Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manjam Konda Nenjam
Manjam Konda Nenjam
Manjam Konda Nenjam
Ebook136 pages57 minutes

Manjam Konda Nenjam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580100606199
Manjam Konda Nenjam

Read more from Devibala

Related to Manjam Konda Nenjam

Related ebooks

Reviews for Manjam Konda Nenjam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manjam Konda Nenjam - Devibala

    http://www.pustaka.co.in

    மஞ்சம் கொண்ட நெஞ்சம்

    Manjam Konda Nenjam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    *****

    அத்தியாயம் 1

    எனக்குக் கல்யாணம் நடக்காது! இனிமே அந்த முயற்சியை விட்டுடுங்க!

    வசந்தியின் குரலில் ஆவேசம், அழுகை இரண்டுமே இருந்தன.

    அம்மா அருகில் வந்தாள்.

    என்ன பேசுறே, நீ? உனக்கு ஏன் கல்யாணம் நடக்காது? அப்படி யார் சொன்னாங்க?

    வசந்தி, சீற்றத்துடன் திரும்பினாள்.

    "அம்மா! எனக்கு செவ்வாய் தோஷம்! அதே அமைப்பு ஜாதகம் யாருக்கு இருக்கோ, அவர் எனக்கு புருஷன் ஆகணும்! அந்த மாதிரி வரன் கிடைக்கிறதே கஷ்டம். போன வருஷம் ஒண்ணே ஒண்ணு வந்தது! அவங்க நிறைய எதிர்பார்த்தாங்க! நம்மால் கொடுக்க முடியலை.

    இந்த மாசம் அதேமாதிரி இன்னொரு வரன் வந்தது! பொண்ணு வேலை பார்க்கணும்னு சொன்னாங்க! நா வேலைக்குப் போகாதப் பொண்ணு! இதுவும் தட்டிப்போச்சு. இனிமே செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம் எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருக்கணும்! இப்பவே வயசு இருபத்தி ஆறு! எனக்குக் கீழே ரெண்டு தங்கச்சிங்க! எல்லார் வாழ்க்கைக்கும் நான் ஒரு தடைக் கல்லா இருக்கணுமா? சொல்லும்மா!" - வசந்தி, முடிக்கும்போது பலமாய் அழுதாள்.

    அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை!

    சரிம்மா! அழாதே! கடவுள் உனக்காக ஒருத்தனைப் படைச்சிருப்பார். இன்னும் நம்ம கண்ணுல படலை! மாங்கல்ய யோகம் உனக்கு வரலை! காத்துக்கிட்டு இருப்போம்!

    வசந்தி உள்ளே போய்விட்டாள்.

    அம்மா, பெருமூச்சு விட்டப்படி சமையல்கட்டுக்குள் நுழைந்தாள்.

    அவள் கணவர், மகாலிங்கம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். ஆரம்பத்தில் நிறையக் கஷ்டப்பட்டவர். படிப்படியாக உழைப்பால் முன்னேறி, இன்று நல்ல பதவியில் இருப்பவர். ஓய்வு பெற இன்னும் நாலு ஆண்டே இருக்கிறது!

    வீட்டில் மூத்தவள் வசந்தி. படிப்பு வெறும் பன்னிரண்டாவது! அதிக அழகில்லை. உத்தியோகமும் இல்லை. அப்பாவிப் பெண்! தன்னம்பிக்கை குறைந்தவள். வயது இருபத்தி ஆறு! செவ்வாய் தோஷத்தால் கல்யாணம் தள்ளிப்போக, நிம்மதி இல்லாமல் வாழ்பவள். பெற்றோருக்கும் அவளால் நிம்மதி இல்லை.

    அடுத்தவள், சாந்தி. வயது 23. பட்டதாரி. பள்ளிக்கூட ஆசிரியை. சுமாரான அழகு! எதிலும் தலையிடாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என வாழும் பெண்! மற்றவர்கள் பத்து வார்த்தைகள் பேசினால், ஒருவார்த்தை பதில் சொல்வாள்! யாரிடமும் அவ்வளவாக ஒட்டமாட்டாள்.

    மூன்றாவது பெண், ஆனந்தி. வயது இருபது. இப்போதுதான் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மேற்கொண்டு என்ன படிக்கலாம் என யோசிக்கிறாள். நல்ல புத்திசாலி… அழகானப் பெண். அப்பாச் செல்லம்! எல்லோரிடமும் கலகலப்பாக பழகுவாள்! அந்த வீட்டுக்கு யார் வந்தாலும் முதலில் நலம் விசாரிப்பது ஆனந்தியைத்தான்!

    எல்லா விஷயத்திலும் ஆனந்தி தலையிடுவாள். அப்பாவுக்கு ஆலோசகர் அவள்தான். அவள் பிறந்தபிறகு அவருக்கு பதவி உயர்வும், செல்வமும் சேர்ந்ததால், அவள் ராசியான மகள் என்ற பெருமை அப்பாவுக்கு உண்டு!

    இதுதான் மகாலிங்கத்தின் குடும்பப் பின்னணி!

    தான் பதவியில் இருக்கும்போதே, மூன்று பெண்களுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிடத் துடிப்பவர், மகாலிங்கம்.

