Nerunji Mull
By Sivasankari
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsAndhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Thavam Rating: 5 out of 5 stars5/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Kuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Payirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Vimochanam Rating: 4 out of 5 stars4/5Overdose Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Paalangal Rating: 0 out of 5 stars0 ratingsNooleni Rating: 5 out of 5 stars5/5Uyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Prayachchitham Rating: 4 out of 5 stars4/5
Related to Nerunji Mull
Related ebooks
Yaar Rating: 5 out of 5 stars5/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Kaadhalenum Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Poiyil Pootha Nijam Rating: 0 out of 5 stars0 ratingsVaa! Arugil Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsMalargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Puthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Sakasa Mohini Rating: 0 out of 5 stars0 ratingsVadikaal Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Ninaivugal Azhaikkum Kanavugal Rating: 4 out of 5 stars4/5Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Mayavanam Rating: 5 out of 5 stars5/5Krishnadaasi Rating: 5 out of 5 stars5/5Irandavathu Murai Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Konangal Rating: 4 out of 5 stars4/5Kaagitha Kappal Rating: 5 out of 5 stars5/5Ariyatha Mugangal Rating: 0 out of 5 stars0 ratingsKadambavana Kaadhal Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsAatril Oru Kaal Setril Oru Kaal Rating: 0 out of 5 stars0 ratingsVer Pidikkum Mann Rating: 0 out of 5 stars0 ratingsIrave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Subhavin Sirukathaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Jaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Piditha Minnal Rating: 0 out of 5 stars0 ratingsGhost Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nerunji Mull
0 ratings0 reviews
Book preview
Nerunji Mull - Sivasankari
http://www.pustaka.co.in
தூக்கு தண்டனை
Thookku Dhandanai
Author:
எண்டமூரி வீரேந்திரநாத்
Yandamoori Veerendranath
For more books
http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
விடியற்காலை நான்கு மணி.
முழங்காலில் முகம் புதைத்து தரையில் அமர்ந்திருந்தான் சிரஞ்சீவி. இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்ததால் கன்னத்தில் கண்ணீர் கோடாக படிந்திருந்தது. இரவு முழுவதும் அவன் உறங்கவே இல்லை. அழுது கொண்டே இருந்தான். அந்த அழுகை போகப் போக விசும்பலாக மாறியது. பிறகு அந்த விசும்பலும் நின்று விட்டது.
சிரஞ்சீவி நான்கு அடி தொலைவில் அவனுடைய சித்தப்பா அமர்ந்திருந்தார். இரத்தம் வற்றிவிட்டது போல் அவருடைய முகம் வெளிறிப் போயிருந்தது. எந்த நிமிடமும் நினைவு தப்பி கீழே விழுந்து விடுவாரோ என்பது போல் கைகால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்தக் குளிரிலும் அவருக்கு உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது.
சித்தப்பா! இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு?
பையன் கேட்டான்.
ஒரு மணி நேரம்.
நடுங்கும் குரலுடன் சொன்னார்.
*****
விசாலமான ஜெயில் மைதானத்தில் இருள கவிழ்ந்திருந்தது. மங்கலான நிலா வெளிச்சத்தில் சுவற்றில் அடிக்கப்பட்டிருந்த காவி நிறம் மேலும் வெளிறி விட்டாற் போல் காட்சி தந்தது.
வரிசையாக இருந்த அறைகளில் கைதிகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
நீளமான வராண்டாவில் இரண்டு நபர்கள் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். தொலைவிலிருந்து விழுந்துகொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் அவர்களுடைய நிழல்கள் நீளமாய் பாம்புகள் போல் அசைந்து கொண்டிருந்தன. இருவரும் ஒரு செல் முன்னால் வந்து நின்றுவிட்டார்கள். பூட்டைத் திறக்கும் சத்தம் கேட்டு உள்ளே இருந்த கைதி நிமிர்ந்து பார்த்தான். க்ரீச் என்று கதவு திறந்த சத்தம், தவிர, மற்றபடி எங்கும் நிசப்தம்.
குள்ளமாக இருந்தவன் கைதியிடம் புதிய சீருடைகளைக் கொடுத்தான். தூக்கு தண்டனைக்கு முன்பு கைதிக்கு புதிய உடைகளைத் தருவது வழக்கம்.
