Sakasa Mohini
()
About this ebook
Read more from Kottayam Pushpanath
Mohiniyin Kaadhal Rating: 4 out of 5 stars4/5Mohini Koyil Rating: 5 out of 5 stars5/5Pei Bungalow Rating: 4 out of 5 stars4/5Naaga Salangai Rating: 5 out of 5 stars5/5Mohini Silai Rating: 3 out of 5 stars3/5Marma Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Devathai Rating: 0 out of 5 stars0 ratingsMohiniyattam Rating: 0 out of 5 stars0 ratingsDeva Mohini Rating: 4 out of 5 stars4/5Kaadhal Mandhiram Rating: 0 out of 5 stars0 ratingsMohini Rating: 5 out of 5 stars5/5Thaandavam Rating: 5 out of 5 stars5/5Brahmaratshas Rating: 0 out of 5 stars0 ratingsVennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsMaya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMohini Illam Rating: 0 out of 5 stars0 ratingsAabathanavargal Rating: 0 out of 5 stars0 ratingsIrave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Pathilukku Pathil Rating: 3 out of 5 stars3/5Mandhira Muzhakkam Rating: 4 out of 5 stars4/5Nizhal Illatha Manithan Rating: 0 out of 5 stars0 ratingsVaa! Arugil Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Irandavathu Murai Rating: 0 out of 5 stars0 ratingsOnbathavathu Ward Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Mohini Rating: 5 out of 5 stars5/5Mohini Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsDeva Narthagi Rating: 5 out of 5 stars5/5
Related to Sakasa Mohini
Related ebooks
Irave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Vaa! Arugil Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsAntha Onbathu Per Rating: 5 out of 5 stars5/5Irandavathu Murai Rating: 0 out of 5 stars0 ratingsAnniya Mannil Sivantha Mann Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Devathai Rating: 0 out of 5 stars0 ratingsIruttile Rendu Per Rating: 4 out of 5 stars4/5Mohini Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5Irumbu Thottam Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Oru Yudham Rating: 0 out of 5 stars0 ratingsNerunji Mull Rating: 0 out of 5 stars0 ratingsKaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsAbaya Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAabathanavargal Rating: 0 out of 5 stars0 ratingsAthimalai Devan - Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Mayavanam Rating: 5 out of 5 stars5/5Oru Mul Oru Malar Rating: 1 out of 5 stars1/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5Muthu Pandhal Rating: 5 out of 5 stars5/5Jeeva En Jeeva Rating: 3 out of 5 stars3/5Thik... Thik... Thik... Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Mohini Rating: 5 out of 5 stars5/5Aanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5Naga Vanam Rating: 5 out of 5 stars5/5Deva Mohini Rating: 4 out of 5 stars4/5
Reviews for Sakasa Mohini
0 ratings0 reviews
Book preview
Sakasa Mohini - Kottayam Pushpanath
https://www.pustaka.co.in
சாகச மோகினி
Saagasa Mohini
Author:
கோட்டயம் புஷ்பநாத்
தமிழில்: சிவன்
Kottayam Pushpanath
For more books
https://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
நமக்குள்ளே…
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள கோட்டயம் புஷ்பநாத்தின் தொடர்களின் எண்ணிக்கை பதினெட்டு. அவற்றில் நான் மொழிபெயர்த்தவை பதினைந்து.
உலகிலேயே மிக அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ்மொழியில்தான் இருக்கிறார்கள் என்பது என் கருத்து. அவர்களில், தங்களை ஒரு மொழிபெயர்ப்பாளர் என்று ஒப்புக்கொள்ளக் கூடியவர்கள் மிகவும் குறைவு. அப்படி ஒப்புக்கொள்பவர்களில் நானும் ஒருவன்.
பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் மூல ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படாமலேயே வெளியாகின்றன. மூல ஆசிரியரிடம் அனுமதி பெறுவதும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பகுதியை அவர்களுக்கு வழங்குவதும் மிகவும் சிக்கலான விஷயம் என்று சில மொழிபெயர்ப்பாளர்கள் கருதுகிறார்கள். மற்றும் சிலர் மூல ஆசிரியர்களின் புகழ்பெற்ற நூலை, உண்மையான பெயரிலேயே வெளியிட்டு, ஆசிரியரின் பெயரை மட்டும் சுலபமாக மறந்து விடுகிறார்கள். மொழிபெயர்ப்பாளர் இங்கு கூடுவிட்டுக் கூடுபாய்ந்து ஆசிரியராகி விடுகிறார். அதனாலேயே இவர்களால் சுலபமாக ரசவாதம் செய்யவும் முடிகிறது. இந்த எச்சரிக்கைகளையெல்லாம் மீறி சிலசமயம் மூலம் பல்லிளித்து அடையாளம் காட்டி விடுவதுமுண்டு!
