வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...
By R.Sumathi
()
About this ebook
சூரியன் மனைவிக்கு அடங்கிய கணவன் போல் கடமை முடிந்து போய் விட்டான். மஞ்சளும் சிவப்பும் படரத் தொடங்கியது வானத்தில். பறவைக் கூட்டம் மாணவக் கூட்டம் போல் சிறகடித்து வீடு திரும்பியது.
களை எடுப்பு முடிந்திருந்ததால் சலனமற்ற வயலில் நண்டுகள் மேலே வந்து ஆட்டம் போட்டன.
எல்லோரும் சம்பளமே வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். துளசி மட்டும் பம்ப் செட்டில் இன்னும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
கைகளால் முகம் கழுவ வந்தவள்தான். கட்டையில் உட்கார்ந்து கால்களைத் தொட்டித் தண்ணீரில் விட்டுத் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள். பளீரென பாய்ந்து விழுந்த தண்ணீரின் சிதறல் மேலே தெறிப்பது ஆனந்தமாக இருந்தது.
தண்ணீரில் நனைந்த கால்கள் பளபளத்தன. தன் வாழைத்தண்டு போன்ற காலைத் தானே ரசித்தவளாய் தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.
"இந்த அழகுக் காலுக்கு கொலுசு போட்டா நல்லாத்தானிருக்கும்? ஆரு வாங்கித்தாரா?"
தப்தப்பென கால்களால் தண்ணீரை சிதறடித்தாள். கொட்டும் தண்ணீரைக் கை சேர்த்துப் பிடித்துக் குடித்தாள்.
"எனவே... துளசி? கூலி வேணாமா?" குரல் கேட்டுத் திரும்பினாள்.
மோகனரங்கம் வெகு அருகில் நின்றிருந்தான். களி மண்ணால் செய்த பொம்மையைப் போல் இருந்தான். முறுக்கிவிட்ட மீசை ஒருவித பொறுக்கித்தனத்தைக் காட்டியது. நெஞ்சின் பாதிப்பகுதி தெரியும்படி பட்டனைக் கழட்டி விட்டிருந்தான். வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை மட்டுமே பளிச்செனத் தெரிந்தது.
ஓரிடத்தில் நிலையில்லாத கண்கள். அவளின் தண்ணீரில் கிடந்த கால்களையே வெறித்துப் பார்த்தான்சட்டென எழுந்து பாவாடையை இறக்கிவிட்டு அவனைப் பார்த்து முறைத்தாள்.
"இந்தா கூலிப்பணம்" அவன் நீட்டிய பணத்தை அவள் வாங்கும் போது வேண்டுமென்றே விரல்களால் விரல்களைத் தொட்டான்.
எரிச்சலுடன் பார்த்தாள்.
"கூலிப் பணத்தை எனக்கு வந்து வாங்கிக்கத் தெரியாதா?"
"ஹி... ஹி... நானே உனக்காகக் கொண்டு வந்து தர்றதுல ஒன்னும் கொறைஞ்சு போயிடலை..."
"ம்... ம்ஹும்" என்று பணத்தை தாவணி முனையில் முடிந்து இடுப்பில் சொருகிக் கொண்டாள்.
"உங்க ஆத்தாளுக்கு உடம்பு தேவலையா?"
"தேவலை தேவலை..." என்று கூறிவிட்டு முன்னே நடந்தாள்.
முன்னே நடக்கும் அவளின் அழகு அவனைக் கொன்றது. நெருங்கி நடந்தான்.
"துளசி..."
"சொல்லுய்யா..."
"நீ ரொம்ப அழகாயிருக்கே..."
"என்னவோ புதுசா ஒரு விஷயத்தைச் சொல்ற மாதிரி சொல்றே. நான் அழகாயிருக்கேன்னு எனக்குத் தெரியாதா? கண்ணு குருடாவாயிருக்கேன். நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா?" வெடுக்கென பேசிவிட்டு விடுவிடுவென நடந்தாள் அவள். மனசுக்குள் திட்டிக்கொண்டே நடந்தாள்.
"உன் மேல நான் எவ்வளவு ஆசை வச்சிருக்கேன் தெரியுமா?"
சட்டென அவள் திரும்பினாள். நெஞ்சில் எரியும் நெருப்பை மறைத்து சிரித்தாள்.
"நெசமாவா...?" கண்களை விரித்து ஆச்சரியமாய் பார்த்தாள்.
மோகனரங்கம் குழைந்தான்உன்னை பார்த்தாலே என் மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்குது. ராவும் பகலும் உன் நினைப்புத்தான். என்னென்னவோ குளுகுளுன்னு ஒரே கனவு."
"ஓ... கோ! அப்படியா? உன் ஆசை தெரியாம நான் இவ்வளவு நாள் இருந்துட்டேனே."
"இப்பவாவது தெரிஞ்சிகிட்டியே... அதுபோதும்!" அவன் காமம் நிரம்பிய கண்களோடு பார்க்க துளசி பேசினாள்.
