Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pathu Pergal Thediya Pathu Kodi
Pathu Pergal Thediya Pathu Kodi
Pathu Pergal Thediya Pathu Kodi
Ebook272 pages2 hours

Pathu Pergal Thediya Pathu Kodi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வானத்தை சீறிக்கொண்டு விமானம் பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் இருந்து அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் சுடர்மணி.

அவன் பாங்கா தீவுக்கு செல்ல வேண்டும் அதுக்கு நேரடி விமானம் கிடையாது. சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் செல்ல வேண்டும்.

சிங்கப்பூரில் தனி விமானத்திற்கு காத்திருக்கும் போது அவருடன் இன்னொருவரும் பாங்கா தீவுக்கு செல்ல காத்திருக்கிறார். அவன் நல்லமுத்து.

நல்லமுத்துவும் சுடர்மணியும் செல்கிறார்கள்.

இந்த நல்லமுத்துவுக்கும் சுடர்மணிக்கும் இருக்கும் நட்பு பின்னாளில் எவ்வாறு மாறுபடுகிறது.

அந்த பத்துகோடியை தேடிய பத்து பேர் யார்?

சுடர்மணி எதற்காக பாங்கா தீவுக்கு செல்கிறான்.

சுவராசியமான கதையை படிக்க வாருங்கள் கதைக்குள் செல்லுவோம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580136605898
Pathu Pergal Thediya Pathu Kodi

Read more from Tamilvanan

Related to Pathu Pergal Thediya Pathu Kodi

Related ebooks

Reviews for Pathu Pergal Thediya Pathu Kodi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pathu Pergal Thediya Pathu Kodi - Tamilvanan

    http://www.pustaka.co.in

    பத்துப் பேர்கள் தேடிய பத்துக் கோடி

    Pathu Pergal Thediya Pathu Kodi

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 1

    வானவெளியைப் பிளந்துகொண்டு, விலை உயர்ந்த ஜெட் விமானம் பறந்துகொண்டிருந்தது. கீழே நீலக்கடலும், திட்டு திட்டான சிறிய தீவுகளும், தொலைவிலே ஒரு பெரிய தீவும் தெரிந்தன!

    சன்னல் பக்கமாக உட்கார்ந்து இயற்கையின் படைப்பைப் பார்த்து மிக வியந்து கொண்டிருந்தான் சுடர்மணி.

    தெளிவான நீலநிறக் கடலிலே, முத்துகள் மிதப்பதைப் போல் சின்னஞ்சிறு தீவுகள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தன. சிதறிக்கிடக்கும் அந்தச் சிறிய தீவுகளுக்கெல்லாம் பெயர்கள் உளவோ இல்லையோ? அவற்றுக்கு உலகப் படத்தில் இடம் உண்டோ இல்லையோ? அந்தத் தீவுகள் எல்லாவற்றிலும் இதயம் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ?

    ஜெட் விமானம் விரைந்துகொண்டிருந்தது பலநூறு கல்கள் விரைவில்.

    சுடர்மணி தொலைவில் தெரிந்த பெரிய தீவைப் பார்த்தான். இந்தப் பக்கத்தில் இந்தப் பெரிய தீவு எதுவாக இருக்கும்?

    விமானம், சிங்கப்பூரை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் விமானம் இறங்கப்போவதாகவும் விமானப் பணிப்பெண் எல்லார் அருகிலும் வந்து சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு, எல்லாருக்கும் பெல்ட்டைக் கட்டினாள்.

    சுடர்மணியின் இடுப்பில் பெல்ட்டைக் கட்டப் பணிப்பெண் குனிந்தபோது, சுடர்மணி நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். இப்போதுதானா சிங்கப்பூர் வருகிறது? இராக்கெட்டுகள் சந்திரனைத் தொடும் இந்த நாள்களில் விமானத்தில் போவதுகூட அலுப்புத்தட்டுகிறது! இப்போதே மாலை நேரமாகிவிட்டது. இருட்டுவதற்குள் நான் போகவேண்டிய இடத்துக்குப் போகமுடியுமா? என்று கேட்டான் அவன்.

    பணிப்பெண் புருவங்களை உயர்த்தித் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். தோல்பட்டையைக் கட்டிக் கொண்டே, நீங்கள் எங்கே போகவேண்டும்? என்று கேட்டாள். அவள் கனிவுடன் கேட்டபோது, அவள் பார்வையில் மட்டுமின்றிப் பேச்சிலும் இனிமை கலந்திருப்பதை நன்கு உணர்ந்தான் சுடர்மணி.

    நான் பங்கா தீவுக்குப் போகவேண்டும் என்றான் சுடர்மணி.

    அவள் தோல்பட்டையைக் கட்டிவிட்டு, பங்கா தீவுக்கா? என்று கேட்டுவிட்டு நிமிர்ந்தாள். அவள் குரலில் வியப்பு கலந்திருந்தது!

