Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyaniyin Kalyanam
Kalyaniyin Kalyanam
Kalyaniyin Kalyanam
Ebook126 pages48 minutes

Kalyaniyin Kalyanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580100606057
Kalyaniyin Kalyanam

Read more from Devibala

Related to Kalyaniyin Kalyanam

Related ebooks

Reviews for Kalyaniyin Kalyanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyaniyin Kalyanam - Devibala

    http://www.pustaka.co.in

    கல்யாணியின் கல்யாணம்

    Kalyaniyin Kalyanam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    *****

    அத்தியாயம் 1

    ஆட்டோ! அபிராமபுரம் வரைக்கும் போகணும்! வர்றியாப்பா?

    திரும்பிய உருவத்தைப் பார்த்ததும் பிரமித்தான் அவன்.

    'பெண்'

    சேலையும், காக்கி நிற கோட்டும் அணிந்து, பெண் ஆட்டோ டிரைவர்!

    நான் ஆட்டோ டிரைவரைக் கூப்பிட்டேன்!

    நான் ஆட்டோ டிரைவர்தான். ஏறி ஒக்காருங்க?

    பொம்பளை ஆட்டோ ஓட்டத் தொடங்கியாச்சா?

    அவள் சிரித்தாள்.

    பொம்பளை வராத இடமே பாக்கியில்லை! அதென்ன பொம்பளை ஆட்டோ ஓட்டத் தொடங்கியாச்சா? ஏன்? கூடாதா? ஏறுங்க!

    அவன் ஏறி உட்கார்ந்தான்.

    அவள் வெகு லாவகமாக ஸ்டார்ட் செய்து, இயல்பாக போக்குவரத்தில் கலந்தாள்.

    உனக்கிது சொந்த வண்டியா? வாடகை வண்டியா?

    பதிலே இல்லை!

    பொண்ணு உன்னைத்தான் கேக்கறேன்!

    நீ போய் சேர வேண்டியது அபிராமபுரம்! உனக்கு அது போதும்! இது எந்த வண்டியா இருந்தா, உனக்கென்னய்யா?

    என்ன நீ? வா போன்னு சொல்ற?

    நீ என்ன குடுக்கறியோ, அதுதான் உனக்குத் திரும்பக் கிடைக்கும்! புரியுதா?

    பொம்பளையா இருந்தாலும் திமிரு ஜாஸ்திதான்!

    சரக்கென வண்டி நின்றது.

    என்னாம்மா? நிறுத்திட்ட

    எறங்குய்யா வண்டியை விட்டு

    அம்மாடீ.. என்ன இது?

    பின்ன? நீ வர்றது சவாரி! இதுல மத்தவங்க பர்சனல் விஷயம் என்ன வேண்டி கிடக்கு. மீட்டரை கட் பண்ணி, பணத்தைக் குடுத்துட்டு வேற வண்டிய பாரு

    அய்யோ நேரமாச்சு! நான் எதுவும் பேசலை! வண்டிய எடு தாயி!

    அப்படி வா வழிக்கு மறுபடியும் ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தாள்.

    யம்மாடி.. பஜாரி

    என்னது?

    ஒண்ணுமில்லே… பரதேவிதே!

    அபிராமபுரத்தில் வண்டி நின்றது. மீட்டர் 23 ரூபாய் காட்டியது! அது இருபத்தைஞ்சு ரூபாய் எடுத்துக் கொடுத்தது. வேகமாப் போக ஆரம்பித்தது.

    சார்! நில்லுங்க!

    என்னம்மா?

    மீதி ரெண்டு ரூபா வாங்காம போறீங்களே!

    நீ வச்சுக்கோ!

    தேவையில்லை! மீட்டர் காட்டின துட்டை நீங்க தந்தாப் போதும்!

    பரவாயில்லை! வச்சுக்கோ!

    அட, வேணாம்யா! உழைக்கறதே ஒட்டறதில்லை. அதிகமா எதுக்கு வாங்கணும்? பிடி

    இப்படி ஆட்டோ டிரைவரா சென்னைல?

    அதான் கல்யாணி!

    சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்.

    அடையாறு வருமாம்மா?

    பெண் குரல் கேட்டது.

    ஏறுங்கம்மா வண்டில!

    அட பொம்பிள டிரைவரா? நல்லதாப் போச்சு! வாடி பங்கஜம் மெதுவா!

    கர்ப்பிணிப் பெண்ணைப் பிடித்து அந்த நடுத்தர வயதுக்காரி ஏற்றினாள்.

    எத்தனை மாசம்? கல்யாணி கேட்டாள்!

    ஏழு மாசமாச்சு தாயீ!

    ஆட்டோல போகலாம்னு டாக்டர் சொல்லியிருக்காரா?

