Police Koopidungal!
By Tamilvanan
()
About this ebook
போலீசை கூப்பிடுங்கள் என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் பல்வேறு குற்றங்களை பல்வேறு விதங்களில் துப்பறிகிறார்கள். ஒவ்வொரு கதையும் திகிலுடனும், எதிர்பார்ப்புடனும் உள்ளது. வாங்க நாமும் துப்பறிந்து போலீசை கூப்பிடலாம்...
Read more from Tamilvanan
Maraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsHello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Rating: 4 out of 5 stars4/5Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kai Mainthan Rating: 0 out of 5 stars0 ratingsCairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsBerlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Karunaagam Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsKarugiya Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsTokyovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsPidi 22 Rating: 5 out of 5 stars5/5Meenazhagi Rating: 0 out of 5 stars0 ratingsOtrai Kann Manithan Rating: 0 out of 5 stars0 ratingsS.S.66 Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Nila Rating: 0 out of 5 stars0 ratingsChina Ottrargal Rating: 0 out of 5 stars0 ratingsNarpathinayiram Roobai Rating: 0 out of 5 stars0 ratingsMarma Manithan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Police Koopidungal!
Related ebooks
Iranthavan Pesukirean! Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5நிலவைத் தேடும் சூரியகாந்திகள் Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Sooriyagandhigal Rating: 5 out of 5 stars5/5Oru Nalliravin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Arugil Varum Rating: 0 out of 5 stars0 ratingsIthuthan Kaadhal Enbathaa! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire… Rating: 0 out of 5 stars0 ratingsAugust Athirchi and Vithi Vithikkiren Rating: 0 out of 5 stars0 ratingsUyir Painkili Rating: 0 out of 5 stars0 ratingsKann Malargalil Azhaipithazh Rating: 0 out of 5 stars0 ratingsKai Veesum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Sathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsPena Thirudan Rating: 5 out of 5 stars5/5Dhik Dhik Thilaga Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru Rating: 0 out of 5 stars0 ratingsPalinginaal Oru Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsElithu Elithu Kolvathu Elithu Rating: 5 out of 5 stars5/5எளிது எளிது கொல்வது எளிது..! Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsUllathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5En Vaniley Ore Vennila Rating: 0 out of 5 stars0 ratingsPolice Vesham Rating: 0 out of 5 stars0 ratingsUllam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsUllathil Nalla Ullam Rating: 0 out of 5 stars0 ratingsThee... Deepa... Deepavali Rating: 5 out of 5 stars5/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Kolaikaara Kaathalan and Saranam Un Madiyil Rating: 0 out of 5 stars0 ratingsAugust Athirchi Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for Police Koopidungal!
0 ratings0 reviews
Book preview
Police Koopidungal! - Tamilvanan
https://www.pustaka.co.in
போலீசைக் கூப்பிடுங்கள்!
Police Koopidungal!
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
https://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. போலீசைக் கூப்பிடுங்கள்!
2. கழுத்தைப் பிடித்த கை
3. குதிரைப் பந்தயம்
4. தண்ணீரில் கண்ணீர்
5. சொல்லப்போகிறாயா, இல்லையா?
6. விருந்து வை!
7. ஆசை அழிக்கும்
1. போலீசைக் கூப்பிடுங்கள்!
1
கார் ஓடிக்கொண்டிருந்தது. காரை வையாபுரி ஓட்டிச் சென்றான். அவனுக்குப் பக்கத்தில் அவன் தங்கை இந்திரா உட்கார்ந்து கொண்டிருந்தாள். வையாபுரி, காரை ஒட்டிக்கொண்டே இந்திராவின் முகத்தைப் பார்த்தான். அவள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்துகொண்டிருந்தது.
வையாபுரி மெல்லச் சிரித்துக்கொண்டே, இந்திரா, அப்பாவைச் சரிக்கட்டி வைரப் பதக்கம் வாங்கிக்கொள்ள அனுமதி பெற்றுவிட்டாய். வைரப் பதக்கம், என்ன விலை ஆகும் தெரியுமா? பத்தாயிரத்துக்குக் குறையாது! நான் எதையாவது வேண்டுமென்று கேட்டால் மட்டும் அப்பா எரிந்து விழுகிறார்
என்று பொருமினான்.