    ஆமாம், பங்கா தீவுக்குத்தான்! ஏன் வியப்படைகிறீர்களா? பங்கா தீவு எங்கேயிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டான் சுடர்மணி.

    பங்கா தீவு எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்! இதெல்லாம் தெரியாவிட்டால் நான் விமானத்தில் பணிப்பெண் வேலை பார்க்க முடியுமா? மலேயா தீவுக்குக் கீழே சுமத்ரா தீவு நீண்டுகிடக்கிறது. இந்தச் சுமத்ரா தீவுக்கு வலப்பக்கத்தில், ஓர் ஓரமாகக் காது ஒட்ட வைத்தாற்போல் ஒரு சிறிய தீவு தெரியும். அதுதான் பங்கா தீவு. ஆனால், நான் அங்கே போனது இல்லை!

    இந்த விமானம் அங்கே போகுமல்லவா? என்று ஆவலுடன் கேட்டான் சுடர்மணி.

    போகாது.

    பங்கா தீவுக்கு நேரிடையாக டிக்கட் வாங்கியிருக்கிறேனே! என்றான் சுடர்மணி.

    பங்கா தீவுக்கு எவரும் விமானத்தில் செல்லுவதில்லை. சுமத்ரா தீவிலிருந்து படகிலோ கப்பலிலோ செல்லுவார்கள். உங்களுக்கு நேரிடையாகப் போக டிக்கெட் கொடுத்திருந்தால், சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கிக் கேட்டுப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் பணிப்பெண்.

    சுடர்மணி, விமானத்தில் இருந்த மற்றவர்களைப் பார்த்தான். அவன் சென்னையில் விமானத்தில் ஏறியபோது பார்த்த பல முகங்களே அவை! அவர்கள் எல்லாருமே சிங்கப்பூரில் இறங்கப் போகிறவர்கள்தான் என்று ஊகித்துக் கொண்டான் அவன். நாம் சேரவேண்டிய இடத்தை நெருங்கிவிட்டோம், இனி இறங்கிப் போகவேண்டியதுதான் என்று அவர்கள் எண்ணியபோது அவர்கள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும் பரபரப்பும் அவர்கள் எண்ணங்களை வெளியே காட்டின!

    விமானம் கீழே இறங்கத் தொடங்கியது. சுற்றிச் சுற்றி வட்டமிட்டுவிட்டு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியது.

    விமான நிலையத்துக்கு அப்பால், வேலியின் ஓரங்களில் நின்றுகொண்டு, விமானத்தில் வருபவர்களின் உறவினர்களும் நண்பர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

    சுடர்மணியும் கீழே இறங்கினான். அவனுடைய இடக்கையில் மடிப்புக் கலையாத கோட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. வலக்கையில் கைப்பெட்டியை அவன் பிடித்திருந்தான்.

    அவனை வரவேற்க அங்கு எவரும் இல்லை. அங்கு மட்டுமல்ல, பங்கா தீவுக்குச் சென்றாலும் அவனை வரவேற்க அங்கே எவரும் இருக்கமாட்டார்கள்! அவன்

    இந்தியாவைவிட்டு அயல்நாடுகளுக்கு வருவது இதுதான் முதல் தடவை! அவன் எதற்காகச் சென்னையை விட்டு விமானத்தில் புறப்பட்டுப் பங்கா தீவைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்பது அவன் மனத்தில் புதைந்துகிடந்த ரகசியமாக இருந்தது!

    எல்லாரும் இறங்கியபின், கடைசியாக இறங்கினான் சுடர்மணி. அவனுக்கும் முன்னால் இறங்கினாள் பணிப்பெண். அவள் விரைந்துவந்து அவனுக்கு அருகில் நடந்தபடி, உங்கள் டிக்கெட்டைக் கொடுங்கள். விமான நிலையக் காவலரிடம் காட்டிவிட்டு, உங்களுக்கு விமானம் இங்கிருந்து எப்போது என்பதைத் தெரிந்துவருகிறேன் என்றாள்.

    சுடர்மணி அப்படியே நின்றான். கைப்பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, தொங்கிக்கொண்டிருந்த கோட்டைத் தூக்கிப் பிடித்து, அதன் பைகளைத் துழாவி, நீண்ட கவர் ஒன்றை வெளியே எடுத்தான். அந்தக் கவரை அப்படியே விமானப் பணிப்பெண்ணிடம் கொடுத்தான்.

    விமானப் பணிப்பெண் கவரை வாங்கி அதன் வாய்ப்புறத்தில் ஊதினாள். கவர் வாயைப் பிளந்தது. உள்ளே டிக்கட்டும், ஒரு சிறிய கடிதமும் இருந்தன.