    ஓரளவு பணமும் சேர்த்து வைத்திருக்கிறார். ஆனால், மூத்தவளின் இந்த செவ்வாய் தோஷ பிரச்சினை அவரை லேசாக தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறது!

    மூத்தவளை வைத்துக்கொண்டு மற்ற பெண்களுக்கு வரன் பார்க்க முடியாது! அது இன்னும் பெரிய ஊனமாகிவிடும்!

    மூத்தவளுக்கு வரன் அமையாததால் வீட்டிலுள்ள மகிழ்ச்சியும், நிம்மதியும் மெல்ல மெல்ல குலைந்துகொண்டே வரத் தொடங்கின.

    அன்று இரவு சாப்பாட்டுக்குப் பின், வெற்றிலையைப் போட்டபடி மகாலிங்கம், மொட்டைமாடிக்கு வந்தார். வசந்தியும் வந்தாள்.

    அப்பா!

    சொல்லும்மா.

    கோபப்படாதீங்க!

    எதுக்குக் கோபம்? எதுவானாலும் சொல்லு.

    சாந்திக்கு வரன் பார்க்கத் தொடங்கிடுங்கப்பா!

    'சரக்'கென அவர் திரும்பினார். எதுக்கு?

    இந்தப் பிறவியில் எனக்குக் கல்யாணம் நடக்கும்னு தோணலைப்பா! என் ஜாதகமும் சரியில்லை! கல்யாணச் சந்தையில் இப்ப ஒரு பெண் விலை போக, பலதகுதிகள் வேண்டியிருக்கு. அழகு, படிப்பு, உத்தியோகம் இந்த மூணும் முக்கியம். மூணுமே என்கிட்ட இல்லை! எனக்குக் கல்யாணம் நடக்கும்னு இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை இருக்காப்பா?

    மகாலிங்கம் ஆடிப்போனார்.

    அப்பா! ஒருத்தர் வருத்தப்படும் போது, அவங்களை சமாதானப்படுத்த என்ன வேணும்னாலும் பேசலாம். ஆனா, கூடவே உண்மை என்னன்னு பார்க்கணுமில்லையாப்பா?

    அம்மா படி ஏறி வந்தாள்.

    நாமே சில கற்பனைகளை, நம்பிக்கைகளை உருவாக்கிட்டு, மத்தவங்க வாழ்க்கையை பாழாக்கக் கூடாதில்லையா? எனக்கு வரன் அமையலைன்னா, தங்கச்சிகளுக்கும் வயசு கூடும். அவங்க எதிர்காலமும் கேள்விக்குறியாகும்! அதை நாசமாக்குகிற உரிமை நம்ம யாருக்கும் இல்லைப்பா!

    அம்மா வேதனையுடன் அப்பாவைப் பார்த்தாள்.

    சாந்தி டீச்சரா இருக்கா. அழகிலும் சுமாரா இருக்கா! நிச்சயமா அவளைப் பார்க்க வந்தவங்க வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. இந்த வீட்டுல ஒரு நல்ல காரியம் நடக்கட்டும்பா!

    வசந்தி, நீ எதார்த்தமா பேசும்போது, நானும் அப்படி பேசுறதுதான் நியாயம்!

    சொல்லுங்கப்பா.

    சாந்திக்குக் கல்யாணம் நடந்தா, உன் எதிர்காலம் இன்னும் பெரிய பிரச்சினைக்குப் போயிடும்.

    இப்ப மட்டும் என்னப்பா?

    அதில்லைம்மா!

    என்ன பேசுவாங்க? 'மூத்தவ இருக்க ரெண்டாவது பெண்ணுக்குக் கல்யாணம் நடக்குது! மூத்தவளுக்கு ஏதாவது கோளாறு இருக்கும்'னு சொல்லுவாங்க! இப்ப மட்டும் என்னப்பா வாழுது? என்னைக் கொத்திட்டுப் போக யார் காத்துக்கிட்டு நிக்காங்க?

    அவர் பேசவில்லை.

    அப்பா! என் கழுத்துல தாலி ஏறக்கூடிய யோகம் இருந்தா, ஆனந்தி கல்யாணம் முடிஞ்சபிறகுகூட அது நடக்கும். யோகம் இல்லைன்னா, தங்கச்சிங்க வாழ்க்கையும் வீணாகும். கடைசியில் 'இவ, நமக்கு ஒரு முட்டுக்கட்டையா இருக்காள்'னு என்மேல் வெறுப்பு வரும்! எல்லோரும் ஒதுக்கி வைக்கிற அளவுக்கு நான் ஆகணுமாப்பா?

    அவள் குரலில் இருந்த பரிதாபம். அப்பாவையே கண்கலங்க வைத்துவிட்டது.

    ஏன்டீ இப்படியெல்லாம் பேசுறே? - அம்மா பதற...

    உண்மைகளை பேசித்தானேம்மா ஆகணும்?

    அப்பா எழுந்தார்.

    "வசந்தி! எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடு. அதிக பட்சம் ஒரு மாசம்! அதுக்குள்ளே முட்டி மோதி ஏதாவதொரு வரனைக் கொண்டுவர்றேன்! அப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1