"அப்படின்னா... உங்க ஆத்தாகிட்ட சொல்லி எங்க ஆத்தாகிட்ட பொண்ணு கேட்கச் சொல்லு..."
"ஐய்யய்யோ... எங்க ஆத்தா ஒத்துக்காது..."
"நெசம்தான். ஊர்ல முக்காவாசி சொத்துக்காரங்க நீங்க. நாங்களோ உங்க வயல்ல நண்டுபிடிச்சி திங்கற ஏழை. ஒத்துக்காதுதான். அதனால என்ன? இப்படிப் பண்ணினா என்ன?"
"எப்படி?" அவன் ஆர்வமாய் கேட்க...
"நாம ரெண்டு பேரும் கோயில்ல தாலி கட்டிப்போம்."
"ஐய்யோ... எங்க ஆத்தா வெட்டிப் போட்டுடும்."
"சரியான பயந்தாங் கொள்ளி நீ. சரி ரெண்டு பேரும் இந்த ஊரைவிட்டே ஓடிடுவோம்."
"என்ன புள்ளயிது. ஊரைவிட்டு ஓடிட்டா எனக்கு இந்த சொத்தெல்லாம் கிடைக்காதே துளசி..."
"அப்ப உன் ஆசையை என்னதான் பண்ணப் போறே?"
"கல்யாணம் பண்ணிகிட்டுத்தான் வாழணுமா?"
"பின்னே?"
"உனக்கு ஒரு குறையும் இல்லாம வச்சுக்கறேன்."
கலகலவென சிரித்தாள் துளசி
Read more from R.Sumathi
கையருகில் பூமாலை Rating: 0 out of 5 stars0 ratingsஉறவில்லை... பிரிவில்லை..! Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பே... ஆருயிரே..! Rating: 0 out of 5 stars0 ratingsஎனது மலர் மடியிலே... Rating: 0 out of 5 stars0 ratingsபொன் நிலாவில் என் கனாவே! Rating: 0 out of 5 stars0 ratingsஅச்சம் விடு பச்சைக் கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsதாய்ப் பறவை Rating: 0 out of 5 stars0 ratingsதேடினேன் வந்தது! Rating: 0 out of 5 stars0 ratingsமாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கெங்கும் உன் வண்ணம் Rating: 0 out of 5 stars0 ratingsநெஞ்சுக்கு நீ அழகு..! Rating: 0 out of 5 stars0 ratingsஎல்லைக் கோடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsஉன் அருகில்... உன் நிழலில்! Rating: 0 out of 5 stars0 ratingsஅந்த நெஞ்சம் என்னிடம்... Rating: 0 out of 5 stars0 ratingsகானலைத் தேடும் காவிரி Rating: 0 out of 5 stars0 ratingsகூடு மறந்த குயில்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகுங்குமக் கோலங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதேன் சிந்தும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsநிலவே முகம் காட்டு! Rating: 0 out of 5 stars0 ratingsபோய் வா... நதியலையே..! Rating: 0 out of 5 stars0 ratingsஅவள் வருவாளா? Rating: 0 out of 5 stars0 ratingsஎப்படி சொல்வேனடி! Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணாளனே... Rating: 0 out of 5 stars0 ratingsபேசும் உள்ளம் பேசாத கண்கள் Rating: 0 out of 5 stars0 ratingsநீயிருந்த மனசு Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருப்பேன் கண்ணா Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் காலமடி கண்ணே! Rating: 0 out of 5 stars0 ratingsதொடுவானைத் தொட்டுவிடு! Rating: 0 out of 5 stars0 ratingsஇணையான இளமானே Rating: 0 out of 5 stars0 ratingsநீயென்பது நானல்லவோ...? Rating: 0 out of 5 stars0 ratings
Related to வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...
Related ebooks
Soozhnilaik Kaithigal Rating: 0 out of 5 stars0 ratingsKannil Therigindra Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணில் தெரிகின்ற வானம்! Rating: 0 out of 5 stars0 ratingsParaloga Payanam Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5எல்லைக் கோடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsIrattai Naakkugal Rating: 0 out of 5 stars0 ratingsVaalaik Kumariyadi Rating: 0 out of 5 stars0 ratingsவாலைக் குமரியடி! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kiliye! Azhagiya Rani! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiye Thol Serava? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsMul Naduve Malar Valarthu! Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Saraiyu Kaathirukkiral Rating: 0 out of 5 stars0 ratingsNillu Nivedha! Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Ingey! Iravil Engey? Rating: 0 out of 5 stars0 ratingsIndriravu Unnai Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsNeeye Enthan Nila Saaraladi! Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Namathu Naal Rating: 5 out of 5 stars5/5எங்கெங்கும் உன் வண்ணம் Rating: 0 out of 5 stars0 ratingsEnkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsநிலவே முகம் காட்டு! Rating: 0 out of 5 stars0 ratingsஇனியெல்லாம் சுகமே..! Rating: 0 out of 5 stars0 ratingsNilave Mugamkaattu Rating: 5 out of 5 stars5/5Kaadhal Nilavey! Rating: 5 out of 5 stars5/5Irattai Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsநிழல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsNizhalgal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...
0 ratings0 reviews