Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoru Seruppu Engey?
Innoru Seruppu Engey?
Innoru Seruppu Engey?
Ebook200 pages1 hour

Innoru Seruppu Engey?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சங்கர்லாலுக்கு அன்னம் என்ற பெண்ணிடம் இருந்து ஒரு கடிதம் வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் தன்னை சந்திக்கும் படியாக அந்த கடிதத்தில் இருக்கிறது. சங்கர்லால் அந்த இடத்திற்கு செல்வதற்குள் அன்னம் அங்கு இல்லை. சில நாட்களில் அன்னத்தின் காதலன் சலீம் காணாமல் போகிறான். இதை தொடர்ந்து சில கொலைகள் நடக்கின்றன. அன்னம், சலீம் காணாமல் போனதற்கும், நடக்கின்ற கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்? சங்கர்லால் எடுக்கும் அதிரடியான திருப்பங்கள் என்ன?

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136605835
Innoru Seruppu Engey?

Read more from Tamilvanan

Related to Innoru Seruppu Engey?

Related ebooks

Related categories

Reviews for Innoru Seruppu Engey?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoru Seruppu Engey? - Tamilvanan

    http://www.pustaka.co.in

    இன்னொரு செருப்பு எங்கே?

    Innoru Seruppu Engey?

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    "மதிப்பிற்குரிய சங்கர்லால் அவர்களுக்கு,

    இந்தக் கடிதம் உங்கள் கரத்தில் உரிய காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

    இன்று, வெள்ளிக்கிழமை இரவு சரியாக 11-10-க்கு என் வீட்டிற்கு வாருங்கள். தாம்பரத்தில் கனகசபைத் தெருவில், பதினெட்டாம் எண்ணுள்ள இல்லத்தில் மேல்மாடியில் இருக்கிறேன். நீங்கள் நேரில் வந்தால், ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதுடன், மாபெரும் குற்றவாளி ஒருவனைப் பிடிக்கவும் முடியும். அச்சம் தரும் சில உண்மைகளைத் தகுந்த சான்றுகளுடன் என்னால் தங்களுக்குத் தர முடியும்.

    காரை, தெருத் திருப்பத்திலேயே நிறுத்திவிட்டு நடந்து வாருங்கள். மாடிமேல் பச்சை விளக்கு எரியும். சரியாக 11-10க்கு வாருங்கள். கொஞ்சம் தாமதமானாலும் நிலை கெட்டுவிடும்! நீங்கள் வருவது ஒருவருக்கும் தெரியக்கூடாது! உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் ஏற்படலாம்! உங்களை நம்பி இருக்கும்,

    உங்கள் சகோதரி,

    அன்னம்"

    சங்கர்லால் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி பதினொன்று!

    வெளியே போய்விட்டு, மலைமீதேறி அப்போதுதான் களைப்புடன் காரில் வந்து இறங்கினார். அவருடைய களைப்பின் மிகுதியைப் புரிந்துகொண்ட மாது, தேநீர்க் கோப்பையுடன் எதிரில் வந்து நின்றான்.

    சங்கர்லால் அந்தக் கடிகாரத்தை மடித்துக் கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டு, மேசை அறையை இழுத்தார். உள்ளே பளபளத்துக் கொண்டிருந்த நீலநிறக் கைத் துப்பாக்கியை எடுத்து, அதனுள் ஆறு இரவைகளைப் போட்டு அடைத்து, மற்றொரு கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டார்.

    மாது, அச்சம் கலந்த பார்வையுடன் சங்கர்லாலைப் பார்த்தான். காலை ஆறு மணிக்குக் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற தம்பி, இரவு பதினொரு மணிக்குத்தான் பங்களாவிற்கு வந்தார். வந்தவர், கைத் துப்பாக்கியுடன் எங்கேயோ பரபரப்புடன் புறப்படுகிறாரே!

    மாது என்றார் சங்கர்லால்.

    மாது, தேநீர் கோப்பையை நீட்டினான்.

    சங்கரலால், கோப்பையை வாங்கி ஒரே மூச்சில் தேநீர் முழுவதையும் குடித்துவிட்டுக் காலிக் கோப்பையைக் கொடுத்தார்.

