Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hello Sankarlal
Hello Sankarlal
Hello Sankarlal
Ebook330 pages2 hours

Hello Sankarlal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகான சுவிட்சர்லாந்திலிருந்து மிகப்பெரிய கப்பல் ஒன்று கிளம்பி இந்தியாவை நெருங்கி கொண்டிருந்தது. அதில் நமது ஹீரோ சங்கர்லாலும் தனது மனைவியுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் இரவு அவரது அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு ‘ஹலோ சங்கர்லால்’ என்றதும் துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்கப்பலில் ஒரு கொலை நடக்கிறது. சங்கர்லால் அதை கப்பலிலேயே விசாரிக்க ஆரம்பித்து சென்னையில் எவ்வாறு நிறைவு செய்கிறார் என்பதை சுவராசியமான நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580136605829
Hello Sankarlal

Read more from Tamilvanan

Related to Hello Sankarlal

Related ebooks

Reviews for Hello Sankarlal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hello Sankarlal - Tamilvanan

    http://www.pustaka.co.in

    ஹலோ சங்கர்லால்

    Hello Sankarlal

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 1

    இந்திரா, நீலக்கடலின் பரப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள். 'நீர்வீரன்' என்னும் அந்தப் பெரிய கப்பலில் பயணம் செய்வோர் அனைவரும் அந்த வேளையில் கப்பலின் மேல்தளத்தில் குழுமி இருந்தார்கள் என்றே சொல்லலாம்.

    சங்கர்லால், இந்திராவின் பக்கத்தில் வந்து நின்றார். அவர் கண்கள் இந்திராவை உற்று நோக்கின. அவள் தனது எலுமிச்சம்பழம் போன்ற அழகிய உடலுக்கு, நீலவண்ணச் சட்டையும், புடவையும் அணிந்து, சிவப்பு வண்ண உயர் கம்பள மேல்சட்டை அணிந்திருந்தாள். குளிருக்காக அவள் அணிந்திருந்த மேல் சட்டை அவளுடைய அழகை மிகுதிப்படுத்தியது.

    நாம் சுவிட்வர்லாந்தை விட்டுப் புறப்பட்டு எத்தனை நாள்கள் ஆகின்றன அத்தான்? என்று கேட்டுவிட்டுச் சங்கர்லாலின் முகத்தைப் பார்த்தாள் இந்திரா.

    நல்ல வினா! நாம் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு எத்தனை நாள்கள் ஆகின்றன என்று கேட்காமல் போனாயே! சுவிட்சர்லாந்திலிருந்து புறப்பட்டுச் சரியாகப் பன்னிரண்டு நாள்கள் ஆகிவிட்டன. நீதானே கப்பலில் போகலாம் என்றாய். 'இந்தியாவிலிருந்து வரும்போதுதான் விமானத்தில் வந்தோம். போகும்போது கப்பலில் போகலாம்' என்றாய் என்றார் சங்கர்லால்.

    இந்திரா, அத்தான், எனக்கு என்னவோ உடனே இந்தியாவை அடைய வேண்டும் என்று துடிப்பாக இருந்தது. நீங்கள் நாம் பிறந்த மண்ணில் காலை வைத்ததும் வைக்காததுமாக ஏதாவது ஒரு வழக்கில் இறங்கிவிடுவீர்களே என்று கருதியே இன்னும் கொஞ்சம் உங்களுக்கு ஓய்வு உண்டாக்கித் தரக் கப்பலில் போகலாம் என்றேன். பங்களாவில் கத்தரிக்காய், மாது, மாணிக்கம், மைனா ஆகியோர் எப்படியிருக்கிறார்களோ? இப்போதுதாமே, நீண்டநாள்களுக்குப்பின் மீண்டும், அவர்களைப் பார்க்கப் போகிறோம்? என்றாள்.

    கப்பல் தளத்திலிருந்து எவரோ ஒருவர் தடாலென்று கடலில் விழுந்துவிட்டார்!

