Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandavathu Murai
Irandavathu Murai
Irandavathu Murai
Ebook187 pages1 hour

Irandavathu Murai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pushpanathan Pillai alias Kottayam Pushpanath is a famous Malayalam author. He wrote many detective novels, mainstream novels, science fiction,
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103803278
Irandavathu Murai

Read more from Kottayam Pushpanath

Related to Irandavathu Murai

Related ebooks

Related categories

Reviews for Irandavathu Murai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irandavathu Murai - Kottayam Pushpanath

    http://www.pustaka.co.in

    இரண்டாவது முறை

    Irandavathu Murai

    Author:

    கோட்டயம் புஷ்பநாத்

    Kottayam Pushpanath

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அந்த பங்களாவைப் பற்றி பலரும் பல விதமாகப் பேசினார்கள். பேசிக்கொண்டும் இருக்கிறார்கள், என்று ராகவன் நாயருக்குத் தெரியும். தரகர் என்ன சமாதானம் சொன்னாலும் ஊர் வாயை மூட முடியுமா?

    பல நாட்களாக இந்த வீட்டில் யாரும் குடியில்லாததால் இப்படிப் பேசுகிறார்கள் என்று தரகர் திரும்பத் திரும்பச் சொன்னார்.

    இந்த வீடு முன்பு ஒரு நம்பூதிரியின் வாசஸ்தலமாக இருந்தது. அவருக்குப் பிறகு வந்தவர்கள், உள்பக்க வீட்டை அப்படியே அறைகளோடு வைத்துக் கொண்டு வெளிப் பாகத்தை மட்டும் புதுப்பித்துக் கட்டினார்கள் என்று ராகவன் சொல்லிக் கொண்டு இருக்கும்போது, அவரது மகன் முரளி அங்கே வந்தான். அவன் கையில் தஸ்தாவேஜுக்கள் இருந்தன.

    நகரத்தின் மத்தியில் இருந்தது கோவில்...

    அங்கே இருந்து மேற்கே சற்றுத் தள்ளியிருந்தது ராகவன் நாயர் வீடு. அவர் ஒரு பெரிய காண்ட்ராக்டர். அவரது கட்டிடங்கள் எல்லாமே புதுமாதிரியாகத் தெரியும். நாகரீகம் மிகுந்தவை. பெரிய இடமோ... இல்லை பழைய கட்டிடமே விலை வந்தால் எப்பாடுபட்டாவது அதை அவர் விலைபேசி வாங்கிவிடுவார். இப்போது பேசப்படும் பங்களா நகரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. நாலு ஏக்கர் நிலப்பரப்பின் நடுவே இருந்தது அந்த இரு மாடிக் கட்டிட பங்களா. சுற்றிலும் பெரிய காம்பெளண்டு சுவர்கள்.

    உள்ளே பங்களாவைச் சுற்றிலும் பலவிதமான பழமரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. ஒருகாலத்தில் அந்த இடத்தில் மான்களும் மயில்களும் துள்ளித் திரிந்து விளையாடின என்றார்கள். பங்களாவின் வயதைக் கணக் கிட்டால் 150 வருடத்திற்கு மேல் இருக்கும். கடந்த ஐம்பது வருடங்களாக அந்த பங்காளவில் யாருமே குடியிருக்கவில்லை. பங்களாவின் சொந்தக்காரர் வெளிநாட்டில் இருந்ததால், அவரை யாருக்குமே தெரியாது.

    பட்டப்பகலில்.. உச்சி வெயில் நேரத்தில்கூட அந்த பங்களாவிற்குள் யாரும் போகமாட்டார்கள். இரவு நேரத்திலும், அதற்குள் சமூக விரோதிகள் போக பயந்தார்கள்.

    ஜனநடமாட்டமே இல்லாததால், பங்களாவைச் சுற்றிலும் ஒருகாடே உருவாகி இருந்தது.

    ஒருதடவை அந்தப் பங்களாவின் முன்பகுதியில் இருந்த ஒருமரத்தில் விலாசம் தெரியாத பெண் தூக்கிலிட்டுக்கொண்டு இறந்து இருந்தாள்.

    கயிற்றை அவிழ்த்துக்கொண்டு ஓடிய ஒரு மாட்டைப் பிடிக்க உள்ளே ஓடிய ஒரு பெண்தான் இந்தப் பிணத்தைப் பார்த்து வெளியே சொன்னாள். அது தற்கொலையா இல்லை கொலையா என்று யாருக்குமே தெரியவில்லை. இறந்தவள் யாரென்றும் ஒருவருக்கும் தெரியவில்லை. இதற்குப்பின், அந்த காம்பௌண்டுக்குள் யாரும் போவதே இல்லை.

