Marma Theevu
By Tamilvanan
()
About this ebook
வங்காள விரிகுடா கடலின் அருகில், சென்னைக்கு மிகப் பக்கத்தில் சங்கர்லாலின் முல்லைவன எஸ்டேட் ஒரு விமானம் தரை இறங்கும் வசதியுடன் அமைந்துள்ளது. ஜப்பானிய அரசு அவருக்கு ஒரு விமானத்தையும் அதை இயக்க ஒரு பெண் விமானியையும் அளித்திருந்தனர். சங்கர்லாலும், மாணிக்கமும் விமானத்தில் கடலை சுற்றிவர முடிவு செய்து அந்த பெண் விமானியான யோகோ டானி-யுடன் கிளம்பி ஒரு தீவில் தரை இறங்குகின்றன. அங்கு நடக்கும் விபரீதமான விஷயங்களையும் மர்மங்களையும் சங்கர்லால் எப்படி சந்திகிறார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் இந்த நாவலை!
Read more from Tamilvanan
Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsMaraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsHello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Puyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Rating: 4 out of 5 stars4/5Cairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kai Mainthan Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsAandhai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Thupparikirar Rating: 0 out of 5 stars0 ratingsGenevavil Sankarlal Rating: 5 out of 5 stars5/5Berlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsUnna Koduthittan Uyirgalai! Rating: 0 out of 5 stars0 ratingsSimla Beauty Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMaruthamalai Saaralile Rating: 0 out of 5 stars0 ratingsTokyovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsKadalil Marmam Rating: 0 out of 5 stars0 ratingsYogasanam Kattru Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsMarma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thodathey Rating: 0 out of 5 stars0 ratingsIrul Rating: 0 out of 5 stars0 ratings
Related to Marma Theevu
Related ebooks
Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Kovur Koonan Rating: 5 out of 5 stars5/5Mandhira Mohini Rating: 5 out of 5 stars5/5Uyirin Vilai 10 Kodi Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsThittivaasal Marmam Rating: 5 out of 5 stars5/5Kaiyil Piditha Minnal Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Vaa Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 2 Rating: 5 out of 5 stars5/5Kanavu Paalam Rating: 0 out of 5 stars0 ratingsAdhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsThailand Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsSarppa Pali Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Muyandrean... Mudiyavillai! Rating: 5 out of 5 stars5/5Vanji Nagar Vanji Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Dhivya Roja Thottam Rating: 0 out of 5 stars0 ratingsIrave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Sowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsNodiku Nodi Rating: 0 out of 5 stars0 ratingsGhost Rating: 0 out of 5 stars0 ratingsOru Minnal… Oru Thendral… Rating: 5 out of 5 stars5/5Enge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsKaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsThamaraikulam Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Mayamaan Malai Rating: 0 out of 5 stars0 ratingsNana Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Marma Theevu
0 ratings0 reviews
Book preview
Marma Theevu - Tamilvanan
http://www.pustaka.co.in
மர்மத் தீவு
Marma Theevu
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
http://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
1
டாக்கியோவிலிருந்து சங்கர்லால் தன் குடும்பத்தினருடன் திரும்பி இந்தியாவுக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
சென்னைக்குப் பக்கத்தில், வங்காளக்குடாக் கடலின் ஓரமாகவே ஒரு மலையின் மீது அமைந்திருந்த முல்லைவன எஸ்டேட் பங்களாவில் மீண்டும் கலகலப்பு ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது.
சங்கர்லாலையும் அவர் மனைவி இந்திராவையும் அவர்களுடைய சிறு வயது மகன் கண்ணனையும் காணப் போலீஸ் அதிகாரிகளும் பத்திரிகை நிருபர்களும், நகரத்தில் குறிப்பிடத்தக்க பெரும் பெரும் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் வந்தார்கள். கண்ணன் சங்கர்லாலைப் போல இருக்கிறானா, இந்திராவைப் போல இருக்கிறானா என்று அடிக்கடி விவாதம் எழுந்தது. அழகிய துடிப்பான கண்ணன், ஒரு சாயலில் பார்க்கும் போது, குறிப்பாக, மூக்கையும் கண்களையும் பார்க்கும் போது இந்திராவைப் போல் இருந்தான். மற்றொரு சாயலில் பார்க்கும் போது, நடையிலும் சிரிப்பிலும் நெற்றி மீது வந்து விழுந்த சுருள் முடியையும் பார்க்கும்போது சங்கர்லாலைப் போல் இருந்தான்.