    அப்போது நன்றாக இருட்டிவிட்டதால், கப்பலில் விழுந்தது யார் என்று தெரியவில்லை!

    கப்பல் இருந்த அத்தனை 'பேரிடர்' சங்குகளும் ஒரே காலத்தில் அலறின. பெரிய விளக்குகளின் வெளிச்சம் ஒரே பக்கத்தில் திரும்பின.

    கப்பலின் மேல் தளத்தில் எங்கும் பரபரப்பு!

    பயணம் செய்வோர், திகைப்புடன் இங்கும் அங்கும் பார்த்தார்கள். பெண்கள் கீழே இருந்த தங்களது அறைகளை நோக்கி ஓடினார்கள்.

    மாலுமிகள் கயிறுகளையும், உதவி வளையங்களையும் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

    சில நொடியில் தண்ணீரில் விழுந்தவரைத் தூக்கி மேல்தளத்தில் இழுத்துப் போட்டார்கள். அவர் -

    சோர்ந்துபோய்க் கிடந்தார். அவர் உடல் துவண்டு கிடந்தது. இந்த நிலையிலும் சிவந்த தம் கண்களால் அவர் இங்கும் அங்கும் பார்த்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்.

    இதற்குள் சங்கர்லால் இந்திராவின் கையைப் பிடித்துக் கப்பல் தளத்திலிருந்து கீழே இறங்கிப் போகும் படிக்கட்டுகளுக்கு அருகில் கொண்டுவந்து விட்டு, நீ போய் நம் அறையில் படுத்துக்கொள், இந்திரா. இன்னும் சில நொடிகளில் நான் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு, அந்த மனிதர் விழுந்து கிடந்த இடத்தை நோக்கி நடந்தார்.

    இப்போது, பெண்கள் எல்லாரும் அஞ்சிக் கீழே தங்களது அறைகளுக்குப் போய்விட்டிருந்தார்கள்.

    இந்தியாவுக்குச் செல்லும் சில மேல் நாட்டவர்களும், மேல் நாட்டிற்குப் படிக்கவோ தொழில் காரணமாகவோ சென்று திரும்பும் இந்தியர்களும் கூட்டமாக நின்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    கப்பல் காப்டன் மெல்ல அந்த மனிதரின் கையைப் பிடித்து எழுப்பி நிறுத்தினார். அவர் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றார்.

    இந்தியாவைச் சேர்ந்த அவர் பெயர் நம்பி. இளம் வயதில் பெரிய வழக்கறிஞராகித் தொழில் காரணமாக இலண்டனுக்குப் போய்த் திரும்பி வந்து கொண்டிருந்தார். கப்பல் புறப்பட்ட நாளிலிருந்து நம்பியைப் பார்க்காதவர்கள் கிடையாது. அவரைப்பற்றிப் பேசாதவர்கள் கிடையாது. அவர் எப்போதும், கப்பல் தண்ணீரில் மிதப்பதைப்போல், மதுவில் மிதந்து கொண்டு, கப்பலில் பெரும் அமர்க்களம் செய்து வந்தார். அவரால் மற்றவர்களுக்குத் தொல்லையில்லாவிட்டாலும், ஏதேதோ பேசிக்கொண்டு இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தார்.

    காப்டன், நம்பியைப் பார்த்து, நீங்கள் மேல் தளத்திற்கு வரவேண்டாம் என்று நான் எத்தனை தடவை உங்களுக்குச் சொல்லுவது? உங்கள் அறையில் கொண்டு போய் விடுகிறேன். வாருங்கள். நீங்கள் விழுந்ததை இருட்டில் எவரும் பார்க்காது போயிருந்தால் என்ன ஆவது? என்னுடைய கப்பலில் எந்த விதமான விபத்தும் ஏற்படக்கூடாது என்பதுதான் என் கவலை. வரவர நீங்கள் கப்பலின் மேல் தளத்திலேயே எப்பொழுதும் சுற்றுகிறீர்கள். பாதுகாப்புக்காக இடுப்பளவு உயரம் கம்பி போட்டும் பயனில்லாமல் போய்விட்டதே! என்று சொல்லிவிட்டு, அவர் பார்வையிலிருந்து, அங்கே கூட்டம் கூடுவது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது.

