Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deva Mohini
Deva Mohini
Deva Mohini
Ebook293 pages2 hours

Deva Mohini

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Pushpanathan Pillai alias Kottayam Pushpanath is a famous Malayalam author. He wrote many detective novels, mainstream novels, science fiction,
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580103801729
Deva Mohini

Read more from Kottayam Pushpanath

Related to Deva Mohini

Related ebooks

Related categories

Reviews for Deva Mohini

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deva Mohini - Kottayam Pushpanath

    http://www.pustaka.co.in

    தேவ மோகினி

    Deva Mohini

    Author :

    கோட்டயம் புஷ்பநாத்

    Kottayam Pushpanath

    Translated by :

    சிவன்

    Sivan

    For other books

    http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    என்னுரை

    தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் பிறமொழிக் கதாசிரியர்களில் கோட்டயம் புஷ்யநாத் குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறார். கடந்த பத்தாண்டுகளில் இவரது இருபது நாவல்கள், பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இது தவிர சில நாவல்கள் நேரடியாகவே புத்தகமாகியுள்ளன. அதற்காக தமிழ் வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    கோட்டயம் புஷ்யநாத்தின் நாவல் ஒன்றை முதன்முதலாக நான் மொழிபெயர்க்கும்போது தமிழ்மொழியில் இது எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பது குறித்து யோசிக்கவில்லை. அப்போது, இது எனக்கு இடப்பட்ட ஒரு பணியாக மட்டுமே இருந்தது. நாவல் வெளியான பத்திரிகை சரியான அளவுக்கு வரவேற்பு பெறாமல் போகவே, நாவலும் கவனிக்கப்படாமல் போனது.

    'மங்களம்’ பத்திரிகையில் முதல் மொழிபெயர்ப்பு முற்றுப்பெற்ற (13.7.92) அதே வாரத்திலேயே, 'சாவி’ பத்திரிகையில் (15.7.92) தொடங்கப்பட்ட இரண்டாவது மொழிபெயர்ப்பான 'மோகினி’ என்னை சுறுசுறுப்பான ஒரு மொழிபெயர்ப்பாளனாக்கியது. முற்றிலும் நான் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது!

    'சாவி’ பத்திரிகையின் விற்பனையில் பதினைந்தாயிரம் பிரதிகள் அதிகரிக்கவும் செய்தது (இந்தத் தகவல் எனக்குக் கிடைத்தது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான்). அதன் விளைவாக 'மோகினி’ தொடர் முடிவடையும் 7.7.93-ம் தேதியிட்ட இதழிலேயே மூன்றாவது மொழிபெயர்ப்பான காதல் மந்திரம் தொடரும் ஆரம்பமானது.

    என்னை மொழிபெயர்ப்பாளனாக அறிமுகப்படுத்தி, ஆதரவளித்த மதிப்புக்குரிய சாவி அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. தமிழில் எத்தனையோ பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் இருக்கலாம். எனினும் சாவியைப் போல் பத்திரிகையுலகுக்குப் புதுமுகங்களை அறிமுகப்படுத்திய விசால மனம்படைத்தவர்கள் வேறெவரும் இல்லையென்றே சொல்லலாம். கடந்த இருபத்தோரு வருடங்களாகப் பத்திரிகைத்துறையில் பணிபுரியும் என்னால் இதை உறுதியாகச் சொல்லமுடியும். என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பிரமுகர் அவர்!

    இந்த 'தேவமோகினி' நாவல் போலீஸ் செய்தி பத்திரிகையில் 21.6.2000 தேதியிட்ட இதழில் ஆரம்பமானது. அதன் ஆசிரியர் ஹரிராம் அவர்களுக்கும் தொடருக்கும், அட்டைப்படத்துக்கும், ஓவியம் வரைந்த ஜெயராஜ் அவர்களுக்கும் இந்தப் புத்தக உருவாக்கத்தில் பங்குகொண்ட அனைவருடன், கலா நிலையம் ஸ்ரீனிவாசன் மற்றும் வாசகர்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகிறது.

