Prayachchitham
By Sivasankari
4/5
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Thavam Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Andhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Deivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsAmma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Kuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsOverdose Rating: 0 out of 5 stars0 ratingsPaalangal Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Uyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Vimochanam Rating: 4 out of 5 stars4/5Payirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Nooleni Rating: 5 out of 5 stars5/5Oru Pahal Oru Iravu Rating: 5 out of 5 stars5/5
Related to Prayachchitham
Related ebooks
Kanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsAnbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsMaaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsNinnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsOru Poo Uthirum Rating: 5 out of 5 stars5/5Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsVanavil Oviyame! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Enthanuyir Kaadhaliye..! Rating: 4 out of 5 stars4/5Inimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Radhai Manadhil...! Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsTholaintha Devathai Rating: 0 out of 5 stars0 ratingsPaadu Nilaave Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Eppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Ennai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Prayachchitham
3 ratings0 reviews
Book preview
Prayachchitham - Sivasankari
http://www.pustaka.co.in
பிராயச்சித்தம்
Prayachchitham
Author :
சிவசங்கரி
Sivasankari
For other books
http://www.pustaka.co.in/home/author/sivasankari
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
பிராயச்சித்தம்
1
மழை ஆனந்தமாகத் தூறிக்கொண்டிருந்தது.
சன்னமான முத்துக்களை மெல்லிய வெள்ளிக் கம்பிகளில் கோர்த்து ஆகாசத் துக்கும் பூமிக்கும் திரை கட்டிவிட்ட மாதிரி, அழகாய் மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. முன்மாலை மஞ்சள் வெயிலில் தரையில் படர்ந்திருந்த பச்சைப் புல்களின் மேல் விழுந்த சில துளிகள், வைரங்களாய் ஜொலித்து நானாவித வர்ணுங்களை வாரியிறைத்தன.
மதுராவின் கவனம் பாடத்தில் இல்லை. கம்பராமாயணத்திலிருந்து ஒரு செய்யுளைப் படித்து, இலக்குவனின் குண விசேஷத்தை மிஸ் மலர்விழி உயர்வாக விளக்கிக் கொண்டிருப்பதில் புத்தியைச் செலுத்த விடாமல், ஜன்னல் வழியாகத் தெரிந்த மழையும் புல்வெளியும் பச்சைச் செடிகளும், எங்களைப் பாரேன், பாரேன் என்று அவள் பார்வையைத் தங்கள் பக்கம் கவர்ந்திருந்தன.
தலையை ஆகாயத்தை நோக்கி நிமிர்த்தி, பன்னீராகத் தெளிக்கும் சாரலை முகத்தில் வாங்கியபடி, பாதங்கள் ஈரப் புல்வெளியில் புதையப்புதைய நடந்தால் எப்படியிருக்கும்!
ஏக விஷமம் செய்து உடம்பு பூராவும் அழுக்காக்கிக்கொண்டு நின்று, அழுந்த தேய்த்துக் குளிப்பாட்டிவிட்டதும் பளிச்சென்று முகங்கள் தெரிய சிரிக்கும் குழந்தைகளாய், ஈரம் சொட்டச்சொட்ட, புழுதியை இழந்த பச்சை நிறம் தூக்கலாய்த் தெரியும் செடிகளிடம் சென்று, லேசாக ஒரு கிளையைத் தட்டிவிட்டால் எப்படியிருக்கும்!
பொலபொலவென்று பாரிஜாதப் பூக்கள் கொட்டுகிற மாதிரி முத்துமுத்தாய் இலைகளின் மடிப்பில் மறைந்திருக்கும் மழைத்துளிகள் சிதறி, முகம், தலை, உடம்பில் படும்போது எப்படியிருக்கும்!
மதுரா பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, இதுநாழிகை எங்கோ ஒண்டிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது மழை நின்றுவிட்ட தைரியத்தில் நாலு சிட்டுக்குருவிகள் பறந்துவந்து புல்தரையில் அமர்ந்து, உடம்பின் ஈரம் போக சடசடவென்று உதறிக் கொண்டன. இறக்கைகளை விரித்து ஒவ்வொரு இறகாக அலகால் நீவிவிட்டுக்கொண்டன. 'நீ நன்றாக நனைந்துவிட்டாயா? நல்லவேளை, நான் அத்தனை நனையவில்லை!' என்று கேட்டு பதில் சொல்கிற தினுசில், மூக்கோடு மூக்கு வைத்து காச்காச்சென்று கத்தின. அப்புறம் ஒன்று பறந்துபோக, பாக்கி மூன்றும் அதைத் தொடர்ந்தன.