    நம்பியின் பார்வை சங்கர்லாலின் பக்கம் சுழன்று திரும்பியது. அவர் சங்கர்லாலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    சங்கர்லால் மெல்ல நகர்ந்து, படிக்கட்டை நோக்கி நடந்தார். அமைதியுடன் மெல்லப் படிக்கட்டுகளில் இறங்கி, தம் அறையை அடைந்தார்.

    சங்கர்லால் விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கப்போனார்.

    அப்போது -

    தலைமாட்டில், சிறிய மேசையின் மேல் வைக்கப்பட்டிருந்த தொலைபேசியின் மணி ஒலித்தது.

    சங்கர்லால் தொலைபேசியை எடுத்து, ஹலோ! என்றார்.

    தொலைபேசியில் ஒரு குரல் –

    ஹலோ சங்கர்லால்! என்றது.

    அவ்வளவுதான்! மறு முனையில் –

    தொலைபேசி வைக்கப்படும் ஓசை கேட்டது!

    'கூப்பிட்டது யார்? ஹலோ சங்கர்லால் என்று குரல் கொடுத்தது யார்?'

    சங்கர்லால், ஹலோ, ஹலோ என்று குரல் கொடுத்துக் கத்தவில்லை. அவர் தொலைபேசியை வைத்துவிட்டு, இருட்டில் நின்றபடியே சிறிது நேரம் சிந்தனையுள் ஆழ்ந்திருந்தார்.

    அத்தான் என்று குரல் கொடுத்தாள் இந்திரா

    என்ன இந்திரா?

    கூப்பிட்டது யார்?

    தெரியவில்லை என்றார் சங்கர்லால்.

    இந்திரா கண்களை மூடிக்கொண்டு சிந்தனையுள் ஆழ்ந்தபடி, தூங்குவதைப்போல் படுத்திருந்தாள்.

    சங்கர்லால் தமது அறையைவிட்டு ஓசையின்றி வெளியே வந்தார். கதவை மெல்லச் சாத்திவிட்டு, ஓசையின்றி நடந்தார்.

    நம்பி கப்பலிலிருந்து தவறி விழுந்துவிட்ட பிறகு, கப்பலில் பயணம் செய்வோருக்கு ஒருவித அச்சம் பரவிவிட்டது! ஆகையால், அவரவர்கள், தங்களது அறைக்குள் போய்க் கம்பளத்தைப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டார்கள்.

    சங்கர்லால் கிரேப் நடையன்கள் அணிந்த தமது கால்களை மெல்ல எடுத்து வைத்து நடந்தார். அவர் கைகள் இரண்டும் கால்சட்டைப் பைகளுள் நுழைந்திருந்தன. அவருடைய தலை இலேசாகக் கலைந்திருந்தது. கழுத்துப் பட்டையை, அந்தக் குளிரிலும் கூட அவர் தளர்த்தியாகத்தான் கட்டியிருந்தார் இருளில் -

    வளைந்து வளைந்து நடந்து காப்டனின் அறைக்குள் நுழைந்தார்.

    காப்டன், சாய்வு நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். மேசையின் மேல் பெரிய குவளையில் இன்னும் இருவர் பருகக்கூடிய அளவுக்குத் தேநீர் இருந்தது.

    சங்கர்லாலைக் கண்டதும், காப்டன் அவரை வரவேற்று உட்காருங்கள், உங்களைத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.

