Deva Narthagi
5/5
()
About this ebook
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Read more from Kottayam Pushpanath
Naaga Salangai Rating: 5 out of 5 stars5/5Pei Bungalow Rating: 4 out of 5 stars4/5Mohiniyin Kaadhal Rating: 4 out of 5 stars4/5Mohini Silai Rating: 3 out of 5 stars3/5Marma Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsSakasa Mohini Rating: 0 out of 5 stars0 ratingsMohini Koyil Rating: 5 out of 5 stars5/5Mohiniyattam Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Devathai Rating: 0 out of 5 stars0 ratingsBrahmaratshas Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Mandhiram Rating: 0 out of 5 stars0 ratingsMohini Rating: 5 out of 5 stars5/5Mandhira Muzhakkam Rating: 4 out of 5 stars4/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsDeva Mohini Rating: 4 out of 5 stars4/5Vaa! Arugil Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsMohini Illam Rating: 0 out of 5 stars0 ratingsVennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsMaya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPathilukku Pathil Rating: 3 out of 5 stars3/5Thaandavam Rating: 5 out of 5 stars5/5Irave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Aabathanavargal Rating: 0 out of 5 stars0 ratingsMohini Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsOnbathavathu Ward Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Murai Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Illatha Manithan Rating: 0 out of 5 stars0 ratingsTerror, Death, Devil Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5
Related to Deva Narthagi
Related ebooks
Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Sarppa Pali Rating: 0 out of 5 stars0 ratingsTerror, Death, Devil Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Parama(n) Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Kaiyil Piditha Minnal Rating: 0 out of 5 stars0 ratingsAabathanavargal Rating: 0 out of 5 stars0 ratingsAsura Jathagam Rating: 5 out of 5 stars5/5Irandavathu Murai Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Vaarthai Rating: 5 out of 5 stars5/5Athirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5Ettavathu Echarikkai Rating: 4 out of 5 stars4/5Oru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsKovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Nalliravu Malligai Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5Kaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsIrave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Kai Niraiya Vairam Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaga Pogirargal Rating: 0 out of 5 stars0 ratingsMayavanam Rating: 5 out of 5 stars5/5Mayavan Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsDeva Mohini Rating: 4 out of 5 stars4/5Abaya Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Antha Onbathu Per Rating: 5 out of 5 stars5/5Ettu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Naan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Vaa! Arugil Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsVennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Devathai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Deva Narthagi
1 rating0 reviews
Book preview
Deva Narthagi - Kottayam Pushpanath
http://www.pustaka.co.in
தேவநர்த்தகி
Deva Narthagi
Author:
கோட்டயம் புஷ்பநாத்
Kottayam Pushpanath
For more books
http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
1
அம்மா ஓடி வாங்க... ஓடி வாங்க!
ஒரு பெண்ணின் சம்பதமான அலறல்!
வீதிகளில் கிடக்கும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று ஜீவனம் நடத்தும் ஒரு பெண்ணின் அலறல்தான் அது.
அப்போது மணி காலை பத்தைக் கடந்து இருந்தது. அப்பெண்தான் அக்காட்சியை முதலில் பார்த்தது. நகரத்தில் இருந்து சற்று விலகி சுமார் ஒண்ணரை ஏக்கர் நிலப்பரப்பில் அடுத்தடுத்து கட்டப்பட்டு இருந்தன, அந்த இரு மாடிக் கட்டடங்கள்.
