Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maruthamalai Saaralile
Maruthamalai Saaralile
Maruthamalai Saaralile
Ebook103 pages36 minutes

Maruthamalai Saaralile

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையின் நாயகி முல்லைநகை. அவளுக்காக வீட்டில் ஒரு கடிதம் காத்திருக்கிறது.

அக்கடிதத்தில் தாய்மாமனுக்கு உடல்நிலை சரி இல்லை என்றும் ஆகவே அவளை உடனே புறப்பட்டு வா என்று எழுதி இருந்தது.

இவளும் சொத்தின் மீது கொண்ட ஆசையினால் உடனே புறப்படுகிறாள்.

அதன் பின் அவளுக்கு சொத்து கிடைக்குமா? கிடைக்காதா?

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136605890
Maruthamalai Saaralile

Read more from Tamilvanan

Related to Maruthamalai Saaralile

Related ebooks

Reviews for Maruthamalai Saaralile

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maruthamalai Saaralile - Tamilvanan

    http://www.pustaka.co.in

    மருதமலைச் சாரலிலே

    Maruthamalai Saaralile

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கதவைத் திறந்ததும் கண்டாள்!

    வந்துவிட்டேன்

    தாணுப்பிள்ளை தவித்தார்!

    அவர் நல்லவர்!

    அன்பு இட்ட ஆணை!

    முதுகைத் தொட்ட கை!

    என்று கிடைக்கும் எனக்கு அமைதி?

    நள்ளிரவில் நடந்தது!

    இன்னும் என்ன நடக்குமோ?

    நடுக்கூடத்து நாடகம்!

    பெண்ணைப் பேதை என்கிறார்களே!

    வஞ்சனையிட்ட தீ!

    அறைக்குள்ளே கேட்ட முனகல்!

    விசாரணைக்குப் பிறகு?

    முல்லை நகைத்தது

    கதவைத் திறந்ததும் கண்டாள்!

    முழங்கைக்கு அருகே நழுவி வந்திருந்த கைப்பையிலிருந்த சாவியை எடுத்து அறைக் கதவைத் திறந்ததும்

    முல்லைநகை, கீழே கிடந்த கடிதத்தைக் குனிந்து எடுத்தாள். பிரித்தாள். படித்தாள்.

    வியப்பு விழிகளிலே வந்து, நெற்றி நரம்புகளிலே படிந்து இறுதியில், இன்னும் என் நினைவு இருக்கிறதா? என்று அவளைப் பேசவைத்தது!

    மீண்டும் ஒருதடவை அக்கடிதத்தின் வாக்கியங்களை விழிகளினாலேயே படித்தாள் அவள்.

    நிலை கொள்ளவில்லை. கெண்டை மீனைப் போல அறை முழுவதும் அழகாகத் துள்ளிவந்தாள், முல்லைநகை.

    எதிர்பாராத இடத்திலிருந்து வந்த கடிதம் அவளை என்ன பாடுபடுத்தியது! எப்படிப்பட்ட எண்ணச் சூழல்களைச் சுழற்றியது! அவளது இதயக் குளத்திலே

    அவளது மாமா உய்யவந்தார் அவளுக்கு எழுதியிருந்த கடிதத்திலே, ‘முல்லைநகை, உடனே புறப்பட்டு வா. உடல் நலம் குன்றிப் படுத்த படுக்கையில் நான் இருக்கிறேன். இனிப் பேச்சும் மூச்சும் ஒடுங்கும் நாள்களை நான் எண்ண வேண்டியவனாக இருக்கிறேன்! உன்னை இதுநாள்வரையில் பொருட்படுத்தாமல் இருந்த குறை அது எனக்கு ஏற்பட்ட கறை! அதைத் துடைக்கத் துடிக்கிறேன்! முல்லைநகை, உடனே வா! என்னிடம் எவ்வளவு பணம் இருந்து என்ன? இறுதி நாள்களில் அருகில் இருந்து ஆவன செய்ய எவருமில்லாததை இப்போது நான் உணருகிறேனம்மா! இதை மின்செய்தியெனக் கருதி விரைந்து வா!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    மாமாவின் மனம் இந்த அளவுக்கு மாறி, அதிலே புதுக்குரல் ஒலிப்பதைக் கண்டு முல்லைநகைக்கு அது வியப்பாகத் தான் இருந்தது!

