Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malligai Mu(yu)tham
Malligai Mu(yu)tham
Malligai Mu(yu)tham
Ebook281 pages2 hours

Malligai Mu(yu)tham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603983
Malligai Mu(yu)tham

Read more from Devibala

Related to Malligai Mu(yu)tham

Related ebooks

Reviews for Malligai Mu(yu)tham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malligai Mu(yu)tham - Devibala

    http://www.pustaka.co.in

    மல்லிகை மு(யு)த்தம்

    Malligai Mu(yu)tham

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    நட்ராஜ்-தாரிணி கல்யாணம் நடந்து நாலு நாட்கள்தான் முடிந்திருந்தது.

    முதலிரவு இன்னும் நடக்கவில்லை!

    குலதெய்வ வழிபாடு முடிந்த பிறகுதான் சாந்தி முகூர்த்தம் என நட்ராஜின் தாயான தில்லையம்மாள் உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

    குடும்பத்தில் பல பேர் அதற்கு எதிர்ப்பு!

    கல்யாணம் முடிந்த இளம் வயசுப் புள்ளைங்களை ஏன் காக்க வைக்கணும்?

    இல்லீங்க... குலதெய்வ வழிபாடு முடியாம அவங்க சேரக்கூடாது!

    அப்படீன்னா குலதெய்வ வழிபாட்டை கல்யாணம் முடிஞ்ச மறுநாளே நீ வச்சிருக்கணும்?

    நாள் அமையலையே! இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைதான் நல்லநாள் வருது, அன்னிக்கு எங்க குலதெய்வம் சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு வழிபாட்டை செலுத்திட்டு, அப்புறமா வீட்ல வந்து ஒரு பூஜையைப் பண்ணிட்டு அன்னிக்கே சாந்தி முகூர்த்தம்.

    நட்ராஜ் சிறு வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டான். அம்மா மட்டும்தான்!

    படாத பாடுபட்டு 'மெஸ்' நடத்தி, ஊறுகாய்-சிப்ஸ்-அப்பளம் என கடை கடையாக ஏறி விற்று, நட்ராஜை ‘எம்.பி.ஏ.’ படிக்க வைத்தாள் தில்லையம்மாள்.

    பெரிய ‘கம்பெனி’யில அவனுக்கு மாதம் லட்ச ரூபாய்க்கு மேல சம்பளம்!

    சொந்த வீடு, கார் என எல்லா வசதிகளும்...

    நட்ராஜுக்கு கல்யாணம் செய்ய அம்மா முடிவெடுக்க, தன் காதலைப் போட்டு உடைத்தான் அவன்!

    தன்னுடன் பணிபுரியும், தனக்கு நிகராகப் படித்த தாரிணியை 2 வருடங்களாக காதலிக்கிறான்.

    தாரிணிக்கு அப்பா-அம்மா இல்லை! அண்ணன்-அண்ணி, ஒரு அக்கா. அக்காவுக்கு கல்யாணம் முடியும் வரை இவளும் தன் காதலைச் சொல்லவில்லை. அது 2 மாதங்கள் முன்னால் முடிந்துவிட... தனது காதலை தாரிணி தெரிவிக்க... வீட்டில் எதிர்ப்பில்லை.

    இங்கே நட்ராஜ் சொல்ல... அம்மா பலமாக எதிர்த்தாள். கூடவே கூடாது என போராடினாள்.

    மகன் காதலைச் சொன்னது முதல் பைத்தியம் பிடித்தவள் போல் ஆகிவிட்டாள்.

    உடனே, சிதம்பரம் கோவிலுக்குப் போய்விட்டு வந்தாள்.

    நாடி ஜோசியர்களை கலந்து பேசினாள்.

    நட்ராஜ் கடுப்பாகிவிட்டான்!

    என்ன தடுத்தாலும் நான் கேக்க மாட்டேன்! எனக்கு புடிச்சவளைத்தான் கட்டிப்பேன். நீ மறுத்தாலும் இது நடக்கும்.

    ஒரு மாதம் பெரிய யுத்தமே நடந்தது.