    சங்கர்லால் நாற்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். என்னை எதற்காக நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டுக்கொண்டே, காப்டனின் அறையை உற்றுக் கவனித்தார். அந்த ஒரு பார்வையில் -

    அந்த அறையை அவர் மனத்திரையில் படம் பிடித்துவிட்டார்.

    அந்த அறையில் மூன்று இரும்பு நிலைப் பேழைகள் இருந்தன. அவற்றில் என்ன இருக்கின்றனவோ!

    காப்டன், சங்கர்லாலிடம், இந்தக் கப்பலில் இருபது ஆண்டுகளாக நான் காப்டனாக இருக்கிறேன். இதுவரையில் என் கப்பலில் எந்தவிதமான விபத்தும் ஏற்பட்டதில்லை. கப்பல்தான் என் வீடு. கடல்தான் என் ஊர். வாழ்நாள் முழுவதும் நான் தண்ணீரிலேயே கழித்து வருகிறேன். கடல் எப்போதும் அமைதியாக இருக்காது. கப்பல் எப்போதும் இப்போவது போவதைப்போல் தொல்லையின்றிப் போகாது. பயணம் செல்லுவோர் இந்தக் கப்பலில் நூற்றுக்கணக்காக இருக்கிறார்கள். அவர்கள் உயிரைக் காப்பாற்றி, மிகவும் கவனத்துடன் அவர்களைக் கரை சேர்ப்பது என் பொறுப்பு. எத்தனையோ கடல் கொந்தளிப்பில் என் கப்பல் சிக்கித் தவித்தபோது, என் உயிரையும் பொருட்படுத்தாமல் கப்பலை விழிப்புடன் கரை சேர்த்திருக்கிறேன். இப்போதுகூட எனக்கு அந்தப் பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. எப்போதுமே அந்தப் பொறுப்பு என்னைவிட்டுப் போகாது. கப்பல் கவிழ்ந்தாலும், கப்பலில் ஏதாவது விபத்து ஏற்பட்டாலும், காப்டன்தான் பொறுப்பு! அதுமட்டுமல்ல, இக்கப்பலில் ஏதாவது விபத்து ஏற்பட்டு அதனால் ஓர் உயிர் போய்விட்டதென்றால், என் தொழிலுக்கே வந்தது ஆபத்து! இந்தக் கப்பலுக்கும் எனக்கும், கப்பலை ஓட்டும் உடைமையாளர்களுக்கும் கெட்ட பெயர் நிலைத்துவிடும். அதன் பிறகு, இந்தக் கப்பலில் பயணம் செய்ய மக்கள் அஞ்சுவார்கள். அதுமாதிரியெல்லாம் ஒன்றும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் என் கவலையெல்லாம். நீங்கள் இந்தக் கப்பலில் வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நீங்கள் வருவதால், கப்பலில் எந்தவிதமான தொல்லையும் இருக்காது என்பது என் உறுதியான நம்பிக்கை. எது நடந்தாலும் சமாளித்து விடலாம் என்ற துணிவு என் மனத்தில் வேரூன்றிவிட்டது என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

    சங்கர்லால் காப்டனின் முகத்தையே பார்த்தார்.

    காப்டனுக்கு ஐம்பது வயது இருக்கும். சிவந்த அவர் உடல் கட்டுத் தளராமல் இருந்தது. வாழ்வில் கண்ட பல உண்மைகள் அவரது முகத்தில் கோடிட்டிருந்தன.

    காப்டன், இந்தக் கப்பலில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள், யார் யார் பயணம் செய்கிறார்கள் என்பதை நான் அறிய வேண்டும் என்றார் சங்கர்லால்.

    காப்டன் சிறிது நேரம் சிந்தித்தார். பிறகு எழுந்து பக்கத்து நிலைப் பேழையைத் திறந்து, ஒரு பெரிய புத்தகத்தை எடுத்தார். அதைச் சங்கர்லால் முன் போட்டார். இதில் எல்லாருடைய பெயர்களும் இருக்கின்றன பாருங்கள் என்றார்.

