Irumbu Kai Mainthan
By Tamilvanan
()
About this ebook
புலிக்குட்டிக்கு வலக்கை இல்லை. ஒரு விபத்தில் அவனுடைய வலக்கையை இழந்துவிட்டான். புலிக்குட்டிக்கு உதவி செய்ய யாருமில்லை. எப்படியாவது இந்த நொண்டிக் கையுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்தான். உலகையா, கிளிமொழி இருவரிடமும் ஒரு பூனை உள்ளது. அந்த பூனையை புலிகுட்டியிடம் அனுப்பி , புலிக்குட்டியை அவர்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். புலிக்குட்டிக்கு உலகையா இரும்புக் கையை வாங்கி பொருத்துகிறார். புலிக்குட்டியும், பூனையும் சேர்ந்து உலகையா, கிளிமொழி சொல்லும் இடங்களுக்கு சென்று வைர மாலைகள், நகைகளை திருடுகின்றனர். அந்த நகையை விற்க செல்லும் போது போலீசில் மாட்டி, சிறைக்கு சென்றுவிடுகிறான். புலிகுட்டி மறைத்து வைத்திருக்கும் மீதி நகைகளை போலிஸ் கண்டுபிடிக்கிறார்களா? உலகையா, கிளிமொழி சிறைச்சாலையில் இருக்கும் புலிக்குட்டியை மீட்கிரார்களா?
Read more from Tamilvanan
Sankarlal Rating: 4 out of 5 stars4/5Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsMaraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Irunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsCairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsHello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsParisil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsBerlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsIrul Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsNewyorkil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPolice Koopidungal! Rating: 0 out of 5 stars0 ratingsSimla Beauty Rating: 0 out of 5 stars0 ratingsMeenazhagi Rating: 0 out of 5 stars0 ratingsKaidhi Number 811 Rating: 0 out of 5 stars0 ratingsKarunaagam Rating: 0 out of 5 stars0 ratingsCabaret Girl Rating: 5 out of 5 stars5/5Keekkee Rating: 0 out of 5 stars0 ratingsKarugiya Kaditham Rating: 0 out of 5 stars0 ratings
Related to Irumbu Kai Mainthan
Related ebooks
Aabathu August 10! Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Thondrum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsAahayathil Aarambam Rating: 4 out of 5 stars4/5Kollath Theriyavillai Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsThuduppillatha Padagugal Rating: 0 out of 5 stars0 ratingsKanbathellam Unmai Rating: 5 out of 5 stars5/5Intha Sathi Pothatha? Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Thotta Kaatru Rating: 4 out of 5 stars4/5Kannadi Vinadigal Rating: 0 out of 5 stars0 ratingsKinatru Thavalaigal Rating: 5 out of 5 stars5/5Nila Satchi Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Vaa! Kolla Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsHelicoptergal Keezhe Irangivittana Rating: 0 out of 5 stars0 ratingsEttavathu Kadal Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Bullet Rating: 0 out of 5 stars0 ratingsKolai, Innoru Kolai! Rating: 0 out of 5 stars0 ratingsIdaiyinam Rating: 0 out of 5 stars0 ratingsMaanuda Thooral Rating: 0 out of 5 stars0 ratingsTholainthu Ponavargal Rating: 4 out of 5 stars4/5Police Vesham Rating: 0 out of 5 stars0 ratingsAathma Rating: 5 out of 5 stars5/5Jayakanthanin Velivaratha Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsTharunam Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vettai Rating: 0 out of 5 stars0 ratingsOh My Butterfly Rating: 0 out of 5 stars0 ratingsCabaret Girl Rating: 5 out of 5 stars5/5Thoongum Maanaviyai Sight Adippathu Thappa? Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Varaintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Irumbu Kai Mainthan
0 ratings0 reviews
Book preview
Irumbu Kai Mainthan - Tamilvanan
https://www.pustaka.co.in
இரும்புக்கை மனிதன்
Irumbu Kai Mainthan
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
https://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
1
புலிக்குட்டி அவன் பெயர். புலியைப் போன்ற மனம் கொண்டவன்தான். ஆனால் பார்ப்பதற்குப் பூனையைப்போல் அவன் இருந்தான். அவன் இருபத்திரண்டு வயதான இளைஞன். பட்டம் பெறவில்லை. பள்ளிக்கு ஒழுங்காகப் போகவில்லை. படிக்கத் தெரியும். கையில் கிடைத்ததையெல்லாம் தன் வாழ்க்கைக்கு உதவுமா என்ற ஒரே எண்ணத்தோடு படிப்பான். கீழே கிடக்கும் பழைய பத்திரிகையைக்கூட எடுத்து வைத்துக் கொண்டு படிப்பான்.