    வேறு வழி இல்லாமல் அம்மா சம்மதித்துவிட்டாள். கல்யாணம் நல்லபடியாக நடந்துவிட்டது.

    அம்மா முகத்தில் மட்டும் சந்தோஷம் இல்லை! ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. அது ஏன் என்றே நட்ராஜுக்கு புரியவில்லை.

    இத்தனைக்கும் அவன் கேட்டு எதையும் மறுக்காதவள் அம்மா!

    இதில் ஏன் இந்தப் பிடிவாதம்? புரியவே இல்லை.

    இதோ முதலிரவுக்கு... அடுத்த சண்டித்தனம்.

    நட்ராஜ் எரிச்சலானான்!

    தாரிணி அவனைச் சமாதானப்படுத்தினாள்.

    தேனிலவுக்கு 'பிளான்' போட்டு வச்சிருந்தேன். அதையும் தடுத்துட்டாங்க.

    விடுங்க! ரெண்டு வருஷமா காதலிக்கிறோம். அப்பெல்லாம் கட்டுப்பாடோடு இருக்கலியா...? இன்னிக்கு புதன். நடுவுல நாலே நாள் பொறுத்துக்குங்க. கல்யாணம் நடந்தாச்சு. நான் உங்க சொத்து! கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா அடிச்சிட்டுப் போகப் போகுது?

    அம்மா... தாரிணியிடம் பெரிதாக ஒட்டவில்லை.

    நிச்சயித்தது முதல் கொஞ்சம் விலகியே இருந்தாள்.

    நட்ராஜுக்கு கவலையாக இருந்தது.

    'ஒரே வீட்டில் காலம் முழுக்க வாழப் போகிற உறவுகள்! இப்படி தள்ளி இருந்தா எப்படி?'

    நட்ராஜ் ஒரே பிள்ளை. அப்பாவும் இல்லை. பொத்திப் பொத்தி வளர்த்த அம்மா. புண்படுத்தவும் முடியாது.

    'மற்றவர்களின் மனசைப் புரிந்துகொள்ளும் அம்மாவால், பெற்ற மகனை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?'

    சிதம்பரம் போவதற்கு கார்கூ ட 'புக்' பண்ணியாகிவிட்டது.

    அன்றே வழிபாட்டை முடித்துவிட்டு வந்தால், மறுநாள் சாந்தி முகூர்த்தம்!

    எல்லாம் சரியாக நடக்கும்போது, வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் அந்த விபரீதம் நடந்துவிட்டது.

    நட்ராஜ் அன்று காரை எடுக்காமல், 'பைக்’கை எடுத்துக்கொண்டு ஆபீசுக்குப் போனான்.

    தாரிணி 'லீவு’ போட்டிருந்தாள்.

    இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு நாலு பேர் ஓடி வந்தார்கள்.

    நட்ராஜ் வந்த ‘பைக்', விபத்துக்குள்ளாகிவிட்டதைச் சொல்ல... அம்மாவும், தாரிணியும் கதறி ஓடினார்கள்.

    கூட்டம் சேர்ந்திருந்தது.

    நட்ராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்!

    உடனே தூக்கினார்கள்.

    நகரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள்.

    அம்மாவும், தாரிணியும் வெளியே துடித்துக்கொண்டிருந்தார்கள். சிகிச்சை அளித்த டாக்டர் வெளியே வந்தார்.

    தலைக்குள்ளே ‘மல்டிபிள் ஃபிராக்சர்'ன்னு சொல்ற எலும்பு முறிவுகள். நரம்புகள்- ரத்தக் குழாய் சேதப்பட்டிருக்கு! செயற்கை முறையில்தான் சுவாசம் தரணும். மூளை செயல்படாத காரணமா...இயற்கை சுவாசத்துக்கு வழியில்லை. இன்னும் 48 மணி நேரம் தாண்டினாத்தான் எதையும் சொல்ல முடியும்.

    அவரைக் காப்பாத்துங்க டாக்டர்!

    தாரிணி பெரிதாக கதறிவிட,

    எங்க கையில எதுவும் இல்லேம்மா... கடவுளை மட்டுமே நம்புங்க! ஏதாவது அற்புதங்கள் நிகழட்டும்.

