Devan Vanthandi
()
About this ebook
கதாநாயகன் தேவா, கனவுப்பெண்ணான கதாநாயகி வைபவி மேல் காதல் ரசம் சிந்த, மோதலில் ஆரம்பித்தது, எப்படி காதலில் முடிந்தது என்பதை பற்றிய காதல், ரொமான்ஸ் த்ரில்லர்.
Read more from Shruthi Prakash
Palaar Rating: 0 out of 5 stars0 ratingsVanthal Varalakshmi!!! Rating: 0 out of 5 stars0 ratingsThalatta Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Vasantham! Rating: 0 out of 5 stars0 ratingsShruthi Prakashin Sirukathaigal - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsSaravedi Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vellai Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Devan Vanthandi
Related ebooks
Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsNeruppai Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Kaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Pottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Enakkenave... Nee… Kidaithai! Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Nilavil Mugam Kaattu Rating: 5 out of 5 stars5/5Thedamal Ponal Kaanamal Poven Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsNandhanin Anuragam..! Rating: 4 out of 5 stars4/5Oru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsSarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkumo Nenjam Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsEnnam Pola Kannan Vanthaan Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Iththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Anbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsNilave Mugamkaattu Rating: 5 out of 5 stars5/5Penalla Penalla Rojapoo Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Devan Vanthandi
0 ratings0 reviews
Book preview
Devan Vanthandi - Shruthi Prakash
http://www.pustaka.co.in
தேவன் வந்தான்டி
Devan Vanthandi
Author:
ஸ்ருதி பிரகாஷ்
Shruthi Prakash
For more books
https://www.pustaka.co.in/home/author/shruthi-prakash
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 1
கண்மூடி தேவா படுத்திருக்க, அவன் கன்னங்களில், ஈர இதழ்கள் 'இச்' எனப்பதிய, தேவா உடம்பு முழுக்க, மின்சாரம் பாய்ந்தது. கண்களை பளிச்சென தேவா திறக்க, வெகு நெருக்கத்தில் பட்டுப்போன்ற அவளது முகம் அலையலையாய் அவளது பறக்கும் கூந்தல், முன்பக்கம் விழுந்து, தேவாவின் முகத்தை வருடிக்கொடுக்க, அந்த காந்தக்கண்கள், அவனை முழுவதுமாக விழுங்க, தேவா ஒருமாதிரி அந்தரத்தில் சஞ்சரித்தான்.
ம்! வா என்னோட! இன்னும் என்ன தூக்கம்? நான் வந்துட்டேனில்ல? வா தேவா!
அவளது மின்சார விரல்கள், அவன் விரல்களோடு கோர்த்துக்கொள்ள, தன்னை மறந்து தேவா, அவளுடன் நடக்க, கதவு திறந்து அவள் வாசலுக்குப்போக, இவனும் பின்பற்ற, வாசல் கதவை அவள் திறந்தாள். படிகளில் இறங்கினாள். இவனும் இறங்க, என்னங்க! இங்கே வாங்களேன்!
அலறல் கேட்க, தேவாவின் கைகளை யாரோ பற்றி இழுக்க, டேய் தேவா! முழிச்சுக்கோடா!
அவனை உலுக்க, கண்களை திறந்தான். மலங்க மலங்க விழித்தான். எதிரே அப்பா வாசு. சற்று தள்ளி அம்மா ஜெயா அழுது கொண்டிருந்தாள்.
தேவா, தன்னை உணர, சில நிமிடங்கள் பிடிக்க,
என்னங்க! எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு. தூக்கத்துல நடக்கற இவன், ரூமுக்குள்ளே நடந்தான். அடுத்தபடியா ஒரு ரூமை விட்டு, இன்னொரு ரூமுக்கு போனான். இன்னிக்கு வாசல் கதவை திறந்துட்டானே, நான் பாத்ரூம் போக எழுந்து வந்த காரணமா பார்த்தேன். இல்லைனா என்ன ஆகியிருக்கும்?
ஜெயா அழுது புலம்ப, அப்பா வாசு அருகில் வந்தார்.
என்ன தேவா? ஏன் இப்படி?
அவ வந்தாப்பா!
யாரடா? எப்பக்கேட்டாலும், இதையே சொல்ற! யாருப்பா வந்தது? சொல்லுடா! குழந்தை காலம் தொட்டே உனக்கு 'சோம்நாம் புலிசம்'. அதான் தூக்கத்துல நடக்கற வியாதி உண்டு. அதுக்கு நீ, மருந்தும் சாப்பிடற! ஆனா சமீப காலமா அவ வர்றானு ஏதேதோ உளர்ற! என்னடா இதெல்லாம்?