ஜெயில் சட்டத்தின்படி கைதிக்கு அவனுடைய மரணத்தைப் பற்றி இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன்புதான் தெரிவிப்பார்கள். அதுபோல் அவனிடம் தகவல் தெரிவித்தார்கள். அவன் முதலில் மௌனமாக அழுதான். ஆனால் நேரம் போகப் போக ஒரு விதமான விரக்தி மனப்பான்மை குடிகொண்டது. சில கைதிகள் வாய்விட்டு அழுவார்கள். சிலர் புலம்புவார்கள். இன்னும் சிலர் ஹிஸ்டீரியா வந்தது போல் நடந்துகொள்வார்கள். பெரும்பாலானவர்கள் பற்றற்ற மனத்துடன் மரணத்தை வரவேற்பார்கள். எது எப்படி இருந்தாலும் இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் சாவு நிச்சயம் என்று தெரிந்ததும் நடைபிணமாக மாறி விடுவார்கள்.
கைதியிடம் விஷயத்தை தெரிவிப்பதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு முன்பு அவனுடைய உறவினர்களுக்கு தெரிவிப்பார்கள். அந்த விஷயத்தை உடனே கைதியிடம் தெரிவிக்க வேண்டாம் என்று உறவினர்களிடம் சொன்னாலும் அவர்களுடைய பேச்சு, நடத்தையின் மூலமாக கைதிக்கு எப்படியாவது விஷயம் தெரிந்து போய்விடும்.
தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட கைதியை கூடுமான வரையில் தனியாகத்தான் வைப்பார்கள், ஆவேசம் கொண்டு மற்ற கைதிகள் மீது தாக்குதல் செய்து விடக் கூடாதே என்றுதான். அதே போல் மற்ற கைதிகள் உறக்கத்தில் இருக்கும் போது, சூரியன் உதயத்திற்கு முன்பே தூக்கு தண்டனையை நிறைவேற்றுவார்கள். தம்மில் ஒரு கைதி நிசப்தமாக மறைந்து போய் விட்டதை மறுநாள் காலையில மற்ற கைதிகள் புரிந்து கொள்வார்கள்.
முதல் நாள் இரவு டாக்டர் வந்து கைதியை செக்கப் செய்து அவனுக்கு எந்த உடல் நலக்கேடும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். அப்படி உறுதி செய்யப்பட்ட பிறகுதான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். உடல் நலம் குன்றியிருந்தால் அந்த கைதியை தூக்கில் போட மாட்டார்கள்.
கைதி புதிய ஆடைகளை அணிந்துகொண்ட பிறகு அவனுடைய கைகள் பின்னால் பிணைத்து கட்டப்பட்டன. இருவரும் வெளியில் வந்தார்கள். கைதி பின்னால் திரும்பி, தான் இருந்து அறையை கடைசி தடவையாக பார்த்துக் கொண்டான். வாசல் அருகில் நின்று கொண்டிருந்த சென்ட்ரியை பார்த்து 'போய் வருகிறேன்' என்று கண்ணாலேயே விடை பெற்றுக் கொண்டான். சென்ட்ரி பார்வையைத் திரும்பிக் கொண்டான். அவன் இளைஞன். இது வரையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதியை நேருக்கு நேர் சந்தித்ததில்லை.
மூவரும் வராண்டாவில் நடந்து போகும் போது ஜெயில் கடியாரத்தில் மணி அடித்தது, நாலரை ஆகிவிட்டதற்கு அடையாளமாக.
உடல் மீது இருக்கும் மச்சத்தையும், மற்ற அடையாளங்களையும் பரீட்சை செய்து, தூக்கில் போட வேண்டிய கைதி அவன்தான் என்று உறுதி செய்தார்கள். அதற்குப் பிறகு வாரள்ட் படிக்கப்பட்டது.
உன் மனைவியைக் கொலை செய்த காரணத்திற்காக உன்னை இந்தியன் பீனல் கோட் செக்ஷன் 302ன் படி தூக்கில் போடப் போகிறோம்.
அவன் மௌனமாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை கேட்டுக்கொண்டான்.
கைதியின் கால்கள் இரண்டும் வெள்ளைக் கயிற்றால் பிணைக்கப்பட்டன. அப்படி கட்டுவதற்கு முன்பு, உன் இறுதி ஆசை ஏதாவது இருக்கிறதா?
என்று கேட்டார்கள்.
அன்று விழித்துக் கொண்டதிலிருந்து முதல் முறையாக அவன் சிரித்தான். எதுவாக இருந்தாலும் நிறைவேற்றி வைப்பீர்களா? எதுவாக இருந்தாலும்!
என்றான்.