    மாதுவின் மனத்தைப் புண்படுத்தக் கூடாதே என்ற ஒரே எண்ணத்துடன்தான் சங்கர்லால் தேநீரை அப்போது குடித்தார் என்பதை அந்தக் கிழவன் புரிந்து கொண்டான். தேநீரை மெல்ல உறிஞ்சிக் குடிக்கும் அவர், எப்போதுமே இந்த மாதிரி ஒரே மூச்சில் குடித்ததை அவன் பார்த்ததில்லை. இந்திராவுடன் இரண்டு சொற்கள்கூடப் பேச நேரமில்லாமல் எங்கே இப்படிப் பறக்கிறார் என்று வியப்புமிகக் கொண்டான் மாது.

    சங்கர்லால், கைக்குட்டையால் வாயைத் துடைத்துக் கொண்டே, மாது, நான் விரைந்து வெளியே போகிறேன். எப்போது வருவேன் என்று சொல்லுவதற்கில்லை. இந்திராவைத் தொலைபேசியின் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும்படி சொல்லு. எந்த நேரத்தில் நான் கூப்பிட்டாலும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

    ஆகட்டும் தம்பி என்றான் கிழவன். அவன் உள்ளத்தின் எழுச்சியையும், மனத்தின் வேதனையையும் அறிந்திருந்த சங்கர்லால், அப்போது அவன் முகத்தைப் பார்க்காமல் விரைந்து போய்விட்டார்.

    மாது, சிலையைப் போல் அசைவற்று நின்றான். அப்போது அந்த அறைக்கு விரைந்து வந்தாள் இந்திரா.

    சங்கர்லாலைக் காணாமல் தவித்த அவளது கருவிழிகள் இரண்டும் மாதுவைப் பார்த்தன!

    மாது, தனது உதட்டைப் பிதுக்கி, இரு கைகளையும் விரித்து, எல்லாம் அந்தச் சகோதரியின் கடிதம் தான்! வந்ததும் வராததுமாகப் பறந்துவிட்டார். உங்களைத் தொலைபேசியின் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும்படி சொல்லிவிட்டுப் போகிறார் என்றான்.

    வெளியே கார் புறப்பட்டு விரைந்து மலையிலிருந்து இறங்கும் ஓசை கேட்டது.

    இந்திரா விரைந்து நடந்து கூடத்தைக் கடந்து தாழ்வாரத்தை அடைந்து பார்த்தாள்; சங்கர்லாலின் கார் மலையடிவாரத்திற்குப் போய்விட்டது. காரின் பக்கமிருந்த சிவப்பு விளக்கு மட்டும் கொஞ்சமாக ஒரு பகுதி தெரிந்தது.

    இந்திரா திரும்பி வந்து, தொலைபேசி இருக்கும் அறைக்குள் தொலைபேசிக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்தாள். அவள் கொட்டுக் கொட்டென்று விழித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதை மாது இரண்டு மூன்று முறை எட்டிப் பார்த்தான். பிறகு அவனும் வந்து வாயிற் படியின் அருகிலேயே தலையைச் சாய்த்தபடி உட்கார்ந்து விட்டான்.

    மாது என்று இந்திரா மிகக் கனிவுடன் கூப்பிட்டாள்.

    மாது, தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

    நீயும் ஏன் இங்கு வந்து உட்கார்ந்து கொண்டாய்? போய்ப்படுத்துக் கொள்வதுதானே? என்றாள் இந்திரா,

    மாது மெல்லச் சிரித்தான். தொலைபேசி மணி ஓசை செய்யும்போது நீங்கள் தூங்கிப்போய் விடுவீர்கள்! உங்களை எழுப்பவே நான் விழித்திருக்கின்றேன்! என்று அவன் சொன்னபோது, இந்திராவுக்குச் சிரிப்பு ஒன்று பிறந்தது!

    *****

    2

    சங்கர்லால் காரை நிறுத்தினார்.

    அவர் காரை நிறுத்தியவுடன் விளக்குகளை அணைத்துவிட்டார். அவர் கீழே இறங்க ஐந்து நிமிடங்கள் ஆயின. அந்த ஐந்தே நிமிடங்களில் அவர் -

    ஒரு கிழவராக மாறிவிட்டார்!

    மிகுந்த வயதானவர் என்றும் சொல்ல முடியாது. பார்ப்பவர்கள், சுமார் ஐம்பது வயது இருக்கும் என்று மதிப்பிடுவார்கள். ஐம்பது வயதானாலும், கட்டுத் தளராத உடலமைப்பைப் பார்ப்பவர்கள், உடல் வளர்ச்சியில் அவர் கருத்துக் கொண்டிருப்பவர் என்றே நினைப்பார்கள்.

    சங்கர்லால், காரைவிட்டு இறங்கியதும், கைக் கடிகாரத்தைப் பார்த்தார். மணி 11-20.