    சென்னை - 600 078                                    தோழமையுடன்

    தொலைபேசி 4837681                                        சிவன்

    தேவமோகினி

    1

    அந்தக் கட்டடத்தின் ஆரம்ப வேலைகளைத் தொடங்கிய போது, நம்பமுடியாத ஒரு சில காட்சிகளைச் சிலர் கவனித்தனர்.

    இரவு நேரங்களில் பிரம்மாண்டமான மரங்களை வேர் மற்றும் மரக்கிளைகளைக்கூட விட்டுவிடாமல் தரையிலிருந்து அப்படியே பெயர்த்தெடுத்து, பிரம்மாண்டமான இயந்திரங்களை ஏற்றும் டிரக்கில் ஏற்றி அந்த காம்பெளண்டுக்குள் கொண்டு செல்வது ஒரு வழக்கமாகவே தொடர்ந்தது.

    பைசாசிகத்தன்மை கொண்ட காட்டு முருக்குகள், சர்ப்பக்காவுகள் (பாம்புக் கோயில்கள்) போன்ற அமைப்புகளும் எந்தவிதமான மாற்றமுமின்றி காம்பெளண்டுக்குள் கொண்டு செல்லப்பட்டன.

    ஓர் அமாவாசை இரவு நேரத்தில் பிரம்மாண்டமான ஆலமரம் ஒன்றை அந்த காம்பெளண்டின் பூர்த்தியடையாத பகுதி வழியே உள்ளே கொண்டு சென்றதையும் சிலர் பார்த்திருக்கிறார்கள்.

    நீண்ட நாட்களுக்கு முன் அந்த காம்பெளண்டின் உட்புறப் பகுதி ஒரு சுடுகாடாக விளங்கியது என்று பெரிசுகள் சொல்வதுண்டு.

    ஒருநாள் விடியற்காலை நேரத்தில், மேற்புறம் ஒட்டிப் பிடித்திருந்த பாசங்களைக்கூட அகற்றாமல் கட்டப்பட்ட காம்பெளண்டுச் சுவருக்குள், சுவரின் மேல்புறம் மூங்கில் தட்டிகளால் சுற்றியிருப்பதை ஜனங்கள் கவனித்தனர்.

    நகரின் மேற்குப் பகுதியில், அதிகமாக ஆள் நடமாட்டமற்ற இடத்தில், பயங்கரத்தை ஏற்படுத்தும் காட்டுப் பகுதியின் உட்புறமாக உயர்ந்து எழும்பிய அந்தக் கட்டடத்தை எல்லோரும் வியப்புடன் கவனிக்கவே செய்தனர்.

    பழைய கோவிலகங்கள் (நம்பூதிரிகளின் இல்லங்கள்), பராமரிப்பின்றிச் சிதைந்துபோன கோயில்கள், வாரிசுகள் யாருமின்றிச் சிதிலமடைந்த மனை நம்பூதிரிகளின் வீடுகளை இப்படியும் குறிப்பிடுகின்றனர்) போன்று ஒவ்வொரு பகுதியிலிருந்து பார்த்தால் அந்தக் கட்டடம் ஒவ்வொரு மாதிரியாக- ஆனால், புதிதாகக் கட்சியளித்தது. வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆவிகள் குடியிருப்பதாக நம்பப்படும் மரங்கள் ஏராளமாக இருந்தன. சுருங்கச் சொன்னால் பிரேதப் பிசாசுகள் குடியிருக்கும் ஒரு பழைய கோட்டையாகவே அது விளங்கியது. கட்டடத்தின் அந்தச் சூழ்நிலை இதயத்துள் பீதியேற்படுத்துவதாக இருந்தது.

    கட்டடத்தின் முன்புறம் சற்றுத் தள்ளி ஆலமரம் ஒன்று காம்பெளண்டுச் சுவரை ஒட்டி வளர்ந்திருந்தது. பாம்புகள் இழைந்து ஊர்வதுபோல் காட்சியளித்த அதன் அடிப்பரப்பில், நாகதேவதைகளின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அந்த மரத்தின் அடிப்பகுதியில் பாம்புகள் சர்வ சாதாரணமாக ஊர்ந்து செல்வதை கட்டட வேலை நடக்கும்போது அங்கிருந்த தொழிலாளர்கள் பார்த்திருக்கின்றனர்.