உண்மைதான். பெலும்பாலான மக்கள் இந்த விஷயத்தில் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், கைதியின் கடைசி விருப்பம் எதுவாக இருந்தாலும் ஜெயில் அதிகாரிகள் கட்டாயம் தீர்த்து வைப்பார்கள் என்று. அது முற்றிலும் தவறு. சட்டப்படி எந்த விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. கடைசி முறையாக உறவினர்களை யாரையாவது பார்க்க வேண்டும் என்று கேட்டால் தவிர. அதுவும் முன் கூட்டியே சொல்லியிருந்தால்தான். இந்த விஷயமாக வெளியிடப்பட்ட செய்திகள் எல்லாம் மூன்றாம் தர எழுத்தாளர்களால் ஜோடிக்கப்பட்டவைதான். கைதி உயில் எழுத வேண்டும் என்றாலும், எழுதிய உயிலை மாற்ற வேண்டும் என்றாலும் கடைசி விருப்பமாக அதை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
சொல்லுங்க. எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுவீர்களா?
நிறைவேற்றக் கூடிய விருப்பமாக இருந்தால்.
அவன் மறுபடியும் சிரித்தான். என் விருப்பத்தை உங்களால் தீர்த்து வைக்க முடியாது. கடவுள்தான் தீர்த்து வைக்கணும்.
உன் விருப்பம்தான் என்ன?
இறப்பதற்கு முன் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். அப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு அவன் முகத்தை மூடும் விதமாக கறுப்பு துணி அணிவிக்கப்பட்டது. அவன் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு மருத்துவரும், மேலும் இரண்டு சாட்சிகளும் தயாராக இருந்தார்கள்.
தூக்கு மேடையின் நடுவில் மரத்தால் ஆன விசைப் பலகை இருந்தது. அதன் பக்கத்திலேயே அதை இயக்கும் லீவர் இருந்தது. கைதி விசைப்பலகையின் மீது நின்று கொண்டான். அவன் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டது. எல்லாமே நிசப்தமாக இயந்திர கதியில் நடந்து கொண்டிருந்தது.
சரியாக இன்னும் ஐந்து வினாடிகளில் மரணம் நிகழப் போகிறது. முகத்தை மூடியிருந்த கறுப்புத் துணியின் பின்னாலிருந்து கைதி, சிரஞ்சீவியின் தந்தை உரத்தக் குரலில் கத்தினான்.
நீதி மன்றத்திற்கு கண்கள் இல்லை. சட்டத்திற்கு காதுகள் இல்லை. இந்தக் கொலையை நான் செய்யவில்லை. நான் செய்யவில்லை.
*****
வீலென்று கத்தினான் சிரஞ்சீவி. முடிந்து விட்டது சித்தப்பா. எல்லாமே முடிந்து விட்டது. அப்பாவை அவர்கள் தூக்கில் போடப் போகிறார்கள். அம்மாவும் இறந்து போய்விட்டார்கள். அப்பாவும் சாகப் போகிறார்.
சித்தப்பாவால் இனி தாங்கிக் கொள்ள முடியவில்லை. உங்க அம்மாவைக் கொன்றது உங்க அப்பா இல்லை தம்பீ. நான்தான்
உரத்தக் குரலில் கத்தினார்.
பையன் கற்சிலையாகி விட்டான்.
ஆமாம் தம்பி. உங்க அம்மா தவறு செய்துவிட்டாள் என்றும், நடத்தைக் கெட்டவள் என்றும் வாழ்நாள் முழுவதும் நீ குன்றிப் போக வேண்டியதில்லை. உங்க அம்மா பத்தினிப் பெண். நான்தான்… நான்தான் கயவன் தனியாக இருப்பவளை என் காமாக்னிக்கு பலியாக்கி விட்டேன்.
பையன் அழுவதை நிறுத்தி விட்டான். ஊகிக்க முடியாத அந்த உண்மை அந்த பன்னிரெண்டு வயது சிறுவன் வாயடைக்கச் செய்து விட்டது. அவனுடைய சித்தப்பா மார்பை அழுத்திக் கொண்டு கீழே சரிந்தார்.
உங்க அம்மா காலில் விழுந்து கெஞ்சினாள். காளியாய் மாறி அரிவாள் மணையை கையில் எடுத்தாள். அப்படியும் இந்த மிருகத்தின் பலத்திற்கு முன்னால் தோற்றுப் போய்விட்டாள். அந்தத் தோல்வியில் உயிரை மாய்த்துக் கொண்டாள். ஒரு வினாடி முன்னால் வந்த உன் தந்தை நிலைமையை வேறு விதமாக ஊகித்துக் கொண்டு ஆவேசமடைந்தார். அந்த ஆவேசத்தை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டேன். குற்றத்தை உன் தந்தை மீது சுமத்தினேன். உனக்கு தாய் இல்லாமல் செய்து விட்டேன். தந்தையும் இல்லாமல் செய்துவிட்டேன். தம்பி! மனிதனை அவன் செய்த பாவம் துரத்திக் கொண்டே இருக்கும். அதற்கு நானே ஒரு உதாரணம்.
