Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pidi 22
Pidi 22
Pidi 22
Ebook264 pages1 hour

Pidi 22

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அவள் ஒரு பணக்காரி. நல்ல அழகியும் கூட. வயது இருபது இருக்கும். அவள் ஒரு தொழில் அதிபரின் தத்து மகள்.
தனக்கு ஆபத்து வரப்போகிறது என்று அவளுக்கு தெரிகிறது. எனவே அவள் தமிழ்வாணனிடம் சென்று தன்னை காப்பாற்றும் படி கேட்டுக்கொள்கிறாள்.
அவர் அவளை எவ்வாறு காப்பாற்றப் போகிறார். அவருக்கும் பிடி22 என்கிற கலைக்கும் என்ன சம்மந்தம்.
அவள் தப்பிப்பாளா மாட்டாளா?
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136605903
Pidi 22

Read more from Tamilvanan

Related to Pidi 22

Related ebooks

Reviews for Pidi 22

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pidi 22 - Tamilvanan

    http://www.pustaka.co.in

    பிடி 22

    Pidi 22

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    1

    காரிலிருந்து இறங்கிய அந்த அழகிக்கு இருபது வயது இருக்கும். விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து, கிடைப்பதற்கு அரிய சில வைரங்கள் பதித்த நகைகளை அவள் அணிந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஒமேகா வைரக்கடிகாரத்தின் விலை மட்டும் இலட்ச ரூபாய் இருக்கும்! இந்தியப் பெண்களில் பலர், ஒரு சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை உடல் முழுவதும் அணிந்துகொண்டு, நகைப்பற்று மிகுந்தவர்களாக இருக்கிறார்களே, இப்படிப்பட்ட நகைப்பற்று மிகுந்தவர்கள் மேல் நாட்டிலும் இருக்கிறார்கள். ஆனால் அங்கேயெல்லாம் பணம் உள்ளவர்கள் மலிவான நகைகளாகப் போட்டுக் கொள்வதில்லை. கடிகாரங்களில் விலை உயர்ந்த வைரங்களைப் பதித்து, இலட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கடியாரங்களைச் சுவிட்ஜர்லாந்தில் உள்ள நிபுணர்கள் விற்கிறார்கள். அவைகளை மேல் நாட்டுப் பெண்கள் அணிந்து கொள்வார்கள். இந்தப் பெண்ணும் அந்த வகையைச் சேர்ந்தவள்!

    அவள், காரிலிருந்து இறங்கியதும் பக்கத்தில் தெரிந்த பங்களாவைப் பார்த்தாள். பிறகு காரைப் பூட்டினாள். அவள் குனிந்து காரைப்பூட்டிய போது அவள் காதுகளிலிருந்த பட்டாம்பூச்சி போன்ற தோடுகள் பளிச்சென்று மின்னின. அவைகளில் வைரங்களும், பச்சைகளும், கோமேதகங்களும் பதிந்திருந்தன. அவள், கழுத்தில் மெல்லிய சங்கிலி ஒன்று ஒட்டிக்கொண்டு கிடந்தது.

    அப்பெண், பங்களாவை நோக்கி நடந்து சென்றாள். அவள் நடையில் தயக்கமும், அவள் முகத்தில் அச்சமும் இருந்தன. எப்படியாவது அவள் அந்தப் பங்களாவில் இருக்கும் தமிழ்வாணனைப் பார்த்து, தமிழ்வாணனிடம் தன் குறைகளைச் சொல்லி, தன் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவைக் கண்டு விட வேண்டும் என்று அவள் எண்ணினாள்.

    விலை உயர்ந்த புதிய இம்பாலா காரில் வந்து இறங்கிய அந்த அழகிக்கு பல இலட்ச ரூபா மதிப்புள்ள வைரங்களைக் கொண்ட நகைகளை அணிந்திருந்த அந்த இளமைப் பெண்ணுக்கு என்ன குறை இருக்க முடியும்? அவளுக்கு இருக்கும் பிரச்சனை என்ன?

