Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Naal... Yaro...
Oru Naal... Yaro...
Oru Naal... Yaro...
Ebook111 pages35 minutes

Oru Naal... Yaro...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் பெயர் கீதா மதிவாணன். பிறந்து வளர்ந்த ஊர் பொன்மலை, திருச்சி. திருமணத்துக்குப் பின் சென்னையில் சில வருடங்கள் வசித்த பின் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறேன். கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகிறேன். மஞ்சரி, தினமலர் பெண்கள் மலர், அக்ரி டாக்டர், பூவுலகு போன்ற பத்திரிகைகளிலும் வல்லமை, நிலாச்சாரல், அதீதம், பதிவுகள் போன்ற இணைய இதழ்களிலும் என்னுடைய படைப்புகள் வெளியாகியுள்ளன. ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பான ‘என்றாவது ஒரு நாள்’ என்னும் என் சிறுகதைத் தொகுப்பு அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற சங்கத்தமிழ் மாநாட்டு மலரில் நான் எழுதிய இலக்கியக் கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. பறவை கூர்நோக்கலும் இயற்கைசார் புகைப்படங்கள் எடுத்தலும் பொழுதுபோக்குகள்.
Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580117602019
Oru Naal... Yaro...

Read more from Geetha Mathivanan

Related to Oru Naal... Yaro...

Related ebooks

Reviews for Oru Naal... Yaro...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Naal... Yaro... - Geetha Mathivanan

    http://www.pustaka.co.in

    ஒரு நாள் யாரோ

    Oru Naal Yaaro

    Author:

    கீதா மதிவாணன்

    Geetha Mathivanan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/geetha-mathivanan
    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.
    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 1

    ஆங்கிலேயர் காலத்தில் மிகவும் நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டப்பட்டஅரசு அலுவலர் குடியிருப்புப்பகுதி, பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. வரிசையாய் கோக்கப்பட்ட மணிகளைப் போலஒவ்வொரு பிளாக்கிலும் சீமை ஓடுகள் வாய்ந்த பன்னிரண்டு வீடுகள் பக்கவாட்டுச்சுவர்களை பொதுவாய் சொந்தம் கொண்டாடிக்கொண்டு இருந்தாலும் முன்னும் பின்னும் தங்களுக்கென கையகலத் தோட்டங்களைப் பராமரித்துவந்தன.

    எல்லா வீடுகளிலும் முருங்கைமரம் தவறாமல் இருந்தது. ஒரு பிளாக்குக்கு ஒரு வீட்டிலாவது மாமரம் இருந்தது. இது தவிர ரோட்டோர வாதுமை மரங்களும்,வேப்பமரங்களும் சாலையோரத்தில் நிழல்கூட்டி போவோர் வருவோருக்கு இளைப்பாறவும், குடியிருப்பின் பெண்களுக்கு கதை பேச பொது அரங்கங்களாகவும் உதவின. குடியிருப்புவாசிகள் பெரும்பாலும் இன்னாரின் அப்பா, அம்மா என்று குழந்தைகளின் பெயரை முன்னிறுத்தியே அழைக்கப்பட்டனர்.

    இத்தகைய அருமையான குடியிருப்பின் இரண்டாவது பிளாக்கில் ஏழாவது வீட்டில் வசிக்கும் மூன்றுமாத கர்ப்பிணியானபிரமிளாவுக்கும் அவள் கணவன் ஈஷ்வருக்கும் இரண்டு நாட்களாய் சண்டை.

    என்னை எங்க ஊரிலே கொண்டுபோய் விடப்போறீங்களா, இல்லையா?

    ஏண்டி என்னை இப்படிப் படுத்தறே?அதான் அடுத்த மாசம் உங்க அம்மா வர்றதுக்குடிக்கட் ரிசர்வ் பண்ணியிருக்கேனில்ல, பின்ன ஏன் இப்படி அடம்பிடிக்கிறே?

    நானா அடம்பிடிக்கிறேன்?நீங்கதான் பிடிவாதம் பிடிக்கறீங்க. உங்களுக்கு நாத்தமும் தெரியாது, வாசனையும் தெரியாது, எனக்கு அப்படியில்ல, என்னால் இந்த நாத்தத்தில வாழவே முடியாது. இப்படியே வாந்தி எடுத்து எடுத்து சாவத்தான் போறேன், அப்புறமா தலையில அடிச்சிகிட்டு அழுவுங்க

    சரி, இப்ப என்ன?எங்கேயாவது எலி செத்துக்கிடக்கும், ரெண்டுநாள் நாறும், அதை காக்கா தின்னு முடிச்சிடுச்சின்னா நாறாது. அதுக்காக இப்பவே என்னைக் கொண்டுபோய் கன்னியாகுமரியில விடுன்னு சொன்னா என்ன அர்த்தம்? நெனச்சா நடக்கிற காரியமா இது?