சித்தப்பா நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இந்த வேதனையை என்னால் தாங்க முடியாது. இது என்னை விழுங்கிவிடும். நான்… நான்…
அதற்குப் பிறகு தொண்டையிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. திறந்திருந்த கண்கள் அப்படியே நிலைகுத்தி விட்டன. மார்பை பிடித்துக் கொண்டிருந்த கை கீழே நழுவி விட்டது.
*****
ஒரு மனிதனைக் கொல்லும் உரிமை சக மனிதனுக்கு இல்லை. அவன் உயிரோடு இருந்தால் வெளிப்படக் கூடிய உண்மையையும் கொன்று சாசுவதமாக புதைத்து விடுகிறார்கள்.
லீவர் அசையும் சத்தம். அந்த சத்தத்தை அடக்கியபடி அவன் குரல் சிறைச்சாலையின் சுவர்கள் அதிரும் படியாக எதிரொலித்துக் கொண்டிருந்தது.
தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். தூக்கு தண்டனை ரத்து செய்யப் படவேண்டும்.
லீவர் இயக்கப்ப பட்டதும் விசைப் பலகையின் கொக்கி விடுபட்டு டப் என்ற சத்தத்துடன் கதவு கீழே நோக்கி விழுந்தது. உடல் காற்றில் ஊசலாடத் தொடங்கியதும் கழுத்தில் தூக்குக் கயிறு இறுதியது. வினாடிக்கும் குறைவான நேரம்.
தூக்கு தண்டனையை ரத்துச் செய்யுங்கள். அதுதான் என் கடைசி விருப்பம். இந்தியன் பீனல் கோட் செக்ஷன் 302ஐ ரத்து செய்யுங்கள். அதுதான் என் கடை…
டப் என்ற சத்தத்துடன் அவன் கழுத்து எலும்பு உடைந்து விட்டது. மரணத்தை வரவேற்கும் எத்தனையோ முறைகளில் தூக்கில் போடும் முறை ரொம்ப சுலபமானது. சுருக்கு முடிச்சு கழுத்து எலும்பை முறித்ததும் நினைவு தப்பி விடும். அதற்குப் பிறகு உடனே உயிர் பிரிந்துவிடும்.
கைதியின் உடல் விசைப் பலகை வழியாக கீழே இறங்கியதும் அங்கே ஸ் ஸ்… ஸ் ஸ்…
என்ற சத்தம் கேட்டது. அது வரையில் பிடித்து வைத்திருந்த மூச்சுக் காற்றை எல்லோரும் ஒரே சமயத்தில் வெளியேற்றியதால் ஏற்பட்ட சத்தம் அது. எத்தனையோ அனுபவம் இருந்தாலும் கடைசி நிமிடம் வரையில் டென்ஷன்தான். அதற்குப் பிறகு நான்கைந்து நாட்கள் வரையில் அந்த காட்சி கண்முன்னே நிழலாடிக் கொண்டே இருக்கும்.
மரணம் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கும் அந்தக் கைதி வயதான கிழவன் இல்லை. மரணத்துடன் போராட டாக்டர் இருக்க மாட்டார். விழிகளில் நீர் தளும்ப சுற்றிலும் உறவினர்கள் இருக்க மாட்டார்கள். இருட்டு அறையில் தனிமைதான் அவனுக்கு துணை. மௌமாக நடந்து வந்து தூக்கு மேடை ஏறியதும் அனுபவம் மிக்க மருத்துவர் ஆபரேஷன் செய்வது போல் அவன் கழுத்தைச் சுற்றிலும் கயிற்றை இறுக்கி உயிரை எடுப்பது.
யார் கொடுத்தார்கள் இந்த உரிமையை? கண்கள் இல்லாத, காதுகள் இருந்தும் சரியாக கேட்காத இந்த நீதி மன்றத்திற்கு உயிர் வாழ்வது மனிதனின் பிறப்பு உரிமை என்று நாம் எழுதிக் கொண்ட அரசாங்க விதி முறைகளுக்கு நேர்மாறாக தூக்கில் போடும் உரிமையை யார் தந்தார்கள்?
