Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaidhi Number 811
Kaidhi Number 811
Kaidhi Number 811
Ebook179 pages49 minutes

Kaidhi Number 811

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மயிலைநாயகத்துக்குச் சொந்தமான கிரீன் ஹில்ஸ் எஸ்டேட்டை எங்கே திரும்பிப் பார்த்தாலும் பச்சைப்பசேலென்று தெரியும். அவருடைய மகன் இளவரசனை ஒரு விபத்தின் போது கைதி ஒருவன் காப்பாத்துக்கிறான். அவனது குறி எண் கைதி நம்பர் 811. அவன் பெயர் துரைப்பாண்டியன்.

நாள்கள் ஓடிக்கொண்டிருந்தன. மயிலைநாயகத்தின் மனத்தில் அந்த கைதியின் நினைவு நின்றுவிட்டது. மரண படுக்கையில் தன் மகள் மலர்விழியிடம் அந்த கைதியை வேலைக்கு வைத்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்.

ஆனால் மலர்விழிக்கு ஒரு கைதியை வேலைக்கு வைத்து கொள்ள பயமாக இருந்தது. பிறகு அரைமனதுடன் அவனை வேலைக்கு அமர்த்துகிறாள். அவனை அவள் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை முக்கியமாக மலர்விழியின் வருங்கால கணவன் சொல்லழகனுக்கு.

சொல்லழகன் அவளிடம் துரைப்பாண்டியானால் பல ஆபத்துக்கள் வரும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இளவரசன் மட்டும் துரைப்பாண்டியனை முழுமையாக நம்பினான். நாட்கள் கடந்தன. துரைப்பாண்டியன் பண்பிலும் நாகரிகத்திலும் வேளையிலும் அக்கறையிலும் குணத்திலும் சிறந்து விளங்கினான்.

மலர்விழிக்கு அது அச்சிரியமாக இருந்தது. எப்படி ஒரு கைதியால் சிறந்தவனாக இருக்க முடிகிறது என்று? அவன் என்ன குற்றம் செய்தான்? அதன் மர்மம் என்ன? கடைசியில் என்ன ஆயிற்று? தமிழ்வாணனின் விறுவிறுப்பான நடையில் படித்து ரசியுங்கள்.

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136605902
Kaidhi Number 811

Read more from Tamilvanan

Related to Kaidhi Number 811

Related ebooks

Reviews for Kaidhi Number 811

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaidhi Number 811 - Tamilvanan

    http://www.pustaka.co.in

    கைதி நம்பர் 811

    Kaidhi Number 811

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    1

    மயிலைநாயகத்துக்குச் சொந்தமான கிரீன் ஹில்ஸ் எஸ்டேட்டை எங்கே திரும்பிப் பார்த்தாலும் பச்சைப்பசேலென்று தெரியும். பல கல் தொலைவிற்கு விரிந்து பரந்து கிடந்த கிரீன் ஹில்ஸ் எஸ்டேட் அவருக்குச் செல்வத்தைச் சேர்த்துக் கொடுத்தது. கிரீன் ஹில்ஸ் எஸ்டேட்டில் விளையாத பொருள் இல்லை. காப்பிக்கொட்டை நிறையக் கிடைத்தது. தேக்குமரத் தோப்புகள் விரிந்து கிடந்தன. மலை இல்லாத பகுதிகளில் நெல், கோதுமை, கேழ்வரகு முதலியன பயிராகி வந்தன. எஸ்டேட்டைப் பல பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் ஏகப்பட்ட பேர்களை வேலைக்கு வைத்திருந்தார் மயிலை நாயகம்.

    மயிலைநாயகத்திடமிருந்து காப்பிக்கொட்டையை நிறைந்த அளவில் வாங்கிவந்த வெள்ளைக்காரர் ஒருவர், திடீரென்று எஸ்டேட்டுக்கு வந்தார். மயிலைநாயகம் மலையின் பக்கம் எங்கேயோ போயிருப்பதாகவும், தேக்கு மரங்களை அறுத்து ஆற்றில் போட்டு அந்த மரங்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்தப்படுவதைப் பார்வையிடப் போவதாகவும் அந்த வெள்ளைக்காரருக்குச் செய்தி எட்டியது.

    அவர், காரிலேயே மலையின் பக்கம் சென்றார்.