மழை சுத்தமாக நின்றுவிட, நீலவானத்தில் மெதுவாக ஒரு வானவில் உருவாகத் தொடங்கியது.
முதலில் ஆரஞ்சு, ஊதா நிறங்கள்; சில கணங்களில் பச்சையும், மஞ்சளும்... முழுசாய் ஒரு நிமிஷம் போவதற்குள் அரைவட்டமாய் வானவில் உருவாகிவிட்டது.
வானத்தின் அந்தப் பிரசவத்தில் அமிழ்ந்துபோயிருந்த மதுராவுக்கு, சட்டென்று தயா மாமாவின் நினைப்பு எழுந்தது.
இப்போது என்றில்லை... எப்போது வானவில்லைப் பார்த்தாலும் தயா மாமாவின் ஞாபகம் நெஞ்சு பூராவும் பூப்பூவாய் பூத்து மணக்கத்தான் செய்கிறது.
நினைவு தெரிந்த பிறகு, ஒரு சமயம் மாமாவின் மடியில் உட்கார்ந்து, ஆர்ப்பாட்டத்தோடு கொட்டிய மழையை வேடிக்கை பார்த்த நாளில், அற்புதமாக உருவான வானவில்லை தயா சுட்டிக்காட்டி, அதுக்குப் பேர் ரெயின்போ, புல்புல்... சொல்லு, ரெ..யி..ன்..போ...
என்றும்,
அப்புறம் கொஞ்சம் விவரம் புரிந்த பிறகு ஒருநாள், விப்கியார்னு நினைவு வெச்சிகிட்டா, வயலெட், இன்டிகோ, ப்ளூ, க்ரீன், யெல்லோ, ஆரஞ்சு, ரெட்...னு அத்தனை நிறங்களையும் சுலபமா சொல்லிடலாம்!
என்றும்,
இன்னும் ஒருநாள், ஒரு ஊர்ல ஒரு ஏழைக் கிழவன் இருந்தானாம். ரொம்நல்லவனாம். யார் கிட்டயும் எந்த உதவியும் கேக்காம தன் கையே தனக்குதவின்னு வாழ்ந்தவனுக்கு, ஏதாவது நல்லதைப் பண்ணணும்னு கடவுள் நினைச்சாராம். அதனால, அடுத்த முறை வானவில் தோணும்போது, அது ஆரம்பமாற எடத்தைத் தோண்டிப் பாருன்னு அவன் கனவுல சொன்னாராம். கிழவன் அதே மாதிரி வானவில்லோட ஆரம்பத்தைக் கண்டுபிடிச்சுத் தோண்டினப்ப, குடம்குடமா தங்கக்காசு கிடைச்சுதாம்!
என்றும்... தயா மாமாஇந்த ரெயின்போவைப்பற்றி என்னவெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்!
வானவில்பற்றி மட்டும்தானா மாமா சொல்லியிருக்கிறார்? அவருக்குத் தெரியாத விவரம் எது! மாமா ஒரு ஜீனியஸ்... அவருக்கு எல்லா விஷயமும் அத்துப்படி... அத்தனையும் விரல்நுனியில்!
தயா மாமா...
ஓ! எவ்வளவு அற்புதமான மனிதர்! அந்த முகமும் சிரிப்பும்...
தலையைச் சற்றே சாய்த்து, கண்களை லேசாய் இடுக்கி, முன்னால் விழும் கற்றை முடியை அலட்சியமாய் மேலே ஒதுக்கி, மெல்லிசாய் சிரிக்கும் தயா மாமா... சின்னக்குழந்தை, உனக்கென்ன புரியும் என்று ஒதுக்காமல், சின்ன வயசிலிருந்து இன்றுவரை இவள் தொணதொணப்புக்கு ஈடுகொடுத்து, கேட்பதற்கெல்லாம் தெளிவாகப் பதில் சொல்லும் தயா மாமா...
மாமாவைப் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டன!
கிட்டத்தட்ட மூன்று மாசம் இருக்குமா?
இப்போதெல்லாம் மாமா முன் மாதிரி மெட்ராடஸுக்கு அடிக்கடி வருவதில்லை. போனில் பேசும்போது கேட்டால், ஸாரி, புல்புல்... வேலை அதிகமாக இருக்கும்மா...
என்கிறார்.
இந்த மாமாவுக்கு என்ன ஆயிற்று?