அதில் ஒன்று லேடீஸ் ஹாஸ்டல். அருகில் இருக்கும் மற்றொன்று மருத்துவமனை. இந்த இரு கட்டடங்களின் கேட்டுகள் எப்போதும் திறந்தே இருக்கும், ஆள் நடமாட்டம் இருந்த காரணத்தினால்! மருத்துவமனையின் பெயர் ‘யுவர் ஓன்' என்பதாகும். அதைக் கட்டி சுமார் இருபது வருடங்கள் ஆகின்றன. முன்பு இந்த இடம் காடாக இருந்தது. செய்வினை செய்யும் மந்திரவாதியின் வீடும் அங்கே இருந்தது. அருகில் ஒரு பெரிய ஆலமரம். பக்கத்தில் மூடிக்கிடக்கும் பாழும் கிணறு-இவை மட்டும் அங்கே இப்போதும் உள்ளன. வீடு மட்டும் இல்லை- ஒரு காலத்தில் இந்தக் கிணற்றில் இருந்துதான் தண்ணீர் இறைத்து கட்டடங்களை கட்டுவதற்கு உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். ஒரு சமயம் கிணற்றில் இருந்து ரத்தக் கலரில் நீர்க்குமிழிகள் வரத் தொடங்கியதைக் கண்ட மக்கள் பயந்து போய் அக்கிணற்றை லாரியில் மண், கல், கொண்டு வந்து கொட்டி மூடி விட்டனர்.
ஆனால், அதை முழுவதுமாக மூடிவிடவில்லை. அதனால் கான்கிரீட் ஸ்லாப்புகள் கொண்டு வந்து கிணற்றை நன்றாக மூடி, மேலே பூந்தொட்டிகளை வைத்து விட்டனர். எனினும், ஸ்லாபின் அடியில் சிவந்த கலரில் கண்ணீர் கசிவதாக மக்கள் சொல்வதுண்டு. அந்தக் கிணற்றை ஒட்டித்தான் ஆலமரம் உள்ளது. நின்று நிதானமாக நிமிர்ந்து பார்த்தால் திகில் ஏற்படுத்தக்கூடிய அந்த ஆலமரத்தை நன்றாக கூர்ந்து பார்த்தால் அடிப்பாகத்தில் ஏராளமாக ஆணிகள் அடித்திருப்பதைக் காணலாம். பேய் ஓட்டுபவர்கள் அடித்த ஆணிகள்தான் என்று நம்பிய மக்கள், அந்த மரத்தை வெட்டிச் சாய்க்க விரும்பவில்லை. அதனால் ஏதாவது புது வில்லங்கங்கள் ஏற்பட்டு வருமோ என்கிற பயந்தான். துணிந்தவர்கள் அங்கே இல்லை. ஆனால், பயந்தவர்கள் இருந்தார்கள். ஆலமரத்தின் கிளைகள் வளர்ந்து, நான்கு பக்கமும் இருட்டாகத் தெரியும். ஒருவித கிலியை ஏற்படுத்தும்.
தன் கீழ் சுற்றிலும் கடந்த பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துக் கொண்டு திரும்ப நினைத்த அப்பெண் யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோதுதான் அக்காட்சி தெரிந்தது.
ஆலமரத்தின் உச்சிக் கிளை ஒன்றில், கழுத்தில் கயிற்றோடு தொங்கிக் கொண்டு இருந்த ஒரு பெண்ணின் உடல்தான், அவள் போட்ட கூச்சலுக்குக் காரணம். வெறும் பாவாடையும், பிளவுஸும் அணிந்திருந்த அப்பெண்ணின் கூந்தல் காற்றில் பறந்து கொண்டு இருந்தது. பாவாடையும் இப்படியும் அப்படியுமாக காற்றில் ஆடியது. அவளது நாக்கு வெளியே வந்து இருந்தது. கண்கள் மூடி இருந்தன.
அவள் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மரத்தின் கிளை ஒன்று பலத்த சப்தத்தோடு ஒடிவதை கவனித்த அவள், பயங்கரமாக அலறினாள். அப்பிரதேசத்தில் அக்குரல் பயங்கரமாக எதிரொலிக்க, ஆஸ்பத்திரியின் முன்னால் இருந்த ஆயா ஒருத்தி வெளியில் ஓடிவந்து அதே காட்சியைக் கண்டு பலமாகக் கூச்சலிட்டாள்.
வெளியே பலர் ஓடிவந்தனர். அவர்களில் சிலர் மேலே தொங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்து அவள் சுஜிதா என்கிற பெண் என்று பலத்த சப்தத்தோடு சொன்னார்கள்.
