Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meenazhagi
Meenazhagi
Meenazhagi
Ebook98 pages37 minutes

Meenazhagi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாதி உடல் பெண்ணாகவும், பாதி உடல் மீனாகவும் இருக்கும் கடல் கன்னி மனிதர்களுடன் வாழ ஆசைபடுகிறாள். அந்த நாட்டு இளவரசரை சந்திந்து, இளவரசருடன் மாளிகை செல்கிறாள். இளவரசன் அவளை மிகவும் நேசிக்கிறான். அந்த நாட்டில் திடீரென்று ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் மீனழகியும், இளவரசரும் நாட்டை விட்டு சென்றுவிடுகிறார்கள்.

அங்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? மீனழகியும், இளவரசரும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வந்தார்களா? இவருடைய வாழ்க்கையிலும் ஏற்படும் பல்வேறு வகையான திருப்பங்கள்... தொடர்ந்து படியுங்கள்.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580136607062
Meenazhagi

Read more from Tamilvanan

Related to Meenazhagi

Related ebooks

Reviews for Meenazhagi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meenazhagi - Tamilvanan

    https://www.pustaka.co.in

    மீனழகி

    Meenazhagi

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தான், அலைகிறதே என் மனம்

    குளம்பொலி கேட்டது குதிரை வந்தது

    உங்கள் கள்ளமில்லாத உள்ளம்

    நாடெல்லாம் எட்டியது!

    முடியா? முத்தழகியா?

    இதயத்தில் ஏது இடம்?

    என்னை விட்டு ஏன் பிரிந்தாய்?

    போகத்தான் போகிறாயா?

    கதை சுருக்கம்:

    பாதி உடல் பெண்ணாகவும், பாதி உடல் மீனாகவும் இருக்கும் கடல் கன்னி மனிதர்களுடன் வாழ ஆசைபடுகிறாள். அந்த நாட்டு இளவரசரை சந்திந்து, இளவரசருடன் மாளிகை செல்கிறாள். இளவரசன் அவளை மிகவும் நேசிக்கிறான். அந்த நாட்டில் திடீரென்று ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் மீனழகியும், இளவரசரும் நாட்டை விட்டு சென்றுவிடுகிறார்கள். அங்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? மீனழகியும், இளவரசரும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வந்தார்களா? இவருடைய வாழ்க்கையிலும் ஏற்படும் பல்வேறு வகையான திருப்பங்கள்... தொடர்ந்து படியுங்கள்.

    அத்தான், அலைகிறதே என் மனம்

    இருட்டு இன்னும் இருந்துகொண்டிருந்தது. எப்போது விடியப் போகிறது என்ற ஏக்க மூச்சுகளுக்கு நடுவே மெல்லத் தலையைத் தூக்கினாள் அவள். விழிகள் சுழன்றன. வெளியே பார்த்தன. வெறுப்பை வாரிக் கொட்டின.

    எங்கும் கவிந்திருந்த இருளே தெரிந்தது. ஓவென ஓலமிடும் கடலலைகள் மட்டும் அவளுக்கு இரக்கம் காட்டுவனபோல எழும்பி எட்டிப்பார்த்தன.

    அவளுக்கு அந்த மீனவளுக்கு எத்தனை துன்பம்! மூன்று நாள்களாகப் பட்டினியால் வாடுகிறோமே என்ற குறை. இப்படி ஒரு நாளைப்போலத் தன் கணவன் வலையைத் தோளில் தொங்கப் போட்டுக்கொண்டு வெறுங்கையுடன் திரும்பி வருகிறானே என்று குறை. இப்படி உணவின்றி, அதனால் உறக்கமின்றி வாடிவதங்குவதும் ஒரு வாழ்வா என்று குறை!

    ஆனால், கடல் அலைக்கு என்ன குறை? அது -

    ஏன் ஓலமிடுகிறது இப்படி? ஏன் எழும்பி ஏதோ கூறத் துடிப்பதுபோல வருகிறது? ஏன் அமைதிகொண்டு உறங்கவில்லை அது!

    மீனவள் இப்படியும் அப்படியும் புரண்டு படுத்தாள். கடலிலிருந்து கிளம்பி வந்த குளிர் வாடை, அவள் குடிசையின் முன் பக்கத்திலிருந்த தட்டிக்கதவின் மேல் உரசிவிட்டுச் சென்றது.

    அவளுக்கு அருகே படுத்திருந்த கணவனிடம் அத்தான், தூக்கமா? என்று மெலிந்த குரலில் கேட்டாள், அந்த மீனவள்.