    அவ்வளவு விரைந்து வந்தபோதிலும் ஐந்து நிமிடங்கள் தாமதம்! உருவத்தை மாற்றுவதில் ஓர் ஐந்து நிமிடம் பறந்துவிட்டது! பத்து நிமிடங்கள் தாமதம்!

    சங்கர்லால் காரைப் பூட்டிவிட்டுத் தெருவிற்குள் நுழைந்தார்.

    தெருமுனையில், ‘கனகசபைத் தெரு’ என்ற பெயர்ப்பலகை இருந்தது. அவர் அதைப் பார்த்துவிட்டுச் சரியான தெருவிற்குத்தான் வந்திருக்கிறோம் என்ற உறுதியுடன் நடந்தார்.

    அவர் நடக்கும்போது, மெல்ல இருமிக்கொண்டே நடந்தார். அவர், தெருவின் இரு பக்கங்களிலும் பார்த்துக் கொண்டே சென்றார்.

    பதினெட்டாம் எண்ணுள்ள வீட்டை அவர் எளிதில் கண்டுபிடித்து விட்டார். அந்த வீட்டின் மாடியில் ஓர் அறையில் -

    பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பச்சை விளக்கைப் பார்த்ததும் நின்றார். அதுதான் பதினெட்டாம் எண்ணுள்ள வீடாக இருக்க முடியும் என்ற எண்ணத்துடன் மெல்ல நடந்து சென்று, வெளிக் கதவைப் பார்த்தார். அவர் தேடிவந்த வீடு அது!

    அந்தச் சிறிய வீட்டைச் சுற்றிலும் அழகான பூச்செடிகள் வளர்ந்திருந்தன. வீட்டின் சுற்றுப்புறத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தாம் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர் என்று சொல்லும்படி இருந்தது.

    வீட்டின் கீழே இருண்டு கிடந்தது.

    வெளித் தாழ்வாரத்திலிருந்து, மாடியில் போக மரப்பலகையினால் செய்யப்பட்ட படிக்கட்டுகள் தெரிந்தன. படிக்கட்டுப் பக்கத்தில் கொஞ்சம் விலகி, ஒரு கதவு தெரிந்தது. அது, வீட்டின் முன்புறக் கதவு. அந்தச் சிறிய வீட்டில், மாடிமேல் ஒருவரும் கீழே ஒருவரும் குடியிருப்பார்கள் போலிருக்கிறது என்று எண்ணினார் சங்கர்லால். கீழே இருந்த கதவு சாத்தப்பட்டுத் தாழிடப்பட்டிருந்தது. சங்கர்லால் அந்தக் கதவை மெல்லத் தள்ளிப் பார்த்து, தாழிடப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டார்.

    அவர் கிரேப் நடையன் அணிந்திருந்ததால், நடக்கும் போது கொஞ்சமும் ஓசை எழவில்லை. அவர், மரப்பலகையினால் கட்டப்பட்ட படிக்கட்டுகளில் ஏறியபோது, வெகு கவனத்துடன் பூனைபோல் மெல்ல ஏறிச் சென்றார். மாடியை அடைந்ததும் கதவைப் பார்த்தார்.

    கதவு பூட்டிக் கிடந்தது!

    சங்கர்லால் பூட்டை அழுத்திப் பார்த்தார். பிறகு, பக்கத்திலிருந்த சன்னல் வழியாகப் பார்த்தார். சன்னலின் உள்புறமிருந்த கண்ணாடிக் கதவுகள் சாத்தப்பட்டிருந்ததால் பச்சை விளக்கு எரிவது மட்டுமே தெரிந்தது. சன்னலுக்குப் போட்டிருந்தவை வெள்ளை வண்ணப் புகைக் கண்ணாடிகள், ஆகையால், விளக்கு வெளிச்சத்தைத் தவிர வேறு எதையும் பார்க்க... முடியவில்லை!

    சங்கர்லால் கதவருகில் காதை வைத்துக்கொண்டு கவனித்தார்.

    உள்ளே அமைதியாக இருந்தது. எந்தவித ஓசையும் வரவில்லை. சங்கர்லால் மூச்சுவிடும் ஓசையும், அடிக்கடி அவர் மெல்ல இருமும் ஓசையும் தாம் அவருக்கே கேட்டன!

    சங்கர்லால் அதே இடத்தில் நின்றபடி நான்கு புறமும் கவனித்தார். பிறகு, திரும்பிப் படிக்கட்டின் வழியே கீழே ஓசையின்றி இறங்கினார்.