    அம்மா ஏறத்தாழ பாதி மரித்திருந்தாள்!

    யாரும் இங்கே இருக்கக்கூடாது!

    அவரை நான் பார்க்கணும் டாக்டர்!

    இல்லைம்மா... அதுக்கு அனுமதியில்லை! புரிஞ்சுக்குங்க!

    ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்தார்கள்.

    அதற்குள் தாரிணியின் அண்ணன்- அண்ணி அலறியபடி வந்தார்கள். அக்காவும் வந்துவிட்டாள்.

    கல்யாணமாகி புது மஞ்சளோட ஈரம் கூட காயலையே! அதுக்குள்ள இப்படியொரு விபரீதமா?

    புலம்பிக் கொட்டினார்கள்!

    அண்ணன் கடுப்பாகி, ஆரம்பம் முதலே பெரியவங்க தடுத்தா இப்படித்தான் ஆகும். பிள்ளை காதலிக்கும்போது, முழுமனசோட சம்மதிச்சிருந்தா... இந்த விபரீதம் வந்திருக்காது. அட... கடவுள் அருள் இருக்கு. கல்யாணம் நடந்தாச்சு! சாந்தி முகூர்த்தம் நடக்க விடாம தடுத்தா எப்படி? வாழ்க்கையைத் தொடங்க விடாம தடை போட்டாங்க. இப்ப அது முடியற நிலைக்கு வந்திடுச்சு!

    அண்ணே... அப்படி சொல்லாதீங்க!

    அலறிவிட்டாள் தாரிணி!

    இல்லைம்மா... மனசு பதறுது!

    அவர் பிழைச்சு வருவார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. 'பாசிட்டிவா' பேசுங்க. யோசிங்க... எனக்காக வேண்டி எல்லாரும் பிரார்த்தனை பண்ணுங்க. அது அவரை மீட்டுக் கொண்டு வரும்!

    அப்போது..... அம்மா 'படக்'கென சாய,

    மற்றவர்கள் பதற... தில்லையம்மாள் மயக்கமாகிவிட்டாள்.

    உடனே முதலுதவி செய்யப்பட்டது. வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க - டாக்டர் சொல்ல... உறவுக்காரர்கள் அம்மாவை அழைத்து வந்தார்கள்.

    நீங்க ரொம்பத் தடுத்தீங்க! அப்படியும் கல்யாணம் நடந்துடுச்சு. முதலிரவை தள்ளிப் போட்டீங்க. இப்படி ஆகிடுச்சே!

    இது நடக்கக் கூடாது!

    என்ன சொல்றீங்க?

    என்னால இதுக்கு மேல சொல்ல முடியல.

    அம்மா அழுதாள்.

    சொந்தக்காரர்களில் ஒருவரான அத்தை அருகில் வந்தாள்.

    குலதெய்வம் சிதம்பரம் நடராஜர். உன் பிள்ளையும் நட்ராஜ். அவர் காப்பாத்துவார். எனக்குத் தெரிந்த ஒரு சக்தி படைச்ச ஜோசியர் இருக்கார். அவர் சொன்னா பலிக்கும். நான் போயிட்டு வர்றேன். தைரியமா இருங்க!

    ஆஸ்பத்திரியில் தாரிணி தவிக்க,

    இங்கே அம்மா பிரார்த்தனையில் இருக்க,

    ஒரு முழு நாள் ஓடியது.

    அப்படியும் நட்ராஜ் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை!

    அந்த அத்தை வந்துவிட்டாள்.

    அண்ணி... தாரிணியைக் கூட்டிட்டு நீங்க ஜோசியர்கிட்ட வரணும்!

    அவ எதுக்கு?

    என்ன பேசுறீங்க அண்ணி... அவதானே பொண்டாட்டி! அவ வராம எப்படி? எதுக்கு இந்தக் கோபம்? இப்ப நட்ராஜ் பிழைக்கறதுதான் நமக்கு முக்கியம்.

    ஒருவழியாக பேசி அம்மாவைச் சம்மதிக்க வைத்தார்கள்.

    தாரிணியிடம் விபரம் சொல்லப்பட்டது.