ஒரே சமயத்தில் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களும் மருத்துவமனையில் இருந்தவர்களும் வெளியே வந்து ஆலமரத்தின் அடியிலே கூடினர். இந்தக் கும்பலில் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களும் சேர்ந்து கொண்டனர்.
டிரைவர்களில் ஒருவன், யாரோ அடித்துக் கொலை செய்து கிளையில் தொங்கவிட்டிருக்கிறார்கள்
என்று சொல்லவும்....
அது எப்படி உனக்குத் தெரியும்?
என்று இன்னொருவன் வியப்போடு அவனை நோக்கினான்.
மரத்தின் மீது எப்படி ஒரு பெண் ஏறமுடியும்? ஏணியோ, ஸ்டூலோ அங்கில்லையே
என்று சொல்லியவாறு அந்த ஆட்டோ டிரைவர் டெலிபோன் 'பூத்'தை நோக்கி ஓடினான். அவன் சசி என்னும் பெயரைக் கொண்டவன். எந்த விஷயத்தையும் தீர்க்கமாக ஆராயும் நோக்கும், புத்தகங்களை அதிகமாகப் படிக்கும் பழக்கமும் உள்ளவன் தான் சசி என்னும் டிரைவர். துப்பறியும் கதைகள் என்றால் அவனுக்கு மிகவும் பிரியம். இந்தக் களேபரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார் டாக்டர் சிவதாஸன். அவர்தான் மருத்துவமனைக்கும் ஹாஸ்டலுக்கும் சொந்தக்காரர் என்று அருகில் இருந்த பத்திரிகை நிருபர் அடுத்தவன் காதில் சொன்னாள்.
இந்த சினிமாவின் வில்லன் போல் காட்சியளித்த அந்த டாக்டர் தன் வழுக்கைத் தலையை மறைக்க அழகாக 'விக்' வைத்திருந்தார். பார்த்தாலே அனைவருக்கும் தெரியும் அவரது கோலம்.
முதலில் ஆஸ்பத்திரியை சிறிய அளவில் தொடங்கிய சிவதாஸன் விரைவில் அதை விரிவாக்கினார். அத்துடன் அருகில் இருந்த பெண்கள் ஹாஸ்டலையும் கட்டினார். எந்த மேஜர் ஆபரேஷன்களையும் செய்யக்கூடிய பல டாக்டர்கள் அவருக்குக் கீழ் வேலை பார்த்தார்கள்.
எல்லோரும் அங்கே கூடி இருந்து பார்த்துக் கொண்டு இருக்கும்போதே ஒரு தீயணைப்பு வாகனமும், போலீஸ் ஜீப்பும் ஆஸ்பத்திரியின் அருகில் வந்து நின்றன. போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் அலட்சியமாக உண்டியில் இறங்கி சுற்றும் முற்றும் நின்றிருந்தவர்களை அலட்சியமாகப் பார்த்தார்.
ஆலமரத்தை சுற்றி இருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்லத் தொடங்கியபோது, தீயணைப்பு வீரர்கள் ஏணியின் உதவியால் மரத்தில் ஏறி பிணத்தை இறக்கி, கிணத்தை மூடியிருந்த ஸ்லாபின் மீது கிடத்தினார்கள். நிமிடங்கள் மிகவும் மெதுவாக நகர, எங்கும் நிசப்தம். அப்போது ஹாஸ்டலில் தங்கியிருந்த மற்ற நர்ஸிங் மாணவிகள் வெளியே பரபரப்புடன் வந்து, 'சுஜிதா, சுஜிதா...' என்று பலமாகக் கத்திக்கொண்டு அழத் தொடங்கினார்கள். இறந்து கிடந்த அப்பெண்ணுக்கு வயது இருபதுக்கு மேல் இருக்காது. களங்கமற்ற அழகான முகம். கட்டான உடல். சற்று நேரம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சர்க்கிள், அக்கும்பலில் ஹாஸ்டல் வார்டனைத் தேடினார்.