உனக்குத்தான் அப்பா ஒரு கார் வாங்கிக் கொடுத்தாரே! இன்னும் என்ன? காரின் விலை பத்தாயிரம் ஆகவில்லையா?
என்று கேட்டாள் இந்திரா.
காரை நான் கழுத்திலேயா கட்டிக்கொண்டிருக்கிறேன்?
என்று கேட்டான் வையாபுரி.
வேண்டுமென்றால் நீயும் ஒரு பதக்கம் வாங்கிக் கழுத்திலே மாட்டிக்கொள்ளேன்! உனக்காக நான் அப்பாவிடம் சண்டை போட்டு வாங்கித் தருகிறேன். அப்பா வாங்கித் தராவிட்டால் என் பதக்கத்தையே உன் கழுத்தில் மாட்டிவிடுகிறேன்
என்று சொல்லிவிட்டுக் கொல்லென்று சிரித்தாள் இந்திரா.
வையாபுரி மெல்லச் சிரித்துக்கொண்டே காரை ராமசாமித் தெருவுக்கு ஓட்டினான். இரண்டு நிமிடங்களில் இஞ்சினீயர் வரதராசன் பங்களா வந்துவிட்டது. இஞ்சினீயரின் பங்களாவின் முன் கார் நின்றது.
காரிலிருந்து வையாபுரியும், இந்திராவும் இறங்குவதற்குள் இஞ்சினீயரும், அவர் மகள் சாந்தகுமாரியும் அவர்கள் பங்களா வராந்தாவுக்கு வந்துவிட்டார்கள்.
இஞ்சினீயர், வையாபுரியை வரவேற்று, ஒரு சோபாவிலே உட்கார வைத்தார்.
சாந்தகுமாரி, இந்திராவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பங்களாவுக்குள் ஓடிவிட்டாள் அரட்டையடிக்க.
வையாபுரி, இஞ்சினீயரிடம் சிரித்துக்கொண்டே சொன்னான். சாந்தகுமாரியும், இந்திராவும் தோழிகளாக இருப்பது எங்களுக்கு ஆபத்தாக இருக்கிறது! இருவரும் காலேஜுக்குப் போகும்போது, ஒரே மாதிரி உடைகளை அணிந்து செல்லுகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் ரிப்பன் முதல், செருப்பு வரையில் ஒரே மாதிரி இருக்க வேண்டுமாம்! சாந்தகுமாரி ஏதாவது புது ஆடை வாங்கினால், உடனே. இந்திரா அதே நிறத்தில் அதே ஆடை வேண்டுமென்கிறாள், இப்போது நீங்கள் சாந்தகுமாரிக்கு வைர மயில்பதக்கம் ஒன்று செய்யச் சொல்லியிருப்பதாகவும், அதே மாதிரி, தனக்கு ஒன்று வேண்டும் என்றும் தொந்தரவு செய்கிறாள் இவள்.
இஞ்சினீயர் சிரித்துக்கொண்டே சொன்னார்; அறியாத பெண்கள் அவர்கள். இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே! அவள் கேட்டதை வாங்கிக் கொடுக்கச் சொல்லு!
எந்தக் கடையில் நீங்கள் வைரப் பதக்கம் செய்ய ஆர்டர் கொடுத்திருக்கிறீர்கள்?
என்று கேட்டான் வையாபுரி.
இஞ்சினீயர் சொன்னார். ராம்ஜி சேட் கடையில்தான் ஆர்டர் கொடுத்திருக்கிறேன். சரியாகப் பத்தாயிரம் ரூபாய் ஆகிறது. இன்னும் நான்கு நாள்களில் தருவதாகச் சொன்னான்.
இதற்குள் இந்திராவும் சாந்தகுமாரியும் வந்தார்கள்.
