Sankarlalukku Savaal
()
About this ebook
தடம் எண் 527ல் உள்ள சென்னை பஸ் இன்னும் கோவை வந்து சேரவில்லை.
அந்த பஸ் வந்து சேர்ந்து அதில் உள்ள ஒரு பயணி மட்டும் பஸ்ஸை விட்டு இறங்கவில்லை. ஏனெனில் அவர் இறந்து போயிருந்தார்.
அவர் யார்? அவர் எவ்வாறு இறந்தார்? அது கொலையா? தற்கொலையா? என்பதை சங்கர்லால் மிக திறமையுடன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதை பல திருப்பங்களுடன் நாம் கதைக்குள் சென்று காண்போம்.
Read more from Lena Tamilvanan
Vidiyatha Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsKolai Express Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Sankarlal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sankarlalukku Savaal
Related ebooks
En Peyar Dhayalan Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Vishame Vaa Rating: 3 out of 5 stars3/5Indhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsIlamaiyil Kol Rating: 5 out of 5 stars5/5Nee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Punnagai Sei Thozhi Rating: 5 out of 5 stars5/5Ini Min Mini Rating: 5 out of 5 stars5/5Abaayam Thodathey! Rating: 5 out of 5 stars5/5Anjana Archana Dhayalan Rating: 5 out of 5 stars5/5Sathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsEn Irantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsIruthi Thudippu Rating: 5 out of 5 stars5/5January Iravugal Rating: 2 out of 5 stars2/5Ini Oru Sathi Seivom Rating: 0 out of 5 stars0 ratingsPathu Pergal Thediya Pathu Kodi Rating: 0 out of 5 stars0 ratingsPidi 22 Rating: 5 out of 5 stars5/5Poi Mugangal Rating: 5 out of 5 stars5/5Cairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsKarugiya Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsParisil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSollungal Seyyapadum Rating: 0 out of 5 stars0 ratingsSavi1, Savi2, Savithri Rating: 0 out of 5 stars0 ratingsKannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsKaalgal Therinthana Rating: 5 out of 5 stars5/5Ragasiyam Ramyamanathu Rating: 5 out of 5 stars5/5Cabaret Girl Rating: 5 out of 5 stars5/5Uthra! Uyir Thaa! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sankarlalukku Savaal
0 ratings0 reviews
Book preview
Sankarlalukku Savaal - Lena Tamilvanan
http://www.pustaka.co.in
சங்கர்லாலுக்கு சவால்
Sankarlalukku Savaal
Author:
லேனா தமிழ்வாணன்
Lena Tamilvanan
For more books
http://www.pustaka.co.in/home/author/lena-tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
கோவை திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக பஸ் ஸ்டாண்டுக்குச் சுறுசுறுப்பை வழங்கியிருந்த காலை நேரம் அது.
கூட்டில் அடையும் கோழிகள் போல் ஒவ்வொன்றாகப் பஸ்கள் வந்த வண்ணம் இருந்தன.
- சிலர் கடமைகளுடன்
- சிலர் கவலைகளுடன்
- சிலர் அழுக்குகளுடன்
இறங்க,
சிலர் குழந்தைகளோடும், சிலர் மூட்டை முடிச்சுக்களோடும் இறங்கினார்கள்.
சென்னையிலிருந்து புறப்பட்டுக் காலையில் கோவை வந்து சேரவேண்டிய தடம் எண் 527 இன்னும் வந்தபாடில்லை.
அதில் வரும் தங்கள் ஆசாமிகளை வரவேற்க வந்திருந்தவர்கள் பேப்பர் படித்து, பேசி முடித்து, டீகுடித்து, நின்று, சாய்ந்து, உட்கார்ந்து, களைத்துப் போனார்கள்.
ஒரு கிழவனார் பொறுமையில்லாமல் டைம் கீப்பரிடம் போய்க் கேட்டார்.
என்னங்க 527 வந்துடுமா?
வராம எங்கே போகும்?
கடுப்படித்தார் டைம் கீப்பர்.
சற்றே ஏமாற்றம் அடைந்தவராய்ப் பெரியவர் தொடர்ந்து கேட்டார்: ஏன் லேட் ஆகிறது?
யாருக்குத் தெரியும் சார்? உங்களை மாரித்தான் நாங்களும்.
முகத்தில் அதே சலிப்பு (காலையிலேயே இப்படியா?)