    குரலிலே வலிமை இல்லை, வருத்தம் இருந்தது.

    தூக்கமா, ஏது? நான் தூங்கி மூன்று நாள்களுக்கு மேலாகிறது! என்று அவள் கணவன் சொல்லிவிட்டு, உட்கார்ந்து கொண்டே, தன் இரு முழங்கால்களையும் இறுகச் சேர்த்துக் கட்டிக்கொண்டான். அவன் குரல் -

    அதுவும் மங்கித் தேய்ந்திருந்தது.

    இருட்டு. அந்த இருட்டில், இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக்கொள்ள முடியாமல், வேதனைக் குரலை வெளிப்படுத்திப் பேசத்தொடங்கினார்கள்.

    மீனவள் சொன்னாள்: அத்தான், இனி என்னால் பசி பொறுக்க முடியாது. பட்டினி கிடக்க முடியாது. உன் முகத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. பொழுது விடிந்தவுடன் எப்படியாவது வலைபோட்டு இன்றாவது நமது கஞ்சிக்கு வழி செய். இன்றும் வெறுங்கையோடு திரும்பிவந்தால் நான் என்ன செய்வேன் தெரியுமா?

    வேறு ஒரு நேரமாக இருந்தால், அவன் சட்டென்று ‘என்ன செய்வாய்?’ என்று கேட்டிருப்பான்.

    ஆனால், பசிக் கொடுமைக்கு நடுவே இரக்கக் குரலை எழுப்பிப் பேசும் தன் மனைவிக்கு முன்னால் அவன் இப்பொழுது அப்படிக் கேட்டுவிட முடியுமா? கேட்டுவிட்டுப் பிறகு அவளிடமிருந்து மீண்டுவிட முடியுமா? கடலலைகளோடு போட்டியிடக் கண்ணீர் அலைகளும் -

    எனவே, பேசாமல் இருந்தான் அந்த மீனவன். சற்று நேர மௌனத்துக்குப் பிறகு அதையும் சொல்லித் தீர்த்துவிட்டாள் அவள்.

    நீ, இன்றும் என்னைப் பட்டினி போட்டால் நான் எங்காவது சென்று பணமோ உணவோ திருடிக்கொண்டு வந்துவிடுவேன்! ஆமாம். அப்படிச் செய்யப்போவது உறுதி. திருடும்பொழுது நான் அகப்பட்டுக் கொண்டால் என்னை அரண்மனைச் சிறையில் வந்து பார்த்து விவரம் தெரிந்து கொண்டு போ. அத்தான், அப்படிப்பட்ட அடாத செயலில் இறங்க என்னை என்னுடைய காய்ந்த வயிறு தூண்டுகிறதே!

    அப்படி அவள் சொல்லிவிட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். அடக்கிவைத்திருந்த அழுகை உடைப்பெடுத்து வரும் வெள்ளம்போல் வந்தது.

    அவள் கண்ணீர் கொட்டும் காட்சி அவனுக்குப் புதிது இல்லை. ஏழைகளின் சொத்து கண்ணீர் மட்டுந்தான் என்று அவனுக்குத் தெரியும்! ஆனால், அன்று அவள் கண்ணீர் சிந்தியதில் நீதி நிற்பதை அவன் உணர்ந்தான். அத்துடன் தான் அன்று ஒன்றும் கொண்டுவராவிட்டால் அவள் செய்யப்போகிற செயலையும் எண்ணிப்பார்த்தபொழுது அவன் உள்ளத்தில் காட்டுக்காற்று கிளம்பிச் சுழன்றது.

    என்ன, என்ன, திருடப்போகிறாயா? அதற்குத் துணிந்து விட்டாயா? யார்? நீயா? இப்படிச் சொல்லுவது நீதானா? இதுபோன்ற எண்ணம் உனக்கு எழுந்தது இல்லையே! எந்த ஒரு தொல்லை வந்தாலும் நாம் இருவரும் இத்தனை ஆண்டுகளாகப் பொறுத்துக்கொண்டு, சமாளித்து, மீண்டு வந்திருக்கிறோம். திருட்டு நினைவே இடம் பெற்றது இல்லையே! இப்பொழுது மட்டும்... முடிக்க முடியாமல் திணறினான் அவன். கட்டியிருந்த தொண்டையினால் தொல்லைகொண்டு அவன் இருமினான்.

    "திருடாமல் என்ன செய்வது? பச்சைத்

    Enjoying the preview?
    Page 1 of 1