    எப்போதும் நிழலால் மூடப்பட்டிருந்த அந்தக் கட்டடத்தின் கிரகப்பிரவேசம் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

    காலைவேளையில் சுமார் பத்து மணியானபோது பி.எம்.டபிள்யூ ரிஜிஸ்ட்ரேஷனுள்ள கார் ஒன்று கேட்டை கடந்து வந்து நின்றது.

    அதற்குள்ளிருந்து அழகான இளைஞன் ஒருவன் வெளிவந்தான். வந்தவன் ஒரு தடவை சுற்றுமுற்றும் நின்று கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்தான்.

    'இந்த இளைஞன் யார்?’ - இந்தக் கேள்வி அங்கிருந்த ஒவ்வொருவரின் மனத்திலும் எழுந்தது.

    மிகவும் பிரபலமான ஒரு சினிமா கதாநாயகனின் சாயலில் இருந்தான்.

    ஆறடி உயரம். அதற்கேற்ற வாளிப்பான உடம்பு. முகத்தில் தங்க ஃபிரேமிட்ட மூக்குக் கண்ணாடி.

    அழகான முக்கு. அடர்த்தியான மீசை. சிவப்பு நிற அரைக்கை செக்ஷர்ட்-சாம்பல் நிற பேண்ட். நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரியேதான் இருக்கார்! -யாரோ ஒருவர் உரத்த குரலில் கூறினார்.

    அதைக் கேட்டுப் புன்னகைத்தவாறே அவன்பாட்டுக்கு வாசலை நோக்கி நடந்தான்.

    "இதுவரை யாருமே கட்டாத மாதிரியான ஒரு பங்களா இது!’ என்ற செய்தி, நகரின் மிகப்பெரும் பணக்காரரான ராஜசேகரன் உண்ணித்தானின் காதிலும் விழுந்தது.

    உண்ணித்தான் சாமான்யமானவர் அல்ல. நகரின் பல இடங்களில் ஓட்டல்கள், தியேட்டர்கள், குடகில் காபித்தோட்டம், ரப்பர் எஸ்டேட்... இப்படி கணக்குவழக்கற்ற சொத்துக்களின் உரிமையாளர் உண்ணித்தான். அந்த நகரில் எந்த ஒரு செய்தி நான்கு பேர் மத்தியில் பேச்சாக இருக்கிறதோ, அது உடனே அவருக்கும் எட்டவேண்டும் என்பதில் கண்டிப்பானவர்.

    இந்தச் சூழ்நிலையில்தான் அங்கு தனது பங்களவைத் தோற்கடிக்கக்கூடிய முறையில் மற்றொரு கட்டடம் எழும்பிய செய்தியும் அவருக்கு வந்து சேர்ந்தது.

    நகரின் போலிஸ் கமிஷனர் தொடங்கி எல்லாத் துறைகளிலுமுள்ள அரசில்வாதிகள் உட்பட அனைவரும் அவரை ஒரு முக்கிய பிரமுகராக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

    ராஜசேகரன் உண்ணித்தான், உடனேயே தனது தம்பியான நாராயணன் உண்ணித்தானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்தார்.

    ஏராளமான அடியாள் கூட்டத்துடன் நிழல்வேலைகளில் ஈடுபட்டு வருபவன் நாராயணன் உண்ணித்தான்.

    முன்பொரு சமயம் ராஜசேகரன் உண்ணித்தானின் தியேட்டரைவிட மிகவும் பிரம்மாண்டமான தியேட்டர் ஒன்றைக் கட்டினார் மற்றொரு பணக்காரர். ஆனால், அந்த தியேட்டரின் திறப்புவிழா நடைபெறுவதற்கு முதல்நாள் வெடிகுண்டு வைத்து அதைத் தகர்த்தவன் நாராயணன் உண்ணித்தான்.