    தமிழ்வாணன் பங்களாவிற்குள் உள்ளே இரண்டு கார்கள் நின்றுகொண்டிருந்தன. ஒன்று விரைவாகப் போகும் ஸ்போர்ட்ஸ் கார். தரையைத் தொட்டுக்கொண்டு, சக்கரங்கள் இல்லாததைப் போல் மிகவும் தாழ்வாக நின்றது அந்தக் கார். மற்றொரு கார், பிளிமவுத் கார். இந்த இரண்டு கார்களையும் பார்த்ததும் தமிழ்வாணன் உள்ளே இருக்கிறார் என்று முடிவு செய்தபடி அந்தப் பெண் நடந்தாள்.

    பங்களாவிற்குள்ளே நுழைந்து தமிழ்வாணனின் செயலாளரிடம் அனுமதி பெற்றுத் தமிழ்வாணனைப் பார்க்கப் போனபோது தமிழ்வாணன் தன் அழகிய பச்சை நிற அறையில், கண்ணாடி மேசைமுன் உட்கார்ந்து தன் குறிப்புப் புத்தகத்தில் குறிப்புக்களை எழுதிக்கொண்டிருந்தார்.

    மெல்லக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற அந்த அழகி, அப்படியே சிறிது நேரம் நின்றுவிட்டாள். அந்த அறையில் உள்ளவை அத்தனையும் பச்சை நிறமாக இருந்தன. திரைத்துணிகள், சுவர்கள், தரையில் போடப்பட்டிருந்த கம்பளம், மேசை நாற்காலிகள், பேனாக்கள், பென்சில்கள், தமிழ்வாணன் எழுதும் மை எல்லாமே பச்சை நிறமாக இருந்தன!

    அந்தப் பெண், உள்ளே நுழைந்ததும், அவள் அணிந்திருந்த விலை உயர்ந்த சென்ட்டின் வாசனை அறை முழுவதும் பரவியது! மிக விலை உயர்ந்த சென்ட் அது!

    தமிழ்வாணன் நிமிர்ந்து பார்த்தார். புதிய அந்த அழகியைக் கண்டதும் தன் குறிப்புப் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, எழுந்து நின்று, கைகூப்பி வணக்கம் செலுத்தி அவளை வரவேற்றார்.

    அந்தப் பெண், வணக்கம் என்று சொல்லிக் கைகளைக் கூப்பியபடி தமிழ்வாணனைப் பார்த்து, பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களைக் கொஞ்சம் தொல்லை கொடுக்க நான் வந்திருக்கிறேன் என்றாள் சற்று உரிமையுடன்.

    உட்கார். உன்னை இதற்குமுன் நான் பார்த்ததில்லை. பார்த்திருந்தால் நான் உன்னை மறந்திருக்க முடியாது என்றார் தமிழ்வாணன்.

    உண்மைதான். நீங்கள் என்னை இதற்குமுன் பார்த்ததில்லை. ஆனால் நான் உங்களைப் புகைப்படங்களிலும், பத்திரிகைகளிலும், சுவரொட்டிகளிலும் பார்த்திருக்கிறேன். எனவே உங்களைப் பார்த்தால் எனக்குப் புதியவராகத் தோன்றவில்லை. இதனால் என் மனத்தில் உள்ள என் தொல்லைகளை எளிதாகத் தயக்கமில்லாமல் உங்களிடம் நான் சொல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய பிரச்சனைகளுக்கு நன்வழி காண நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். இப்போது இந்த உலகத்தில் உங்களைத் தவிர எனக்கு வேறு எவராலும் உதவி செய்ய முடியாது. என்றாள் அவள்... இப்படி அவள் பேசிய போது அவள் உதடுகள் படபடத்தன! அவள் கைகள் அவள் வைத்திருந்த கைப்பையை இறுகப் பிடித்தன!

    மற்றவர்கள் தங்களுடைய பிரச்சனைகளையும் கவலைகளையும் தமிழ்வாணனிடம் வந்து சொல்லி அவைகள் தீர அவைகளுக்கு யோசனைகள் கேட்பதும், அவை அவைகளுக்குத் தக்க வழிகளைத் தமிழ்வாணன் சொல்லுவதும் தமிழ்வாணனுக்குத் தினமும் மிகப் பழக்கப்பட்டுப்போன செயல்! ஆனால் இந்தப் பெண்ணுக்கு அழகும் பணமும் இளமையும் அறிவும் உள்ள இந்தப் பெண்ணுக்கு இந்த உலகத்தில் அப்படி என்ன பிரச்சனை இருக்க முடியும்?