வையாபுரி, இஞ்சினீயரிடம் விடைபெற்றுக்கொண்டு அவன் தங்கை இந்திராவுடன் காரில் ஏறி உட்கார்ந்தான்.
கார், ராம்ஜி சேட் கடையை நோக்கிப் பறந்தது.
2
நான்காம் நாள். பிற்பகல், அன்றுதான் ராம்ஜி சேட் மயில்பதக்கம் தருவதாக வையாபுரியிடம் சொல்லியிருந்தார். வையாபுரி, ஏதோ வேலையாக எங்கேயெல்லாமோ சுற்றிவிட்டு, நேராக ராம்ஜி சேட் கடையின் முன்பு காரைக் கொண்டு போய் நிறுத்தினான்.
ராம்ஜி சேட், அவனை வரவேற்று உட்கார வைத்தார். உங்கள் பதக்கம் அருமையாக அமைந்துவிட்டது! யாருக்குமே இந்த மாதிரி அமைந்ததில்லை
என்றார் சேட்.
வையாபுரி மெல்லச் சிரித்து, பதக்கத்தைக் காட்டுங்கள், பார்க்கலாம்,
என்றான்.
ராம்ஜி சேட் இரும்பு அலமாரியைத் திறந்து, வெல்வெட் பெட்டி ஒன்றை வெளியே எடுத்தார். அதை வையாபுரியிடம் நீட்டினார்.
வையாபுரி பெட்டியைத் திறந்து பார்த்தான். பதக்கம் கண்ணைப் பறித்தது. அவன் இதுவரையில் அந்த மாதிரிப் பதக்கத்தையே பார்த்ததில்லை. அவன் பெட்டியை மூடி எடுத்துக்கொண்டு, பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
காரில் ஏறி உட்காருவதற்கு முன், சிறிது நேரம் ஏதோ தீவிரமாக யோசனை செய்தான். பிறகு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே உட்கார்ந்தான். கார் புறப்பட்டு வேகமாக ஓடியது.
3
சுமார் இருபது நிமிடங்களுக்குப் பின், கார், கடற்கரையின் ஓரமாக இருந்த சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.
வெயில் அதிகமாக இருந்ததால், கடற்கரை ஓரமாக ஜன நடமாட்டமே இல்லை.
வையாபுரி, காரை நிதானமாக ஓட்டிச் சென்றான். சரியாக இருபது மைல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது கார்.
வழியில், சாலையில் எவனோ விழுந்து கிடந்தான். தார் போட்ட சாலையில், வெயில் வேளையில் எவன் விழுந்து கிடக்கிறான் என்று பார்த்தான் வையாபுரி. அவன் எழுந்துகொண்டால்தான் கார் போகமுடியும். சாலை அங்கே குறுகி இருந்தது. அவன் ஹாரன் அடித்துப் பார்த்தான். விழுந்திருந்தவன் எழுந்திருக்கவில்லை.
வையாபுரி, காரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினான். படுத்துக் கிடந்தவனின் அருகில் சென்று பார்த்தான்.
கீழே கிடந்தவன், வாட்டசாட்டமாக இருந்தான், அவன் மீசையை முறுக்கிவிட்டிருந்தவிதம் வையாபுரிக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. வையாபுரி அவனை எழுப்புவதற்காக மெல்லக் குனிந்தான்.
அப்போது, திடீரென்று அந்த மனிதன் துள்ளி எழுந்தான், அவன் கையில் கூர்மையான பிச்சுவாக் கத்தி ஒன்று பளபளத்தது.
இதோ பார், பக்கத்தில் வந்தால் படாரென்று போட்டுவிடுவேன், அங்கேயே நில்
என்று சொல்லிக்கொண்டே காரின் அருகில் சென்றான் அந்த ஆசாமி.
காரின் முன்ஸீட்டில் வெல்வெட் பெட்டியிருந்தது. அதை அந்த மனிதன் குனிந்து மற்றொரு கையில் எடுத்தான்.