அவன் உடல் அரை மணி நேரம் அதே நிலையில் வைக்கப்பட்டது. பிறகு மருத்துவர் வந்து பரிசோதனை செய்து மரணத்தை உறுதிப்படுத்தினார். ஜெயில் அதிகாரி தன்னுடைய கடமையை செய்து முடித்து விட்டதாக எழுதிவிட்டு ஃபைலை மூடி வைத்தார். தூக்கில் போடப் பட்ட நபரின் பிணம் வெளியில் கொண்டு செல்லப் பட்டது.
கிழக்கிலிருந்து சூரியன் மெதுவாகக் கிளம்பி உயரே வந்து கொண்டிருந்தான். ஜெயில் வளாகத்தில் ஆளரவமில்லாமல் இருந்தது. வேலைக்கார கிழவி ஒருத்தி ஒரு மூலையில் பெருக்கிக் கொண்டிருந்தாள். தூக்கு மேடையின் அடிவாரத்திலிருந்து கைதியின் ஆன்மா அப்பொழுது தான் உடலிலிருந்து வெளியேறி உரத்தக் குரலில் முழக்க மிடுவது போல் இருந்தது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள். இந்தியன் பீனல் கோட் செக்ஷன் முன்னூற்றி இரண்டை மாற்றி அமையுங்கள்.
இது நடந்து பன்னிரெண்டு வருடங்கள் முடிந்து விட்டன.
1
பால் குறைவாக ஒரு காபி சர்க்கரையும் கம்மியாகவே இருக்கட்டும்.
சிரஞ்சீவியின் வார்த்தைகள் இன்னும் முடியக் கூட இல்லை. சுகர் கம்மியாய் ஸ்ட்ராங்காபி ஒண்ணு
என்று உரத்தக் குரலில் கத்திவிட்டு சர்வர் அங்கிலிருந்து நகர்ந்து விட்டான்.
சிரஞ்சீவிக்கு ஒரு நிமிடம் தலைகுனிவாக இருந்தது. தான் சொல்ல வந்ததை சர்வர் முழுவதுமாக கேட்டுக் கொள்ளாமல் போனதற்கு. அப்படியும் அந்த சர்வரை பாராட்ட வேண்டும் போல் தோன்றியது. இத்தனை கும்பலுக்கு இடையில் யாரையும் பொருட்படுத்தாமல் எவ்வளவு உரத்தக் குரலில் கத்தினான்! உலகையே ஆட்டிப் படைக்கும் குரல் என்றால் இதுதானோ.
அதற்குள் வெயிடர் ஸ்ட்ராங் காபி கொண்டு வந்து மேஜை மீது வைத்து விட்டுப் போய்விட்டான். அப்பொழுது அவன் மூக்கில் குறுகுறுவென்று ஏதோ உணர்வு. தன்னையும் அறியாமல் அவன் உடல் விரைப்பாக மாறியது. தும்மல் வரப் போவது உறுதியாகத் தெரிந்துவிட்டது. இத்தனை பேருக்கு நடுவில் பலமாக தும்மினால் அந்த சத்தத்திற்கு எல்லோரும் தன்னை திரும்பிப் பார்ப்பார்களே. எப்படி அதைத் தடுப்பது?
தீடீரென்று அவனுக்கு ஒரு யோசனை வந்தது. மூச்சுக் காற்றை ஆழமாக உள்ள இழுத்து விட்டல் தும்மல் வராது என்றும், வரப் போகும் தும்மலும் நின்று விடும் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. அந்த யோசனை வந்ததற்கு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு கண்களை மூடி ஆழமாக மூச்சு எடுத்து, மெதுவாக வெளியேற்றினான். இரண்டு நிமிடங்கள் கழித்து நிலைமை சரியாகி விட்டது என்ற நம்பிக்கை ஏற்பட்டதும். கண்களைத் திறந்து சுற்றிலும் தென்பட்ட காட்சியை பார்த்து சிலையாகி விட்டான்.
வெயிட்டது தண்ணீர் டம்ளரை கையில் பிடித்துக் கொண்டு அவனையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்து டேபிளில் பஞ்சகச்சம் அணிந்த மாமா ஒருவரும், இடது பக்கத்து நாமக்கார பேர்வழியும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவனையே சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிரே அமர்ந்திருந்தாராசிங் (போன்றவன்) அவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிரஞ்சீவிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடலை கூனிக் குறுக்கிக் கொண்டு 'பில்' என்றான்.
என்ன ஆச்சு சார்?
ஒன்றும் ஆகவில்லை. பில் கொண்டு வா.
