Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Ilavasam
Uyir Ilavasam
Uyir Ilavasam
Ebook93 pages36 minutes

Uyir Ilavasam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூன்று நண்பர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். ஏன்? அவர்களை கொலை செய்தது யார்? எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டனர்? கொலையாளிக்கும், அந்த மூவருக்கும் என்ன தொடர்பு. பார்ப்போம் இலவசமாக உயிர் கொடுத்து...

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580100607875
Uyir Ilavasam

Read more from Devibala

Related to Uyir Ilavasam

Related ebooks

Reviews for Uyir Ilavasam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Ilavasam - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உயிர் இலவசம்

    Uyir Ilavasam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அந்த நள்ளிரவின் நிசப்தத்தில் தேவாலய மணி ஓசை கம்பீரமாக ஒலித்தது.

    படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான் சிவா.

    இருளுக்குக் கண்கள் பழகியதும், அந்த அறை மசமசப்பான வெளிச்சத்தில் ஓரளவு புலப்பட்டது.

    சற்றுத் தூரத்தில் சுவரை ஒட்டினது போலப் படுத்துக் கிடந்தாள் சாதனா. கெண்டைக் கால் வரை சேலை முன்னேறி, அவளது ஆடுதசையின் திரட்சியை அந்த இருட்டிலும் அப்பட்டமாக்கியது. சற்றுத் தள்ளி இருந்த ஒற்றைக் கட்டிலில் குழந்தை கோகுலும் மல்லாந்து படுத்து, சுகமான உறக்கத்தில் இருந்தான்.

    கட்டிலை விட்டுக் காலைக் கீழே பதித்தான் சிவா. நாக்கு வறண்டது போல் இருந்தது. மேசைமேல் இருந்த கூஜாவில் தண்ணீர் இருந்தது. மேலே கவிழ்த்து வைத்திருந்த டம்ளரை எடுத்தான். அது நழுவி, உருண்டுக் கீழே விழ,

    திடுக்கிட்டு விழித்தாள் சாதனா.

    பூனையா?

    இல்லை. நான்தான்! தண்ணி குடிக்க எழுந்தேன்.

    ப்ஸ்! திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

    நீரைப் பருகிவிட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான். இடது பக்கம் திரும்பினால் கதவு. கதவுக்கு வெளியே பால்கனி. வலது புறம் பாத்ரூம்.

    பால்கனி கதவைத் திறந்தான்.

    ஜனவரி மாதக் குளிர்க்காற்று முகத்தில் சிலீரென அறைந்தது. பொருட்படுத்தாமல் வெளியே வந்தான்.

    சில் வண்டுகளின் ஓசை காதோரம் தடவியது. மழை வரும் போல காற்றில் ஈரம் தென்பட்டது.

    தொழிற்சாலை ஊழியர்களுக்கென கட்டப்பட்ட விசேஷக் குடியிருப்புப் பகுதி அது. நள்ளிரவில் இருந்ததால் அமானுடம் நிறைந்திருந்தது. தூரத்தில் பிரதான சாலை. பேக்டரி வண்டி ஒன்று கடப்பது அதன் வெளிச்சப் புள்ளியில் தெரிந்தது.

    சர்ச் கண்ணில் பட்டது.

    பார்வையால் அதன் உச்சியைத் தடவினான்.

    சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது. உள்ளே வந்தான். ஹேங்கரில் தொங்கிய கால்சட்டையைத் தடவி சிகரெட் பெட்டியை வெளியே எடுத்தான்.

    ஒரு சிகரெட் இருந்தது. அதைப் பெட்டியிலிருந்து விடுதலை செய்து, காலிப் பாக்கெட்டைப் பால்கனியில் வீசினான்.

    பற்ற வைத்து, நுரையீரலில் சூட்டை நிரப்பிக் கொண்டான்.

    மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

    பாதி சிகரெட் முடிந்ததும், அதைக் காலடியில் போட்டுத் தேய்த்தான்.

    உள்ளே நுழைந்து தன் அறைக்குள் எட்டிப் பார்த்தான். சாதனாவும், கோகுலும் ஆழமான உறக்கத்தில் இருந்தார்கள். தன் படுக்கையில் தலையணை, இத்யாதிகளைப் பரப்பி, படுத்திருப்பது போல ஓர் அமைப்பை உண்டாக்கினான்.

    வெளிப்பட்டான்.

    பால்கனி மூலையில் கிடந்த கெட்டியான நைலான் கயிறை நன்றாகச் சோதித்தபின், அதை கான்க்ரீட் நீட்டல்களில் பிணைத்து நிறுத்தினான். சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு, அதைப் பிடித்துக் கொண்டு சடாரெனக் கீழே இறங்கத் தொடங்கினான்.

    நிலம் தொட்டதும் தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.

    கறுப்பு நைலான் கயிறாக இருந்ததால் இருளில் அதன் நீளம் தென்படவில்லை.

    மெல்ல நடக்கத் தொடங்கினான்.

    அந்தக் காலனியில் ரெட்டை வரிசையாக வீடுகள். அவர்களது தொழிற்சாலை பாஷையில் அதை ‘டைப் - 3’ வீடுகள் என்பார்கள்.

    ஏறத்தாழ வரிசைக்கு எட்டு வீடுகள் வீதம் பதினாறு வீடுகள் இருந்தன.

    அந்தக் காலனியின் கோடியில் இருந்த வீட்டை நெருங்கினான்.

    அதன் வாசலில் நின்றான். சுற்றிலும் ஒருமுறை பார்த்து, நிச்சயப்படுத்திக் கொண்டபின், கதவை ஒருமுறை ஓசைப்படுத்தினான்.

    எந்தப் பதிலும் இல்லை.

    இரண்டாவது முறை சற்றுப் பலமாகவே கதவைத் தட்டினான்.

    யாரது?

    உள்ளேயிருந்து ஒரு பெண் குரல் புறப்பட,

    சிவா அதிர்ச்சியின் விளிம்புக்கே போய்விட்டான்.

    என்னங்க! எழுந்திருங்களேன்! இந்த நேரத்துல யார் நம்ம வீட்டுக் கதவைத் தட்டறது?

    சிவா சடாரெனத்

    Enjoying the preview?
    Page 1 of 1