Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inbavalli Ithuva Un Mudivu?
Inbavalli Ithuva Un Mudivu?
Inbavalli Ithuva Un Mudivu?
Ebook93 pages26 minutes

Inbavalli Ithuva Un Mudivu?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புகழ்பெற்ற நடனக்கலையை உலகுக்கு எடுத்துக்காட்டும், ‘நாட்டியமணி’ இன்பவல்லியின் நடனமானது சற்று நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில், அவளின் உதவியாளரான ஐயாதுரை, அவளுக்காக காத்திருந்தார்.

பதற்றத்துடன் காரில் இருந்து இறங்கும் இன்பவல்லியை, இளைஞன் ஒருவன் வழிமறித்து எச்சரித்தான். அவன் எச்சரித்தது என்ன? அந்த இளைஞன் யார்? அவளுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?

வாருங்கள் கதைக்குள் சென்று பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580136605893
Inbavalli Ithuva Un Mudivu?

Read more from Tamilvanan

Related to Inbavalli Ithuva Un Mudivu?

Related ebooks

Reviews for Inbavalli Ithuva Un Mudivu?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inbavalli Ithuva Un Mudivu? - Tamilvanan

    http://www.pustaka.co.in

    இன்பவல்லி இதுவா உன் முடிவு?

    Inbavalli Ithuva Un Mudivu?

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    *****

    அத்தியாயம் 1

    சென்னை ஜார்ஜ்டவுனில் மக்களைக் கவர்வதற்கென்றே அமைந்திருந்த அண்ணாமலை மன்றத்தின் முன், வரிசையாகப் பல வண்ணக் கார்கள் வந்து நின்றுகொண்டிருந்தன. இனிமேலும் கார்கள் வந்தால் அந்தத் தெருவே இடம் கொள்ளாமல் போய்விடுமோ என்று அஞ்சிய போக்குவரத்து இலாகாவைச் சேர்ந்த கான்ஸ்டபிள்கள், கார்களை அப்படியும் இப்படியும் திக்கு மாற்றி ஓரமாக நிற்கவைத்துக் கொண்டிருந்தார்கள். காரிலிருந்து இறங்கி வந்தவர்களும், நடந்து வந்தவர்களும், அண்ணாமலை மன்றத்தின் உள்ளே போய்த் தமது இடங்களைத் தேடிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில்

    அங்கே, நாட்டியமணி என்ற பட்டம் பெற்று, இந்தியாவில் மட்டுமன்றி உலகத்தின் பல பிரிவுகளுக்கும் சென்று, தமிழ்நாட்டின் நடனக்கலையை உலகுக்கு எடுத்துக்காட்டிக் கைதட்டலைப் பெற்றுத் திரும்பிவந்த இன்பவல்லியின் நடனம் தொடங்குவதாக இருந்தது.

    டிக்கெட் கிடைக்காமல் நூற்றுக்கணக்கானவர்கள் திரும்பிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும், நாட்டியம் தொடங்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தபோதிலும்

    இன்பவல்லி வரக்காணோம்!

    இன்பவல்லி இன்னும் வரவில்லை என்பது கூட்டத்தினருக்குத் தெரியாது! அண்ணாமலை மன்றத்தில் நிரம்பி நின்ற மக்கள் கூட்டம், திரைக்குப் பின்னால் இன்பவல்லி என்னும் அந்த ஆடலழகி ஒளிந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டார்களே தவிர, உண்மையில் இன்னும் அவள் வீட்டிலிருந்தே வரவில்லை என்பதை அறியவில்லை!

    அண்ணாமலை மன்றத்தின் வாயிலில், கைக்கடிகாரத்தையும், வெளிப்பக்கம் எங்கேயாவது தனது கார் தெரிகிறதா என்பதையும் பார்த்தபடி, ஐம்பது வயது மனிதர் ஒருவர் இப்படியும் அப்படியும் உலாவிக்கொண்டிருந்தார். அவர்தான்

    இன்பவல்லியின் நடனங்களைத் திட்டமிட்டு, ஆங்காங்கே நடத்தி அவள் புகழைப் பரப்புவதுடன், தனது பணத்தையும் பெருக்கிக்கொள்ளும் ஐயாத்துரை, அவர் சற்றுக் குள்ளமாக இருந்தபோதிலும், குருஷேவைப்போல் தடியாகவும், எப்போதும் சிரித்த முகத்துடனும் இருப்பார். அவர் கோட்டும், கால் சட்டையும் காலில் பளபளக்கும் அம்பாஸடர் காலணிகளும் விலையுயர்ந்தவை. அவருடைய மீசை அழகாக அளவுடன் வெட்டப்பட்டிருந்தது.

    இப்படியும் அப்படியும் உலாவிக்கொண்டிருந்த ஐயாத்துரை நின்றார். அவரைப் போலவே பளபளப்புடன் அண்ணாமலை மன்றத்தின் முகப்பிலே வந்துநின்ற அவருடைய காரிலிருந்து இன்பவல்லி எட்டிப்பார்த்தாள்.

    ஐயாத்துரை ஓடிப்போய்க் கதவைத் திறந்தார்.

    இன்பவல்லி வீட்டிலிருந்தே நடனத்துக்கு ஒப்பனையுடன் புறப்பட்டிருந்தாள். அவள் நடனமாட முன்னேற்பாட்டுடன் ஒப்பனையுடன் வந்துவிட்டதைக் கண்டதும், வாயெல்லாம் பற்கள் தெரிய ஐயாத்துரை சிரித்தபடி, இன்பவல்லி! இன்னும் சில நிமிடங்களே உள்ளன. அயல் நாட்டுக்குப் போய்வந்த பிறகு உன் மதிப்பு மிகுந்துவிட்டது. ஒப்பனை அறைக்குச் சென்று ஒரு தடவை எல்லாம் சரிபார்த்துக்கொள். நேரப்படி எல்லாம் நடந்துவிடவேண்டும் என்றார்.

    எதற்கும் நீங்கள் துன்பம் கொள்ள வேண்டாம். மணியடித்ததும் நான் மேடையில் இருப்பேன் என்று சொல்லிவிட்டு, மெல்லிய நைலான் ஆடையினால் முகத்தையே மூடிக்கொண்டு, மேடையின் பின்னாலிருந்த ஒப்பனை அறைக்குச் சென்றாள்.

    அவள் ஒப்பனை அறைக்குள் சென்றதும், கதவைச்

    Enjoying the preview?
    Page 1 of 1