பாருங்க எப்படிப் பொறுப்பு இல்லாமப் பதில் சொல்றாங்கன்னு.
என்று முன்பின் தெரியாத ஓர் ஆசாமியிடம் தன் ஆதங்கத்தைத் தெரியப்படுத்தியபடி நகர்ந்தார் பெரியவர்.
அவர் மனம் தொடர்ந்து எண்ணியது. இதுவே ஃபாரினா இருந்தா...
மணி 9.30.
தடம் எண் 527 தடம்மாறிப் போய்விட்டதா, அல்லது தடம் புரண்டு விட்டதா?
காத்திருந்த சிலர் இப்படி விபரீதமாகச் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.
தடம் எண் 527 நுழைந்தபோது சரியாக மணி 9.40. இன்ஜின் இருமுறை தும்மிவிட்டு நின்றது.
பிளாட்பாரத்தில் நின்ற ஒரு டிரைவர் கேட்டார்: என்னய்யா எழிலு, கல்யாண ஊர்வலக் கணக்கா வர்றே?
அதையேம்பா கேக்குறே? ஹோஸ் பைப் அவுட், புதுசு மாட்டி வண்டியை எடுத்துக்கினு வர்றதுக்குள்ளே பேஜாராப் போச்சுப்பா!
சென்னைத் தமிழ் கோவைக்காற்றில் கலக்க -
த்ச்சூ த்சூ!
என்றார் பிளாட்பார டிரைவர் செயற்கையாக.
கண்டக்டர் செல்வநம்பி குதித்து ஓடினார் டைம் கீப்பரை நோக்கி.
அவருக்கு எதிரே கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டுச் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு, வண்டி ஏன் தாமதம் என்று குட்டிப்பிரசங்கம் செய்துவிட்டு, டிக்கெட்டுகளையும், தொகையையும் எடுத்து அடுக்க ஆரம்பித்தார்.
வண்டியிலிருந்து இறங்கிய எழில், பல்விளக்கி, தினத்தந்தியின் போஸ்டர் தலைப்பைப் பார்த்து, தம் இழுத்து, தன் சகாக்களுடன் விவாதித்து, பையை வண்டியில் தன் இருக்கைக்கு அடியில் வைத்ததை நினைவுக்குக் கொண்டு வந்தவராய் பஸ்ஸை நோக்கி நடந்து கதவைத் திறந்தபோது -
- அவர் உதட்டில் ஓர் இளக்காரமான புன்னகை உதித்தது. எட்டாம் எண்ணின் ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்த ஆசாமி இன்னும் எழுந்திருக்கவேயில்லை.
என்ன சார், இன்னுமா அசதியும் தூக்கமும்? பஸ் கோயம்புத்தூர் வந்து சேர்ந்து பதினைந்து நிமிஷம் ஆவுது. இறங்குங்க!
அவருடைய ராஜபார்ட் குரலைக் கேட்டுப் பஸ் ஸ்டாண்டில் பாதிப்பேர் கவனம் திசை திரும்பியவர்களாய் முன் சீட்டில் சாய்ந்தபடி இருந்த அந்த ஆசாமியைப் புருவங்கள் வளையப் பார்த்தார்கள்.
கத்திக் கொண்டிருந்த தன் குழந்தையைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப்போன ஒரு நடுத்தர வயதுத்தாய், இதுதான் சாக்கு என்று, அங்கே பாரும்மா, அந்த மாமா இன்னும் தூங்குறாரு!
என்று சொல்ல, அந்தக் குழந்தை தன் அழுகையின் வீரியத்தைக் குறைத்துக்கொண்டு, தன் ‘புதிய மாமா'வைப் பார்த்தது.
பையை எடுத்துக் கொண்டு நகர்ந்தபோது, அந்த ஆசாமி இறங்கினாரா என்கிற கவலைகூட எழிலுக்கு இருக்கவில்லை.
காப்பியைப் பருகியபடி நிமிர்ந்தபோது, செல்வநம்பி கணக்கை ஒப்படைத்துவிட்டு வந்ததைப் பார்த்ததும்தான் ஏதோ நினைவு வந்தவராய், யோவ் செல்வம்! என்னய்யா அந்த எட்டாம் நம்பர்காரர் எழுந்திருக்க மாட்டேங்கிறாரு, போய்க் கிளப்புய்யா. வண்டியை ஷெட்டுக்கு ஓட்டணும்.