    ஒரு வழியாக வெள்ளைக்காரர், மயிலைநாயகத்தைக் கண்டுபிடித்தபோது, மயிலைநாயகம் மலைமேல் நின்று, வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களை யானைகள் தூக்கி ஆற்றில் போடுவதையும், ஆற்றில் போடப்பட்ட மரங்கள் மிதந்து ஆற்றுடன் போய்க்கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் அவருடைய பதினான்கு வயது மகன் இளவரசு நின்றுகொண்டிருந்தான். மயிலை நாயகத்துக்கு ஒரு பெண்ணும் ஒரு மகனும் இருந்தார்கள். பெண் மலர்விழி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். மகன் இளவரசு, மிகவும் செல்லப்பிள்ளை. கொஞ்சம் துடுக்கானவன். அவன், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ள முதலில் பிறந்தது ஆண்பிள்ளையாகப் பிறக்கவில்லையே என்ற கவலை அவருக்குக் கொஞ்சம் உண்டு.

    வெள்ளைக்காரர் தன்னுடைய அழகிய சிவப்புநிற மேல்நாட்டுக் காரை மலையடிவாரத்தில் நிறுத்திவிட்டு மலைமேல் ஏறிவந்தபோது இளவரசுதான் முதலில் அவரைப் பார்த்தான்.

    அப்பா அதோ பாருங்கள் என்றான் இளவரசன்.

    வெள்ளைக்காரரை வரவேற்றுப் பேச மயிலைநாயகம் அவரை நோக்கி விரைந்தார்.

    இளவரசு நழுவினான். அவனுக்குக் கார் என்றால் உயிர். அதுவும் மேல்நாட்டுக் கார் என்றால் விடமாட்டான். அவன் மெல்ல விரைந்து மலைச்சரிவைக் கடந்து அந்த அழகிய காரின் பக்கத்தில் போனான். புத்தம் புதிய கார். அந்தக் காரில் எங்குப் பார்த்தாலும் அவன் உருவம் பளிச்சென்று தெரிந்தது. ஜெர்மன் கார். வோல்க்ஸ்வாகன். விரைந்து செல்லும் மோட்டார் சைக்கிளைவிட, விரைந்து செல்லும் கார் அது. இளவரசு பெரியவனானதும் இப்படிப்பட்ட ஒரு ஜெர்மன் காரைத்தான் வாங்கவேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால் அவன் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள அவன் தந்தை அவனை அனுமதிக்கவில்லை. காரோட்டியிடம் கெஞ்சிக் கேட்டு அவனாகத் திருட்டுத்தனமாகக் காரை எப்படி ஓட்டுவது என்று கொஞ்சம் தெரிந்துவைத்துக் கொண்டிருந்தான்.

    வோல்க்ஸ்வாகன் பூட்டப்படாமல் இருந்தது. இளவரசு உள்ளே எட்டிப்பார்த்தான். கார்ச்சாவியும் உள்ளே தொங்கிக் கொண்டிருந்தது. அவனுக்கு உடனே அந்தக் காரை எடுத்து ஓட்டவேண்டும் என்று தோன்றியது. அவன் ஆவலை அவனால் அடக்க முடியவில்லை.

    மலையின் மேல் பார்த்தான். மயிலைநாயகம் வெள்ளைக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் அப்படி இப்படித் திரும்பவில்லை.

    இளவரசு காரில் ஏறி உட்கார்ந்தான். சாவியைத் திருப்பி அதை ஸ்டார்ட் செய்தான். புலியைப்போல உறுமியது கார். இளவரசு தன்னையும் மறந்து காரைச் செலுத்தினான். அது புலியைப் போலவே பாய்ந்தது!

    எடுத்த எடுப்பிலேயே விரைவாகச் சென்றதால், அந்தக் கார் ஓடியபோது விமானத்தில் போவதைப்போல் இருந்தது. கார் காற்றாய்ப் பறந்தபோது -

    ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்த வெள்ளைக்காரரும், மயிலைநாயகமும் கூச்சல் போட்டார்கள்!

    கார் நிற்கவில்லை.

    எஸ்டேட்டில் வேலை செய்தவர்களைப் பார்த்துக் கூச்சல் போட்டார் மயிலைநாயகம். மரங்களை வெட்டும் இலாகாவில் ஜீப் ஒன்று இருந்தது. அதை எடுத்துக்கொண்டு சிலர் புறப்பட்டார்கள்.

    இளவரசு ஓட்டிச்சென்ற கார் பக்கத்திலிருந்த மலையின் மீது ஓடத்தொடங்கியது. அச்சம் கொடுக்கும் வகையில் இளவரசு காரை ஓட்டினான். மிகவும் விரைவாகச் செலுத்தினான். மிகவும் விரைவாகச் செலுத்தி மலைச்சரிவில் காரைத் திருப்பியபோது -

    கார் உருண்டது!