அவனுக்கு வலக்கை இல்லை. நொண்டி. பிறக்கும்போதே நொண்டியாக அவன் பிறக்கவில்லை. வேலூரிலிருந்து பிழைக்கச் சென்னைக்கு ஒரு லாரியில் அவன் தொத்திக்கொண்டு வந்தது அந்த லாரியை ஓட்டிவந்த டிரைவருக்கே தெரியாது. லாரி வழியில் ஒரு விபத்தில் கவிழ்ந்து விழுந்தபோது, புலிக்குட்டியின் வலக்கை போய்விட்டது. அவன் வலக்கையின் முக்கால்வாசியை டாக்டர்கள் வெட்டி எடுத்துவிட்டார்கள்! இதனால் வாழ்க்கையில் சலிப்பும், அதனால் எப்படியாவது இந்த நொண்டிக் கையுடன் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற வீரமும் எழுந்தது அவனுக்கு. உதவி செய்யும் அளவுக்கு அவனுக்கு உற்றார் உறவினர் என்று எவரும் இலர். ஆகையால், வாழ்ந்தால் அவனுக்கு இலாபம்; வாழமுடியாவிட்டால் இனிமேல் இழப்பதற்கு அவனிடம் ஒன்றும் இல்லை!
இந்த எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது!
புலிக்குட்டியைப் பார்த்துப் பலர் கேலி செய்தார்கள். சிலர் இரக்கப்பட்டார்கள். கையை இழந்துவிட்டு இவன் ஏன் வாழவேண்டும் என்று ஒரு சிலர் பேசிக்கொண்டார்கள். கையை இழந்தவர்களும் இந்தக் காலத்தில் மற்றவர்களைப் போலவே வாழமுடியும் என்று ஒரு சிலர் எடுத்துச்சொல்லி அவனுக்கு ஊக்கம் அளித்தார்கள்.
இரண்டு கைகளையுமே விபத்து ஒன்றில் இழந்துவிட்ட ஒருவர், காலாலேயே காரை ஓட்டி வாழும் படம் ஒன்று அண்மையில் பத்திரிகையில் வந்தது. அந்தப் படத்தைச் சிலர் புலிக்குட்டியிடம் காட்டினார்கள். ஆனால் எவரும் அவனுக்கு வேலை கொடுக்கவில்லை. பொருளுதவி செய்யவில்லை.
சென்னையில் இங்கும் அங்கும் சுற்றிக்கொண்டிருந்தான் புலிக்குட்டி. ஒரு நாள் மாலை மூர்மார்க்கெட்டின் பின்னால் இருந்த ஒரு பூங்காவில் உட்கார்ந்து சிறிது நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மாலை வேளை ஆகையால், பறவைகள் விரைவாகப் பறந்து போய்க்கொண்டிருந்தன. அந்தப் பறவைகளைப் போல நாமும் ஏன் சுறுசுறுப்பாக இருக்கக்கூடாது என்று எண்ணினான். அப்போது அவன் காலடியில் பழைய பத்திரிகையின் பாதித்தாள் ஒன்று கசங்கிச் சுருண்டு பறந்து வந்து விழுந்தது. அதை எடுத்தான். இடக்கையால் அதைப் பிடித்து, கசங்கிய பகுதிகளை அந்த ஒரே கையாலே நீட்டி, எழுத்துகள் தெரியும்படி வைத்துக்கொண்டு படித்தான். தேர்தல் செய்திகள் அவனுக்கு ஊக்கத்தை அளிக்கவில்லை. விளம்பரப் பகுதிகளைப் பார்த்தான். நொண்டிக்கு வேலை கொடுப்பதாக எவரும் விளம்பரம் செய்யவில்லை. ஆனால் நொண்டிகளுக்குச் செயற்கைக் கால்களையும் கைகளையும், செய்து விற்கும் கம்பெனி ஒன்று விளம்பரம் கொடுத்திருந்தது. அந்தக் கம்பெனியின் முகவரியை மனப்பாடம் செய்துகொண்டு, அந்தப் பழைய பத்திரிகையை வீசி எறிந்தான். அந்த இடத்திலிருந்து எழுந்து விரைவாக நடந்தான். அவன் செயற்கைக் கையை வாங்கி வைத்துக்கொள்ள முடிவு செய்தான். அதற்காக அவனுக்குப் பணம் தேவைப்பட்டது, எவ்வளவு பணம் தேவை என்பதைத் தெரிந்துகொள்ளாமல், அவன் அந்தப் பணத்தைப் பெற முடிவு செய்தான்.