    விஷயம் தெரியுமா ? நாம ரெண்டாவது ஆளா மாறிவிட்டோம். யார் அதுக்கு உரிமையாளர்? ராஜசேகரன் கேட்டார்.

    எல்லாத்தையும் விவரமா விசாரிச்சுட்டு வந்திருக்கேன். உண்மையிலேயே நம்மளைவிட பெரிய கைதான் –நாராயணன் விவரித்தான்.

    விஷ்ணு ஆஸ்பத்திரியை நடத்திட்டிருக்கிற டாக்டர் திவாகரன் நாயரோட மருமகன் சந்திரமோகன்கிறவரோடதாம் அந்த கட்டடம்!

    ராஜசேகரனும் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். ஆனால், டாக்டர் திவாகரன் நாயர், மருத்துவமனையைத் திறந்ததுடன் ராஜசேகரனின் மருத்துவமனை செல்லாக் காசாகிவிட்டது.

    'நோயாளிகளைக் கசக்கிப் பிழிகின்றனர்’-என்ற எண்ணம் நோயாளிகள் மத்தியில் பரவியதுதான் காரணம்.

    சந்திரமோகனும் அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர்தான். ஆனால், ஐந்தாவது வயதில் பெற்றோருடன் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தங்கிவிட்டவர்.

    அவரது பெற்றோர் இருவருமே அங்கு டாக்டராக இருந்தனர்.

    ஏராளமான விஷயங்களில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் சந்திரமோகனுக்கு வாஸ்து சிற்பக் கலையில்தான் ஆர்வம் அதிக மிருந்தது. வெகுகாலமாக மனத்துள் வளர்த்து வைத்திருக்கும் லட்சியங்களுடன் சந்திரமோகன் தாய்நாடு திரும்பி வந்திருந்தார். அவரது பெற்றோர் விமான விபத்து ஒன்றில் மரணமடைந்த நிகழ்ச்சிதான் அவரை இந்தியாவுக்குத் திரும்பி வரச் செய்திருந்தது.

    சந்திரமோகன் இந்த ஊருக்கு வந்து சேர்ந்த பிறகு பராமரிப்பின்றிக் கிடந்த பழங்கால பங்களாக்கள், பூஜை முடங்கிய கோயில்கள். இல்லங்கள், குடும்பச் சொத்தான கோயில்கள் போன்றவற்றை நியாயமான விலை கொடுத்தே வாங்கிக் குவித்தார். ஊருக்கு வரும்போது அவரிடம் கோடிக்கணக்கான பணம் இருந்தது.

    ராஜசேகரன் உண்ணித்தான், அவரது தம்பியிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர்களது வீட்டுக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து நடுவயது மனிதர் ஒருவர் இறங்கினார்.

    வாங்க.. காண்டிராக்டர் சங்கரன் நாயர்... உங்களுக்காகத் தான் காத்துட்டிருக்கோம் ராஜசேகரன் வரவேற்றார்.

    மன்னிச்சுக்கங்க... கொஞ்சம் லேட்டாயிடுச்சு. இன்னிக்குத்தான் கிரகப்பிரவேசம், எக்கச்சக்கமான நிகழ்ச்சிகள்... எல்லாம் பிரமாதமா இருக்கு -சங்கரன் நாயர் பதிலளித்தார்.

    நேரம் என்னன்னு சொன்னீங்க? உண்ணித்தான் கேட்டார்.

    இன்னிக்கு சாயந்திரம் ஏழரை மணிக்கு!

    அந்த பங்களாவை நாங்க ஒரு தடவை பார்க்க முடியுமா? என்ன காரணத்தாலயோ எனக்கு அழைப்பு வரலை. ஒருவேளை மறந்திருக்கலாம்! - உண்ணித்தான் சொன்னார்.

    உங்களுக்கிடையில அவ்வளவு நல்ல உறவு இருக்கிறதா தெரியலையே? சங்கரன் நாயர் கேட்டார்.

    அதெல்லாம் டாக்டரோடதானே... அந்தப் பையன் என்னைத் தெரிஞ்சு வெச்சிருக்கனுமே! உம்... பரவாயில்லை... பங்களாவைப் பார்த்துட்டுப் பேசிக்கலாம்.