பத்திரிகை நிருபர்களும் புகைப்படக்காரர்களும் சங்கர்லாலையும் இந்திராவையும் புகைப்படங்கள் எடுத்தார்கள்.
ஆனால்,
கண்ணனை மட்டும் புகைப்படம் எடுக்க இந்திரா அனுமதிக்கவில்லை.
குடும்ப ஆல்பத்துக்காக கண்ணனை சங்கர்லாலும், இந்திராவும் மாணிக்கமும், கத்தரிக்காயும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் வெளியார்கள் எவரும் புகைப்படத்தைப் பத்திரிகையில் வெளியிடக்கூடாது என்று இந்திரா எண்ணியதால், கண்ணனின் புகைப்படம் கிடைக்காமல் பத்திரிகைக்காரர்கள் திணறினார்கள்! திண்டாடினார்கள்.
முல்லைவன எஸ்டேட் பங்களாவை சங்கர்லால் மேலும் புதுப்பித்து இப்போது மிக ஆரவாரமாகச் செய்திருந்தார். அவர், டோக்கியோவில் இருந்தபோதே பங்களாவில் இன்னும் பல மாறுதல்களைச் செய்து மிகவும் புதுமை பொலியச் செய்யப் புகழ் பெற்ற இஞ்சினீயர் ஒருவருடைய உதவியுடன் பங்களாவின் அமைப்பையே மாற்றிவிட்டார். இதற்காக அவர் இரண்டு மூன்று தடவை இரகசியமாகத் தனிப்பட்ட விமானம் ஒன்றில் இந்தியா வந்து போனது எவருக்கும் தெரியாது! இந்திராவுக்குக் கூடத் தெரியாது.
மலையின் மீதே விமானம் வந்து இறங்கத் தனிப்பட்ட விமான நிலையம் ஒன்று ஏற்கனவே இருந்தது. அதைக்கூட இப்போது மிகப் பெரிதாகச் செய்துவிட்டார். இரவு பகல் எந்த வேளையிலும் அங்கு விமானம் வந்து இறங்கலாம். புறப்படலாம். விமான தளத்தில் இரவைப் பகலாக்கும் விளக்கு ஒளி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பங்களாவில் இப்போது மாது, மாணிக்கம், மைனா, கத்தரிக்காய், மலையாளச் சமையற்காரன் ஆகியோர் அனைவரும் இருந்தார்கள்.
கத்தரிக்காய், முன்னைவிட இப்போது வளர்ந்திருந்தான். என்றாலும், அவனிடமுள்ள விளையாட்டுப் புத்தியும் குறும்புகளும் இன்னும் அவனிடம் அப்படியேதான் இருந்தன. ஜப்பானிலிருந்து கண்ணன் விளையாட சங்கர்லால் வாங்கிவந்திருந்த ஜப்பானியப் பொம்மைகளை வைத்துக் கண்ணனுக்குச் சிரிப்புமூட்டிக் கொண்டிருந்தான் கத்தரிக்காய்.
ஜப்பானிய அரசு, சங்கர்லால் டோக்கியோவில் இருந்த போது ஒரு புகழ் பெற்ற பாங்குக் கொள்ளைக் கூட்டத்தினரைப் பிடித்துக் கொடுத்ததற்காக நன்றி அறிவிக்கும் முறையில் விலை மிகுந்த ஜெட் விமானம் ஒன்றையும், ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட டோயோட்டா கார் ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார்கள்.
சிவப்பு நிற டோயோட்டா கார், பார்க்கச் சிறியதாக இருந்தது. பெட்ரோல் மிகமிகக்குறைவாகச் செலவாயிற்று. ஆனால், அதே நேரத்தில் அது மிக விரைவாகப் போயிற்று. மணிக்கு நூற்றைம்பது கல் விரைவில் போகும் தன்மையுடைய தனிச் சிறப்புக் கொண்ட அந்தச் சிறிய காரில் ஒரு குட்டி ரெப்ரிஜிரேட்டர், தொலைபேசி, வானொலிப்பெட்டி ஆகியவை இருந்தன. சங்கர்லாலுக்கென்று தனியாகச் செய்யப்பட்ட கார். கார் ஏர் இந்தியாவின் கார்கோ விமானத்தில் ஏற்றப்பட்டதால், சங்கர்லால் வந்த மறுநாளே அதுவும் வந்து சேர்ந்துவிட்டது.