இந்தச் சமயத்தில், வையாபுரி வலக்காலால் ஓங்கி ஓர் உதைவிட்டான். எதிரியின் கையிலிருந்த பிக்சுவாக் கத்தி மணலில் போய் விழுந்துவிட்டது.
மீசைக்காரன், வெல்வெட் பெட்டியுடன் கத்தியை எடுக்க ஓடினான். வையாபுரி எதிர்பாராதவிதமாக மற்றோர் உதைவிட்டான். வெல்வெட் பெட்டி, காரின் அருகில் விழுந்தது. மீசைக்காரன் மணலில் விழுந்தான்.
அவன் எழுந்துகொள்வதற்குள், வையாபுரி ஓடிபோய்க் கத்தியை எடுத்தான்.
அப்படியே நில்
என்றான் வையாபுரி, அவனிடம் கத்தியைக் காட்டிக்கொண்டே.
மீசைக்காரன் குபீரென்று கீழே குனிந்து மண்ணை வாரிவிட்டான் அவன்மேல்.
வையாபுரியின் கண்களில் மணல் பாய்ந்ததும், அவன் கத்தியைப் போட்டுவிட்டுக் கண்களைக் கசக்க ஆரம்பித்தான். ஐந்து நிமிஷங்கள் கழித்துத்தான் அவனால் கண்களைத் திறக்க முடிந்தது.
அவன் கண்களைத் திறந்து பார்த்தபோது, எதிரே மீசைக்காரனைக் காணோம்! அவன் எப்படிப் போனானோ? வெல்வெட் பெட்டியையும் கத்தியையும் கூடவே கொண்டு போய்விட்டான், அந்த மீசைக்காரன்.
வையாபுரி காரில் ஏறி உட்கார்ந்து. பங்களாவை நோக்கிச் சென்றான். அவன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார் செய்யப் போகவேயில்லை!
4
மாலை ஏழு மணி ஆகிவிட்டது. ராம்ஜி சேட் கடையின் முன் காரை நிறுத்தினான் வையாபுரி. வெளியே இஞ்சினீயரின் கார் நிற்பதை அவன் பார்த்தான்.
அவன் உள்ளே நுழைவதற்கும், இஞ்சினீயர் வெல்வெட் பெட்டியுடன் வெளியே புறப்படுவதற்கும் சரியாக இருந்தது.
பதக்கம் வந்துவிட்டதா? காட்டுங்கள், பார்க்கலாம்.
என்று சொல்லிக்கொண்டே இஞ்சினீயருக்கு எதிரில் சென்றான் வையாபுரி.
இஞ்சினீயர் வெல்வெட் பெட்டியை அவனிடம் கொடுத்தார்.
இதற்குள் அங்கு வந்த ராம்ஜி சேட், உங்களுக்குக் கொடுத்த மாதிரியேதான் அவருக்கும் செய்துகொடுத்தேன்
என்றார் சிரித்தபடி.
வையாபுரி, வெல்வெட் பெட்டியைத் திறக்காமலே. இதில் இருப்பது இமிடேஷன் வைரப் பதக்கம்!
என்றான்.
என்ன... என்ன?
என்று கத்தினார் இஞ்சினீயர்.
நீங்கள் சரியாகப் பார்த்திருக்கமாட்டீர்கள். உற்றுப்பார்த்தால்தான் தெரியும்!
என்று சொல்லிக்கொண்டே பெட்டியை வெளிச்சத்தில் திறந்து காட்டினான் அவன்.
உள்ளே, இமிடேஷன் பதக்கந்தான் கிடந்தது!
வையாபுரி சொன்னான்: "இதில் இருப்பது இமிடேஷன் பதக்கம் என்று சேட்டுக்குக்கூடத் தெரியாது! தெளிவாகச் சொல்கிறேன், கேளுங்கள், நான் பதக்கம் செய்ய ஆர்டர் கொடுத்தபோது, நான்கு நாள்களில் கொடுப்பதாகச்