வெயிட்டர் பில்லை கொடுத்து விட்டு போய் விட்டான். சூழ்நிலை சரியாகிவிட்டதென்ற நம்பிக்கை வந்த பிறகு பில்லை எடுத்துக் கொண்டு மெதுவாக எழுந்து கொண்டான். யதேச்சையாக பில்லை பார்த்தவன் திடுக்கிட்டான். அவன் நினைத்ததை விட பில் தொகை நாலணா அதிகம் ஆகிவிட்டது. அவனிடம் இருந்த பணமே ரொம்ப குறைவுதான். அதனால்தான் நேற்று இரவு சாப்பிட வேண்டிய சாப்பாட்டை, இன்று காலையில் சாப்பிட வேண்டிய பிரேக்ஃபாஸ்டை ஒன்றாகச் சேர்த்து இரண்டு இட்லி, ஒரு காபி என்று தன்னிடம் இருந்த பணத்திற்கு கணக்கு போட்டு ஆர்டர் கொடுத்தான். அப்படி கணக்கு பார்த்து சாப்பிட்டும் பில் தொகையில் நாலணா கூடிவிட்டது அவனை சங்கடத்தில் ஆழ்த்தியது.
சர்வர் என்ன நினைத்துக் கொள்வானோ என்று பயந்து கொண்டே பில்லை காட்டி விட்டு அவனுடைய மேதாவிலாசத்தில் தனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று, ஆனாலும் இத்தனை பேர் சாப்பிட்டதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டிய கடமை இருப்பதால் சிறிய தவறு நேர்ந்திருக்கக் கூடும் என்று குறிப்பிட்டான்.
எட்டு ரூபாய் எழுபத்தி ஐந்து காசு. சுரியாகத்தானே இருக்கு சார்.
ஆனால் நேற்று இதே இரண்டு இட்லி, ஒரு காபிக்கு எட்டரை தானே ஆச்சு.
நேற்று மாலை முதல் மினிஸ்ட்ரி மாறி விட்டது இல்லையா
என்று சொல்லி விட்டு சர்வர் போய்விட்டான்.
சிரஞ்சீவி பி.ஏ.வில் எகனாமிக்ஸ், பாலிடிக்ஸ் தான் படித்தான். ஆனால் அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இவ்வளவு நெருக்கமான சம்பந்தம் இருக்கு மென்று அவனுக்கு இப்பொழுதுதான் புரிந்தது.
கௌண்டர் பக்கம் பார்த்தான். அங்கே உட்கார்ந்திருந்தவர் மென்மையான சுபாவம் படைத்தவர் போல் தோன்றினார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கையில் இருந்த பணத்தை கொடுத்துவிட்டு ஆட்டுக்கல் எங்கே இருக்கு சார்
பணிவாகக் கேட்டான்.
எங்க ஹோட்டலில் எல்லாமே வெட் கிரைண்டர் தான்.
லா படித்திருக்கிறேன். என்னதான் உஸ்மானியா யூனிவர்சிட்டி என்றாலும் காபி டம்ளர்களை கழுவுவது அவ்வளவு நன்றாக இருக்காதோ என்னவோ. இதைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
என்று கேட்டான்.
என்ன விஷயம் தம்பீ?
சிரஞ்சீவி தன்னிடம் நாலணா குறைந்த விஷயத்தைச் சொன்னான்.
அவர் எளிதாக சிரித்துவிட்டு காலியாகி விட்ட கோப்பை போன்றது வாழ்க்கை. தட்டில் இருக்கும் இட்லி போன்றது பணம். ஒன்றுக்காக மற்றதை செலவழிக்காதே தம்பி. பரவாயில்லை விடு
என்றார்.
மனப்பூர்வமாக அவருக்கு நன்றியைத் தெரிவித்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
2
இப்படி இருப்பவன் இந்த உலகில் எப்படி வாழப் போகிறாயோ எனக்குப் புரியவில்லை
மூர்த்தி பெருமூச்சு விட்டான்.
என்னைப் போன்றவன் இந்த உலகில் வாழ முடியாது என்று கவலைப்படும் அளவுக்கு என்ன ஆகிவிட்டது?
சிரஞ்சீவி கேட்டான்.
சத்தம் போட்டு தும்மினால் மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று சங்கடப்படுபவன், பலகையின் மீது ஒரு விலையும் பில் வரும் போது ஒரு விலையும் இருந்தால் ஏன் என்று கேட்டு சண்டை போடத் தெரியாதவன்…
என் வாழ்க்கையின் லட்சியம் இந்த சமுதாயத்தை சீர்த்திருத்தம் செய்து ஹோட்டல் பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவது இல்லை.
பின்னே?