    சங்கர்லால் அமைதியுடன் எல்லாப் பெயர்களையும் பார்த்தார். அவருக்கு தெரிந்தவர்கள் ஒருவரும் கப்பலில் இருக்கவில்லை. புத்தகத்தை மூடிவிட்டு, காப்டன், நான் இந்தக் கப்பலில் வருவது உங்களைத் தவிர வேறு இன்னொருவருக்கும் தெரிந்திருக்கிறது! அது யார் என்று தெரியவில்லை என்றார்.

    தொலைபேசி ஓசை செய்தது.

    காப்டன், தொலைபேசியை எடுத்து ஹலோ என்றார். பிறகு, சங்கர்லாலைப் பார்த்து உங்களுக்கு என்று சொல்லித் தொலைபேசியைச் சங்கர்லாலிடம் கொடுத்தார்.

    சங்கர்லால், ஹலோ என்றார்.

    ஹலோ சங்கர்லால் என்றது ஒரு குரல்! முன் கூப்பிட்ட –

    அதே குரல் தான்!

    ஹலோ என்றார் மீண்டும் சங்கர்லால்.

    மறு நொடியில் தொலைபேசித் தொடர்பு அறுந்து விட்டது!

    சங்கர்லால் தொலைபேசி நிர்வாகியைக் கூப்பிட்டு எனக்கு எந்த அறையிலிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது தெரியுமா?" என்று கேட்டார்.

    தொலைபேசி நிர்வாகி சொன்னார்: எழுபதாம் எண் அறையிலிருந்து.

    சங்கர்லால் தொலைபேசியை வைத்துவிட்டு எழுந்தார்.

    என்ன? என்ன? என்று கேட்டார் காப்டன் பதறி.

    எவரோ என்னைத் தொலைபேசியில் இதோடு இரண்டு முறைகள் பெயரிட்டுக் கூப்பிட்டார்கள். ஹலோ என்றதும் இரண்டு தடவைகளும் தொடர்பு அறுந்துவிட்டது! எழுபதாம் எண்ணுள்ள அறையிலிருந்துதான் தொலைபேசியில் பேசப்பட்டதாம்!

    இதைக் கேட்டதும், காப்டன் விழுந்து விழுந்து சிரித்தார். அந்த வழக்கறிஞர் நம்பியின் வேலை. எப்படியோ அவருக்கு நீங்கள்தான் சங்கர்லால் என்பது தெரிந்துவிட்டது! இந்தியாவில் எங்கேயாவது முன்பு பார்த்திருப்பார் என்று எண்ணுகிறேன். மதுமயக்கத்தில் சும்மா தொலைபேசியில் உங்கள் உயிரை வாங்குகிறார் என்று எண்ணுகிறேன். இந்தியாவில் இறங்கியதும் மது அருந்த முடியாதே என்று எண்ணிக் கப்பலிலேயே அளவுக்கு மிஞ்சி அருந்தி உடலைக் கெடுத்துக் கொள்வதுடன், உங்களுக்கும் தொல்லை கொடுக்கத் தொடங்கிவிட்டார். நான் அவரிடம் சொல்லுகிறேன் என்று சொல்லிக் கொண்டே காப்டன் எழுந்தார்.

    வேண்டாம் காப்டன், நீங்கள் வரவேண்டாம். நானே அவரைப் பார்த்து அவரிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, சங்கர்லால் எழுந்து வெளியில் சென்றார்.

    எழுபதாம் எண் அறையைத் தேடிப் பிடிக்கப் பத்து நொடிகள் ஆகிவிட்டன. அந்த அறைக் கதவின் இடுக்கில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.

    கதவு இலேசாகத் திறந்தது.

    கதவை நன்றாகத் திறந்து கொண்டு உள்ளே சென்றார் சங்கர்லால். உள்ளே-

    நம்பியைக் காணோம்!