சங்கர்லாலும் இந்திராவும் கண்ணனும் ஜப்பானிய அரசு பரிசாகக் கொடுத்த ஜெட் பர்ட் என்னும் விமானத்திலேயே வந்து சேர்ந்தார்கள். அந்த விமானத்தைப் பாதுகாப்புடன் கொண்டு வந்து சேர்க்க யோகோ டானி என்னும் பெண் விமானியை அனுப்பி இருந்தது ஜப்பானிய அரசு. இந்த யோகோ டானி, மிகவும் அழகிய பெண். இளமையும் இனிய எழிலும் கொண்டவள். இவ்வளவு இளம் வயதில் எப்படி இவ்வளவு பழக்கவழக்கம் மிக்க விமானியாக இருக்கிறாள் என்று சங்கர்லாலுக்கே வியப்பாக இருந்தது. அவருடைய ஆற்றலையும் அடக்கத்தையும் கண்டு வியந்த சங்கர்லாலும் இந்திராவும் அவளை இங்கேயே ஒரு வாரம் தங்கிப் போகும் படி கேட்டுக் கொண்டார்கள். அவளும் சரி என்று இருந்துவிட்டாள். முதல் மாடியில் ஓர் அறையில் அவள் தங்கியிருந்தாள். காலையில் எழுந்ததும், பங்களாவின் பக்கத்தில் இருந்த நீச்சல் குளத்தில் அவள் நிர்வாணமாக நீந்துவாள். பங்களாவில் மற்றவர்கள் எழுந்து கொள்வதற்குமுன் அவள் எழுந்து கொள்வாள். ஆகையால் அவள் நிர்வாணமாக நீந்துவது எவருக்கும் தெரியாது! ஜப்பானில் நீச்சல் குளத்தில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக சேர்ந்து குளித்தே பழக்கப்பட்டவர்கள். இங்கே வந்ததால் அந்தப் பழக்கம் போய் விடுமா?
மாசில்லா மனத்துடன் யோகோ டானி நிர்வாணமாகக் குளிப்பதை சங்கர்லாலின் பங்களாவுக்கு வெளியே காவல் காத்து நின்ற கான்ஸ்டபிள் தான் முதலில் பார்த்தார். அவன் புதியவன், ஏற்கனவே சங்கர்லாலின் பங்களாவில் காவல் இருந்த பொன்னன், ஹெட் கான்ஸ்டபிளாகி, அண்மையில் சப் இன்ஸ்பெக்டராக உயர்ந்து, மதுரைக்குப் போய் விட்டான். இப்போது வந்திருந்த புதிய கான்ஸ்டபிள் மிக வியப்புடன் யோகோ டானி நிர்வாணமாகக் குளிப்பதைப் பார்த்துவிட்டுத் தன் கண்களை மூடிக் கொண்டான். மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தவிக்கும் நிலை அவனுக்கு. உண்மையை எவரிடமாவது சொல்ல வேண்டும் என்று துடித்தான். இதற்குள் பங்களாவில் இருந்த பணியாட்கள் சிலர், அவள் நிர்வாணமாகக் குளிப்பதைப் பார்த்துவிட்டார்கள்.
கான்ஸ்டபிள், இந்த உண்மையை மெல்ல மாதுவிடம் சொன்னான்.
நாளைக்கும் அந்தப் பெண் இப்படி நிர்வாணமாகக் குளித்தால் மேலும் கூட்டம் கூடி விடும். சங்கர்லால் ஐயாவுக்குத் தெரிந்தால் உண்மையை ஏன் சொல்லவில்லை என்று என்னை மடக்கினால் என் வேலை போய்விடும்!
என்று கான்ஸ்டபிள் மாதுவிடம் வந்து முறையிட்டான்.
நீ இது பற்றித் துன்பம் கொள்ளாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்
என்றான் மாது.
அவன், சங்கர்லாலுக்குத் தேநீர் கொண்டு போய்க் கொடுத்த போது அவர் தனியாகவே இருந்தார்.
தம்பி! ஒரு பிரச்னை
என்றான் மாது.
என்ன மாது? அப்படி என்ன பிரச்னை?
என்றார் சங்கர்லால்.
அந்த ஜப்பான்காரி இங்கு வந்திருக்கிறாளே, அவள் பிரச்னை.
என்றான் மாது.
"அவளுக்கு என்ன உணவு வகைகள் பிடிக்கும், அவளுக்காக என்ன செய்ய வேண்டும் என்று திணறுகிறாயா? நம் ஊரில் தங்கி இருப்பதால் நாம் சாப்பிடும் உணவு