இந்தியன் பீனல் கோட் செக்ஷன் 302ஐ மாற்றுவது. பாரத நாட்டின் நீதி சாஸ்திரத்திலிருந்து தூக்கு தண்டனையை ரத்து செய்வது. ஏன் தந்தையை பலி வாங்கிய இந்த சமுதாயத்தின் மீது பழி தீர்த்துக் கொள்வது.
கைப்பிடியை இறுக்கி சபதம் செய்வது போல் சொன்னான் சிரஞ்சீவி.
இதோ பாரு சிரஞ்சீவி! நீ பிராக்டீஸ் தொடங்கி மூன்று வருடங்கள் முடிந்து விட்டது. கோர்ட்டுக்கு வெளியில் நின்றால் மறத்தடி வக்கீல் என்று கிண்டல் செய்யப் போகிறார்களே என்று பயந்து உள்ளே உட்கார்ந்து கொள்கிறாயே தவிர, இது வரையில் ஒரு கேஸ் கூட நீ வாதாடவில்லை. இந்தியா வரை படத்தில் டில்லி எங்கே இருக்கிறது ன்று கூட உனக்குத் தெரியாது. டில்லியில் நாடாளுமன்றம் எங்கே இருக்கிறது என்று யாராவது கேட்டால் மெரினா பீச்சில் என்று பதில் சொல்லக் கூடியவன். நீயாவது இந்தியன் பீனல்கோடை மாற்றுவதாவது?
இன்னிக்கு பரிகாசம் செய்பவர்களே நாளைக்கு என்னைப் புகழ்ந்து பேசத்தான் போகிறார்கள். பார்த்துக் கொண்டே இரு. என்றாவது ஒரு நாள் பாராளுமன்றத்தில்…
சிரஞ்சீவி பேசுவதை நிறுத்திவிட்டு கனவுலகில் சென்று விட்டான்.
டிங்… டாங்!
நாடாளுமன்றத்திலிருந்து சிரஞ்சீவி வெளியே வந்து கொண்டிருந்தான். விசாலமான படிகள். இருபுறமும் நாடாளுமன்றத்து அங்கத்தினர்கள். முறுவலுடன் குசலம் விசாரித்து, பார்வையாலேயே பாராட்டை தெரிவித்து விட்டுச் சென்றுவிட்ட பிரதமர்.
சிரஞ்சீவி படியிறங்கி வரும்போது எதிரே தென்பட்ட மக்கள் கூட்டத்தை பார்த்து வியப்படைந்து விட்டான். சிலர் கைகளில் பூமாலைகளும், சிலர் கைகளில் கொடிகளும் இருந்தன. எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சி வெளிப்படையாக தென்பட்டது. சிரஞ்சீவி வாழ்க!
என்று முழக்கமிட்டுக் கொண்டு இருந்தார்கள்.
சிரஞ்சீவி மைக்கை பிடித்துக்கொண்டதும் ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு நிசப்தம் ஏற்பட்டது. அவன் முன்னால் தனியார் சானல்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையத்தையும் சேர்த்து இருபதுக்கும் மேற்பட்ட மைக்குகள் இருந்தன.
என் பிரியமான தோழர்களே! இந்திய தாயின் மக்களே!
கடல் அலைகளை போல் கைத்தட்டல்கள். பிறகு உடனே நிசப்தம். எல்லோரும் அவன் சொல்லப் போவதை கேட்க ஆர்வத்துடன் காத்திருந்தார்கள்.
பாரத நாட்டில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்று சமீபத்தில் பச்சன் சிங் வர்ஸெஸ் ஸ்டேட் ஆஃப் பஞ்சாப் கேஸில் தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. என்னுள் ஆவேசம் ஏற்படக் காரணமாக இருந்தது அதுதான். உலகம் முழுவதும் தூக்கு தண்டனையை ரத்து செய்வதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கும் போது நம் நாட்டில் அப்பாவி மக்களை, புரட்சிக்காரர்களை தூக்கில் போட்டுக் கொண்டு இருக்கிறோம். பலசாலியாக இருப்பவன் ஒரு கொலையைச் செய்து விட்டு அதை சாட்சிய ஆதாரங்களுடன் பலவீனமானவன் மீது சுமத்திவிட்டால் அவன் தூக்கு மேடை ஏறுவது நிச்சயம்.
கைத்தட்டல்கள் விண்ணைத் தொட்டன. சிரஞ்சீவி கையை உயர்த்தி நிறுத்தச் சொல்லி ஜாடைக் காட்டி பேச்சை மறுபடியும் தொடர்ந்தான்.