    அந்த மாசம் வரைக்கும்தான் வேண்டாம்னு சொல்லியிருந்தாரு

    சரி ஏறுங்க!

    கல்யாணி ஆட்டோவை ஒரு பூப்பல்லக்கு போல் அத்தனை ஜாக்ரதையாக ஓட்டினாள்.

    அடையாறு வந்தது.

    ரொம்ப ஜாக்ரதையா கூட்டிட்டு வந்தே கண்ணு! அஞ்சு ரூபா கூட வச்சுக்கோ!

    வேண்டவே வேண்டாம்! ஆஸ்பத்திரிக்கு நீங்க போறதா இருந்தா, காசே வாங்கியிருக்க மாட்டேன்! மீட்டர் பார்த்துக் குடுங்க!

    அடுத்த சவாரி வந்துவிட கல்யாணி புறப்பட்டு விட்டாள்.

    இந்த நேரத்தில் கல்யாணி பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு விடலாம்!

    கல்யாணிக்கு வயது இருபத்தி அஞ்சு!

    பார்த்தவுடன் பெருமூச்சு விடத் தோன்றும். அழகான பெண்! நல்ல உயரம், உடம்பு என அற்புதமான கம்பீரம். பிகாம் படித்துவிட்டு, கம்ப்யூட்டர் வகுப்பு சேர்த்திருந்த சமயம் அண்ணன் இறந்து போனான்.

    அண்ணன் மொடக்குடிகாரன்! 24 மணி நேரமும் குடி காரணமாக குடும்பத்தையே அழிவுப் பாதைக்குக் கொண்டு வந்தான். தன்னிடம் இருக்கும் நகைகளை விற்றுத்தான் அண்ணி குடும்பம் நடத்தினாள்.

    அண்ணி இத்த வீட்டுக்கு வரும்போது கல்யாணிக்கு பதினாறு வயதுதான். அண்ணன் கல்யாணியை விட பன்னண்டு வயசு மூத்தவன். அப்பா ஒரு வருடம் முன்னால்தான் இறந்து போயிருந்தார். தாயை சிறு வயதில் இழந்த குடும்பம் அது.

    அண்ணன் ஒரு கட்டம் வரையில் பொறுப்பாகத்தான் இருந்தான். அண்ணி கௌரி வரும்போது கூட அண்ணன் நல்லவனாக, பொறுப்பாகத்தான் இருந்தான்.

    கல்யாணி முதலாண்டு பி.காம் படிக்கும் போதுதான் அவனுக்கு குடிப்பழக்கம் தொடங்கியது! அது அசுர வேகத்தில் வளர்ந்து, அவனையே முழுங்கும் அளவுக்கு வந்தபோதுதான் குடும்பமே நிலை குலைந்தது.

    சம்பளமே தரமாட்டான்!

    அண்ணிக்கும், அவனுக்கும் எந்த நேரமும் சண்டை!

    அண்ணி கௌரி அற்புதமான பெண்!

    குடும்ப பொறுப்பும், பாசமும் அவளைப் போல யாருக்கும் இல்லை!

    படிக்காதவள்தான். ஆறாம் வகுப்பு படித்த பெண்! அவளுக்கும் பிறந்த வீட்டு நாதியெல்லாம் இல்லை!

    இருக்கும் நகைகளை விற்று கல்யாணியின் படிப்பு, குடும்பச் செலவு வகையறாக்களை நடத்தத் தொடங்கினாள்.

    அண்ணன் மாசக்கணக்காக ஆபீஸ் போகாமல், லீவெல்லாம் தீர்ந்து சம்பளம் கட்டாகி....

    அவன் மீட்க முடியாத பள்ளத்துக்குள் விழுந்து விட,

    கௌரி போராடிய போராட்டங்களைச் சொன்னால், ஒரு பெண்ணின் கண்ணீர் கதையை தனியாக எழுத வேண்டி வரும்!

    'வேண்டாம்!'

    'விஷயத்துக்கு வருவோம்!'

    பி.காம் முதல் வகுப்பில் பாஸ் செய்த கல்யாணி, கம்ப்யூட்டர் வகுப்பில் ஒருவரது ஸ்பான்சர் மதிப்புடன் சேர்ந்த சமயம் தான் அண்ணன் ரத்தவாந்தி எடுத்து அட்மிட் ஆசி நாலாம் நாள் உயிரை விட்டான்.

    கௌரி அழவே இல்லை!

    அழ அவளிடம் கண்ணீர் இல்லை!

    யாரோ உறவுக்காரர்கள் கொள்ளி வைத்தார்கள். இருந்த கூட்டமெல்லாம் கலைந்து போனது!

    வாரிசென்று ஒரு குழந்தையும் இல்லை!

    Enjoying the preview?
    Page 1 of 1