    கீழே வந்ததும், தோட்டத்தில் இறங்கி, வீட்டின் பின்புறம் சென்றார். அவர் எதிர்பார்த்தபடியே, பின்புறமும் மாடிக்குச் செல்ல மரப்பலகைப் படிக்கட்டுகள் தெரிந்தன.

    அவர், அந்தப் படிகளில் அமைதியுடன் ஓசை இன்றி ஏறினார்.

    மாடியை அடைந்ததும் பின்புறமும் கதவைப் பார்த்தார். அந்தக் கதவிலும் -

    பூட்டுத் தொங்கியது!

    அந்தப் பூட்டையும் இழுத்துப் பார்த்தார். பிறகு, கால்சட்டைப் பையிலிருந்த கொத்துச் சாவியை எடுத்துப் பூட்டைத் திறக்க முயன்றார். மூன்றாவது சாவி -

    பூட்டைத் திறந்து விட்டது!

    சங்கர்லால் மெல்லக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்.

    அந்த வீடு. முற்றிலும் புதிய முறையில் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய அறை. அந்த அறையைச் சுற்றிலும் தாழ்வாரம். பெரிய அறையைச் சுற்றிலும் கண்ணாடிச் சன்னல்கள் இருந்தன. அவை எளிய கண்ணாடிகள். தாழ்வாரத்தைச் சுற்றிலும் அமைந்திருந்த சன்னல்களில் புகைக் கண்ணாடிகள் போடப்பட்டிருந்தன.

    அறைக்குள் எரிந்த பச்சை விளக்கின் வெளிச்சம், கண்ணாடிச் சன்னல் வழியாகப் பாய்ந்து வந்து தாழ்வாரத்தில் நன்றாகத் தெரிந்தது. தாழ்வாரத்தில், ஒரு பக்கம் குழாய் இருந்தது. அதற்குப் பக்கத்தில் சோப்பும் வாளியும் இருந்தன. அங்கே குடியிருப்பவர்கள், தாழ்வாரத்தில் இருக்கும் குழாயடியையே குளிக்கும் அறையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைத்தார், சங்கர்லால். தாழ்வாரத்திலிருந்து அறைக்குள் போக நேராக வழி இருந்தது. அந்தக் கதவு கொஞ்சமே சாத்தப்பட்டிருந்தது.

    சங்கர்லால் உள்ளே சென்றார். அந்த அறைக்குள், சுவரெல்லாம் பச்சை வண்ணம் பூசப்பட்டுப் பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்த அறைக்குள் -

    அன்னத்தைக் காணோம்!

    அந்த அறைக்குள் புகுந்தவுடனே...

    மல்லிகைப் பூவின் மணம் மூக்கைத் துளைத்தது! அந்த மணம், உண்மையான மல்லிகைப் பூவின் மணமல்ல! அது - மல்லிகைப் பூ சென்ட்!

    சங்கர்லால், கால்களை, அகல விரித்துவைத்து, கரங்களைப் பின்னால் கட்டியபடி நிமிர்ந்து நின்று, அந்த அறையை உற்றுக் கவனித்தார்.

    அறையின் ஒரு பக்கம், ஒற்றைக்கட்டில் இருந்தது. பளபளக்கும் வண்ணம் தேய்க்கப்பட்ட புதிய அந்தக் கட்டிலின் மேல் ஆறு அங்குல உயரமுள்ள கனமான மெத்தை போடப்பட்டிருந்தது. மெத்தையின் மேல் பூ வேலைப்பாடுகள் அமைந்த பச்சை வண்ணத் துணி விரிக்கப்பட்டிருந்தது. அந்தத் துணி, பாதி சரிந்து கீழே தொங்கியது. கட்டிலின் மேல் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் போடப்பட்டிருந்த இரு இலவம்பஞ்சுத் தலையணைகளும் ஒழுங்கின்றிக் கிடந்தன.

    கட்டிலுக்குப் பக்கத்தில், கீழே -

    துல்லியமான பச்சை வண்ணப் படவை ஒன்று அவிழ்த்துப் போடப்பட்டு கலைந்து கசங்கிக் கிடந்தது! கசங்கிய அந்தப் புடவையை இரண்டு நிமிடங்கள் உற்றுப் பார்த்தார் சங்கர்லால்.

    கட்டிலுக்கு எதிர் பக்கத்தில், ஒரு மூலையில் சிறிய மேசை ஒன்று

    Enjoying the preview?
    Page 1 of 1