    மிக உயரத்திலிருந்து கார் உருண்டு விழுந்தபோது அது தீப்பிடித்துக் கொண்டது.

    கார் கீழே வந்து விழுந்தபோது, காரைத் தீ சுற்றிக் கொண்டதால் ஜீப்பில் போனவர்களும் மற்றவர்களும் காரை நெருங்கி இளவரசைக் காப்பாற்றத் துணியவில்லை!

    இதையெல்லாம் மலை மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த மயிலைநாயகம் மலையிலிருந்து உருண்டு விழப்போனார். நல்லவேளையாக வெள்ளைக்காரர் அவரைப் பிடித்துக் கொண்டார்!

    அதே நேரத்தில் கொஞ்சமும் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

    கார் உருண்டுவிழுந்த இடத்துக்குப் பக்கத்து மலைச் சரிவில் சேலம் சிறையைச் சேர்ந்த சில கைதிகள் கற்களை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் கைதி நம்பர் 811. அவன், கார் விழுந்த இடத்தை நோக்கி ஓடினான். அவன் இளைஞன்; துடுக்கானவன். எல்லோரும் தொலைவில் நின்று தீப்பிடித்த காரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கைதி நம்பர் 811 துணிந்து பாய்ந்தான். தீப்பிடித்த காரின் கதவைத் திறந்துகொண்டு, உள்ளேயிருந்த இளவரசை இழுத்து வெளியே கொண்டுவந்து போட்டபோது -

    கைதியின் உடல் முழுவதும் தீப்பிடித்துக்கொண்டது.

    அப்போதும் அவன் மாபெரும் வீரனைப்போல் இளவரசுவைக் கீழே மண்ணில் கிடத்திவிட்டுக் கீழே மண்ணில் புரண்டான். இதற்குள் வேறு சில கைதிகள் ஓடிவந்தார்கள். கோணிப்பை ஒன்றைத் தீப்பிடித்த கைதியின் மீது போட்டுச் சுருட்டித் தீயை அணைத்தார்கள்.

    கார் கருகி வெடித்துச் சிதறியது.

    இளவரசு லேசான காயங்களுடன் தப்பினான்.

    உடம்பு முழுவதும் தீயினால் புண்ணாகித் தவித்த கைதியை மற்றக் கைதிகள் தூக்கிப் போய் அவர்கள் வந்த வேனில் போட்டார்கள்.

    இலேசாக அடிபட்ட இளவரசையும் வேனில் போட்டார்கள்.

    வேன் மருத்துவ விடுதியை நோக்கிப் பறந்தது!

    இதையெல்லாம் மலையின்மீது நின்றபடியே மயிலை நாயகம் பார்த்துக் கொண்டிருந்தார். வெள்ளைக்காரர் அவரைப் பிடித்துத் தாங்கிக்கொண்டார்.

    2

    நாள்கள் ஓடிக்கொண்டிருந்தன.

    கைதி நம்பர் 811, துணிந்து பாய்ந்து, தீப்பற்றிய காரிலிருந்து இளவரசைக் காப்பாற்றிய காட்சி மயிலைநாயகத்தின் மனத்தில் அப்படியே பதிந்து நின்றுவிட்டது.

    அந்தக் காட்சியை அவரால் மறக்கவே முடியவில்லை!

    மயிலைநாயகத்தின் மகள் மலர்விழி, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு எஸ்டேட்டிலேயே வந்து தங்கிவிட்டாள். அழகும் அறிவும் மிகுந்த மலர்விழிக்கு மணம் செய்துவைக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார் மயிலைநாயகம். மாப்பிள்ளை தேடும் பொறுப்பை மயிலைநாயகத்துக்கு வைக்கவில்லை மலர்விழி. பக்கத்து எஸ்டேட்டின் சொந்தக்காரரான நெடுங்கிள்ளியின் மகன் சொல்லழகன் அவள் மனத்தைக் கவர்ந்துவிட்டான்!

    சொல்லழகன், எல்லா வகையிலும் திறமைசாலி. அவன் கொஞ்ச ஆண்டுகள் விமானியாகப் பணியாற்றி வந்தான். நெடுங்கிள்ளிக்கு உடம்பு சரியில்லை. எஸ்டேட்டைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வந்ததும் விமானி வேலையை ராஜினாமா செய்துவிட்டு எஸ்டேட்டுக்கு வந்துவிட்டான். நெடுங்கிள்ளியின் ஒரே மகன்

    Enjoying the preview?
    Page 1 of 1