    கட்டிலின் மேல் இருந்த படுக்கை சிதறிப் போய்க் கிடந்தது. பக்கத்திலிருந்த சிறிய மேசையின்மேல், காலி மதுப்புட்டியும் கண்ணாடிக் குவளையும் இரங்கத்தக்க நிலையில் கிடந்தன. அந்தப் பெரிய புட்டியிலிருந்து மதுவை அவர் குடித்துத் தீர்த்துவிட்டு, மீண்டும் கப்பல் தளத்திற்குப் போய்விட்டாரா?

    சங்கர்லால் விரைந்து கப்பல் தளத்தை நோக்கி நடந்தார். பனித்திரை, விளக்கு வெளிச்சத்தைக்கூட மறைத்துவிட்டிருந்தது.

    மேல் தளத்தில் தள்ளாடிக்கொண்டு வந்தது ஓர் உருவம். நீண்ட கம்பளிச் சட்டையும் கறுப்பு நடையன்களும், தொப்பியும் அந்த உருவம், தள்ளாடிக்கொண்டே வந்தது. அந்த உருவம் -

    நம்பி!

    அதே வேளையில் சங்கர்லாலைத் தேடிவந்த இந்திரா, அத்தான் என்று அவர் அருகில் ஓடிவந்தாள்.

    நம்பி, சங்கர்லாலுக்கு அருகில் வந்ததும், துவண்டு விழுந்து, மெல்லத் தலையைத் தூக்கிச் சங்கர்லாலைப் பார்த்தார். சங்கர்லால் குனிந்து 'என்ன நம்பி?' என்று கேட்பவரைப்போல் பார்த்தார்.

    சங்கர்லால் மேரியைக் காப்பாற்றுங்கள்! என்று சொல்லிவிட்டுத் தலையைச் சாய்த்துவிட்டார் நம்பி!

    சங்கர்லால்! அவரைத் தொட்டுப் பார்த்தார். நம்பியின் நாடி -

    நின்றுவிட்டது! அவர் –

    செத்துக் கிடந்தார்!

    சங்கர்லால் நிமிர்ந்து பார்த்தார்.

    எதிரே -

    பனித்திரையில் மின்சார விளக்கின் மங்கிய வெளிச்சத்தில், எவரோ விரைந்து நடந்து வருவது தெரிந்தது.

    வந்தவர் –

    காப்டன்!

    சங்கர்லால் இந்திராவின் பக்கம் திரும்பிப் பார்த்தார். இந்திராவின் உடல் கொஞ்சம் நடுங்கியது. அவள் உடல் குளிரால் நடுங்கவில்லை. குளிர்காற்று ஒன்றும் செய்ய முடியாதபடி, அவள் மிருதுவான விலை உயர்ந்த கம்பளச் சட்டை அணிந்திருந்தாள். அவளுடைய நடுக்கத்தின் காரணம் சங்கர்லாலுக்குத் தெரியும். இந்திரா, நம்பி சொன்ன இறுதிச் சொற்களை எவரிடமும் சொல்லாதே. நான் காப்டனிடம் பேசிக்கொள்கிறேன். நீ மெல்ல நம் அறைக்குப் போய்விடு! என்றார்.

    இந்திரா 'சரி' என்று தலையை ஆட்டப் பார்த்தாள். அதற்குள் -

    காப்டன் நெருங்கிவிட்டார்.

    சங்கர்லால் ஒன்றும் பேசாமல் காப்டனையே பார்த்தபோது, காப்டன் நிலைமை என்னவென்று புரியாமல் என்ன சங்கர்லால்! ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.