அவன் கால்கள் நடந்துகொண்டிருந்தன. ஒரு கை மட்டும் ஆடியது. வலக்கை நொண்டியாகிவிட்ட கை. அதனால்தான் அது ஆடவில்லை! சட்டையின் அரைக்கைக்குள் அது ஒளிந்து கொண்டிருந்தது! அவனுடைய கண்கள் எதையோ பார்த்துக் கொண்டிருந்தன. அவனுடைய கண்கள் ஏதோ ஒரு பொருளை உற்றுப் பார்த்ததும், அவன் கால்கள் நின்றன. அவன் கண்கள் பார்த்த பொருள் -
ஓர் அழகிய பெண்ணின் கையில் இருந்த கைப்பை. அந்த அழகிய பெண், காரிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷனின் முன் இறங்கினாள். அவள் இறங்கியதும் கைப்பையைத் திறந்து டிக்கெட்டைத் தேடினாள். அப்போது பையிலிருந்து சில ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்துவிட்டு அடியிலிருந்த டிக்கெட் கிடைத்ததும், பணத்தை மீண்டும் பையில் போட்டு மூடி வைத்துக்கொண்டு நடந்தாள்.
புலிக்குட்டி, அந்தப் பெண்ணை ஒரு கணம் பார்த்தான். பிறகு மீண்டும் அவள் கைப்பையைப் பார்த்தான். அவளைத் தொடர்ந்தான்.
அழகிய அந்தப் பெண், முன்னால் நடந்தாள். அவள் பின்னால் கூலி ஒருவன் அவளுடைய பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தான். கூலிக்குப் பின்னால் அவனுடைய நிழலைப்போல் புலிக்குட்டி நடந்தான்.
புலிக்குட்டி பிளாட்பாரம் டிக்கெட்கூட வாங்கவில்லை. அவனிடம் பைசாகூட இல்லை. கூலியின் பின்னால் நடந்தபோது, டிக்கெட் சோதகர் அவனிடம் டிக்கெட் கேட்கவில்லை. அவர் யாரிடமும் டிக்கெட் கேட்டதாகத் தெரியவில்லை! எவராவது தாமாக டிக்கெட்டை நீட்டினால் மட்டும் அவர் அதை வாங்கித் துளையிட்டுக் கொடுத்தார்.
அழகி, நேராகப் போய் டில்லிக்குப் போகும் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறினாள். கூலி, அவள் ஏறிய முதல் வகுப்புப் பெட்டியில் பெட்டியை வைத்துவிட்டுப் போய்விட்டான். வண்டி புறப்பட நேரம் இருந்ததால், முதல் வகுப்புப் பெட்டியில் அவள் மட்டுமே இருந்தாள். அந்தப் பெட்டியில் பயணம் போக வேண்டியவர்களில் எவரும் இன்னும் வரவில்லை. அந்தப் பெண் கைப்பையைத் தனது இடத்தில் வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் இப்படியும் அப்படியும் பார்த்தாள். பிறகு, மெல்ல எழுந்து பாத்ரூமுக்குள் சென்றாள்.
இவ்வளவு விரைவில் புலிக்குட்டிக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் சன்னல் ஓரமாக விரைந்து சென்று, கைப்பையை எடுத்துக்கொண்டு, விரைவாக நடந்தான். அவனை எவரும் அப்போது கவனிக்கவில்லை. வழியில் எவராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்று அவன் புகைவண்டிகளின் பெட்டிகளுக்கு இடையில் புகுந்து தண்டவாளத்தைக் கடந்து புகைவண்டிப் பாதையின் ஓரமாகவே ஓடினான்.