அதோ வருகிறார்
என்று ஒரு பெண்மணி கூற, அவனைக் கடுமையாகப் பார்த்தார் சர்க்கிள். அவள் பயந்து பின்வாங்கினாள்.
சேலைத் தலைப்பை நன்றாக இழுத்து மூடியபடி ஹாஸ்டல் வார்டன் மிஸ்.ஜேனட் அங்கு வந்து சேர்ந்தாள். திரண்ட மார்பகங்கள், புஷ்டியான உடல், தோள்வரை நீண்டிருந்த டை அடித்த தலைமயிர், கண்களில் மை தீட்டிய புருவத்தையும் நன்றாக எழுதியிருந்தாள்.
இடுப்பில் வனப்புடன் இருந்த சாவிக் கொத்து. இந்தப் பெண் அரபு நாட்டில் சில நாட்கள் இருந்தாள். அவளது படிப்பு என்னமோ கொஞ்சம் குறைவுதான்.
இங்கே வா!
வார்டனை சர்க்கிள் அழைத்தார். அருகில் வந்த அவள், உள்ளே போய் பேசலாமே
என்றாள் ஜேனட்.
அதற்கு அவசியம் இல்லை ... இந்தச் சம்பவம் உங்களுக்கு எப்போது தெரிந்தது?
என்று கேட்டார்.
சற்றுமுன்தான்... கூச்சல் சப்தம் கேட்டுதான் தெரிந்து கொண்டேன்...
திடீரென அவள் எதிர்பார்க்காத விதமாக சர்க்கிள் ஒரு கேள்வியைக் கேட்டார்.
இந்தப் பெண்ணைக் கொன்று மரத்தில் தொங்க விட்டது யார்?
நடுங்கிப் போன வார்டன், மெல்லிய குரலில்,
எனக்குத் தெரியாது சார்!
சொன்னாள்.
இவ்வளவு உயரமான மரத்தில் இப்பெண்ணால் ஏற முடியுமா?
எனக்குத் தெரியாதுங்...
வார்டனின் பதில். அருகில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரிடம், எஃப்.ஐ.ஆர். தயார் செய்ய தேவையானவற்றை கலெக்ட் செய்யுங்கள்
என்று சொன்ன சர்க்கிள், இறந்த பெண்ணின் அறையைச் சென்று பார்வையிட்டார்.
தன்னுடன் வர ஜேனட்டை அவர் அனுமதிக்கவில்லை. அவரேதான் நன்றாகப் பார்த்த பின் அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தார். சர்க்கிள் உடன் இருந்த போலீஸ் அதிகாரிகள் எஃப்.ஐ.ஆர். தயார் செய்ய தேவையான சாட்சிகளை சேகரிப்பதில் மிகவும் மும்முரமாக இருந்தனர்.
அந்த நேரத்தில்தான் போலீஸ் இலாகாவில் அதிகத் தொடர்புடைய புகைப்படக்காரர் பாலசந்திரன் தனது மோட்டார் சைக்கிளில் அங்கே வந்தார். இந்த மனிதருக்கு பத்திரிகை உலகிலும் நல்ல செல்வாக்கு உண்டு. முன் பக்கத்தில் இவரது படங்கள் வெளியாகும். இவர் கேரளா நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது அக்குடும்பத்தில் யாரும் இல்லை. ஒரே சகோதரி அவளுக்கும் திருமணமாகி கணவன் வீட்டிற்குப் போய் விட்டாள். அந்தப் பெரிய வீட்டின் ஒரு பகுதியை தனது புகைப்படத் தொழிலுக்காக பாலசந்திரன் உபயோகப்படுத்தி வந்தார். போட்டோவை எடுத்து கொண்டு போய்விட்டால், டார்க் ரூமில் ஃபிலிமை கழுவுவதில் ஆரம்பித்து, டெவலப் செய்து பிரிண்ட் போடுவது வரை எல்லாம் அங்கேயே நடக்கும். எதற்கும் வெளியில் போக வேண்டிய அவசியம் இல்லை.
