுகையும் வந்தது. சினத்தாலும் சிந்திய கண்ணீராலும் அவள் முகம் மிகச் சிவந்தது!

    இங்கே இருந்தால் என்னைச் சும்மா விடமாட்டார்கள். இலண்டனிலிருந்தும், சிகாகோவிலிருந்தும், நியூயார்க்கிலிருந்தும் அடிக்கடி அழைப்புகள் வருகின்றன. வந்து கொண்டே இருக்கின்றன. ஆபத்தில் இருக்கும் பணக்காரர்கள் எல்லாரும் உடனே என்னை வரும்படி அழைக்கிறார்கள். அதனாலேயே ஒரு வாரம் எவருக்கும் தெரியாமல் நேப்பிள்ஸுக்குப் போய்த் தங்கியிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு வருகிறேன். உடனே திரும்பி விடுகிறேன். உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையால்தான் பெர்லினிலிருந்து நேராக நேப்பிள்ஸுக்குப் போகாமல், இங்கே உன்னைப் பார்க்க டோக்கியோவுக்கு வந்தேன்!

    இதைக் கேட்டதும், இந்திரா திடீரென்று, நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்களே?

    இந்திரா இப்படி இதுவரை கேட்டதில்லை.

    எப்போதாவது நான் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறேனா? என்று மெல்லச் சமாளித்தார் சங்கர்லால்.

    சரி, அப்படியானால் உண்மையைச் சொல்லுங்கள் நேற்று நடு இரவில் தொலைபேசியில் உங்களுக்கு ஓர் அழைப்பு வந்ததே, உங்களுடன் பேசியது யார்?

    தமிழ்வாணன். அவர் சென்னையிலிருந்து பேசினார்.

    பொய். லக்கி லூசியானோ என்ற பெயர் அடிபட்டதே, அந்த லக்கி லூசியானோ யார்?

    நேப்பிள்ஸில் வாழும் ஒரு பெரும் பணக்காரர் அவர். இந்த லக்கி லூசியானோ ஒரு கொடிய கூட்டத்தின் தலைவர் என்று எல்லோரும் எண்ணுகிறார்கள். ஆனால் இவர் மீது இதுவரை எந்தக் குற்றத்தையும் உறுதிப்படுத்த முடியவில்லை. மெய்ப்பிக்க முடியவில்லை. உலகத்திலுள்ள பெரிய பத்திரிகைகளெல்லாம் தங்களது நிருபர்களை அனுப்பி இந்த லக்கி லுசியானோவைப், பேட்டி கண்டு எழுதத் துடிக்கின்றன. ஆனால் இவர் எவருக்கும்! பேட்டி கொடுக்கவில்லை. அதே நேரத்தில், தற்செயலாக உலகப் பயணம் செய்து கொண்டிருந்த தமிழ்வாணனுக்குப் பேட்டி கொடுத்தார். தம் துன்பங்களைத் தமிழ்வாணனிடம் இவர் விளக்கினார். தமிழ்வாணனுக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. இது பற்றித் தமிழ்வாணன் தொலைபேசியில் என்னிடம் சொன்னார்.

    புரிகிறது. இப்போது அந்த லக்கி லூசியானோ ஏதோ ஒரு பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார். லக்கி லூசியானோ உங்களுடன் நேரில் தொடர்பு கொள்ளாமல், தமிழ்வாணனின் சிபாரிசைப் பெற்றிருக்கிறார். அவ்வளவு தானே?

    அதெல்லாம் இல்லை இந்திரா, நீ வேண்டுமானால் தமிழ்வாணனுடன் பேசிப் பாரேன். நான் நேப்பிள்ஸ் போவதை அறிந்ததும், தமிழ்வாணன் என்னுடன் தொடர்பு கொண்டு, லக்கி லூசியானோவின் பங்களாவில் தங்க ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான், நான் வருகிறேன். என்று சொல்லிக் கொண்டே கண்ணடித்தார் சங்கர்லால்.

    பிறகு,

    அவளிடம் விடைபெற்றார். புறப்பட்டார்.