    தமிழ்வாணன், ஒரு சில வினாடிகளுக்குப் பின் கேட்டார்: உன் பெயர் என்ன?

    காவிரி என்றாள் அவள். இப்படி அவள் சொல்லி விட்டுத் தன் உதடுகளை தன்னுடைய நாக்கினால் ஈரமாக்கிக் கொண்டாள். அச்சத்தால் அவளுக்கு நாக்கு மிக வறண்டு போய் விட்டது!

    தமிழ்வாணன் எழுந்து, பக்கத்தில் இருந்த தர்மாஸ் பிளாஸ்கில் இருந்த வெந்நீரை ஒரு கிளாஸில் ஊற்றி அவளிடம் கொடுத்தார். அவள் அதை வாங்கி மடக்மடக்கென்று குடித்தாள். பிறகு அவள் கிளாஸை மேசையின் மீது வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு இப்போது சற்றுத் துணிவு வந்தது.

    அவள் எதையோ சொல்லத் துடிக்கிறாள். அப்படி அவள் சொல்லத் துடிக்கும் போது அவள் நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகள் அவளுக்கு அச்சத்தை உண்டாக்குகின்றன என்பதைத் தமிழ்வாணன் புரிந்து கொண்டு காவிரி, நம் பிரச்சனைகளை மற்றவர்களிடத்திலே சொன்னால் சொன்னவுடனேயே சுமை குறைந்துவிடும். ஆகையால் எதற்கும் அஞ்சாமல், என்னிடம் உன் பிரச்சனைகளைக் கூறு. பிரச்சனைகளைத் தீர்க்க நாம் வழி காணுவோம் என்றார் தமிழ்வாணன்.

    என்னுடைய பிரச்சனைகளை நம்பிக்கையானவர்களிடம் சொல்லவேண்டும் என்பதற்காகத் தான் நான் உங்களைத் தேடி வந்தேன். என்னுடைய பிரச்சனை இதுதான். நான் ஏதோ ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டு, ஒரு பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பதைப் போன்ற ஓர் உணர்வு எனக்கு இருக்கிறது. இந்த உணர்வால் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்!

    இப்படி அவள் சொல்லிவிட்டு மேசைமீது கைகளை ஊன்றிக் கொண்டு சாய்ந்து உட்கார்ந்தாள். பிறகு தொடர்ந்து சற்று மெல்லப் பேசினாள்: உங்களுக்கு வியப்பாக இருக்கிறதோ? விலை உயர்ந்த நகைகளும், ஆடைகளும் அணிந்த இந்தப் பெண்ணுக்கு வெறி பிடித்திருக்குமோ என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது! எனக்கும் வெறி பிடிக்கவில்லை. நல்ல நினைவுடன் தான் நான் இருக்கிறேன். பணத்தில் புரண்டு கொண்டிருக்கும் எனக்குப் பணம் தான் பெரும் துன்பமாக இருக்கிறது! என் பங்களாவில் உள்ள மற்றவர்கள் காட்டும் அன்பும் பரிவும் ஆதரவும் இரக்கமும் எனக்குத் தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது! நான் சொல்லும் இதை நீங்கள் நம்ப வேண்டும்.

    இன்னும் விளக்கமாகச் சொல்லு என்றார் தமிழ்வாணன்.

    "விளக்கமாகச் சொன்னால், எல்லாவற்றையும் நீங்கள் கேட்டுவிட்டுப் போலீஸுக்குப் போ, அல்லது தந்தையிடம் உண்மையை நீ சொல்லிவிடு என்று எனக்கு நீங்கள் அறிவுரை சொல்லக்கூடாது என்றாள் காவிரி

    தமிழ்வாணன் சிரித்துக் கொண்டே, உன் வழக்கைக் கேட்ட பிறகு தான் என்னுடைய முடிவை நான் சொல்ல முடியும் என்றார்.