    இந்த நிலையில்தான் அந்த பங்களா விற்பனைக்கு வருகிறது என்கிற வதந்தி வந்தது. பெரிய பணக்காரர்களுக்கும், சில ஏமாற்றுக்காரர்களுக்கும் இதை வாங்குவதில் யோசனை இருந்தது. முரளி தன் கையில் வைத்திருந்த பத்திரங்களை மேஜையின்மீது போட்டுவிட்டு,

    நீங்கள் யாரும் அந்தப் பங்களாவைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை. அதை யாரோ வாங்கி விட்டார்களாம்! என்றான்.

    வாங்கிவிட்டார்களா? யார் அது? தரகர் அதிர்ச்சியுடன் கேட்டார்.

    வாங்கியது யார் என்று தெரியாது. ஆனால் விற்று விட்டதாக மட்டும் செய்தி வந்துவிட்டது.

    இந்தச் செய்திதான் அன்று அந்த நகரில் உலாவிய மிகவும் பரபரப்பான செய்தி! சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தக் கட்டிடத்தை யார் வாங்கியிருப்பார்கள் என்று ஆளுக்கொரு விதமாகப் பேசி யூகித்துக்கொண்டு இருந்தார்கள்.....

    பங்களாவின் முன் நிறைய கும்பல்...

    வேலைக்காரர்கள், காம்பௌண்டுக்குள் இருந்த தேவையில்லாத குப்பையை அகற்றிக்கொண்டு இருந்தார்கள். நிறையபேர் வேலை செய்து கொண்டிருக்க, வெளியே இருந்த மக்கள்.

    யாரோ ஒரு பெரிய பணக்காரன்தான் இந்தப் பங்களாவை வாங்கியிருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.

    பங்களாவின் வெளி கேட் மூடியிருந்ததால் யாரும் உள்ளே போய் விசாரிக்க முடியவில்லை. தைரியமும் இல்லை.

    ஒருவாரம் கழிந்தது. பங்களாவின் காம்பௌண்டுக்கு வெளியே மேற்குப் பாகத்தில் ஒரு பழைய காலத்து இல்லம் இருந்தது.

    அந்த இல்லத்தில் இருந்தவர்கள் ஒரு காலத்தில் மிகவும் நன்றாக வாழ்ந்தார்கள். இப்போது அங்கே ஒரு பாட்டியும் பேரனும்தான் குடியிருந்தனர்.

    பேரன் பத்திரிகை ஏஜண்டாக இருந்தான். அதில் கிடைத்த வருமானத்தில்தான் அவர்கள் இருவரது வாழ்க்கையும் நடந்து கொண்டு இருந்தது.

    அவன் பெயர் கோவிந்தன் குட்டி!

    காலையில் பத்திரிகைகளை வினியோகம் செய்து கொண்டு இருந்தபோது, ராகவன் நாயர் அவனை மடக்கினார்.

    யார், அந்த பங்களாவை வாங்கியது? என்று கேட்டார்.

    வாங்கியது. குடியிருப்பது யார் என்று எனக்குத் தெரியவில்லை. வேலைக்காரர்கள் மட்டும்தான் அங்கே இருக்கிறார்கள்.

    பங்களா விலை போய்விட்டது வாஸ்தவம்தானா?

    விலைக்கு வாங்கிவிட்டதால் தானே வேலைக் காரர்கள் வேலை செய்கிறார்கள்? மடக்கினான் கோவிந்தன் குட்டி...

    இதைப் பார்க்க யாராவது வந்தார்களா?

    அதுவும் எனக்குத் தெரியாது!

    அன்று மாலையே கோவிந்தன் குட்டியின் பாட்டியைப் பார்க்கப் போனார் ராகவன் நாயர்.

    யாரது ராகவன் நாயரா? கிழவி கேட்டாள்.

    என்னைத் தெரியுமா உங்களுக்கு?

    நன்றாகத் தெரியும். சங்கரன் நாயரின் மகன்தானே நீ?

    ஆமாம்! அதெப்படி உங்களுக்குத் தெரியும்?