    இந்திராவுக்குப் புரிந்துவிட்டது.

    லக்கி லூசியானோவின் வழக்கில் சங்கர்லாலைத் தலையிடும்படி தமிழ்வாணன் கேட்டுக்கொண்டார். அதனால்தான் சங்கர்லால் உடனே நேப்பிள்ஸுக்குப் புறப்பட்டுவிட்டார் என்பது இந்திராவுக்கு மிகத் தெளிவாகப் புரிந்துவிட்டது.

    இதனால்,

    இந்திரா, தானும் நேப்பிள்ஸ் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கவில்லை.

    2

    'நேப்பிள்ஸைப் பார்த்துவிட்டு இறந்து போ' என்பது ஒரு பழமொழி. ஆங்கிலப் பழமொழி. உலகத்திலே மிக அழகிய நகரங்களில் ஒன்றான நேப்பிள்ஸைப் பார்க்காமல் எவரும் இறக்கக்கூடாது என்று இந்தப் பழமொழிக்குப் பொருள் என்று எல்லாரும் எண்ணுகிறார்கள். இது தவறு. நேப்பிள்ஸைப் பார்க்கப் போகும் வெளிநாட்டவர்கள் உயிருடன் அங்கிருந்து திரும்புவது அரிது என்பதுதான் இதற்கு இப்போது பொருள்!

    இந்த உண்மையைக் கண்டுபிடிக்கச் சங்கர்லாலுக்கு நீண்ட நேரம் பிடிக்கவில்லை.

    'லக்கி லூசியானோ ஒரு குற்றமற்ற மனிதர் என்றே என் மனத்தில் படுகிறது. ஆகையால், அவருக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தில் இருந்து நீங்கள் அவரைக் காப்பாற்றியாக வேண்டும்' என்று தமிழ்வாணன், சங்கர்லாலிடம் தொலைபேசியில் சொன்ன சொற்கள் திரும்பத் திரும்பச் சங்கர்லால் மனத்தில் வட்டமிட்டன!

    ஆகட்டும் தமிழ்வாணன். உங்களுக்காக நான் போகிறேன். ஆனால் ஒன்று, லக்கி லூசியானோவுக்கு நான் வருவது தெரிய வேண்டாம். என்னால் வரமுடியவில்லை என்று சொல்லிவிடுங்கள். நான் நேப்பிள்ஸில் ஊர் சுற்றப் போகிறவனைப் போல் போகிறேன். நானே வாய்ப்பு வரும்போது அவருடன் தொடர்பு கொள்கிறேன். அவருடைய பங்களாவில் போய்த் தங்குவதை நான் விரும்பவில்லை.

    புரிகிறது. ஆனால் ஒன்று, லக்கி லூசியானோ மிகவும் அறிவுக் கூர்மையுள்ளவர். அவர் எப்படிப்பட்ட ஆபத்தையும் சமாளிக்கக் கூடியவர். அவராலேயே இந்தத் தடவை அவருக்கு வந்திருக்கும் ஆபத்தைச் சமாளிக்க முடியவில்லை என்னும்போது, உண்மையில் இந்த வழக்கு மிகப் பெரிய வழக்காக இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன் என்றார் தமிழ்வாணன்.

    சங்கர்லாலின் திட்டப்படி தமிழ்வாணன் லக்கி லூசியானோவுடன் தொடர்பு கொண்டு, சங்கர்லாலுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அவர் இப்போது வரமுடியாத நிலையில் இருக்கிறார் என்றும், உடனே சொல்லிவிட்டார்.

    ஆகையால்,

    நேப்பிள்ஸ் விமான நிலையத்தில் சங்கர்லால் இறங்கிய போது, தன்னை வரவேற்க எவரும் வந்திருக்கமாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டு கைப்பெட்டியுடன் நடந்தார்.

    சங்கர்லாலின் கலைந்த கிராப்பும், தளர்ந்த கழுத்துப் பட்டையும், பரந்த

    Enjoying the preview?
    Page 1 of 1