Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muthu Pandhal
Muthu Pandhal
Muthu Pandhal
Ebook104 pages58 minutes

Muthu Pandhal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580100701485
Muthu Pandhal

Read more from Indira Soundarajan

Related to Muthu Pandhal

Related ebooks

Related categories

Reviews for Muthu Pandhal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muthu Pandhal - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    முத்துப் பந்தல்!

    Muthu Pandhal!

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    முத்துப் பந்தல்!

    1

    அது என்னவோ தெரியவில்லை - கடற்கரைக்கு சென்றாலே உடம்பும் மனமும் லேசாகி விடுகிறது. அது எதனால் தெரியுமா? என்று கேட்ட பேராசிரியர் ராஜேந்திரனை கடல் ஆய்வு செய்ய வந்த அவரது மாணவர்களும் ஆவலாக பார்த்தனர்.

    'பூமியைப் பற்றி எண்ணும்போது எல்லோருக்கும் நிலப்பரப்பும் அதில் வாழும் மனித இனமும்தான் நினைவுக்கு வரும். ஆனால் உண்மை அதுவல்ல...! பூமி என்றால் நினைவுக்கு வரவேண்டியது கடல்தான். பூமியில் மூன்று பங்கு கடல் நீரால்தான் சூழப் பட்டுள்ளது. அடுத்து நினைவுக்கு வரவேண்டியது கடல் வாழ் உயிரினங்களான மீன்கள்தான்… மக்கள் தொகை கூட 600 கோடிதான். ஆனால் கடலுக்குள் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கையோ பல ஆயிரம் கோடி!

    உண்மையில் பூமி என்றால் கடலும் மீனும்தானே நினைவுக்கு வரவேண்டும்?

    "மிக அதிக அளவு தண்ணீர்

    மிக அதிக அளவு காற்று

    மிகப் பெரிய அளவில் ஆகாயம்

    மிகப் பெரிய அளவில் நிலப் பகுதி

    இவைகளுக்கு நடுவே மிகப்பெரிய நெருப்புத் துண்டமான சூரியன்? என்று பஞ்சபூதங்களையும் பெரிய அளவில் பார்க்க முடிவது கடற்கரையில்தான். மிகக் குறைந்த அளவிலான பஞ்சபூத கலவை கொண்ட நாம் அதிக அளவை உணரும்போது உடம்பில் ஒரு ஆனந்தப் பரவசம் ஏற்படுவது சகஜம்தானே?" என்று அவர் திருப்பிக் கேட்டார்.

    அவர்களுக்கும் அந்த பதில் கொஞ்சம் புதியதாகவும் சரியான ஒன்றாகவும் தோன்றியது.

    அவர்கள் மொத்தம் பத்து பேர். பேராசிரியர் ராஜேந்திரன்தான் அவர்களுடைய கடல் ஆய்வுக்கு தலைவர்.

    அவர்களுக்கு எதிரில் வங்காள விரிகுடாக் கடல் நீலப்பாய் போல விரிந்து கிடந்தது. கரை ஓரத்தில் மட்டும் அலைகளின் பாய்ச்சல், காற்றும் சீரான வேகத்தில் வீசிக் கொண்டிருந்தது. கரை வெளியும் மெதுமெது வென்று, குறுமணலால் படிந்து கிடந்தது. தலைக்கு மேலே வானில் சூரியனும் மேற்கு நோக்கிய தனது பயணத்தில் இருந்தான்.

    நிறைய பறவைகள்! வெண்ணிறமாய் பறந்த பறவைகளைப் பார்க்கும்போது மட்டும் அவை எல்லாம் கொக்குகள் என்பது தெரிந்தன. வல்லூறுகளையும் உணர முடிந்தது. ஆனால் அவைகளையும் கடந்து பலவித பறவைகள் நீலக்கடல் மேல் பறந்தபடி இருந்தன. சில தாழப் பறந்து நீர்வெளிமேல் மேம்போக்காக நீந்த வந்த மீன்களை ஒரே தாக்குதலில் கொத்திப் பிடித்தபடி மேலேறிப் பறந்தன.