மாமாவைப் பற்றின சிந்தனை மாறாமலேயே பார்வையை உட்பக்கம் திருப்பின மதுரா, மணிக்கட்டைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்தாள்.
நாலடிக்க பதினைந்து நிமிஷங்கள்.
இலக்குவனைப்பற்றி இங்கே கம்பன் என்ன சொல்கிறானென்றால்...
ஓ... போர்!
பேசாமல், 'தலைவலிக்கிறது மிஸ்' என்று சொல்லிவிட்டு, எழுந்துபோய்விடலாமா?
ம்ஹூம்... வேண்டாம்.
இந்த மிஸ் மலர்விழிக்கு ஏற்கனவே என்னைக் கண்டால் ஆகாது.
'உன் அப்பா சென்னையில் பெரிய புள்ளியாக இருக்கலாம், இந்தக் கல்லூரி டைரக்டர்களில் ஒருவராக இருக்கலாம்... ஆனாலும், இங்கே நான் லெக்சரர், நீ ஸ்சுடன்ட்... நினைவிருக்கட்டும்!' என்று முன்பு ஏதோ விஷமம் பண்ணியபோது கூப்பிட்டு முகத்துக்கு நேராகக் கண்டித்தவர்.
மாதாந்திரப் பரிட்சையில் மார்க் ரொம்பக் குறைவு...
இப்போது கிளம்பினால், இதை சாக்குவைத்துக்கொண்டு அந்தப் பேச்சை இழுத்து திட்டலாம்.
எதற்கு வம்பு!
மதுரா முதுகை வளைத்து மேஜையில் சரிந்தாள்.
கடைசி பெஞ்சில் இருப்பதால் தன் செய்கை லெக்சரருக்குத் தெரியாது என்ற நம்பிக்கையுடன் ஷேக்ஸ்பியரைப் பிரித்தாள்.
அட்டைக்குள் செருகிவைத்திருந்த புகைப்படத்தை வெளியில் இழுத்தாள்.
அவளுடைய தயா மாமா...
அப்பா, அம்மா, உறவினர், தெரிந்தவர் - எல்லோருக்கும் அவள் மதுரா.
ஆனால், தயா மாமாவுக்கு மட்டும் - புல்புல்.
புல்புல்னு என்ன பேர், மாமா?
நீ பொறந்த உடனே உன்னைப் பாக்க நா ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தேன்... தொட்டில்ல படுத்திருந்தே... கொசுவலையை மெல்ல தூக்கிட்டு உன்னைப் பாத்தேன்... சொப்பு மாதிரி சிவப்பு வாயைத் தொறந்து 'ங்கா'னு நீ கத்தினப்ப, ஒரு குழந்தையோட அழுகையா எனக்கு அது தோணலை... புல்புல் பறவையோட சங்கீதம் மாதிரி ஒலிக்க, அந்தக் கணம் உனக்கு நா வெச்ச பேர்தான் இந்த புல்புல்...
மாமாவின் படத்தைக் கண்சிமிட்டாமல் நோக்கியவளுள், 'இப்போதெல்லாம் அடிக்கடி மாமா சென்னைக்கு வருவதில்லையே, ஏன்? அப்படியென்ன தலைபோகிற வேலை? என்னைப் பார்க்காமல் அவரால் எப்படி இருக்க முடிகிறது? எனக்குப் பொறுக்க வில்லையே!' என்ற கேள்விகள் மீண்டும் எட்டிப்பார்த்த நிமிஷத்தில், வகுப்பு முடிந்து விட்டதற்கான மணி அடிக்க, சலிப்புடன் மதுரா படத்தை அட்டைக்குள் பழையபடி தள்ளி புஸ்தகத்தை மூடினாள். எழுந்து மேஜையிலிருந்து நழுவி வாசலைப் பார்க்க நடந்தாள்.
ஹிந்தி வகுப்புக்குப் போயிருந்த ஷீலா அவளுக்காக மாடிப்படியருகே காத்திருந்தாள்.
என்ன டல்லடிக்கறே? பாடம் போரடிச்சிதா?
ம்ம்...
என்ன பண்ணலாம்? ப்ளேகிரவுண்டுல விளையாட முடியாது... ஸோ, வீட்டுக்குத் தானா?
மதுரா பதில் சொல்வதற்குள், மது...
என்ற குரல் கேட்டது. திரும்பினாள்.
நிம்மி.
வீட்டுக்குப் புறப்பட்டாச்சா, மது? அவசரமா போகணுமா?