பாலசந்திரன் வந்தாச்சா?
சர்க்கிள் அவரைப் பார்த்துக் கேட்டவாறே.
முதலில் இந்த டெட்பாடியை எல்லா கோணத்திலும் படம் எடுங்கள். அந்தப் படங்களில் ஆஸ்பத்திரி ஹாஸ்டல் எல்லாமே கவராகி இருக்க வேண்டும்
என்றவர்,
உங்களுக்கு யார் தகவல் சொன்னது?
என்று சர்க்கிள் கேட்க,
ஒரு பத்திரிகை ஆபீஸில் இருந்து எனக்குப் போன் வந்தது.
சொல்லிக் கொண்டே பாலசந்திரன் தன் தோளில் மாட்டியிருந்த கேமிராவை எடுத்தார்.
அப்போது ஹாஸ்டல் வார்டன் ஜேனட் வேகமாக அங்கே வந்தாள்.
இங்கே நீங்கள் போட்டோ எடுத்தால் ஆஸ்பிடல். ஹாஸ்டல் இரண்டின் பெயர் கெட்டுவிடும். உங்களுக்கு இறந்தவள் போட்டோதானே வேண்டும். இதோ இதை வைத்துக் கொள்ளுங்கள்.
அவள் கொடுத்தது சுஜிதாவின் பாஸ்போர்ட் சைஸ் படம்.
அதை முதலில் சர்க்கிள் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டார்.
நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பியுங்கள்
என்று பாலசந்திரனிடம் சர்க்கிள் சொன்னார். 'மட...மட'வென உடலில் படங்கள் பதிவாகின்றன. கேமிராவின் கண் வழியாகப் பார்த்தபோது அந்த முகம் மிகவும் அழகானது என்று பாலசந்திரன் நினைத்தார். அதே சமயத்தில் திடீர் திடீர் என்று அப்பெண்ணின் கண்கள் திறப்பது போலவும், கண்ணின் மணிகள் வெளியே தெரிவது போலவும் இருந்தன.
தனது மனப்பிரம்மை என்று பாலசந்திரன் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டார்.
பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள்.
'இன்று நல்ல வேலை' என்று மனதுள் சொல்லிக் கொண்டே பாலசந்திரன் தனது இல்லத்திற்குத் திரும்பினார். பத்திரிகை அதிபர் நிறைய சன்மானம் தருவார் என்கிற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.
வீட்டிற்கு வந்தவுடன் நேராக டார்க் ரூமை நோக்கி நடந்தபோது, வாயிலில் ஒரு ஜீப் வந்து நிற்கிறது. ஜீப் அல்ல.... கார்! அதிலிருந்து வேகமாக இறங்கிய ஒரு நபர் பாலசந்திரனின் கையைப் பிடித்துக் கொண்டார்.
இப்போது நீங்கள்தான் பெரிய மனது வைத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்.
எங்கள் வீட்டில் ஒரு திருமணம். அதற்கு ஏற்பாடு செய்திருந்த போட்டோகிராபர் வரவில்லை. நீங்கள்தான் வந்து போட்டோ எடுத்து எங்களை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
இந்த உதவியை பாலசந்திரனால் தட்ட முடியவில்லை. இதைப்போல பல சந்தர்ப்பங்களில் நடப்பது உண்டு. பதில் பேசாமல் அவருடன் காரில் சென்று திருமண வேலைகளை முடித்துக்கொண்டு சோர்ந்து போய் வீட்டுக்குத் திரும்பிய பாலசந்திரன், முதலில் சோர்வு போகக் குளித்தார்.
பிறகு டார்க் ரூமுக்குள் நுழைந்து சிகப்பு விளக்கைப் போட்டு ஃபிலிமைக் கழுவியபின் நெகடீவ்களைப் பார்த்தார்.