    சங்கரன் நாயரின் தந்தை கோமன் நாயர் எங்கள் இல்லத்தில் கணக்குப்பிள்ளையாக இருந்தார். அதெல்லாம் பழைய காலம். சரி... நீ இங்கு வரவேண்டிய வேலை என்ன?

    உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் என்று சொன்ன ராகவன் அங்கே இருந்து பக்கத்து பங்களாவைப் பார்த்தார். அங்கே இருந்து அது நன்றாகத் தெரிந்தது. புதிதாக வர்ணம் பூசப்பட்டு, பொலிவோடு இருந்தது. தோட்டமும் நன்றாகவே சீர் செய்யப்பட்டு இருந்தது.

    "சொல்லுங்கள்... என்ன விஷயம்?'

    யார் இந்தப் பங்களாவை வாங்கியிருக்கறார்கள்?

    இந்த பங்களாவின் சொந்தக்காரர் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். அவர் அங்கேயே இறந்து விட்டதாகவும் பேசப்பட்டது.. உனக்கு இந்த பங்களாவை வாங்கியது யார் என்று தெரியவேண்டுமென்றால் பத்திரப் பதிவு ஆபீஸில் போய்க்கேட்டால் சொல்லுகிறார்கள் என்றாள் கிழவி.

    அது என் மனத்திற்குப்படவில்லை. இங்கு வந்து கேட்டால் தெரியும் என்று வந்துவிட்டேன் என்று விடை பெற்றுக்கொண்டார் ராகவன்.

    இந்தக் கட்டிடத்தைப் பார்க்க வேண்டும் என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு நடந்தார்.

    கட்டிடத்தின் வாயில் அருகே வந்து நின்று, உள்ளே வேலைசெய்து கொண்டு இருந்த ஒரு வேலைக்காரனை அழைத்து,

    இங்கே யார் குடிவரப்போகிறார்கள்? என்று கேட்க.. அவனும்,

    எனக்குத் தெரியாது! என்று பதில் சொன்னதோடு நிறுத்திக் கொண்டான்.

    நீங்கள் செய்யும் வேலைக்கு யார் கூலி தருகிறார்கள்?

    அதெல்லாம் எங்களுக்கு மிகவும் சரியாகவே கிடைக்கிறது.

    இது நல்ல கூத்து என்று ராகவன் சொல்ல,

    எல்லாமே அடுத்த வெள்ளிக்கிழமை தெரியும் என்று சொன்னபிறகு அவன் உள்ளே போய்விட்டான். ராகவன், அன்று பார்த்தவர்களிடம் எல்லாம் அடுத்த வெள்ளி இங்கு யாரோ குடிவரப்போகிறார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

    அன்று வெள்ளி காலையில் வெளிகேட்டில் ஒரு சிறிய பெயர்ப்பலகை தொங்கியது. அப்பலகை தங்கத்தைப் போல் பளபளவென ஜொலித்துக்கொண்டு இருந்தது. அதில் டாக்டர் மிஸ் சுமங்கலிதேவி எம்.டி. என்ற பெயர் இருந்தது. அப்பக்கம் சென்றவர்கள் எல்லாம், அப்பெயர்ப் பலகையை தடவிப் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தில் நகரின் மிகப்பெரிய தங்க வியாபாரியான சக்ரபாணியும் இருந்தார். அவருக்கு பலகை, தனி தங்கத்தினால் செய்யப்பட்டதா என்கிற சந்தேகம் வந்தது. இரவு ஒருமணி எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு கையில் ஒரு டார்ச்சுடன், வெளியே கிளம்பினார்.

    நேராக அந்தப் பங்களாவிற்கு முன் வந்து நின்றார். பலகையைக் கழற்றிக்கொண்டுபோக கையோடு உளியையும், சுத்தியையும் எடுத்து வந்திருந்தார்.

    சுற்றுமுற்றும் பார்த்தபிறகு மெதுவாக கேட் அருகில் சென்று பலகையைப் பார்க்க, அதில் என்னவோ அசைவது போலத் தெரிந்தது. அவர் திடுக்கிட்டு இரண்டடி பின்வாங்கியதும், பலகையில் ஏதோ அசைவது போல் தெரிந்தது. அது ஒரு ஸ்வர்ண நாகம். அத்துடன் எழுத்துக்களும் மாறி மாறி விழுந்தன. இதைக்கண்ட சக்ரபாணி திரும்பிப் பாராமல் அந்த இடத்தைவிட்டு வேகமாக நடந்தார்.