அம்மா ஜெயா அருகில் வந்து, அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள். தேவா! எங்களுக்கு, நீ ஒரே பிள்ளைடா. நாங்க ரெண்டுபேரும் உயிர் வாழறதே உனக்காகத்தான். உனக்கு ஒண்ணுனா, எங்களால அதை தாங்கிக்க முடியாதுடா!
அவனுக்கு நன்றாக விழிப்பு வந்து விட்டது.
என்னம்மா சொல்ற? எனக்கு எதுவுமே புரியலை!
அம்மா ஏதோ சொல்ல வர, அப்பா தடுத்தார்."
விட்ரு ஜெயா! நீ வந்து படு தேவா! காலைல பாத்துக்கலாம், வாப்பா!" அப்பா அவனை படுக்க வைத்து விட்டு போனார். தேவா விழித்திருந்தான். அந்த அழகான பெண் தினசரி வருகிறாள். கொஞ்சுகிறாள், முத்தமிடுகிறாள், உடம்பு முழுக்க, மின்சாரம் பாய்ச்சுகிறாள், அது மட்டும் தெரிகிறது. ஆனால், அவளுடன் நடப்பது, போவது எதுவும் நினைவில் இல்லை. அந்த அழகி இப்படி வருவது, கடந்த ஆறு மாதங்களாக தொடர்கிறது. ஏற்கனவே பயந்திருக்கும் பெற்றவர்களிடம், இதை அதிகமாக, விளக்கவும் முடியவில்லை.
டாக்டர், ஜோசியர் என அம்மா பார்க்காத ஆள் இல்லை. போகாத கோயில் இல்லை.
தேவா எம்.பி.ஏ. முடித்து, ஒரு பேங்கில் அதிகாரி. பெரிய சம்பளம். வயது இருபத்தி எட்டு, அழகான இளைஞன், நல்ல உழைப்பாளி. பகலில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. இரவில் களேபரம்தான். இது தொடர்பாக டாக்டர்கள் ஒன்று சொல்ல, ஜோசியர்கள் வேறு விதமாக பேச, குடும்பம் குழம்பிப்போனதுதான் மிச்சம். உடனே கல்யாணம் செய்து வைத்தால் சரியாகும் என குடும்ப ஜோசியர் சொல்ல, அவனது கல்யாண பேச்சு ஆரம்பமாகி விட்டது.
காலையில், ஜோசியர் ஒரு நல்ல வரனுடன் வந்து விட்டார். தேவா, ஆபிசுக்கு புறப்பட்டு போய் விட்டான். அப்பா அதை வாங்கி வைத்துக்கொண்டார்.
என்னங்க! இதை பார்க்கலாமா?
எப்படி ஜெயா? இவனுக்கு இந்த மாதிரி ஒரு பிரச்னை இருக்கறதை, மறைச்சு கல்யாணம் பண்ண முடியுமா? நாளைக்கு உண்மை வெளில தெரிஞ்சா, ரெண்டு பேர் வாழ்க்கையும் பாழாகுமே!
அதுக்காக, தேவாவுக்கு கல்யாணம் பண்ணாம இருக்க முடியுமா? உண்மையை சொல்லிட்டு, பேசலாமே!
யாரு சம்மதிப்பாங்க ஜெயா? வேண்டாம்! இவனை குணப்படுத்திட்டு, கல்யாணம் பற்றிப்பேசலாம். அதுவரைக்கும் பொறு ஜெயா!
***
தேவா பேங்கில் நுழைய, சக ஊழியர்கள் வணங்க, சிரித்துக்கொண்டே உள்ளே வந்து தன்னறையில் உட்கார்ந்தான். தேவா அழகன் மட்டுமல்ல எப்போதும் சிரித்த முகம், கனிவான பேச்சு, பப்ளிக் ரிலேஷனில் அவனை யாரும் மிஞ்ச முடியாது. அவனுக்காகவே, அங்கே ஒரு வாடிக்கையாளர் கூட்டம் உண்டு. அவன் உள்ளே வந்த ஒரு மணிநேரத்தில், அவசர வேலைகள் காசோலைகளைப்பார்த்து விட்டு, கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ள, அந்த கேஷியர் ரூபா வந்தாள், ஒரு கடிதம் தந்தாள்.
என்ன இது?
பர்சனல் சார், படிச்சிட்டு என்னை கூப்பிடுங்க!
அவள் போனதும், பிரித்தான். முகம் மாறியது. அது ஒரு காதல் கடிதம். கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் அடிக்கப்பட்டிருக்க, திரும்பினான் தேவா. அந்த ரூபா