அதைப் பார்த்த பாலசந்திரனுக்கு உடல் குப்பென்று வியர்த்தது. பயத்தால் உடல் நடுங்க ஆரம்பித்தது. திரும்பத் திரும்ப நெகடீவ்களைப் பார்த்தார். தவறு ஏதாகிலும் நடந்திருக்குமோ... இதுவரை இம்மாதிரி நடந்ததில்லையே. என்லார்ஜர்களில் போட்டுப் பார்த்த பின்னும் அதே நிலை -
ஏன்... ஏன்...
இது அந்த நிபுணருக்கு முதல் அனுபவம்.
போட்டோ நெகட்டீவ்வில் பிணத்தின் மீது இருந்த ஆடைகள் மட்டும் தெரிந்தன. ஆடைக்குள் இருந்த உடல் மட்டும் தெரியவில்லை.
இது எப்படி உடல் இல்லாமல் ஆடைகள் மட்டும் தெரிவானேன் - எல்லா படங்களிலும் அப்படியே! அதனால் தவறு புகைப்படக்காரர் மீது இல்லை! ஏதேதோ கற்பனையில் சஞ்சரித்த பாலசந்திரன் பின்னால் ஒரு குரல் கேட்டது.
நான் இங்கே இருக்கேன்
என்று சொன்னது ஒரு பெண் குரல்.
***
2
அமைதியான இடத்தில் மூடி இருந்த அறையில் தனக்குப் பின்னால் ஒரு பெண் குரல் கேட்டால், யார்தான் திடுக்கிடாமல் இருப்பார்கள்? பாலசந்திரன் பயந்து போனதில் வியப்பு இல்லை. மீண்டும் ஒரு தடவை நெகட்டீவ் சுருளை நன்றாகப் பார்த்தபோது அதில் பிணத்தின் மீது இருந்த ஆடைகள் மட்டுந்தான் நன்றாகத் தெரிந்தன.
இரண்டாவது தடவையாக அதே குரல். பாலசந்திரன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தார். அந்த அறையின் குறைந்த வெளிச்சத்தில் ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது.
யார் நீ? எப்படி உள்ளே வந்தாய்?
பாலசந்திரன் கேள்வி.
நான் இங்கே வந்தேன்... எதற்காக? என்னை நீ பார்க்க வேண்டாமா?
அவள் கேட்டாள்.
பாலசந்திரன் விளக்கைப் போட்டார். அறையெங்கும் பிரகாசம்.
அவளைப் பார்த்தார். பிணமாக கிடந்த அதே சுஜிதா!
பாவாடை, பிளவுஸ் இரண்டும்தான் உடை. அதாவது பிணம் ஒட்டியிருந்த அதே உடை. அதில் மாறுதல் ஏதும் இல்லை.
இதே உடம்புதானே ஆம்புலன்ஸிலும் போயிற்று? தன் கேமிரா பொய் சொல்லாது. இவ்வளவு தூரம் எல்லோரும் அங்கே பிணமாகப் பார்த்த இவள்... இங்கே எப்படி உயிரோடு... மனதில் பயம் ஏற்பட, இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தது. வட்ட வடிவமான அழகு முகத்தில் கண்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக இருந்தன.
அறைக்குள் இல்லையென்றாலும், மல்லிகையின் நறுமணம் அங்கே!
தன் மார்பில் இருந்த பூணூலை ஒரு கையால் பற்றிக்கொண்டு பாலசந்திரன் நம்பூதிரி சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
நீ யார்?
என்று கேட்டார்.
நான் சுஜிதா அல்ல... இப்போது என் பெயர் தேவயானி...
சந்தேகத்தோடு அவளை ஆழமாகப் பார்த்த பாலசந்திரன்,
அந்தப் பெயரில் இங்கே யாரும் இல்லை. நான் படம் எடுத்த உருவம்தான் என் முன்னால் தெரிகிறது.
பூணூலை விடாமல் பேசினார்.
பாலசந்திரனான உன்னை நான் பாலா என்று அழைக்கட்டுமா?... எல்லா விஷயங்களையும் உங்களுக்குப் புரியும்படி சொல்கிறேன். வெளியில் உள்ள திண்ணையில் உட்காரலாமா?