    ஒரு லேடி டாக்டர் அந்தப் பங்களாவில் குடியேறி இருந்த விஷயம் ஊரில் நன்றாகப் பரவிவிட்டது. ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்து, ஒரு பெண் இந்தப் பங்களாவில் ஏன் வந்து குடியிருக்கவேண்டும் என்கிற சந்தேகம் எல்லோர் மனதிலும்,

    அன்று ஒரு வெள்ளிக்கிழமை, ஆனால் அவளை யாரும் இதுவரை பார்த்ததே இல்லை. சுமங்கலி அங்கே குடிவந்து எட்டுதினங்கள் ஆயின.

    மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் டாக்டர் பாலசந்திரனுக்கு அன்று இரவு டூட்டி. முப்பது வயதான அந்த டாக்டர் ஒரு ஆண் அழகர்.

    இரவு மணி பன்னிரெண்டு. திடீரென போன் மணி அடித்தது.

    டாக்டர் ரிசீவரைக் கையில் எடுத்தார்.

    டாக்டர் பாலசந்திரன்தானே? ஒரு முக்கியமான செய்தி... உங்கள் வார்டில் பதினாலாம் நம்பர் வீட்டில் ஒரு கர்ப்பிணி நினைவில்லாமல் படுத்திருக்கிறாள். அவளது வயிற்றில் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் முன்பின் பழக்கமில்லாத ஒரு பெண்குரல் இவ்வாறு பேசியதைக் கேட்ட டாக்டர் வியந்து போனார்.

    'நீங்கள் யார் பேசுவது?" டாக்டர் கேட்டார்.

    நான் தான் டாக்டர் சுமங்கலி தேவி... மிகவும் அவசரம்! என்று சொன்னவுடன் போன் வைக்கப்பட்டது.

    டாக்டரின் வாய், சுமங்கலியின் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்க அவர் தன் வார்டை நோக்கி ஓடினார். கர்ப்பிணி மயக்கமாகக் கிடக்க, அவருக்கு உடனே சிசேரியன் ஆபரேஷன் தேவைப்பட்டது. ஆபரேஷன் தியேட்டருக்கு அவள் கொண்டு போகப்பட உடனே ஆபரேஷன் நடந்தது. அவளது வயிற்றில் இருந்தது மூன்று ஆண் குழந்தைகள்!

    டாக்டர் பாலசந்திரன் வியந்து போனார். செய்தி பூராவும் ஆஸ்பத்திரியில் பரவி விடவே டாக்டர்கள். நர்சுகள் அங்கே வந்து கூடிவிட்டனர். இந்த செய்தி உங்களுக்கு எப்படித் தெரிந்தது? அவரிடம் கேட்டார்கள். எனக்கே அது தெரிந்தது என்று சொல்லிவிட்டு அவர் தனது ஓய்வு அறைக்குப் போய்விட்டார். போனில் இப்படி ஒரு செய்தி வந்தது என்று சொன்னால் அவர்கள் எல்லாம் நம்பவா போகிறார்கள் என்று டாக்டர் நினைத்தார்.

    டூட்டி முடித்த பிறகு, அடுத்த நாள் தன் வீட்டிற்குப் போனபிறகும், டாக்டரின் மனத்தில் இதே எண்ணந்தான் திரும்பத் திரும்ப வந்தது. எப்படியும் அந்த சுமங்கலி தேவியைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அவர் தீர்மானித்துக் கொண்டார். அவளது போன் நெம்பரை, எக்ஸ்சேஞ்ச் மூலம் பெற்றார். அது ஒரு விசித்திரமான நெம்பர், 567899. அந்த நெம்பரை அவர் டயல் செய்ய, மணி மறுபக்கம் அடித்தது. ரீசிவர் எடுக்கப்பட்ட உடன் ஒரு பெண் குரல் கேட்டது.

    யார் டாக்டர் பாலசந்திரன் தானே? அதைக் கேட்டவுடன் டாக்டரின் உடல் நடுங்கி வியர்த்தது.

    ஆமாம்! நான்தான்... என்று தன் பயத்தை வெளிக்காட்டாமல் பேசினார். டாக்டர் பாலசந்திரன்.

    என்னைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதா?

    கண்டிப்பாக! என்றார் டாக்டர்.

    "என்னைப் பார்க்கவேண்டும் என்று நினைத்த முதல் நபர் நீங்கள்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1