    அன்னையற்ற தன்னை, அவர் இதுவரையில் நினைவில் கொண்டது இல்லை. ‘வலியச் சென்று ஆதரவை வேண்டி நின்ற பொழுதெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. உங்களுக்கெல்லாம் அள்ளிக்கொடுக்கவா பாடுபட்டுப் பணம் சேர்த்து வைத்திருக்கிறேன்?’ என்று கடுமொழி பேசி வெறுங்கையைக் கடைந்த தருமசீலராக அவர் விளங்கினார். அவரிடம் வெறுப்புக் கொண்ட முல்லைநகை தனி முயற்சியில் படித்து, தட்டெழுத்துத் தேர்வில் தேறி, ஓர் ஆங்கிலேயருக்கு உரிமையுடைய ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் தட்டெழுத்துக்காரியாகப் பணியாற்றி வந்தாள்.

    கைநிறைய ஊதியம். அவள் ஒருத்திதான். இருட்டுவதற்கு முன்னால் வீட்டுக்கு வந்துவிடலாம். பொழுதுபோக்க கதைப்புத்தகங்களும் வானொலிப் பெட்டியும் துணையாக இருந்தன. அப்படியும் பொழுதுபோகப் பிடிவாதம் பிடித்தால், குடியிருந்த வீட்டுக்காரரின் குழந்தைப் பட்டாளங்களுக்கு நடுவே புகுந்துவிட்டால் போதும்! முல்லைநகை, தனக்கு என்று இப்படி அமைத்துக்கொண்ட உலகில் தன் அழகையும் அதை உண்ண எவனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ என்ற ஏக்க மூச்சையும் மறந்துதான் இருந்தாள்!

    அந்தப் பொன்னுடலையும், வெடுக் வெடுக்கென்ற இன்சொல்லையும் வைத்துக்கொண்டிருந்த முல்லைநகை, தன்னை எந்த ஓர் ஆணழகனும் ‘முல்லை, கொஞ்சம் நில்லு’ என்று சொல்லுகிற தனிமைக்கு இடம் கொடுக்காமல் இருந்து வந்தாள். ஆனால்

    மாமாவிடமிருந்து ஒருநாளுமில்லாத திருநாளாக வந்திருந்த கடிதம் அவளைப் பயணம் புறப்படவே ஊக்கியது. சென்னையிலே இந்த வயதையும் வனப்பையும் வைத்துக்கொண்டு நீண்ட நாள்களுக்கு இப்படியே இருந்துவிட முடியாது. மாமாவின் மனம் மாறியிருக்கும் இத்தருணத்தில், அவர்

    இருந்துவரும் எஸ்டேட்டுக்குச் சென்றுவிடுவதுதான் சிறப்பு என்ற முடிவுக்கே முல்லைநகை வந்தாள். இருந்தாலும் அவள் மனத்திலே ஒரு மின்னல்

    மாமாவின் மனத்தை நம்பி வேலையை விட்டுப் போய் விடக்கூடாது. அவருக்கு உடல்நிலை தேறியவுடன் மனம் மிரண்டு திரும்ப விரட்டியடித்தால் அது வியப்புக்குரியது அல்ல என்று நினைத்த முல்லைநகை முப்பது நாள் விடுமுறை பெற்றாள், பயணம் புறப்பட்டாள்.

    தான் ஒருத்தியே மாமாவுக்கு நெருங்கிய உறவினள். அவரது வாழ்நாளுக்குப் பிறகு திரண்டு கிடக்கும் பெரிய எஸ்டேட்டுக்குத் தானே உடைமைக்காரி என்ற இன்ப நினைவு ஓட்டம், ஓடுகின்ற புகைவண்டி ஓட்டத்தோடு போட்டியிட்டது. அந்த உற்சாக உலுக்கலில் பயணத்துக்கு உறுதுணையாகப் பை நிறைய வாங்கித் திணித்து வைத்திருந்த பத்திரிகைகளை எடுத்துப் படிக்கும் ஆர்வம் கூட அவளிடம் ஊறவில்லை!

    ஒரே ஒரு நினைவு மட்டும் முல்லைநகைக்கு வந்தது. வந்ததும் வதனத்திலே ஒரு முல்லைநகை முறுவலித்தது. தினமும் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும் ஒரு முழம் மல்லிகைப் பூவை முக்கால் முழமாகத் தன் சின்னக் கையினால் அளந்து, தன்னிடம் விற்றுவிட்டுச் செல்லுகிற சிறுமி, பூட்டியிருக்கும் கதவைக் கண்டு ஏமாந்துபோவாளே என்று மட்டும் அவள் நினைத்தாள்! இந்த நினைவு, காரமாக அவள் மனத்திலே உறைத்தது.

    புகைவண்டி வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது வழியை விரட்டிக்கொண்டு!

    வந்துவிட்டேன்

    மருதமலை எஸ்டேட் மாளிகைக்குள் நுழைந்ததும்

    Enjoying the preview?
    Page 1 of 1