மனுஷனுக்குத் தூக்கம் அவசியம்தான். ஆனாலும் இப்படியா? என்ன மனுஷ ஜென்மமோ?
செல்வநம்பி முன்பக்கமாய் வண்டியில் ஏறி, சார்! சார் எந்திரிங்க... கோயமுத்தூர் வந்தாச்சு!
ஆள் அசையவில்லை.
தோளைத் தொட்டு உலுப்பியபோது –
உடம்பு –
சட்டென்று சரிந்து –
நிலைகுலைந்து விழுந்தது!
தலை ‘நச்’சென்று கால்வைக்கும் இடத்தில் மோதியது.
செல்வநம்பி ஆடிப்போனார். மனசு முழுவதும் நெருப்புப் பந்தால் தாக்கிய மாதிரி உணர்வு.
எழி...
செல்வநம்பிக்கு வார்த்தை அதற்குமேல் வரவில்லை. பஸ்ஸே அதிரும்படி இறங்கி ஓடினார் டெப்போ மேனேஜர் அறையை நோக்கி.
என்னய்யா, என்னய்யா?
எழில் பின்னாலேயே ஓட -
சார் சார்! நான் 527-ன் கண்டக்டர் சார். நம்ம வண்டியிலே வந்த ஒருத்தர் வண்டியிலேர்ந்து இறங்காமல் இருந்தார் சார். தூங்கறார்ன்னு நினைச்சுத் தோளை உலுப்பினேன் சார். சாஞ்சுட்டார் சார். எனக்கு என்னவோ விபரீதமா ஆகியிருக்குமோன்னு பயமா இருக்கு சார்!
செல்வநம்பியின் முகம் முழுக்கக் கலவரம் பரவி நின்றது.
டெப்போ மேனேஜர் பதட்டப்படாமல் எழுந்து, சுற்று முற்றும் நின்றவர்களைப் பார்த்துவிட்டு, வாங்க
என்றார்.
பஸ்ஸில் ஏறி, தன் விதவிதமான கோணத்தில் சினிமா ஒளிப்பதிவாளர் மாதிரி நின்று, பார்த்து, கிட்டே போய், உடலைத் தொட்டு, மூக்கருகே கையை வைத்துப் பார்த்து -
முகத்தில் கவலையைப் பதித்துக்கொண்டு –
ஆசாமி இறந்துட்டார். இறந்து போய் ரொம்ப நேரம் ஆகியிருக்கணும். உடம்பு ஜில்லிட்டுப் போச்சு
என்றார்.
இன்ஸ்பெக்டர் நல்லியப்பனின் கூர்மை மிகுந்த பார்வை முதலில் அவருடைய உடைமை ஏதும் இருக்கிறதா என்று பார்த்தது. அவர் இருக்கைக்குக் கீழே அந்த ஃப்ரீப்கேஸ் அப்படியே இருந்தது. கர்ச்சீப்பால் கைப்பிடியைச் சுற்றியபடி பெட்டியைப் பன்னிரெண்டாம் இருக்கையில் அமர்ந்து குனிந்து எடுத்து மெல்லத் திறக்க முயன்றார். பூட்டப்பட்டிருக்குமோ என்று தயக்கம். இல்லை. பூட்டப்படவில்லை. பெட்டி திறந்து கொண்டது.
பதின்மூன்றாம் இருக்கையில் பெட்டியைக் குழந்தையாய் அமர வைத்து மேல்பாகத்தைக் கைப்பிடியில் சாத்தினார்.
ரொம்பவும் குறைவான பொருள்கள். வேட்டி, சட்டை, அண்டர்வேர், பனியன், சிறியதொரு தோல் பையில் பல் விளக்கும் பிரஷ், சிறிய பேஸ்ட் டியூப். கொஞ்சமும் அழுக்கு இல்லாத அழகான சீப்பு. பாண்ட்ஸின் மகா சின்ன பவுடர் டின். ஒரு சோப்பு டப்பா.
கிளிப் கொண்ட மேல் பாகத்தில் கொஞ்சம் சில்லறைக் கண்காட்சியில் வைக்க வேண்டிய அளவுக்குக் குறைந்துபோன ஒரு ரூபாய்ச் சலவை நோட்டுக்கள் கொஞ்சம். இவைதாம் உள்ளடக்கம். இவற்றைத் தவிர ஒரு குண்டூசிகூடக்