ஒரு சில பத்திரிகைகளில் ஆங்கில மூலநூலை கதாசிரியரிடம் கொடுத்து, அதைத் தமிழ் படைப்பாக வெளியிடுவதும் நடக்கிறது. இதையெல்லாம் இங்கே குறிப்பிடுவது தமிழ் மொழியில் மொழிபெயர்ப்புக்குப் பஞ்சமில்லை என்பதை விளக்கத்தான்.
தமிழ்த் தொடர் ஒன்றுக்காக ஒரு சமயம் மலையாளத்தின் நாவல் ஒன்றை நான் மொழிபெயர்க்க நேர்ந்தது. அந்த மொழிபெயர்ப்பைப் படித்த ஒருவர், ‘இது ஏற்கனவே தமிழில் வெளியான குறிப்பிட்ட ஒரு கதைபோல் இருக்கிறதே?’ என்று கேட்டார். நான் அந்தக் கதையை படித்ததில்லை. கூடவே தமிழில் இரண்டு வருடங்களுக்கு முன் அது வெளியானதையும் குறிப்பிட்டார். ‘நான் மொழிபெயர்த்த நாவல் மலையாளத்தில் வெளியாகி மூன்று வருடங்களாகிறது!’ என்று பதிலளித்தேன். ‘அப்படியானால் ஒரே சிந்தனை இரண்டு எழுத்தாளர்களுக்கும் தோன்றியிருக்கும்’ என்றார் நண்பர், கதை விஷயத்தில் சற்று ஞானமுள்ள ஒரு பத்திரிகையாளரும்கூட, அவரிடம் நான் கூறிய பதில், ‘ஒருவேளை இந்த இருவருக்கும் ஒரே மூலப்புத்தகம் வெவ்வேறு இடைவெளிகளில் கிடைத்திருக்கலாம்’ என்பதுதான். நண்பர் குறிப்பிட்ட எழுத்தாளர் ஜனரஞ்சகப் பத்திரிக்கைளில் எழுதி மிகவும் புகழ்பெற்றவர்.
எப்படியிருப்பினும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக இருப்பதில் எனக்கு வருத்தமோ, அவமானமோ, குற்றவுணர்ச்சியோ கிஞ்சித்தும் இல்லை. மாறாகப் பெருமிதமே ஏற்படுகிறது.
நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கோட்டயம் புஷ்பநாத்தின் தொடர்களை வெளியிட்ட மங்களம் (1), சாவி (3), இதயம் பேசுகிறது (1), பாக்யா (6), எங்கள் தங்கம் (1), தமிழன்
எக்ஸ்பிரஸ் (1), போலீஸ் செய்தி (1), குங்குமச் சிமிழ் (1), அமுதசுரபி (1), தமிழரசி (1) ஆகிய பத்திரிகைகளுக்கும், அவற்றின் வாசகப் பெருமக்களுக்கும் என் நன்றி உரித்தாகிறது.
சாகச மோகினி பாக்யா இதழில் வெளிவந்த ஆறாவது தொடர். நவம்பர் 9-15, 2001 முதல் ஜூலை 12-18, 2002 வரை 36 வாரங்கள் வெளியான கதை. எனது மொழிபெயர்ப்புப் பணியில் அதிகமாக உற்சாகமளித்த பத்திரிக்கை பாக்யா, மற்றொரு வகையில் பாக்யா வாசகர்கள் அளித்த மகத்தான வரவேற்பு என்றும் இதைக் கொள்ளலாம்.