    கடலாடிகளும் கடல்வெளிமேல் எஞ்சின் படகுகளில் டுர் டுர் என்று பறந்து கொண்டிருந்தனர். கட்டு மரங்கள் அவ்வளவாகக் கண்ணில் படவில்லை. மெளனமாக ராஜேந்திரனும் அவரது மாணவர்களும் பார்த்துக் கொண்டே நெடுநேரம் கரைவெளிமேல் நின்று விட்டனர். அவர்களுக்குப் பின்னால் பார்க்க முடிந்த தூரத்தில் இருந்தது பாண்டிக் குப்பம் என்கிற சேரிப் பகுதி. சேரி முழுக்க பனை ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகள் - குடிசைகளின் கூரைமேல் விரும்பம்போல கட்சிக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

    பேராசிரியர் ராஜேந்திரன் கடலின் அழகை ரசித்தது போதும் என்று எண்ணியவர் போல தனது மாணவர்களைப் பார்த்தார். பின் மணல் வெளியில் ஒரு இடத்தில் போய் சப்பணமிட்டு அமர்ந்தார். அவர்களும் அவர் எதிரில் வட்டமாய் அவரைப் பார்க்கும் விதமாய் உட்கார்ந்து கொண்டனர்.

    பேச்சு ஆரம்பமாயிற்று.

    சார். இந்த கடல் பகுதிக்கு நாம வந்து மூணு நாளாச்சு. தினம் வரோம். நிக்கறோம். பார்க்கறோம். எப்ப கடலுக்குள்ள பிரவேசிக்கப் போறோம்? ஒருவன் கேட்டான்.

    நிச்சயமா தெரியுமா சார்... இந்த பகுதியில்தான் பல்லவர்களோட சிற்பக்கூடம் இருந்து மூழ்கிச்சா?

    சிற்பக் கூடம் மட்டுமா? ஒரு ஊரே மூழ்கிப் போச்சு. இங்க இருந்து ஏழு மைல் தொலைவுல இருக்கற மகாபலிபுரமும், கரையோரமா உள்ள அந்த கோவிலும் அந்த நாள்ல ஊருக்கு வெளிய ஒதுக்குப் புறத்துல இருந்தது. ஊரே மூழ்கிப் போகவும் ஊருக்கு வெளிய இருந்த கோவில் இப்ப கரையோரமா உள்ள கோவிலா மாறிடிச்சு.

    அகழ்வாராய்ச்சி செய்யற நம்ம மத்திய அரசோட துறை கடலுக்குள்ள இறங்கிப் பார்க்கலையா?

    ஏன் பார்க்காம...? பார்த்ததனாலேதானே ஒரு ஊரே கடலுக்குள்ள மூழ்கிக் கிடப்பது தெரிய வந்தது. ஆனா பல காரணங்களால ஆராய்ச்சியை தீவிரமா தொடரலை...

    அரசாங்கத்துக்கே அக்கறை இல்லாத ஒரு விஷயத்துல நாம மட்டும் ஈடுபடணுமா சார்...?"

    "அப்படி இல்ல... மூழ்கிப் போன ஊருக்கு பேர் முத்துக்கோட்டை. இது ஒரு காரணப் பேர். இந்த கடல் வெளியில பல்லவர்கள் காலத்து கடல் வாணிபம் ரொம்ப சிறப்பா நடந்திருக்கணும். அதுல முத்துக்கள்தான் சென்டர் அட்ராக்ஷன்.

    அந்தக் காலத்துல தங்கம் வைரத்துக்கு பிறகு பெரிய வாணிபப் பொருளா இருந்தது முத்துதான். அப்படிப்பட்ட முத்துக்களோட வியாபார பகுதியா அந்த ஊர் இருந்ததாலதான் முத்துக்கோட்டைங்கற பேர் வந்ததா நான் தெரிஞ்சுக்கிட்டேன்."

    சரி சார்... அந்த முத்துக் கோட்டையை நாம இப்ப இந்த கடலுக்குள்ள இறங்கி கண்டுபிடிக்கப் போறோமா சார்...

    ஆமாம்… கூடவே பல அதிசயமான உண்மை களையும்...

    அது என்ன சார்?

    "இந்தியாவோட கடல் எல்லைப் பகுதியோட நீளம் ஆறாயிரம் கிலோ மீட்டர். மகாராஷ்ட்ராவுக்கு மேல குஜராத்துல தொடங்கி இந்த பக்கமா ஒரிஸ்ஸா வரை நடுவுல கன்னியாகுமரிதான் கீழ் எல்லை. இவ்வளவு நீண்ட கடற்பகுதியில முத்துக் கோட்டைலதான் பெரிய அளவுல முத்து வியாபாரம் நடந்துருக்கு. எப்பவும் ஒரு பொருள் எங்க அதிகம் கிடைக்குமோ அங்கதான் அதுக்கான மார்க்கெட்டும் இருக்கும். அப்படிப் பார்த்தா முத்துக்கோட்டை மூழ்கின. இந்த கடற்பிராத்தியத்துல அந்த காலத்துல

    Enjoying the preview?
    Page 1 of 1