பாத்ரா கேஸில் செஷன்ஸ் ஜட்ஜ் ஓஹ்ரா, 'சுனில் பாத்ரா என்ற இந்த குற்றவாளியை ரொம்ப கொடூரமான நபராக எண்ணி தூக்கில் போடுவதுதான் அவனுக்கு சரியான தண்டனை என்று கருதுகிறேன்' என்று தீர்ப்பு அளித்தார். 1989ல் இதே கேஸ் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த போது ஜஸ்டில் சர்காரியா மரண தண்டனையை மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்தான் அளிக்க வேண்டும். இந்த கேஸை அவ்வளவு தீவிரமானதாக நான் எண்ணவில்லை. அதனால் குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுகிறேன்
என்று தீர்ப்பு அளித்தார்.
ஒரு மனிதனின் உயிரை எடுக்கணுமா இல்லை விட்டு வைக்கணுமா என்ற கண்ணோட்டம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. வாழ்வுக்கும், சாவுக்கும் இடை வெளி இவ்வளவு சிறியதா என்ற எண்ணம் என்னை யோசிக்க வைத்தது. அதான் அதற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினேன். உங்க எல்லோரின் ஆசிகள் இருந்ததால் வெற்றியும் பெற்றேன்.
நூற்றுக்கணக்கான கேமராக்கள் கிளிக் என்றன. யாரோ குளிர்பானத்தை நீட்டினார்கள்.
கிரிமினல் ப்ரொசீஜர் கோடில் புதிதாக சேர்க்கப் பட்ட செக்ஷன் 235(2) நம்மை மேலும் குழப்புகிறது. கோலைகளில் கூட சில பிரிவுகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். (மக்களின் சிரிப்பு அலைகள்) நீங்க கத்தியால் மார்பில் குத்தினாலும் எதிராளி சாகவில்லை என்றால் உங்களுக்கு தூக்கு தண்டனையை விதிக்க மாட்டார்கள். தெரிந்தோ தெரியாமலோ உங்கள் முழங்கை எதிராளியின் உடல் மீது பட்டு அவன் இறந்து போனால் தூக்கு தண்டனை உறுதி. இவ்வளவு அவல நிலையில் இருக்கிறது நம் நாட்டு சாஸ்திரம்.
அவன் அப்படிச் சொன்னதும் மக்களின் உற்சாகம் கட்டுக்கு அடங்காமல் போய்விட்டது. வெள்ளம் போல் பாய்ந்து முன்னால் வந்தார்கள். இளம் பெண்கள் ஆட்டோகிராஃபுக்காக சிரஞ்சீயை சூழ்ந்து கொண்டார்கள். குறும்புக்கார பெண் ஒருத்தி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள். எந்த காலேஜ்?
என்று கேட்டான். ஸ்டெல்லா மேரீஸ்
தாழ்வான குரலில் சொன்னாள். ஒரு கை போதாமல் இரண்டு கைகளாலேயும் ஆட்டோ கிராஃப் போட்டுக் கொண்டிருந்தான்.
டேய்! கண்களை மூடிக் கொண்டே பரத நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறாயே. என்ன விஷயம்?
மூர்த்தி அதட்டியதும் சட்டென்று இந்த உலகிற்கு வந்தான் சிரஞ்சீவி. வியப்பும், திகைப்புமாய் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தியிடம் தனக்கு வந்த கனவைப் பற்றிச் சொன்னான்.
பகல் கனவை கூட சரியாகக் காணமாட்டாயா? டில்லியில் ஸ்டெல்லாமேரிஸ் காலேஜ் எங்கே இருக்கு? சென்னையில்தானே இருக்கு?
அப்படித்தான் என்கிறாயா. போகட்டும் எக்ஸ்கர்ஷனுக்காக அந்தக் கல்லூரி பெண்கள் டில்லிக்கு வந்திருக்கலாம் இல்லையா.
எக்ஸ்கர்ஷனுக்காக வந்தவர்கள் குதுப்மினார், ரெட் ஃபோர்ட் பார்க்காமல் உன் சொற்பொழிவை கேட்க வரப் போகிறார்களா என்ன?
குதுப்மினார், ரெட்ஃபோர்ட்டும் இந்திய வரலாற்றில் சாசுவதமாக இடம் பெற்று விட்டது போல் என் பெயரும் நிலைத்து நிற்கும். பார்த்துக் கொண்டே இரு.
சிரஞ்சீவின் குரல் திடமாக ஒலித்தது.
போஸ்ட்.
கவரை உள்ளே வீசி விட்டு தபால்காரர்