1995ம் வருடம் ஜூலை மாதம் 14-20ம் தேதியிட்ட பாக்யா இதழில் ‘தாண்டவம்’ தொடர் முதன்முதலாக ஆரம்பமானது. தொடர்ந்து மந்திர மோகினி, அர்த்த ஜாம மோகினி, நாகசலங்கை, மோகினியின் காதல், மோகினியாட்டம் என்று அந்த வரிசை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் இவ்வளவு அதிகமான மொழிபெயர்ப்புத் தொடர்கள் வெளியான ஒரே மலையாள எழுத்தாளர் திரு. கோட்டயம் புஷ்பநாத் அவர்கள்தான். ஜனரஞ்சகத் தன்மையும், சுவாரஸ்யமும், அடுத்தது என்ன என்று’ ஆவலை ஏற்படுத்தும் பாணியும் மலையாள மொழியில் அவர் மகத்தான வெற்றி பெற்றதற்கான காரணங்கள் எனலாம். மலையாள மொழியில் வெளியான, வெளியாகும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் கோட்டயம் புஷ்பநாத் எழுதாத பத்திரிகைகளே கிடையாது எனலாம். அவரது நாவல்களை மொழிபெயர்த்ததன் மூலமாக நான் ஒரு மொழிபெயர்ப்பாளனாக அறிமுகமாகி, தமிழின் ஜனரஞ்சகப் பத்திரிகைளில் பங்குகொள்ள நேர்ந்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விஷயம். இலக்கியத்தரமான புத்தகங்கள் சிலவற்றை நான் மொழிபெயர்த்திருப்பினும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக என்னை அடையாளம் காட்டியது கோட்டயம் புஷ்பநாத்தின் நாவல்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை.
முக்கியமான மற்றொரு விஷயம்: இந்த சாகச மோகினி, முழுக்க முழுக்கப் பெண்கள் பத்திரிகை ஒன்றுக்காக எழுதப்பட்டது. இன்றுவரை எனக்குத் தெரியாத, சொல்லப்படாத ஏதேதோ காரணங்களால் இந்த நாவல் அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையில் இடம் பெறவில்லை. இப்போது யோசிக்கும்போது, அதுவும் ஒரு நன்மைக்கே என்று விளங்குகிறது. மனிதர்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் மனிதர்களே. எனவே, எனக்கு எந்த விஷயத்திலும் யார் மீதும் துளிகூடக் கோபமில்லை.
இந்த நாவலை அளித்த திரு. கோட்டயம் புஷ்பநாத் அவர்களுக்கும், வாங்கி ஆதரிக்கும் வாசகப் பெருமக்களுக்கும் என் இதயபூர்வமான நன்றி உரித்தாகிறது.
சென்னை - 600 078
தொலைபேசி: 24837681
தோழமையுடன்,
சிவன்.
1
என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. எந்த வழியும் தட்டுப்படவில்லை. இன்றைக்குப் பணம் கொடுக்காவிட்டால், அவமானப்பட நேரும்!
சரவணன் வராந்தாத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து தெரு வாசற்படியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மிகவும் பழமை வாய்ந்தது சரவணனின் குடும்பம். ஒரு காலத்தில் அந்தக் கிராமத்தின் பெரும்பான்மையான பகுதி, அந்தக் குடும்பத்துக்குச் சொந்தமானதாக இருந்தது.
கிராமத்தின் பரதேவதையான அம்மன் கோயிலும், அதன் கிழக்குத் திசையிலுள்ள விஷ்ணு கோயிலும் (புளியக்காட்டு மடம் என்பது ஒரு வீட்டின் பெயர்) புளியக்காட்டு மடத்துக்குச் சொந்தமானவை.
கடற்கரையில் முடிவடையும் கிராமத்தின் செம்மண் பாதையை ஒட்டி, மோகினி கோயிலின் வலதுபுறமாக மற்றொரு பாதை பிரிந்து செல்கிறது.
அந்த மோகினி கோயிலும் மிகவும் பழமை வாய்ந்ததுதான்.
ஏறத்தாழ நாலுக்கு நாலு சதுரத்தில், ஓர் ஆள் உயரமுள்ள மண்டபத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. பார்வைக்குப் பயமேற்படுத்தக்கூடிய அந்த விக்கிரகத்தின் மீது, பக்தர்கள் தூவும் சிவப்பு நிறக் குங்குமம் படிந்து பயங்கரத்தை மேலும் அதிகமாக்கவே செய்தது.
அந்தக் கோயில் வாசலில் கூர்மையான பற்களைக் கொண்ட எதோ ஓர் அசுரனின் உருவம் செதுக்கப்பட்டு இருந்தது. அந்த அசுரவடிவம் இப்போதும் துடித்துக் கொண்டிருப்பதாகவே தோன்றும்.
மோகினி கோயிலுக்கு முன்னால் பிரம்மாண்டமான ஆலமரம் ஒன்று இருந்தது. மேற்குப்புறமாகச் சற்றுச் சாய்ந்து வளர்ந்திருந்த அந்த மரத்தைத் தாங்கும் தூண்கள் மாதிரி ஏறத்தாழ மரத்தின் அளவுள்ள விழுதுகள் சுற்றிலும் மண்ணுக்குள் ஆழ்ந்து இறங்கியிருந்தன.