    அவர் நல்லபடியா பிழைக்க... நான் எங்கே வேணும்னாலும் வரத் தயார்.

    கண்ணீருடன் சொன்னாள்.

    அன்று மாலை ஆறு மணிக்கு விளக்கு வைக்கும் சந்தியாகால நேரத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஜாதகங்களை கொண்டு வரச் சொல்லி இருக்காங்க.

    சரி!

    தாரிணி ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்தாள். அழுது அயர்ந்ததால் முகம் வீங்கி சிவந்திருந்தது. அம்மா எதுவும் பேசவே இல்லை.

    கூடவே தாரிணியின் அண்ணன் வந்திருந்தான்.

    இவன் எதுக்கு? - அம்மா கேட்க,

    இதோ பாருங்க... இது என் தங்கச்சியோட வாழ்க்கை. எங்களோட துடிப்பு யாருக்கும் இருக்காது.

    அண்ணே... பேசாம இரு! அவங்களை யாரும் நோகடிக்காதீங்க. அவர் மேல உயிரையே வச்சிருக்காங்க!

    இப்பக்கூட அவங்களுக்காக கவலைப்படுறே நீ! அவங்க உன்னைப் பத்தி நினைக்கலையே? புருஷனை இழந்தவங்கதானே! அந்த வலி என்னன்னு ஒரு பொம்பளைக்கு புரியாதா?

    அம்மா 'படக்’கென திரும்பினாள்.

    அத்தை குறுக்கிட்டாள்.

    விடுங்க... இப்ப யாரோட கோபமும் முக்கியமில்லை. ரெண்டு பேரும் புறப்படுங்க.

    உள்ளூர் சிவன் கோயிலில் ஜோசியர் இருந்தார். அவரைப் பார்க்க ஒரு கூட்டமே காத்திருந்தது.

    இவர்களும் காத்திருந்தார்கள்.

    இவர்களது முறை வர...

    அவரை வணங்கிவிட்டு, எதிரே உட்கார்ந்தார்கள்.

    கூடவே வந்த அத்தை விபரம் சொன்னாள்.

    நீங்க அவருக்கு அம்மாவா? இவங்க மனைவியா? என்று கேட்டபடி ஏற இறங்கப் பார்த்தார்.

    மிச்ச விபரம் கேட்டார்.

    உங்க மகன் ஜாதகத்தை முதல்ல குடுங்கம்மா.

    அம்மா எடுத்துத் தந்தாள். அவர் ஆராய்ந்தார்.

    கண்டம்ன்னு காட்டுதே! அவருக்கு இருபத்தி ஏழாவது வயது முடியும்போது, உயிருக்கே ஆபத்து இருக்குன்னு ஜாதகம் சொல்லுதே?

    இப்பத்தான் இருபத்தி ஏழு முடிஞ்சிருக்கு!

    அம்மா குரல் இடறியது.

    அவன் பிழைப்பானா?

    அதற்கு அவர் பதில் பேசாமல்,

    உங்க ஜாதகத்தைக் கொண்டு வந்திருக்கீங்களா? என தாரிணியிடம் கேட்டார்.

    அண்ணன் எடுத்துத் தந்தான்.

    அவர் அதையும் ஆராய்ந்தார். நட்ராஜின் ஜாதகத்தைப் பக்கத்தில் வைத்து ஒப்பிட்டார்.

    மூவரும் படபடப்புடன் பார்க்க,

    நான் அவரோட மனைவி ஜாதகத்தைக் கேட்டேன் என்றார்.

    அதைத்தான் தந்திருக்கோம்.

    அவரோட மனைவி ஜாதகம்தான்... இதோ இருக்காளே இவ ஜாதகம்.

    நிச்சயமா இந்த ஜாதகம் இவரோட மனைவி ஜாதகம் இல்லீங்க!

    என்ன பேசுறீங்க? கல்யாணமாகி ஒரு வாரம்கூட ஆகல. ஊர் அறிய நடந்த கல்யாணம். பையில 'இன்விடேஷன்' கூட வச்சிருக்கேன் பாருங்க. இவதான் அவரோட மனைவி. இது இவளோட ஜாதகம்.

