Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalatta Varuvala?
Thalatta Varuvala?
Thalatta Varuvala?
Ebook90 pages46 minutes

Thalatta Varuvala?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சகோதரிகள் பாசத்தை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் கதை! தன் செல்ல தங்கையை பிரிய முடியாமல், ஒரே வீட்டில் வாழ்க்கை பட வேண்டும் என தீர்மானித்து, அதற்கான வேலைகளில் இறங்க, தங்கை வேறொருவனை காதலிக்க, இதையறிந்த அக்கா, தங்கையின் காதலை உடைக்க, பாசம் அதிகமானாலும் அது வெறி பிடித்த குற்றமாக மாறும், என்ற வித்தியாசமான சோஷியோ க்ரைம் நாவல் இது.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580137407615
Thalatta Varuvala?

Read more from Shruthi Prakash

Related to Thalatta Varuvala?

Related ebooks

Reviews for Thalatta Varuvala?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalatta Varuvala? - Shruthi Prakash

    https://www.pustaka.co.in

    தாலாட்ட வருவாளா?

    Thalatta Varuvala?

    Author:

    ஸ்ருதி பிரகாஷ்

    Shruthi Prakash

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shruthi-prakash

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 01

    அத்தியாயம் - 02

    அத்தியாயம் - 03

    அத்தியாயம் - 04

    அத்தியாயம் - 05

    அத்தியாயம் - 06

    அத்தியாயம் - 07

    அத்தியாயம் - 08

    அத்தியாயம் - 09

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 01

    இந்த கதைக்கு இரண்டு கதாநாயகிகள். ஒருத்தி ஜோதி. அவள் அக்கா. அடுத்தவள் காஞ்சனா…தங்கை. ஜோதி, எம்.ஏ. எம்.ஃபில் முடித்து தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். வயது இருபத்தி ஏழு. கல்லூரியில் நாலு வருஷ அனுபவம். கணிசமான பெரிய சம்பளம். சுமார் அழகு. புத்திசாலி. நேரம் தவறாமை, கண்டிப்பு, கறார், தப்புக்களை மன்னிக்காத குணம், பிடிவாதம், எல்லாம் உண்டு. ஆனால் உழைக்க தயங்காத பெண். அதிகம் பேச மாட்டாள். நட்பு வட்டமே ஏறத்தாழ இல்லை. தானுண்டு, தன் வேலையுண்டு என இருப்பவள். அதிகம் சிரிக்க மாட்டாள். அவளுக்கு கல்லூரியில் சிடு மூஞ்சி என்ற பட்டப்பெயர் உண்டு. இப்போதைக்கு இந்த அறிமுகம் போதும்.

    அவள் தங்கை காஞ்சனா ஜோதிக்கு நேர் எதிர். எம்.காம் முடித்து ஒரு அரசாங்க வங்கியில் வேலை. வயது இருபத்தி நாலு. அழகான, கலகலப்பான, எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் பெண். ஏராளமான ஆண், மற்றும் பெண் நண்பர்கள்! விட்டுக்கொடுக்கும் சுபாவம், மனிதர்களிடம் இணக்கம் எல்லாம் உண்டு. சோம்பேறி, நன்றாக தூங்குவாள். தாமதப்பேர்வழி. எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை.. இருவருக்கும் அம்மா இல்லை. அப்பா மட்டும். அவர் ஆரம்பம் முதலே குடும்பத்தில் பெரிய பற்று இல்லாதவர். பல வேலைகளை விட்டு குடும்பத்தை தத்தளிக்க விட்டவர். அம்மா டீச்சராக இருந்து சம்பாதித்து குடும்பத்தை ரட்சித்தவர். ஜோதி வேலையில் சேர்ந்த பிறகு தான் அம்மா சிறுநீரக பிரச்னையில் இறந்தார். அம்மா இருக்கும் போதே ஜோதி எல்லா வேலைகளையும் சரிக்கு சமமாக செய்வாள். அப்பாவை அறவே ஜோதிக்கு பிடிக்காது. அவரிடம் பேசுவது கூட குறைச்சல்தான். அடிக்கடி மோதல் வந்து பெரிய சண்டையாக வரும். காஞ்சனாதான் சண்டையை விலக்குவாள்.. அம்மா போன பிறகும் அவருக்கு பொறுப்பு வரவில்லை. அவரிடம் இப்போது பணமும் இல்லை. காஞ்சனாதான் அவருக்கு செலவுக்கு தருகிறாள். அதையும் ஜோதி எதிர்ப்பாள். இதுதான் குடும்ப அறிமுகம். இனி கதைக்குள் போகலாம்.