நிலா வெளிச்சமுள்ள இரவுகளில் ஆலமரத்தின் அடிப்பகுதி மற்றும் கோயில் சுவர்களில் பாம்புகள் ஆங்காங்கே ஊர்வதையும் தொங்குவதையும் பெருசுகளில் ஒரு சிலர் பார்த்திருக்கிறார்கள்.
வயதான பெரியவர்களேகூட இப்போதெல்லாம் இருட்டிய பிறகு அந்த வழியாக நடப்பதில்லை.
அங்கிருந்து திரும்பும் பாதை சற்றுத் தொலைவு நீண்டு, பிறகு மேற்குத் திசையில் திரும்பி பிரம்மாண்டமான ஒரு புளியமரத்தின் அடியில் சென்று முடிவடைந்தது.
அதையொட்டிய பகுதியில்தான் இருந்தது. சரவணனது வீட்டின் தெருவாசற்படி.
இருபத்தைந்து வயதான சரவணன் அழகான தோற்றம் கொண்டவன். அவனது குணங்களும் அப்படியேதான். மோசமென்று யாரும் சொல்லிவிட முடியாது.
சரவணனது அப்பா, வடக்குத் திசையைச் சேர்ந்தவர். கோயில் பூசாரியாக அந்தக் கிராமத்துக்கு வந்தவர். சரவணனுக்கு இரண்டு வயதாக இருந்தபோதே, அவனது அம்மா இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு நோய் பீடித்து இறந்து போனார்.
அதனால் மனமுடைந்த அப்பாவும் விரைவிலேயே காணாமல் போனார்.
அதன்பிறகு வீட்டிலிருந்தவர்கள் தாத்தாவும், பாட்டியும்தான். அதற்குள்ளாகவே குடும்பம் வறுமையை அனுபவிக்கத் தொடங்கியிருந்தது.
சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பை பரம்பரை பரம்பரையாகவே அவர்கள், குறிப்பிட்ட இரண்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருந்தனர். காலப்போக்கில் பராமரித்தவர்களே அவற்றின் உரிமையாளர்களாகிப் போனார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தாத்தாவும் இறந்தபோது, சரவணனின் துரதிர்ஷ்டம் ஆரம்பமானது.
மோகினி கோயிலை ஒட்டியுள்ள பகுதி மற்றும் தாமரைக்குளத்தை காரியஸ்தர் ராமசாமி கைப்பற்றிக் கொண்டார். விஷ்ணு கோயிலும் அதையொட்டிய பகுதியையும் இன்னொரு காரியஸ்தரான வீராசாமிக்குச் சொந்தமாகிப் போயின.
இந்தச் சொத்துக்கள் தொடர்பான பத்திரங்களும் அவர்களிடம்தான் இருந்தன. அதனாலேயே அவை படிப்படியாக அவர்களுக்கே சொந்தமாகிவிட்டன.
தாத்தாவின் உடல்நிலை மோசமானபோது அவருக்குச் சிகிச்சையளிப்பதற்காக சரவணன், ராமசாமியிடம் இருந்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் கடன் வாங்கியிருந்தான். அதற்காக சரவணன் சில பத்திரங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கவும் நேர்ந்தது.
இப்படி எழுதிக் கொடுத்ததில் அவன் வாசிக்கும் பரம்பரை வீடும் உட்பட்டிருந்தது. இப்படியெல்லாம் செய்தும் அவன் தாத்தா பிழைக்காமல் போனது மற்றொரு சோகம்.
இப்போது சரஸ்வதிப்பாட்டி மட்டும்தான் அவனுடன் வீட்டில் வசிக்கிறார். எண்பது வயதான அவர்தான் வேலைக்காரிகூட இல்லாத அந்த வீட்டின் மொத்த வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறார். வேலைக்கு யாரையாவது வைத்துக் கொள்வதானால் மாதம் தோறும் சம்பளம் என்று எதையாவது தர வேண்டுமே. அதற்கான பொருளாதார நிலை அங்கு சாத்தியமில்லாததுதான் காரணம்.
பத்து மணியாகியிருந்தது.
ராமசாமி வருவதாகச் சொல்லியிருக்கும் நேரம். சொன்னபடி, சொன்ன நேரத்தில் ‘டாண்’ என்று வந்து நிற்கப்போகிறார் அவர்.