    இங்க பாருங்க, இந்தப்பக்கம் போற யாரை வேணுமானாலும் கேட்டுப்பாருங்க, நாத்தம் கொடலப்புரட்டுது.....என்னால....உவ்........வே.........

    சொல்லிக்கொண்டிருக்கும்போதே குமட்டல் மேலிட வயிற்றைப்பிடித்துக்கொண்டே குளியலறைக்கு ஓடினாள். பின்னாலேயே ஓடிப்போய் தலையைத் தாங்கிப்பிடித்தான். வாந்தி எடுத்து எடுத்து சோர்ந்துபோய் இருப்பவளைக் கைத்தாங்கலாய் அழைத்துவந்து படுக்கையில் கிடத்தினான். கையை உதறிவிட்டாள். மின்விசிறியைச் சுழலவிட்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். பிரமிளா அரைமயக்க நிலையிலிருந்தாள்.

    ஈஷ்வருக்கு எரிச்சலாய் இருந்தது. மசக்கை என்றால் இப்படி வாந்தியெடுப்பார்கள் என்று தெரியும். டாக்டரிடம் காண்பித்து மருந்து வாங்கிக்கொடுத்தாகிவிட்டது. காலையில் வாசல் தெளிப்பதிலிருந்து சமையல் செய்து, பாத்திரம் துலக்கி, துணி துவைத்து எல்லா வேலைகளையும் அவனே செய்துவிடுகிறான். படுத்து ஓய்வெடுப்பது மட்டும்தான் அவள் வேலை. என்னவோ இவள்தான் அதிசயமாய்ப் பிள்ளைபெறுபவள் போல் பேசுகிறாளே! ஈஷ்வரின் அக்கா பாக்கியம், வேலைக்கும் போய்வந்துகொண்டு வீட்டிலும் வேலை செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்கவில்லையா?

    அம்மா வீட்டுக்குப் போக ஒரு சாக்கு. என்னவோ நாறுதாம். இருக்கமுடியலையாம். எங்கேயாவது எலி செத்துக்கிடக்கலாம். குடியிருப்புகளில் அடிக்கடி நிகழ்வதுதான். எலித்தொல்லை தீர எலிபாஷாணம் அல்லது எலிப்பொறி! இரண்டையும் விட்டால் பூனை.

    இந்த மக்களையும் சொல்லவேண்டும். எலி செத்தால் அதை குழிதோண்டிப்புதைப்பதில்லை. அப்படியே கொல்லையில் கடாசிவிட்டுவிடுவார்கள். அக்கா வீட்டுப்பக்கமும்இப்படிதான். ஒவ்வொருமுறையும் மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் போக, அக்காதான் இவனிடம் கெஞ்சுவாள்.

    ஈஷ்வர்! இந்த எலியைக் கொஞ்சம் புதைச்சிட்டுப்போடா!

    ஈஷ்வருக்கு ஒரு வசதி. அவனுடைய மூக்குக்கு நுகரும் தன்மை கிடையாது. தோட்டத்துப் பூவின் நறுமணத்தை அனைவரும் அனுபவிக்க அதை வேடிக்கை மட்டுமே பார்த்திருப்பான். அதற்காக அவன் வருந்தியதுமில்லை. 'பேருக்கு ஒரு மூக்கு. உங்களை ஏமாத்தி என் தலையில் கட்டிவச்சிட்டாங்க' என்று பிரமிளாஅடிக்கடிச் சொல்லிசீண்டுவாள்.

    துவண்டுபோய் கிடக்கும் பிரமிளாவைப் பார்த்தான். செல்லமாய் வளர்ந்தவள். தலைவலிக்கே ஊரைக்கூட்டுபவள். இவள் எப்படி மிச்சகாலத்தைக் கடந்து பிள்ளையைப் பெறுவாள் என்பதே ஈஷ்வரின் கவலையாக இருந்தது.

    போனவாரம் கூட பக்கத்துவீட்டு சாரதா டீச்சரிடம் இருவரும் புலம்பியதில், அவர் வந்து இருவருக்கும் புத்தி சொல்லிப்போனார்.

    "ஈஷ்வர், ஒரு பெண் இதுமாதிரி சந்தர்ப்பங்களில் அம்மா பக்கத்தில் இருக்கணும்னு நினைக்கிறதில் ஆச்சர்யம் ஒண்ணுமில்ல. என் பெண்ணையே பாருங்க, ஒரு கல்லூரியில கிட்டத்தட்ட துணை முதல்வர் பொறுப்பில் இருக்கிறவ. பத்து வருஷத்துக்குப் பிறகு இப்பதான் உண்டாகியிருக்கா. ரொம்ப கவனமா இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காராம். அவ புருஷனும், மாமியாரும் அவளை உள்ளங்கையில் வச்சிதான் தாங்கறாங்க, ஆனாலும் 'அம்மா வாம்மா, அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1