    சங்கர்லால் சொன்னார்: நம்பி தள்ளாடிக்கொண்டே வந்தார். அவர் அறைக்குச் சென்ற போது, அறைக்கதவு சும்மா சாத்தப்பட்டிருந்தது. நம்பியை அவர் அறையில் காணோம். கப்பலின் தளத்திற்கு வந்தேன். இங்கேதான் இவர் வந்திருக்கக்கூடும் என்று நினைத்து வந்தபோது, நான் எதிர்பார்த்தபடியே நம்பி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். என் பக்கத்தில் வந்ததும், ஏதோ சொல்ல வந்தவர், தாம் சொல்ல வந்ததைக்கூடச் சொல்ல முடியாமல் திணறியபடி கீழே விழுந்துவிட்டார். அவரைச் சரியாகக் கூர்ந்து பாருங்கள் காப்டன், நம்பி இப்பொழுது பிணம்!

    என்ன? உயிர் போய்விட்டதா? என்று திடுக்கிட்டுக் கேட்டார் காப்டன். அவர் குனிந்து நம்பியின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். பிறகு, இதயத்தைத் தொட்டுப் பார்த்தார்.

    இதயம் அலுவல் செய்யாது நின்றுவிட்ட பிறகு, நாடி மட்டும் எப்படித் துடிக்கும்? இரண்டும் நின்று போய்விட்டிருந்தன.

    சங்கர்லால் இந்திராவைப் பார்த்து, இந்திரா, நீ நம்முடைய அறைக்குப் போ. நானும் காப்டனும் கொஞ்சம் பேச வேண்டும் என்றார்.

    பிறகு, சங்கர்லால் காப்டனைப் பார்த்து, காப்டன் உடனே டாக்டரைக் கூப்பிட்டு, இவர் எப்படி இறந்து போனார் என்பதைப் பற்றி விரிவாக ஒரு குறிப்புத் தரும்படி சொல்லுங்கள் என்றார்.

    காப்டன் விழிப்புடன் சங்கர்லாலையே பார்த்தார். சங்கர்லால், காப்டனை இரக்கத்திற்குரிய பார்வையோடு பார்த்தார். காப்டன் பார்த்த பார்வையின் பொருள் அவருக்குப் புரிந்துவிட்டது!

    சங்கர்லால் சிறு சிரிப்புடன், காப்டன், அஞ்ச வேண்டாம். உங்கள் கப்பலுக்கோ, உங்களுடைய உன்னதமான நிலைக்கோ எந்த விதமான இழுக்கும் வராமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். அப்புறம் உங்களைப் பார்க்கிறேன் என்றார்.

    மிக்க மகிழ்ச்சி சங்கர்லால். நான் நினைத்துக் கொண்டிருந்ததற்கு நேர்மாறாக நடந்துவிட்டது. இந்தக் கப்பலின் பெயர் கெடாமல் நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்.

    நான் கவனித்துக் கொள்கிறேன்! என்றார் சங்கர்லால்.

    சங்கர்லால் நகர்ந்ததும், காப்டன் உரக்கக் கூவி மாலுமிகளைக் கூப்பிட்டார். அவர் கூப்பிட்ட குரலுக்கு வெள்ளை உடை உடுத்திய ஐந்தாறு மாலுமிகள் கப்பலின் தளம் அதிர ஓடி வந்தார்கள்!

    அத்தியாயம் 2

    சங்கர்லால் மெல்ல நடந்து தமது அறைக்குள் நுழைந்தார். அறையில், சாய்வு நாற்காலியில் இந்திரா உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

    சங்கர்லால் கதவைச் சாத்திவிட்டு, அவளுக்குப் பக்கத்தில் கட்டிலில் உட்கார்ந்தார். அவர் இந்திராவை சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, இந்திரா, ஏன் உன் முகம் இப்படி மாறிவிட்டது? நம் காலடியிலே விழுந்து நம்பி உயிரை விட்டார் என்பதாலா? நம்பி சொன்ன இரண்டு சொற்கள் உன்னைக் கலக்கிவிட்டனவா? என்று கேட்டார்.

    "ஆமாம், அத்தான். நம்பி இறுதியாக, 'மேரியைக் காப்பாற்றுங்கள்' என்று சொன்னது என் செவியில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1