கடைசித் தவணையாகப் போனமுறை வந்தபோது, ‘பணம் தர முடியாவிட்டால், வீட்டை ஒப்படைக்க வேண்டும்!’ என்று கூறியிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் கடனை அடைக்கப் பணத்துக்கு எங்கே போவது? தனியொரு மனிதனாக இருந்தால் ஊரைவிட்டேகூடப் போகலாம்.
பாட்டியும்கூட இருக்கிறார்களே… இந்தத் தள்ளாத வயதில் அவரையும் அழைத்துக்கொண்டு நாடோடியாகத் திரியமுடியுமா என்ன?
அதோ… அவர்கள் வந்துவிட்டனர். ராமசாமியுடன் நாலைந்து பேர் வருகிறார்கள். அவர்கள், அவரது அடியாட்களாகத்தான் இருக்க வேண்டும். முரட்டுத்தனமாகத் தோற்றமளித்தனர்.
வீட்டின் முன்புறமுள்ள முற்றப் பகுதியில் வந்து நின்றனர்.
என்ன சரவணன்… பணம் தாயாரா இருக்கா? சீக்கிரமா கொடுத்து அனுப்பு… எங்களுக்கு நிறைய வேலை இருக்கு… அவசரமாப் போயாகணும்…
ராமசாமி பேச்சைத் தொடங்கினார்.
சரஸ்வதிப்பாட்டி வீட்டின் உள்ளறையிலிருந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார்.
என்ன பதிலைச் சொல்வது என்று புரியாதவனாக சரவணன், ராமசாமியைப் பார்த்தான்.
அவரோ இடத்தை அளப்பது மாதிரி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.
எத்தனையோ நூற்றாண்டுகள் பழக்கமுள்ள மடத்தின் வீடு அது.
வெளிப்புறம் வீட்டைச் சுற்றி வராந்தா, வீட்டின் உட்புறம் உள்முற்றம். இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏராளமான அறைகள் கட்டப்பட்டிருந்தன.
சுத்தமான தேக்குமரத்தால் செய்யப்பட்ட நிலைவாசல், வாசற்படிகள், கதவுகள், ஜன்னல்கள்.
வராந்தாவின் தென்புறத்தில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டில் ஒன்று கிடந்தது. அறுபத்துநான்கு வகையான மூலிகை மரங்களின் துண்டுகளால் வடிவமைக்கப்பட்ட கட்டில். தனியாகப் பெயர்த்து எடுக்க முடியாதபடி சுவரோடு சுவராக அது பொருத்தப்பட்டிருந்தது.
மேற்கூரையில் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டிருந்த மரத்துண்டுகள்கூட முறுக்குக் கயிறு மாதிரி சிற்ப நயத்துடன் கடையப்பட்டிருந்தன.
இந்த வீட்டைச் சுற்றிக்கொண்டு வெளிப்புறச் சுவர் நின்று கொண்டிருந்தது.
காலத்தின் பழமையாலும் சரியான பராமரிப்பு இல்லாததாலும் வெளிப்புறச் சுற்றுமதில் ஆங்காங்கே பெயர்ந்திருந்தது. தெருவாசற்படி (படிப்புரை சுற்று மதிலில் வாசலுக்கு நேராக உள்ள தெருவாசல் கதவு, இதை வெயில், மழையிலிருந்து காப்பதற்காகச் சிறிய அளவில் மேற்புறமும் ஓடு வேய்ந்திருந்திருப்பார்கள்) எந்தவிதமான சேதமுமன்றி இருந்தது.
இன்னும் கொஞ்சநாள் தவணை கொடுத்தீங்கன்னா நல்லது
சரவணன் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்துக் கேட்டான்.
சரவணன் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, அன்றைக்குக் கணக்குப்பிள்ளையாக இருந்த இதே ராமசாமியின் முதுகில் அவன் யானை ஏறி விளையாடியிருக்கிறான். அப்போதெல்லாம் ராமசாமி, சரவணனின் அம்மா மற்றும் பாட்டியின் முன்னால் கை கட்டி பவ்வியமாக நிற்பது வழக்கம்.
என்ன சொன்னாலும் மறுத்து ஒரு வார்த்தை பேசாமல் தலையை ஆட்டி அப்படியே ஏற்றுக்கொள்வார். அப்படிப்பட்ட மனிதர்தான் இன்று தனக்கு முன்னால் மிகவும் கறாராக நிற்கிறார்.