    அவள் சிரித்துக்கொண்டே, உள்ளே ஏதோ கடிதம் இருக்கிறதே! என்றாள்.

    அந்தக் கவரை அப்படியே விமான நிலையக் காவலரிடம் கொடுத்துவிடுங்கள் என்றான் சுடர்மணி.

    விமானப் பணிப்பெண் விரைந்து நடந்தாள்.

    சுடர்மணி கீழே வைத்திருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு, விமான நிலையத்திலிருந்த சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றான். ஒரு கோப்பை காப்பி வரவழைத்துக் குடித்து விட்டுக் களைப்புடன் அப்படியே சிறிது நேரம் அவன் உட்கார்ந்திருந்தான்.

    விமானப் பணிப்பெண் தன்னைத் தேடி வருவாள் என்று அவன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தான். நேரம் கழிந்து கொண்டிருந்தது. ஆனால்

    பணிப்பெண் வரவில்லை!

    சிற்றுண்டிச்சாலையில் இருந்த கூட்டம் கலைந்துவிட்டது!

    அவன் மடித்துவைத்திருந்த கோட்டை எடுத்தான். அதன் பைகளைத் துழாவி, உலகப் படம் ஒன்றை எடுத்தான். மடித்திருந்த அந்தப் படத்தை எடுத்துப் பங்கா தீவு இன்னும் எவ்வளவு தொலைவிலிருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை பார்த்துக்கொண்டான். சிங்கப்பூரிலிருந்து எப்படி அவன் விமானத்தில் போகவேண்டும் என்பதைச் சிவப்புப் பென்சிலால் கோடு போட்டு மார்க் செய்தான். அப்போது -

    சிவப்புப் பென்சிலால் கோடு போட்டு மார்க் செய்த அந்த இடத்தை ஒரு கை தொட்டது!

    சுடர்மணி அந்தக் கையை உற்றுப் பார்த்தான். வலக்கை அது! அந்த வலக்கையில், மணிக்கட்டில் பெரிய கடிகாரம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அந்தக் கடிகாரத்தின் முகப்பு நீலநிறமாக இருந்தது. விலை உயர்ந்த கடிகாரம் அது. அளவிலும் பெரியதாக இருந்தது அந்தக் கடிகாரம்!

    பங்காத் தீவுக்கு இங்கிருந்து விமானத்தில் செல்லுவது என்பது எளிதல்ல! சிறந்த விமானியால்தான் பங்காத் தீவிற்கு விமானத்தைச் செலுத்திக்கொண்டு போய்ப் பங்காத் தீவில் விமானத்தை இறக்க முடியும் என்றது அந்தக் கைக்கு உடையவனின் குரல்!

    அந்தக் கைக்கு உடையவன் யார் என்று நிமிர்ந்து பார்த்தான் சுடர்மணி.

    சுடர்மணியைப் போன்ற ஓர் இளைஞன்தான் அவனும்! அவன் மென்சிரிப்புடன் சுடர்மணியைப் பார்த்துக்கொண்டு நின்றான். அவன் வெள்ளைச் சட்டையும், சாம்பல் நிறக் கோட்டும், அதே நிறத்தில் கால் சட்டையும் அணிந்திருந்தான்!

    சுடர்மணிக்கு வியப்பாக இருந்தது. சுடர்மணியும் அதே நிறத்தில்தான் உடைகள் அணிந்திருந்தான். காலில் அணிந்திருந்த காலணிகள்கூட ஒரே நிறம்! இருவரும் கறுப்புக் காலணிகள் அணிந்திருந்தார்கள். ஆனால்

    புது இளைஞன் அரும்பு மீசை வைத்திருந்தான். சுடர்மணிக்கு மீசை இல்லை!

    சுடர்மணி சிரித்துக்கொண்டே, உட்காருங்கள் நீங்கள் யார் என்று தெரியவில்லையே! என்றான்.

    என்னுடைய பெயர் நல்லமுத்து. நானும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்தான். நீங்கள் பங்கா தீவுக்குப் போகிறீர்களா? என்று கேட்டுக்கொண்டே மற்றொரு நாற்காலியில் மெல்ல உட்கார்ந்தான் நல்லமுத்து.

    ஆமாம், நீங்கள் எங்கே செல்லுகிறீர்கள்? என்று கேட்டான் சுடர்மணி.

    நானும் பங்கா தீவுக்குத்தான் போகவேண்டும். இரண்டு பேர்கள் பங்கா தீவுக்குப் போவதென்றால், வியப்பை அளிக்கும் செயல் அது! என்றான் நல்லமுத்து.

    நீங்கள் என்னுடன் சென்னையிலிருந்து விமானத்தில் வரவில்லையே! என்றான் சுடர்மணி.