    இல்லீங்க!

    அவ்வளவுதான்... அண்ணன் படக்கென எழுந்துவிட்டான்.

    தாரிணி... புறப்படும். இந்த ஆள் ஒரு நல்ல ஜோசியரே கிடையாது. நடந்த எல்லாத்தையும் இல்லைன்னு சொன்னா... இவர் எப்படி நல்ல ஜோசியரா இருக்க முடியும்?

    நான்... கல்யாணத்தை இல்லைன்னு சொல்லலீங்க. ஆனா, இது அவர் மனைவியோட ஜாதகம் இல்ல.

    அண்ணன் அடிக்கப் பாய்ந்துவிட்டான்.

    ஏன்ய்யா... நாங்கெல்லாம் பைத்தியக்காரங்களா?

    ஒரு நிமிஷம் உட்காருங்க. எனக்கு 'நாடி' ஜோசியமும் தெரியும். இந்தம்மாவும் தன் பிள்ளையோட நாடி ஜோசியம் பார்க்க வந்திருக்காங்க. சுவடிகளைக்கூட நாங்க எடுத்திருக்கோம். நோட்டுப் புத்தகமாகவே தந்திருக்கேன். உண்டா... இல்லையா?

    ஆமா...

    அதுல உங்க பிள்ளைக்கு கண்டம் இருக்குன்னு எழுதிக் குடுத்திருப்பேன்! சரியா?

    ஆமாங்க... அதை நான் பெரிசா எடுத்துக்கல. ஆனா. அதுதான் இப்ப நடந்திருக்கு.

    அந்தப் புத்தகம் இப்ப உங்ககிட்ட இருக்கா?

    அம்மா தயக்கத்துடன் அதைக் கை நடுங்க வெளியே எடுத்தாள்.

    தாரிணி கலக்கத்துடன் பார்த்தாள். அதில் ஜாதகம் எழுதப்பட்டு, நட்ராஜ் பற்றிய பல குறிப்புகள் இருந்தன.

    'பெரிய விபத்து நடக்கும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது!

    போதுமா...?

    ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

    அவர் பேரோடு அம்மா பேரையும் சொல்லி, அப்பா உயிரோட இல்லைன்னும் தெளிவுபடுத்தி இருக்கேன். உடன் பிறப்புகள் கிடையாதுன்னும் சொன்னேன். அவ்ளோ ஏன்... வரப்போற மனைவி பேரைக்கூட சொல்லி இருப்பேனே! பாருங்க..."

    அத்தனை பேரிடமும் ஆர்வம் சூழ்ந்தது.

    வேகமாக பக்கங்களைப் புரட்ட,

    பெயர்த் தகவல்கள் இருந்தன.

    அதில் மனைவி பெயர் 'சுந்தரி' என பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது.

    இது சுத்தப் பொய். இவ பேரு தாரிணி!- அண்ணன் கூச்சலிட,

    இல்லை... அதுதான் நிஜம்! அவனோட மனைவி பேரு சுந்தரிதான் என அம்மா உரக்கச் சொல்ல,

    தாரிணி பெரிய அதிர்ச்சியுடன் திரும்பினாள்!

    2

    ‘அவனோட மனைவி பேரு சுந்தரிதான்' என அம்மா உரக்கச் சொல்ல, தாரிணி பெரிய அதிர்ச்சியுடன் திரும்பினாள்.

    பாத்தீங்களா... நாங்க பொய் சொல்ல மாட்டோம். பெத்த அம்மாவே சொல்றாங்க. மனைவி சுந்தரியோட ஜாதகம் எங்கே? குடுங்க! அதை வச்சுத்தான் அவர் பிழைப்பாரா... அந்த சுந்தரிக்கு தாலிப் பாக்கியம் இருக்கா... என்ன பரிகாரம் செஞ்சா அவர் பிழைப்பார்... இதையெல்லாம் சொல்ல முடியும்.

    அண்ணன் ஆவேசமாக எழுந்துவிட்டான்.

    தாரிணி! எத்தனை பெரிய மோசடி நடந்திருக்கு பாரு.