இன்னும் எவ்வளவுதான் தவணை கொடுக்கிறது? வட்டியும் அசலுமா இப்பவே ஒரு லட்சரூபா ஆகிடுச்சு. இந்த மடத்தை இப்ப வித்தால்கூட ஒரு லட்சமே கிடைக்காது. சரி… நீங்க இவ்வளவு தூரம் கேட்டுக்கிறதால இன்னிக்கு ஒருநாள் தவணை தர்றேன். நாளைக்கு நாங்க வரும்போது ஒண்ணு… பணம் தயாரா இருக்கணும், இல்லேன்னா மடத்தை காலி பண்ணித் தந்துடணும்!
ராமசாமி கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
அவருடன் வந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்து வெளியேறினர்.
வந்தவர்கள் வெளியேறிய பிறகு சரஸ்வதி அம்மாள் மெதுவாக வாசலுக்கு வெளியே வந்தார்.
என்ன செய்யப்போற சரவணா?
பாட்டியின் குரலில் வேதனை நிறைந்திருந்தது.
பதில் எதுவும் சொல்லாமல் ஒரு தடவை பாட்டியை ஊன்றிப் பார்த்துவிட்டு வெளியேறினான் சரவணன்.
தெருவாசற்படி தாண்டி விரைந்தவன் நேராகப் போனது அம்மன் கோயிலுக்குத்தான்.
பெரிய பெரிய கருங்கல் துண்டுகளை அடுக்கி வைத்துக் கட்டியிருந்த அந்த அம்மன் கோயிலைக் கட்டிய காலம் எதுவென்று யாருக்குமே தெரியாது. அதன் கருவறை வாசல்கூட கருங்கல்லாலேயே செதுக்கப்பட்டிருந்தது.
கதவின் கீல்கள் காலப்பழமையினால் இற்றுப் போயிருந்தன.
கருவறைக்கு முன்னால் மண்டபம் ஒன்று இருந்தது. அதன் ஆறு தூண்களும் ஒற்றைக் கருங்கல்லால் வடிக்கப்பட்டிருந்தன. தூண்களின் மேற்புறத்தில் கருங்கல் பலகைகள் பாவப்பட்டிருந்தன. தூண்கள் ஒவ்வொன்றிலும் கைவிளக்கு ஏந்திய தேவகன்னிகையரின் உருவங்கள் ஒட்டி வைத்ததுபோல் வடிவமைக்கப்பட்டிருந்தன.
அம்மன் கோயிலின் மேற்குப்புறத்தில் பிரம்மாண்டமான ஆலமரம் ஒன்று இருந்தது. அதன் கிளைகள் சில, கோயில் சுவரைத் தழுவியவாறே கிழக்குத் திசையில் நீண்டிருந்தன. அவற்றிலிருந்து விழுதுகள் மட்டும் கீழ்ப்புறமாக இறங்காமல் போயிருந்தால் கோயில் சுவர்கள் அவற்றால் அழுந்தப்பட்டுப் புதைந்து, போயிருக்கும்.
கர்ப்பக்கிரகத்திலிருக்கும் அம்மனின் மூக்குத்திக்கல் வெளியிலிருந்து பார்த்தாலே பளபளத்தது.
அன்று, அந்த நேரம் வரையில் அவன் எதுவுமே சாப்பிடவில்லை. கடனை அடைக்கப் பணத்துக்கு என்ன செய்வது என்ற யோசனையில் மூழ்கியிருந்ததால் இரவு முழுக்க உறங்கவும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவனது கண்கள் தானாகவே மூடிக்கொள்ளத் தொடங்கின. உடனேயே கருங்கல் தளத்தில் உடம்பைப் போட்டு, கையை மடித்துத் தலையணையாக்கிப் படுத்தான். விரைவிலேயே உறக்கத்தில் அமிழவும் செய்தான்.
அவன் கண் விழித்தபோது நேரம் நள்ளிரவாகி விட்டிருந்தது. நிலவொளி அந்தப் பிராந்தியத்தையே பகல்போல் ஆக்கிவிட்டிருந்தது.
இந்த நேரத்துக்கு மேல் வீட்டுக்குப் போகாலாமா, வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தான்.
‘எதற்காகப் போகவேண்டும்?’ மனம் அவனையே திருப்பிக் கேட்டது.
சுற்றுமுற்றும் பார்த்தான். கோயிலின் கிழக்குப்புற மூலையில் கிணறு ஒன்று தென்பட்டது. அருகிலேயே