ஏன்? என்ன விஷயம்?
இல்லே... ப்ளூ டைமண்ட்ல 'ரோமன் ஹாலிடே' வந்திருக்கு... போலாமா?
மதுரா கொஞ்சம் யோசித்தாள்.
ஏற்கனவே பார்த்த அருமையான படம். டிராஜடிதான்... ஆனாலும், க்ரிகெரிபெக் அசப்பில் தயா மாதிரி இருப்பாரே... அதற்காகவாவது இன்னொரு தரம் போகலாமோ?
ரைட்... லெட்ஸ் கோ!
எங்க வீட்டுல சொல்லிட்டு வரல... லேட்டா போனா திட்டுவாங்க... நா வரல...
தலையாட்டி மறுத்த ஷீலாவை மதுரா முறைத்தாள்.
மணி இப்ப நாலேகால்... ப்ளூ டைமண்ட்ல தொடர்ச்சியா ஷோ... அதனால, ஏழுக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம்... ஃபஸ் பண்ணாம வா, ஷீலு!
மூவரும் வண்டி நிற்கும் இடத்துக்குப் போனார்கள்.
புஸ்தகங்களை ஜன்னல் வழியாக உள்ளே போட்டு, கார் உடனே வேணும்னு ஏதாவது சொன்னாங்களா, கன்னையா?
என்றாள்.
இல்லம்மா...
அப்ப சரி... ப்ளூ டைமண்ட்க்கு ஓட்டு...
தியேட்டரில் டிக்கெட்டுடன் பாப்கார்ன், காட்பரிடஸும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று உட்கார்ந்தார்கள்.
நாடாளும் அரசிக்கு அரச வாழ்க்கையே சலித்துவிடுகிறது. ஒரு நாளாவது சுதந்திரமாக இருக்கவேண்டுமென்ற துடிப்பில், தூக்கத்துக்கு ஊசி போட்டுவிட்டு டாக்டர் சென்றபின், யாருமறியாமல் அரண்மனையை விட்டு வெளியேறிவிடுகிறாள். தூக்கக்கலக்கத்துடன் கூத்தடிக்கும் அவளை இன்னார் என்று புரிந்துகொள்ளாமல் தன் வீட்டுக்குக் கதாநாயகன் அழைத்துவருகிறான். ஒருநாள் பழக்கத்தில் காதல் அரும்பிவிடுகிறது. நாளின் முடிவில், 'இப்படி ஆயுசுக்கும் இருப்பது நடக்காத காரியம் என்பது தெளிவாக, கடமை உணர்ச்சி அழைக்க, அரசி அரண்மனைக்குத் திரும்பிவிடுகிறாள். அரசியைச் சந்திக்க வந்திருப்பவர்களோடு கதாநாயகனும் கலந்து காத்திருந்து, அவளிடம் முந்தின நாட்கள் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தன் பரிசாகக் கொடுக்கிறான். கவரிலிருந்து புகைப்படங்களை எடுத்துப் பார்க்கும் அரசிக்கு, இனி இதெல்லாம் கனவுதான் என்ற நினைப்பில் கண்ணில் நீர் திரளுகிறது. தொண்டை அடைத்துப்போகிறது. காதலர்கள் ஒரு வார்த்தை பேசாமல் பிரிகின்றனர்.
ஏற்கனவே படத்தைப் பார்த்திருந்ததால் கடைசிக் காட்சிகளை, நாயகி-நாயகனின் அடிபட்ட முகபாவங்களை, கண்களில் பிரதிபலிக்கும் ஏமாற்றங்களை, மீண்டும் ஒருமுறை காண மனசுக்கு பலமில்லை என்று தோன்ற, அரசி அரண்மனைக்குத் திரும்பியதும் ஷீலாவிடம், லெட்ஸ் கோ... எனக்குப் பாக்கப் பிடிக்கல...
என்றாள் மதுரா.
இன்னும் கொஞ்ச நேரம்தான், மது... ப்ளீஸ்...
நீங்க வேணா இருங்க... நா போறேன்... எனக்குக் கஷ்டமா இருக்கு...
இந்தப் பிடிவாதம்தான் உன்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம்...
நிம்மி அடிக்குரலில் ஆத்திரப்பட்டாள்.
பிடிக்கலன்னா ஏன் கூப்பிட்டே? நா போறேன்... பை...
மதுரா எழுந்துவிட, அவள் குணம் நன்கு பழக்கமான ஷீலா