    காவிரி சிறிது தயங்கிவிட்டுப் பிறகு சொன்னாள்: விவரம் தெரியாமல் நீங்கள் வாக்குக் கொடுக்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்; இருந்தாலும் தொடக்கத்திலேயே உங்களிடம் வாக்குறுதி வாங்கிவிடலாம் என்ற ஆசைதான் என்னை அப்படிப் பேசவைத்தது! குற்றமில்லை. என்னுடைய பிரச்சனையை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.

    அவள் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பேசினாள்: மிகப் பெரிய தொழிலதிபரான கார்மேகத்தை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு அவரைத் தெரியாமலிருக்க நீதி இல்லை!"

    கார்மேகம் பெரும் பணக்காரர். தமிழ்நாட்டில் உள்ள பெரிய தொழிற்சாலைகளிலெல்லாம் அவருக்கு ஏகப்பட்ட பங்குகள் இருக்கின்றன. இதைத்தவிர ஒரு பெரிய பாங்கின் சேர்மனாகவும் அவர் இருந்து வருகிறார் என்பது தமிழ்வாணனுக்குத் தெரியும்.

    தமிழ்வாணன் சொன்னார்: கார்மேகத்தைச் சில விருந்துகளில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நேரிடையாக அவர் எனக்கு இதுவரையில் அறிமுகம் ஆகவில்லை

    காவிரி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

    அந்தப் பெரிய பணக்காரரான கார்மேகத்தின் ஒரே மகள் தான் நான்! அவருக்கு என்னைத் தவிர இந்த உலகத்தில் உறவினர் என்று எவரும் இலர்! அவர் இறந்துவிட்டால், அவருடைய எல்லாச் சொத்துக்களும் எனக்குத்தான்!

    அப்படியா? மிக்க மகிழ்ச்சி! இவ்வளவு பெரிய பேற்றைப் பெற்றிருக்கும் உனக்கு இப்போது என்ன குறை? என்று கேட்டார் தமிழ்வாணன்.

    இந்தக் கேள்வியைக் கேட்டதும் காவிரி சிரித்தாள். அவள் சிரிப்பில் கொந்தளிப்புக் கலந்திருந்தது. நல்ல கேள்வி கேட்டீர்கள்? பங்களா கடலைப் போல் அடையாறில் இருக்கிறது. அந்தப் பங்களாவில் நான் விரல் அசைத்தால் ஓடிவந்து நான் இட்ட வேலைகளைத் தலைமேற்கொண்டு செய்யப் பணியாட்கள். என் தந்தை என் மீது உயிரையே வைத்திருக்கிறார். அவர் உழைத்து உழைத்துக் கோடிக்கணக்கில் பணம் சேர்த்துவிட்டதை எண்ணிக் கூட அவர் அப்படிப் பெருமை கொள்ளவில்லை. என்னைக் கண்டு தான் பெருமை கொள்கிறார்! பூரிக்கிறார்! இன்று நான் இல்லாமல் அவருக்கு உலகம் இல்லை! எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டால் அவர் உயிருக்கே அதனால் ஆபத்து ஏற்படலாம்! எனக்குத் தாய் இல்லையே என்ற குறை இல்லாமல் எனக்குத் தாயும் தந்தையுமாக அவர் இருந்துவருகிறார்.

    தமிழ்வாணன், இப்போது இந்தப் பெண்ணுக்கு வந்த துன்பம் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டார்!

    காவிரி மேலும் சொன்னாள்: நான் என்ன கேட்டாலும் என் தந்தை கார்மேகம் மறுப்பதில்லை. இலட்சக்கணக்கில் எனக்குச் செலவு செய்து எனக்குப் பிடித்த விலை உயர்ந்த நகைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். என்னிடம் இருக்கும் விலை உயர்ந்த ஆடைகளைப் போல் ஆசியாவில் எந்தப் பெண்ணிடமும் இருக்கமுடியாது. எனக்காக என்றே சில கார்கள் இருக்கின்றன. நான் எந்தக் காரை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகலாம். இவ்வளவு இருந்தும் எனக்கு அமைதி இல்லை! நாளுக்குநாள் ஏதோ பெரிய குற்றம் புரிந்துவிட்டதைப் போல் நான் தவிக்கிறேன் தமிழ்வாணன்! தவிக்கிறேன்

    வீணாக எதையாவது நீயாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறாயா என்று கேட்டார் தமிழ்வாணன்.

