Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjai Thottu Kollu
Nenjai Thottu Kollu
Nenjai Thottu Kollu
Ebook97 pages33 minutes

Nenjai Thottu Kollu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604275
Nenjai Thottu Kollu

Read more from Devibala

Related to Nenjai Thottu Kollu

Related ebooks

Reviews for Nenjai Thottu Kollu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjai Thottu Kollu - Devibala

    http://www.pustaka.co.in

    நெஞ்சைத் தொட்டுக் கொல்லு

    Nenjai Thottu Kollu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    பெட்டியில் துணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டான் தேவா.

    பேஸ்ட் ப்ரஷ் எடு ஈஸ்வரி.

    பதிலே வரவில்லை.

    ஈஸ்வரி! உன்னைத்தான்.

    திரும்பினான்.

    ஈஸ்வரி கட்டிலில் ஒரு மூலையில் முகத்தைத் தூக்கி வைத்தபடி உட்கார்ந்திருந்தாள்.

    நான் கேட்டது காதுல விழலையா?

    நான் சொல்றது உங்க காதுல தான் விழலை.

    என்ன சொன்னே நீ?

    நீங்க போறது ஆபீஸ் வேலையா ஒரு வார காலம். அதுவும் ஊட்டிக்கு. நான் ஊட்டி பார்த்ததே இல்லை. என்னையும் கூட்டிட்டுப் போகலாம் இல்லை?

    எதுக்கு ஈஸ்வரி வீண் செலவு? நான் ஆபீஸ் செலவுல போயிட்டு வர்றேன். நீ வந்தா, நம்ம சொந்தப் பணம் கரையும். எனக்கு வேலையும் சரியா ஓடாது.

    அவன் பாத்ரூமுக்குள் நுழைந்து விட்டான்.

    தேவா உலக மகா கஞ்சன். கல்யாணமான மறுநாளே ஈஸ்வரிக்கு இது தெரிந்துவிட்டது. தேனிலவு போனால் வீண் செலவு என்று அதைக்கூட நிராகரித்து விட்டான். வீட்டில் நாலு விருந்தாளிகள் அதிகம் வந்தால் ஒரு வேளை காபி கட், மொபெட் வைத்துக் கொண்டால் பெட்ரோல் செலவு என சைக்கிளில் ஆபீஸ் போகிறான். இரண்டு பேருமாக மாதம் ஆறாயிரம் சம்பாதிக்கிறார்கள் என்று பேர் -

    ஈஸ்வரி நேரெதிர், பணம் செலவழிப்பதில் படு தாராளம். இந்த நாலு வருடங்களில் அவர்களது தினசரி யுத்தம் பணத்தில் தான்.

    கடைசியில் ஈஸ்வரி தான் தோற்றுப் போனாள். அவனது கஞ்சத்தனம் தாளமாட்டாமல் அவள் அனுசரித்துப் போக வேண்டிய நிலைமை.

    நான் போயிட்டு வந்திர்றேன்...

    அவள் பதிலே சொல்லவில்லை.

    அலுவலகம் போய் அக்கவுண்ட்ஸில் பயணச் செலவுகளுக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டான்.

    என்னப்பா, ஊட்டிக்கு பொண்டாட்டியோடவா?

    போயிரப் போறான் நம்ம தேவா. சாப்பாட்டுல உப்பு குறைஞ்சா, தண்ணீர் விட்டுச் சமாளிச்சுப்பான். காசு குடுத்து வாங்க மாட்டான்.

    கலீரெனச் சிரிப்பு பெண்கள் பக்கமிருந்து வந்தது.

    தேவா சன்னமான அவமானத்தில் மிதந்தான்.

    பதில் பேசவில்லை. அலுவலக சம்பந்தப்பட்ட முக்கிய கோப்புகளைச் சேகரித்துக் கொண்டான். ட்ராவல் ஏஜென்ஸி நீலகிரி எக்ஸ்பிரஸ் முதல் வகுப்பில் டிக்கெட்டைத் தயார் செய்து வைத்திருந்தது. அதையும் சேகரித்துக் கொண்டான்.

    வீடு திரும்பினான்.

    நீ இன்னிக்கு ஆபீஸ் போகலையா?

    எழுந்து சமையல் பண்ண லேட்டு. போக முடியலை. லீவு போட்டுட்டேன்.

    ஏன் கேஷுவல் லீவை வீண் பண்ற?

    கஷ்டகாலம். தலையில் அறைந்து கொண்டாள் ஈஸ்வரி.

    சரி, சாப்பாடு, போடு.

    வாங்க.

    சாப்பிட உட்கார்ந்தான். பரிமாறத் தொடங்கினாள் ஈஸ்வரி.

    எதுக்கு பொரியல், அப்பளம் ரெண்டும்? ஒண்ணு போதாதா? எண்ணெய் விக்கற விலைல அப்பளம் மாசத்துக்கு ஒரு நாள் பொரிச்சா போதாது?

    எரித்து விடுவது போல் பார்த்தாள் ஈஸ்வரி.

    தக்காளி மறுபடி விலை ஏறுது. ரசம் பண்ணாது இனி.

    நிம்மதியா வயிறாரச் சாப்பிடுங்க. பற்களைக் கடித்தாள் ஈஸ்வரி.

    இரவு ஏழரை மணி சுமாருக்குத் தேவா புறப்பட்டு விட்டான்.

    நான் புறப்படறேன். ஜாக்ரதையா இரு. ஆபீசுக்கு புறப்படும்போது ஃபேனை எல்லாம் பார்த்து அணைச்சிட்டு கதவைப் பூட்டு. கரண்ட் பில் எகிறிடும் இல்லைனா.

    சரி சரி.

    ஒரு வாரத்துக்கு ஒரு பாக்கெட் பாலை நிறுத்திடு!

    ஒரு வாரத்துக்கு இனி நான் சாப்பிடவே போறதில்லை... போதுமா?

    லங்கணம் பரம ஓளஷதம்னு சொல்லுவாங்க. தப்பில்லை அதுல.

    சுவரில் ‘நச் நச்’ சென்று முட்டிக் கொள்ளத் தோன்றியதைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் ஈஸ்வரி.

    ஆட்டோல போறீங்களா சென்டரலுக்கு.

    ஆட்டோவா எதுக்கு? பஸ்ல தான் போறேன் லக்கேஜ்கூட அதிகம் இல்லையே.

    ஒரு மணி நேரம் முன்னால் கிளம்பியிருந்தா நடந்தே போயிருக்கலாம் நீங்க.

    கிண்டலா?

    வாயை மூடிக் கொண்டு சிரித்தாள் ஈஸ்வரி.

    "இப்ப

    Enjoying the preview?
    Page 1 of 1