    இல்லை, நான் இங்கேயே இருப்பவன். மிக விரைந்து பங்கா தீவுக்குப் புறப்பட வேண்டியதாகப் போய்விட்டது என்றான் நல்லமுத்து.

    நீங்கள் எதற்காக அங்கே போகிறீர்கள்? என்று கேட்டான் சுடர்மணி.

    நல்லமுத்துவின் முகம் மாறிவிட்டது! முதலில் அந்தக் கேள்வியைக் கேட்கலாம் என்றிருந்தான் அவன்! ஆனால்

    சுடர்மணி முந்திக்கொண்டான்!

    நல்லமுத்து பதில் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், சுடர்மணி என்று அழைத்துக்கொண்டே சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைந்தாள் விமானப் பணிப்பெண்.

    இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

    ஒரே மாதிரியான உடையில் இருந்த இருவரையும் பார்த்ததும் முதலில் அவள் வியப்படைந்தாள்! பிறகு

    சுடர்மணி அந்தக் கவரை வாங்கி வைத்துக்கொண்டான்.

    நானும்தான் அந்த விமானத்தில் புறப்படுகிறேன் என்றான் நல்லமுத்து.

    நீங்கள்தானா நல்லமுத்து? விமான நிலையக் காவலர் சொல்லிக் கொண்டிருந்தார் என்ற சொல்லிவிட்டுப் போகத் திரும்பினாள் விமானப் பணிப்பெண்.

    நன்றி என்றான் சுடர்மணி.

    அவள் சிரித்துக்கொண்டே போய்விட்டாள். சுடர்மணி திரும்பி நல்லமுத்துவைப் பார்த்து, ஏதாவது சாப்பிடுங்களேன் என்றான்.

    வேண்டாம்.

    நீங்கள் எதற்காகப் பங்கா தீவுக்குப் போகிறீர்கள் என்று சொல்லவே இல்லையே?

    நல்லமுத்துவின் முகம் மாறிவிட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள். நான் எதற்காகப் போகிறேன் என்று கேட்காதீர்கள். நானும் உங்களைக் கேட்கவில்லை. ஆனால் நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்! பங்கா தீவில் இருக்கும் வரையில் என்னால் முடிந்த உதவியை உங்களுக்குச் செய்கிறேன். என்னுடைய வேலை அச்சம் தரத்தக்கது! என்றான் அவன்.

    சுடர்மணி சிரித்தான். நான் எதற்காக அங்கே போகிறேன் என்று சொல்லட்டுமா? என்றான் அவன்.

    நீங்களாகச் சொன்னால் எனக்குக் கேட்டுக்கொள்ளத் தடை ஏதும் இல்லை.

    என்னுடைய தந்தை, இரண்டாவது உலகப் பெரும் போரின் போது, பங்கா என்னும் தீவில் இறந்துவிட்டார்! அவர் பறந்து கொண்டிருந்த விமானம் இந்தத் தீவில் விழுந்து நொறுங்கிவிட்டது! என் தந்தையின் பிணத்தை அந்தத் தீவிலே புதைத்துவிட்டார்கள். அவர் புதைக்கப்பட்ட இடத்தை ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் வந்திருக்கிறேன்! என்றான் சுடர்மணி.

    வேடிக்கையாக இருக்கிறது! இத்தனை ஆண்டுகள் கழித்து, இதற்காகவா இவ்வளவு தொலைவு வருகிறீர்கள்? என்று வியப்புடன் சொல்லிவிட்டு எழுந்தான் நல்லமுத்து.

    சுடர்மணியும் தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

    சிறிதுநேரத்தில், தனி விமானம் ஒன்றில் இருவரும் புறப்பட்டார்கள். அந்த விமானத்தில்

    விமானியைத் தவிர அவர்களுக்குத் துணை வேறு எவருமே இல்லை!

    விமானம் மேலே பறந்தது.

    *****

    அத்தியாயம் 2

    ஐந்து மணி நேரம் இருட்டில் பறந்த பிறகு, விமானம் இறங்கத் தொடங்கியது.

    பங்கா தீவு வந்துவிட்டது! என்றான் நல்லமுத்து.

    சுடர்மணி கண்ணாடியின் பக்கம் மெல்லத் திரும்பிப் பார்த்தான்.

    இருட்டில், இங்குமங்குமாக ஒன்றிரண்டு விளக்குகள் தெரிந்தன. ஆனால், தீவு முழுவதும் சரியாகத் தெரியவில்லை!

    இந்தத் தீவில் விளக்குகளைக்கூட அவ்வளவாகக் காணோமே! என்றான் சுடர்மணி.

    இங்கே இருப்பவர்களில் பெரும்பாலோர் மீனவர்கள். இங்கேயெல்லாம் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு வசதிகள் கிடைக்கா! தங்குவதற்கு என்று ஓர் ஓட்டல் இருக்கிறது! பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1