    அப்போது தான் அதிர்ச்சி தரும் அந்தப் பதிலை அவள் சொன்னாள்: கறுப்புக் கண்ணாடியாரே! நான் சொல்லுவதை நீங்கள் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்! உண்மையில் நான் கார்மேகத்தின் மகள் அல்ல: கார்மேகம் என் தந்தையல்ல: என் பெயரும் காவிரி அல்ல! எனவே, எனக்கு உரிமையில்லாத சொத்துக்களையும், சுகத்தையும், அன்பையும், பங்களாவையும், கார்களையும் அனுபவிப்பதற்கு எனக்கு அச்சமாக இருக்கிறது! எனக்குப் பணம் வேண்டாம்! கார் வேண்டாம்! நகைகள் வேண்டாம்! விலை உயர்ந்த ஆடைகள் வேண்டாம்! அந்தப் பங்களாவிலிருந்து நான் தப்பி ஓடினால் அதுவே எனக்குப் போதும்! நான் தப்பி ஓடுவதற்கு நீங்கள் தான் ஒரு வழி செய்ய வேண்டும்! உங்களைத் தவிர இந்த உலகத்தில் எனக்கு உதவி செய்பவர்கள் யாரும் இல்லை! நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்! என்று சொல்லிவிட்டு அவள் கதறிக் குமுறினாள்!

    ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட தமிழ்வாணன் அறையிலிருந்து அவள் அழுது குமுறியது எதுவும் வெளியே கேட்கவில்லை!

    தமிழ்வாணன் எழுந்து ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொடுத்தார்!

    அதை அவள் வாங்கி மடக்மடக்கென்று சிறு பிள்ளையைப் போல் பருகினாள்!

    2

    தமிழ்வாணன் காவிரியைப் பார்த்துக் கேட்டார்: 'காவிரி, எப்போதிருந்து உனக்கு இந்தக் கற்பனை வந்தது?’

    காவிரி இதைக் கேட்டுச் சீறினாள். கற்பனையா? நான் சொன்னதில் ஒரு வரிகூடக் கற்பனை இல்லை! எல்லாம் உண்மை! கார்மேகத்தின் மகள் காவிரி நான் அல்லள்!

    அப்படியானால் உண்மையில் நீ யார்?

    அதைப்பற்றிப் பிறகு நான் சொல்லுகிறேன் என்றாள் அந்தப் பெண்.

    உன் உண்மையான பெயரையும், நீ யார் என்பதையும் சொல்லுவதற்கு முன், நீ வேறு ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா என்று கேட்டார் தமிழ்வாணன்.

    ஆமாம் என்று சொல்லிவிட்டு அவள் தொடங்கினாள் "இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்து நடந்தது. அந்த விபத்தைப் பற்றி நீங்கள் பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

    சென்னையில் இப்போது விபத்துக்கள் நடக்காத நாட்கள் ஏது? கார்கள் மிகுதியாகிவிட்டது ஒரு காரணம். மக்கள் சாலைகளில் மிகப் பொங்கிவழிவதும் மற்றொரு காரணம். எங்கே, எப்படிப்பட்ட விபத்து என்பதைத் தெளிவாகச் சொல்லு.

    அவள் மெல்லச் சிரித்துக் கொண்டே சொன்னாள்: ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பிரச்சனைகள் தாம் அவரவர்களுக்குப் பெரிதாகப் பேயைப் போலத் தோன்றும்! அதைப் போல் எனக்கும் எனக்கு நேர்ந்த விபத்துத்தான் பெரிதாகத் தோன்றியது. நீங்கள் சொல்லுவதைப் போல் தினமும் நடக்கும் எத்தனையோ விபத்துக்களை நான் பெரிதாக எண்ணவில்லை. போகட்டும். அன்று நடந்த விபத்துக்குக் காரணம் நான் தான்! ஏதோ ஒரு கவனத்திலே சரியாகப் பார்க்காமல் சாலையின் குறுக்கே நான் நடந்துவிட்டேன். ஒரு கார் வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1