Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalgal Therinthana
Kaalgal Therinthana
Kaalgal Therinthana
Ebook115 pages47 minutes

Kaalgal Therinthana

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வேலை தேடி சென்னைக்கு செல்லும் ஒளிக்கொடி, காரில் அடிபட்டு உயிரற்ற சடலமாக கிடக்கும் இளைஞன் ஒருவனை பார்க்கிறாள்.

சில நாட்கள் கழித்து நீல மாளிகை என்னும் ஓட்டலில் வேலை பார்க்கும் ஒளிக்கொடி, மீண்டும் அந்த இளைஞனை சந்திக்கிறாள்.

அப்படியானால் இறந்து போன மனிதன் யார்?

அவன் எவ்வாறு மீண்டு வந்தான்?

கதையின் மர்மம் என்ன?

ஒளிக்கொடிக்கும், ஓட்டல் நீலமாளிகைக்கும், அந்த இளைஞனுக்கும் என்ன சம்மந்தம்? என்பதை கதைக்குள் படிப்போம்.

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136605897
Kaalgal Therinthana

Read more from Tamilvanan

Related to Kaalgal Therinthana

Related ebooks

Reviews for Kaalgal Therinthana

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalgal Therinthana - Tamilvanan

    http://www.pustaka.co.in

    கால்கள் தெரிந்தன

    Kaalgal Therinthana

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 1

    பெங்களூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் பஸ் வேலூரை அடைந்ததும், ஒளிக்கொடி, பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கினாள்.

    கூலியாள் ஒருவன் பஸ்ஸின் மேல் இருந்த அவளுடைய பெரிய பெட்டியை இறக்கினான். அவன் அதைத் தன் தலையிலிருந்து இறக்காமலே, எங்கே, போகவேண்டும்? மருத்துவக் கல்லூரிக்கா? என்று கேட்டான்.

    ஒளிக்கொடி சிரித்தாள். நான் மருத்துவக் கல்லூரிக்குப் போகவேண்டும் என்பது உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டாள்.

    கூலி சிரித்தான். அவனுக்கு நாற்பது வயது இருக்கும். அவன் சிரித்துக்கொண்டே, நான் இந்தப் பஸ் ஸ்டாண்டில் முப்பது ஆண்டுகளாக மூட்டை தூக்கியே பிழைப்பவன்! இங்கே வருபவர் யார் யார், எங்கே அவர்கள் போவார்கள் என்பதை அவர்களைப் பார்த்தவுடனே நான் சொல்லி விடுவேன்! உங்களைப்போன்ற அழகான பெண்கள் இந்த ஊருக்கு வந்தால், அவர்கள் மருத்துவக் கல்லூரிக்கே போவார்கள் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும்! இந்த ஊருக்குப் புத்துயிரளிப்பதே இந்த மருத்துவக் கல்லூரிதானே? என்றான்.

    ஒளிக்கொடி சிரித்தாள். அவள் சிரிப்பில் பொருள் இருந்தது.

    ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டான் கூலி.

    உன்னுடைய கருதுதல் தவறாகிவிட்டது! மருத்துவத்துக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை! நான் போகவேண்டிய இடம் நீலமாளிகை!

    இதைக் கேட்டதும் கூலியாள் சற்று வியப்புடன் பார்த்துவிட்டு, உடனே பெட்டியையும் கீழே இறக்கி வைத்துவிட்டான்!

    ஏன் பெட்டியைக் கீழே இறக்கிவிட்டாய்? என்று கேட்டாள் ஒளிக்கொடி.

    எங்கே போகவேண்டும் என்று சொன்னீர்கள்? என்று கேட்டான் கூலியாள்.

    நீலமாளிகைக்கு.

    அது இங்கிருந்து நான்கு கல் தொலைவில் இருக்கிறது என்றான் கூலியாள்.

    நான்கு கல் தொலைவா?

    ஆமாம்.

    நான் ஓட்டல் நீலமாளிகையைச் சொல்லுகிறேன் என்றாள் ஒளிக்கொடி.

    நானும் அதைத்தான் சொல்லுகிறேன். நீலமாளிகை என்பது ஒரு மன்னரின் மாளிகை. அவர் அண்மையிலேதான் அந்த மாளிகையை ஓட்டலாக மாற்றினார். பெரும்பாலும் காரில் செல்லுபவர்கள்தாம் அந்த ஓட்டலுக்குச் சென்று தங்குவார்கள். பெங்களூருக்குச் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து, மற்றொரு சாலை வடக்கே செல்லும். அந்தச் சாலையில் குறைந்தது ஒரு கல் தொலைவு நடக்க வேண்டும். பெங்களூருக்குச் செல்லும் சாலையில், நீங்கள் வந்த பக்கமே மூன்று கல் தொலைவு போகவேண்டும்.

    இங்கேயிருந்து அங்கே போக, வண்டி கிடைக்காதா? என்று கேட்டாள் ஒளிக்கொடி

    குதிரை வண்டிதான் கிடைக்கும். நீங்கள் செல்லுகிறீர்களா?

    வேறு வழி? ஏதாவது ஒரு வண்டியைப் பிடி என்றாள் ஒளிக்கொடி.

    அவன் ஒரு குதிரை வண்டியைப் பார்க்கப் புறப்பட்டான். அப்போது ஒளிக்கொடி அவனை அழைத்து, இந்த ஊரில் வாடகைக் காரே கிடைக்காதா? என்றாள்.

    வாடகைக் கார்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் கேட்கும் பணம் எவ்வளவு என்று தெரிந்தால், நீங்கள் நடந்தே சென்றுவிடுவீர்கள்! என்றான் கூலியாள்! பிறகு அவன் குதிரை வண்டி ஒன்றைப் பேசிவர நடந்தான்.

    அவன் மறைந்ததும் ஒளிக்கொடிக்கு ஓர் எண்ணம் பிறந்தது. நீலமாளிகை என்னும் பெரிய ஓட்டல் ஒன்றில் வேலை தேடி வந்தாள் அவள். அந்த ஓட்டல், மிகத் தனியான ஓர் இடத்தில் இருக்கும் என்று முதலில் அவள் எண்ணவே இல்லை. இப்போது அங்கே சென்று, ஓட்டலின் சுற்றுப்புறம் பிடிக்காவிட்டால், பெட்டியைத் தூக்கிக்கொண்டு உடனே வேலூருக்கு ஓடிவரவேண்டுமல்லவா? ஆகையால், பெட்டியை அவள் வேலூரிலேயே எங்கேயாவது ஓர் ஓட்டலில் வைத்துவிட்டுச் செல்லுவது என்று முடிவுகட்டினாள்.

    குதிரை வண்டி வந்தது. நீலமாளிகைக்குப் போய் உடனே திரும்பிவர, ஐந்து ரூபாய் என்று பேசினாள்.

    கூலியாள் பெட்டியைக் குதிரை வண்டியில் எடுத்து வைத்தான். அவனிடமே அங்கேயுள்ள ஒரு நல்ல ஓட்டலின் பெயரைக் கேட்டுக்கொண்டு, குதிரை வண்டியை அந்த ஓட்டலுக்கு விடச்சொன்னாள்.

    வேலூரின் சுறுசுறுப்பான பகுதியில்

    Enjoying the preview?
    Page 1 of 1