அவள் இதமான குரலில் பேசவும், அவர் மனதில் சற்றே புத்துணர்ச்சி வந்தது. பயம் தெளிந்தது. மூடி இருந்த கதவைத் திறந்து கொண்டு இருவரும் வெளியே வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த தூணின் அருகில் அவள் நிற்க, பின்னால் வந்த பாலசந்திரன் திண்ணையின் மீது அமருகிறார். அதற்குப் பிறகுதான் அவளும் சற்று எட்ட அமருகிறாள். முற்றத்தில் விழுந்த நிலா வெளிச்சம் அவள் மீதும் பட்டது. காலையில் பிணமாகப் பார்த்த அதே உருவம். அவள் மெதுவாக குரலில் பேசுகிறாள்.
நான் முதலில் கொல்லப்பட்டேன்... பாவம் சுஜிதா அவளும் இப்போது கொல்லப்பட்டு விட்டாள். அவள் இறந்ததற்கு முக்கிய காரணம்... சில முக்கியமான இரகசியங்களை அவள் தெரிந்துகொண்டதுதான். அவளைக் கொன்று ஆலமரத்தில் தொங்க விட்டு விட்டார்கள். இதைச் செய்ததும் அதே துரோகிகள்தான்...
என்று அவள் தொடரும் முன்,
இப்போது இங்கே யாரோ வருகிறார்கள்
என்றாள்.
அவள் சொல்லி முடித்தபோது வாசலில் ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து மூன்று தடியர்கள் இறங்கி வீட்டிற்குள் வந்தனர்.
நேராக பாலசந்தரனிடத்தில் வந்த அவர்கள், காலையில் நீ எடுத்த பிணத்தின் படங்கள் அடங்கிய ரோலை எங்களிடம் கொடுத்து விடு
என்று ஒருவன் மட்டும் பலமாகக் கத்துகிறான்.
தன்னை உபத்திரவம் செய்யத்தான் இவர்கள் இங்கே அனுப்பப்பட்டு இருக்கிறார்கள் என்று பாலசந்திரன் நினைத்தார்...
போட்டோ எடுத்தேன்.... ஆனால், படம் சரியாகவே விழவில்லை.
அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
உங்களை இங்கே அனுப்பியது யாரு?
சற்று தைரியமாகவே பாலசந்திரன் கேட்கிறார்.
ஹாஸ்டல் ஆன்ட்டி சொல்லித்தான் வந்தோம்
என்றான், ஹாஸ்டலின் காவல்காரன் பட்ரோஸ். திடகாத்திரமான முரட்டு ஆள் அவன். மெதுவாக பாலசந்திரன் திரும்பிப் பார்த்தபோது, அப்பெண் மறைவாக அங்கே நின்றுகொண்டுதான் இருந்தாள். ஆனால், அவள் இவர்களின் கண்களில் படவில்லை.
சீக்கிரம் எடுத்து எங்களிடம் கொடு. இல்லையென்றால் இந்த வீட்டையே கொளுத்தி விடுவோம்.
அவன் குரலில் இருந்த கடுமை பாலசந்தரை சற்றே திகில் கொள்ளச் செய்தது. சொன்னதைப் போல் செய்தாலும் செய்து விடுவார்கள்.
பாலசந்திரன் உள்ளே போய் ஃபிலிம் சுருளை எடுத்து வந்து அந்தச் சிறு டப்பாவை அவர்கள் கையில் கொடுக்கிறார்.
அதை வாங்கிக் கொண்டு அவர்கள் வேகமாக வெளியேறி விட்டனர்.
பாலசந்திரன் திரும்பி அவள் பக்கம் பார்த்தபோது அவள் அங்கே இல்லை.
ஜீப் ஓடிக்கொண்டு இருக்க, பட்ரோஸ் பீடி ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு பலமாக இழுக்கிறான்.
அதன்பின் அவன் பேசுகிறான்.
"இந்த