    அப்ப என்கூட வர்றீங்களா? சங்கரன் நாயர் அழைத்தார்.

    நானா - என்வீட்டு நாய்தான் வரும்! அது கிடக்கட்டும். நாராயணா நீ போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு, மிச்சத்தை அதுக்குப் பிறகு பார்த்துக்கலாம். உண்ணித்தான் எதையோ மனதில் வைத்தவராகப் பேசினார்.

    நாராயணன், காண்டிராக்டர் சங்கரன் நாயருடன் கிளம்பினான்.

    பங்களாவைப் பார்த்தான்.

    பங்களாவா அது... அரண்மனை... அதுகூட அல்ல... கோயில்தான் அது!

    விசாலமான அந்த பங்களாவின் வரவேற்பறை மச்சு, வியாளி முகங்கள் செதுக்கிய தேவதாரு மரச் சிற்பங்களால் நிறைந்திருந்தது.

    பிரம்மாண்டமான தூண்களில் கல்விளக்குகளை ஏந்திய தேவலோகப் பெண்களின் உருவங்கள். தனித் தனி சிலைகள் போலவே புடைத்துக் கொண்டு நின்றன. கதவு, ஜன்னல்களின் கொக்கி மற்றும் தாழ்ப்பாள்களில் மோகினி-கந்தர்வர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கண்ணுக்குத் தெரியாத ஏதேதோ சக்திகளின் அடையாளங்களாக சிற்பங்களில் அவற்றை வடித்த சிற்பிகளின் கைத்திறமை பளிச்சிடவே செய்தது. வரவேற்பறையின் சுவரோடு சுவராகச் சிற்பங்கள் பல பதிக்கப்பட்டிருந்தன.

    அவற்றில் உருவங்களின் உண்மையான உயரத்துடன் கூடிய நடனமாடும் பெண்களின் சிற்பங்களும், கோயில் கருவறையின் இருபுறமும் காவலுக்கு நின்று கொண்டிருக்கும் துவாரபாலி கைகளை நினைவுபடுத்தும் பயங்கரமான மர வடிவச் சிலைகளும் இடம் பெற்றிருந்தன.

    அந்த பங்களாவின் அறைகளுக்குள் கூட பழங்காலப் பாணியிலான பொருள்கள்தான் இருந்தன. பழங்காலக் கோயில்களிலிருந்தும், மனைகள் எனப்படும் பழங்கால நம்பூதிரிகளின் இல்லங்களிலிருந்தும் வாங்கப்பட்டிருந்த பித்தளைச் சங்கிலிகள் கொண்ட ஊஞ்சல்களும், யானைத் தந்தங்கள் பதித்த சிம்மாசனம் போன்ற இருக்கைகளும் பார்ப்பவர்களைப் பிரமிப்படைய வைத்தன.

    இவை தவிர, விசாலமான ஒரு ஹாலில் பஞ்சலோகம் மற்றும் கிருஷ்ணசிலைக் கல்லாலும் (சிலை செய்ய உகந்த உயர்ந்த வகைக்கல்) சந்தன மரங்களாலும் வடிவமைக்கப்பட்ட தேவி- தேவர்கள், மோகினி கந்தர்வர்களின் சிலைகள் இடம் பெற்றிருந்தன.

    பங்களா நவீன பாணியில் மின்சார மயமாக்கப்பட்டிருந்தாலும், பழமை மாறாதிருப்பதற்காக ஒவ்வோர் அறையிலும் சங்கிலி விளக்குகளும், நிலவிளக்குகளும் அதனதன் இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் ஊன்றிக் கவனித்த நாராயணன் உண்ணித்தான் அங்கிருந்து கிளம்பினான். தான் பார்த்ததையெல்லாம் அப்படியே அண்ணனிடம் விவரித்தான்.

    லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அந்த மாளிகைக்குள் இருப்பதைக் கேள்விப்பட்ட ராஜசேகரன் உண்ணித்தானின் முகம் வாட்டமடைந்தது. கூடவே குரூரமான உணர்வொன்றும் அந்த முகத்தில் படர்ந்தது. அந்த நிலையிலேயே வெகுநேரம் யோசனையில் ஆழ்ந்தார்.

    டேய்... நாராயணா, அந்த தியேட்டருக்கு அன்னிக்கு என்ன நடந்தது? -ராஜசேகரன் கேட்டார்.

    புரிஞ்சது! அதே நிலைமை இங்கேயும் வேணுமா?

    வேணும்! சாயந்திரம் அங்க நடக்கிற கிரகப்பிரவேச விழாவை போட்டோ எடுக்கிற போட்டோ கிராபர்க்ளில் நம்ம ஆள் ஒருத்தனும் இருப்பான். இருக்கணும்! கூப்பிடு நம்ம போட்டோகிராபரை.

    நாராயணன் போன் செய்த சற்று நேரத்துக்குள் போட்டோ கிராபர் ஒருவர் வந்து சேர்ந்தார். பேச்சின்போது, அவரையும் விழாவுக்கு அழைத்திருக்கும் தகவல் தெரிய வந்தது.

    அங்கு என்ன நடக்கப் போகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? -ராஜசேகரன் கேட்டார்.

    தெரியும், மிகவும் பிரம்மாண்டமான விழா. சினிமா நடிகை கோபிகாவின் நடனம், லிலாமணியின் பாட்டுக்கச்சேரி. அது தவிர ஏராளமான திரையுலகப் பிரமுகர்களும், பின்னணிப் பாடகர்களும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி. நமது சுற்றுப்புறத்தில் நான்கு படங்களின் படப்பிடிப்பு நடைபெறுவதால் பெரும்பாலான நடிகர் நடிகையர்கள் விழாவில் கலந்து கொள்ளப் போகிறார்கள்.

    பரவாயில்லை, நிறையத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! - என்ற ராஜசேகரன் நெற்றியைச் சுளித்தபடி தனது தம்பியைப் பார்த்தார்.

    சரி... அப்ப நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும், ராஜசேகரன் போட்டோகிராயரைப் பார்த்தார்.

    சொல்லுங்க... செய்யிறேன்.

    "வழக்கம்போல உங்க வேலையைக் செஞ்சுக்கங்க. நடுவுல நேரம் கிடைக்கும்போது அங்க இருக்கிற அறைகளுக்குள்ள நுழையனும் அங்க ஒரு ஆர்ட் காலரி இருக்கிறதாக் கேள்விப்பட்டேன். அதைப் படம் எடுக்குற சாக்குல அங்க ஒரு வெடிகுண்டை வைக்கணும்!

    அதை வைத்துவிட்டு வெளிய வந்துடுங்க. குறிப்பிட்ட நேரத்துல உங்ககிட்ட நாங்க கொடுக்கிற ரிமோட்டை அழுத்தணும்... அவ்வளவுதான். அந்தக் கட்டடத்தோட ஒரு பகுதி தகர்ந்து சரிந்து விழும். அதை நாங்க பார்க்கணும்... இது போதும்." -ராஜசேகரன் சிரித்தபடி பேசினார்.

    2

    புகைப்படக்காரர் தயக்கத்துடன் அவர்களைப் பார்த்தார்.

    நீங்க இதைச் செய்யறிங்க... இல்லேன்னா, அதுக்குப் பிறகு நீங்க போட்டோவே எடுக்க முடியாது! இதுக்காக நான் உங்களுக்குத் தர்ற பணம் இருபத்தஞ்சாயிரம் ரூபாய்.

    வேறுவழி இல்லாததால் போட்டோகிராபர் அதற்கு ஒப்புக்கொண்டார்.

    "மேற்கொண்டு செய்ய வேண்டியதெல்லாம் நாராயணனோட வேலை நடன நிகழ்ச்சிக்கு வர்ற யாராவது ஒருத்தரை நம்ம பக்கம் இழுக்கணும். அவங்களுக்கு மயக்க

    Enjoying the preview?
    Page 1 of 1