    அத்தியாயம் - 02

    ஜோதி கல்லூரி முடிந்து மாலை ஆறுக்குள் வீட்டில் இருப்பாள். காஞ்சனா வர இரவு ஒன்பது கூட ஆகும். வங்கியில் அதிகாரி என்பது ஒரு காரணம். அப்படியே வேலை முடிந்தாலும் காஞ்சனா நண்பர்களுடன் ஊரை சுற்றி விட்டு மெதுவாக வருவாள். வீட்டு நிர்வாகம் முழுக்க ஜோதிதான். இன்று அதிசயமாக காஞ்சனாவும் சீக்கிரமே வந்து விட்டாள்.

    நாளைக்கு லீவு போடு காஞ்சனா

    எதுக்கு ஜோதி?

    நாளைக்கு மகாளய அமாவாசை. பூஜையை முடிச்சிட்டு, படிகளை கட்டி, பொம்மைகளை எடுத்து வைக்கணும். நவராத்திரி பூஜை வந்தாச்சு இல்லை?

    நாளைக்கு பேங்க்ல இன்ஸ்பெக்ஷன். லீவு போட முடியாது ஜோதி

    நான் ஒருத்தியே எல்லா வேலைகளையும் எப்படி செய்வேன்? நீ சாதாரண நாட்கள்ள ஒரு துரும்பைக்கூட கிள்ளி போட மாட்டே. நானும் கேக்கறதில்லை. ஆனா இந்த மாதிரி நாள்ள நான் ஒண்டியா எப்படீடி செய்ய முடியும்? மேலும், நீயும் நாளைக்கு கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு. எதுவும் செய்யாம இருந்தா எப்படி?

    அப்பா வீட்ல சும்மாத்தானே இருக்கார். அவருக்கும் நாலு வேலைகளை குடு

    அவர் கிழிச்சார்! என் வாயை கிளறாதே. நல்லா இருக்கும்போதே எதுவும் செய்யலை. அப்படி செஞ்சிருந்தா, நம்மை வளர்க்க அம்மா இத்தனை கஷ்டப்பட வேண்டாமே

    அப்பா முருகேசன் உள்ளே வந்தார்.

    என்னை யாரும் தாறுமாறா விமர்சனம் பண்ண வேண்டாம். நான் இந்த வீட்ல இருக்கறது அவளுக்கு பிடிக்கலைனா, நான் இப்பவே போயிர்றேன்

    அப்பா! ஏன் இந்த மாதிரி பேசற? அவ கோபம் தான் உனக்கு தெரியுமே.

    ஏண்டீ, தடுத்து நிறுத்தறே? எங்கே போவார்? யார் இருக்காங்க? ஒரு வேளை சோறு போட ஆள் இருக்கா? இதெல்லாம் வெறும் உதார். எத்தனை தடவை கேட்டாச்சு

    ரொம்ப அவமானப்படுத்தறா. நான் போயிடுவேன் காஞ்சனா

    "அவர் போன காரணமா எதுவும் இந்த வீட்ல நின்னு போயிடப்போறதில்லை. அம்மா பாவம்! எத்தனை வலிகளை தாங்கி

    Enjoying the preview?
    Page 1 of 1