ஸ்டேஷனில் ஏதோ கூச்சல்கேட்டது! கத்தியது அந்தப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்! எவரோ ஓடிவருவதைப் போல் தெரிந்தது! புலிக்குட்டி நின்று பார்க்கவில்லை! விரைந்து ஓடினான்! மீண்டும் அவன் புகைவண்டிப் பாதையின் ஓரமாகவே மூர்மார்க்கெட்டின் பின்னால் வந்துவிட்டான்! ஒரு சுவருக்குப் பக்கத்தில் அவன் கொஞ்சம் நீன்று, கைப்பையிலிருந்த பணத்தை அள்ளிக் கால்சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு,
பையை வீசி எறிந்துவிட்டு ஓடினான்! மூச்சு வாங்க ஓடி அவன் மறைந்துவிட்டான்!
2
புலிக்குட்டிக்கு, அச்சம் ஒரு பக்கம்; ஆவல் ஒரு பக்கம். எவராவது தன்னைத் துரத்திவந்து பிடித்துக்கொண்டு விடுவார்களோ என்று அவனுக்கு அச்சம். எவ்வளவு பணம் இருக்கிறது தன் கையிலே என்று எண்ணிப் பார்க்க அவனுக்கு ஆவல். வழியிலே எங்கும் நின்று பணத்தை எடுத்து எண்ணிப் பார்க்க அவனுக்குத் துணிவு இல்லை. ஆகையால் ஓட்டலுக்குள் புகுந்து ஒரு மூலையிலோ ஒரு தனி அறையிலோ உட்கார்ந்துகொண்டு பணத்தை எண்ணிப் பார்க்கலாம் என்று எண்ணினான் அவன். எந்த ஓட்டலுக்குள் வேண்டுமானாலும் நுழைய இப்போது அவனுக்குத் துணிவு வந்தது.
அவன் விரைந்து நடந்து கொஞ்சத் தொலைவில் இருந்த பெரிய ஓட்டல் ஒன்றுக்குள் நுழைந்தான். அந்த ஓட்டலில் ஒரே கூட்டமாக இருந்தது. எங்கு உட்கார்ந்தாலும் எவரும் பார்க்காதபடி பணத்தை எடுத்து எண்ணிப் பார்க்க முடியாது. குடும்பங்களுடன் வருகிறவர்களுக்கும் தனிமையில் உட்கார்ந்து சாப்பிட விரும்புகிறவர்களுக்கும் உட்காரத் தனி அறைகள் கட்டிவிடப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றைப் பிடித்து உள்ளே போய் உட்கார்ந்தான். பரிமாறுபவன் வந்ததும், என்ன வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டு, அவன் போனதும் பணத்தை எடுத்து எண்ணினான். அவனிடம் நானூறு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் இருந்தன! அவன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோதே பரிமாறுபவன் வந்து வெறும் தண்ணீரை வைத்துவிட்டுப் போனான். அப்போது அவன் பார்த்த பார்வை புலிக்குட்டிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை! பரிமாறுபவன் போனதும் மேசையைத் துடைக்கும் பையன் எட்டிப் பார்த்தான். அவன் பார்த்த பார்வையும் புலிக்குட்டிக்குப் பிடிக்கவில்லை. எவ்வளவு பெரிய ஓட்டலாக இருந்தாலும் சரி, தனிமையில் உட்காருகிறவர்களை ஓட்டலில் உள்ளவர்களில் எவராவது கழுகுக் கண்களுடன் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை அப்போது அவன் உணர்ந்தான்!
பலகாரத்தை உண்டுவிட்டு அவன் வெளியே வந்தபோது மெல்ல இருட்டத் தொடங்கியது. சாலைகளிலும் கடைகளிலும் விளக்குகள் எரியத் தொடங்கின. அவன் பஸ் ஒன்றைப் பிடித்து அதில் பிராட்வேக்குப் பயணம் செய்தான், சென்னையில் மிகக் குறுகிய தெருக்களில் ஒன்று பிராட்வே. அகன்ற தெரு என்று பொருள் உள்ள இந்தப் பெயரை யார்தான் அதற்கு வைத்தார்களோ என்று எண்ணியபடி அவன் பிராட்வேயில் இறங்கி, செயற்கைக் கைகள் விற்கும் கடைக்குள் நுழைந்தான்.
கை கால்களை இழந்து வாழ்வு கசந்தவர்களுக்குப் புதுவாழ்வைக் கொடுக்கும் அந்தக் கடையின் பொறுப்பாளர் இன்முகத்துடன் அவனை வரவேற்றார். உட்காரவைத்து அவன் கையை இரக்கத்துடன் பார்த்தார்.