    அண்ணே!

    அந்த நட்ராஜ் ஒரு அயோக்கியன். உன்னை ஏமாத்தி இருக்கான். இப்ப அது வெளிச்சத்துக்கு வருது. அதான் இந்தம்மா உன்னை வர விடாம தடுத்திருக்காங்க.

    இல்லண்ணே! அவசரப்படாதே... அவர் தப்பானவர் இல்லை. எனக்கு நல்லாத் தெரியும். பெண்கள்கிட்ட எத்தனை மரியாதை வச்சவர் தெரியுமா? யாரையும் அவர் ஏமாத்த மாட்டார்.

    நிறுத்து தாரிணி! ஜோசியரும் சொல்றார். 'நட்ராஜ் மனைவி சுந்தரி'ன்னு இவங்களும் ஒத்துக்கறாங்க. இப்பவும் நீ நம்பலைன்னா எப்படி? இதை சும்மா விடக்கூடாது. முறையா கல்யாணமும் நடந்து, பதிவுத் திருமணம் ஆகியாச்சு. போலீஸ்ல நான் புகார் தருவேன் - கூச்சலிட்டான்.

    அண்ணே இது கோவில்! எதுவானாலும் வீட்டுல போய்ப் பேசிக்கலாம். அவர் உயிருக்கு போராடிட்டு இருக்கார்.

    செஞ்ச பாவத்துக்கு தெய்வம் கொடுத்த தண்டனை.

    நிறுத்துண்ணே! இதுக்கு மேல நீ பேசினா தாங்க மாட்டேன். முதல்ல அவர் பிழைக்கணும்... எனக்கு அதுதான் முக்கியம். அப்புறமா எந்தப் போராட்டத்துக்கும் நான் தயாராக இருக்கேன்.

    இதைக் கேட்டு தில்லையம்மா ஒரு மாதிரி ஆடிப் போயிருந்தாள்.

    காரில் ஏறி வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

    அந்த அத்தை அருகில் வந்தாள்.

    என்ன அண்ணி பேசுறீங்க? நாங்க கிட்டத்தட்ட பதினைஞ்சு வருஷமா உங்கக்கூட இருக்கோம். பன்னிரண்டு வயசு முதலே நட்ராஜை பார்க்கிறோம். அவனுக்கு வேற கல்யாணம் எதுவும் நடந்திருக்க வாய்ப்பு இல்லையே?

    அம்மா பேசவில்லை!

    நிச்சயமா எங்கக்கிட்ட சொல்லாம நடக்காது. அவன் பள்ளிக்கூட - 'காலேஜ்’ படிப்பு, உத்தியோகம் எல்லாம் இங்கே எங்க கண் முன்னால் நடந்திருக்கே!

    தாரிணி அருகில் வந்தாள்.

    நீங்க எதையும் மறைக்கலையேம்மா?

    இல்லம்மா... நான் சொந்த அத்தை கிடையாது. ஒண்ணுவிட்ட அத்தை. அண்ணனும், அண்ணியும் சிதம்பரத்துலதான் இருந்தாங்க. நட்ராஜ் அங்கேதான் பிறந்தான். பதினொரு வயசு முடியற வரைக்கும் அங்கேயே இருந்தாங்க. அப்புறமா அண்ணனும் மாரடைப்பு வந்து சிகிச்சைக்காக வந்தாங்க. இங்கே வந்த ஒரு வருஷத்துல அண்ணன் காலமாகிட்டாரு. அப்புறம் அண்ணி இவனை வளர்க்க பட்டபாடு கொஞ்சமில்லே! நாங்க கூடவே இருந்திருக்கோமே? அவனுக்குக் கல்யாணம் நடந்தா எங்களுக்கு தெரியாம இருக்குமா?

    தாரிணி, மாமியாரை நெருங்கினாள்.

    அத்தே... உங்களுக்கு எங்கிட்ட என்ன கோபம் வேணும்னாலும் இருக்கட்டும். இப்ப அவர் பிழைக்கணும்! அதான் நமக்கு முக்கியம். அவரோட மனைவி பேரு

    Enjoying the preview?
    Page 1 of 1