Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjam Vaa! Kolla Vaa!
Konjam Vaa! Kolla Vaa!
Konjam Vaa! Kolla Vaa!
Ebook91 pages32 minutes

Konjam Vaa! Kolla Vaa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவராஜ் மற்றும் கிளாரா என்பவர்கள் காதலர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடங்க பல லட்ச மதிப்புள்ள சிலையை திருட திட்டம்தீட்டினர். இவர்கள் அந்த சிலையை திருடினார்களா?

ஜோயல், ஜாய் இந்த கடத்தலுக்கு உதவியாக இருந்ததால் அவர்களுக்கு, என்ன நேர்ந்து?

வாசித்து அறிவோம்... கொஞ்ச வா கொல்ல வா!

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580100607826
Konjam Vaa! Kolla Vaa!

Read more from Devibala

Related to Konjam Vaa! Kolla Vaa!

Related ebooks

Reviews for Konjam Vaa! Kolla Vaa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjam Vaa! Kolla Vaa! - Devibala

    https://www.pustaka.co.in

    கொஞ்ச(ம்) வா! கொல்ல வா!

    Konjam Vaa! Kolla Vaa!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சேலம்!

    அரிசிப்பாளையத்தை அடுத்த ‘ஸ்ரீ கிருஷ்ணா லே அவுட்!’ அம்சமான அம்மாவாசை இருட்டில் அமிழ்ந்திருந்தது.

    ஊரே ஒருமித்து தூக்கத்தின் மைய நேரத்தை எட்டும் நேரம். குளிரில் விரைத்து போர்வைக்குள் தங்களை திணித்துக் கொண்டு முடங்கிக் கிடந்தனர் பலர்.

    எங்கோ ஒரு நாலுகால் ஜீவன் குளிர் தாங்காமல் அலற அந்த குறுக்குச் சாலையின் ஓரப் பகுதியில் அவன்!

    மார்போடு சேர்த்தணைத்த அந்த சிறு பெட்டியுடன் தள்ளாடி நடந்தான்.

    சுற்றும் முற்றும் பார்த்தபோது ஊஹும்... ஒரு பிராணியில்லை (ராத்திரி நேரத்தில் அலைய அவையென்ன பிசாசுகளா?) இடது காலை சிறிது விந்தி விந்தி நடந்தான்.

    அடிக்கொரு தரம் திரும்பி பயப் பார்வையை செலுத்தினான். சுமார் முன்னூறு அடிகள் அவன் தத்தி நடந்து முன்னேற அவன் மூச்சிரைக்கும் ஓசை தெளிவாக காதில் விழுகிறது. அம்மாவாசை இருளோடு இருளாக அந்த பக்கச் சுவற்றிற்கு பக்கத்தில் அமைதியாக நின்றிருந்தது ஒரு கறுப்பு நிற அம்பாசிடர்.

    தத்தி வந்தவன் ஒரு விநாடி தாமதித்து பெரிய பெருமூச்சு ஒன்றை செலவழித்தான்.

    இதுவரை இடக்கையில் மார்போடு அணைத்து வைத்திருந்த பெட்டியை வலக்கைக்கு மாற்றிவிட்டு இடக்கையால் காரின் கதவை திறக்க காரின் உட்புற மெல்லிய வெள்ளை ஒளி வெளியே பாய நமக்கு ஒரு சிறிய அதிர்ச்சி!

    அவன் வயிற்றுப் பிரதேசம் முழுவதும் ரத்தத்தால் மொழுகப்பட்டிருந்தது. ஏதோ ஒரு கூரிய ஆயுதம் அவன் வயிற்றை சற்று நேரத்திற்கு முன்னால் பதம் பார்த்திருந்தது. ரத்தம் வழிந்து அவனின் முன்புற துணியை தோய்த்து எடுத்திருந்தது.

    காரினுள் ஏறுமுன் தன் காயத்தை அந்த மெல்லிய வெள்ளை ஒளியில் ஆராய்ந்தான்.

    பாஸ்டார்ட்!

    அவன் வாய் முணுமுணுக்க வலி தாங்காமல் அவன் முகம் அப்ரண்டீஸ் பெண் இட்ட சப்பாத்தி போல் அஷ்டகோணல் காட்டியது.

    தான் வந்த தெருவை திரும்பிப் பார்க்க தூரத்தே ஒரு சைக்கிள் தன் மெல்லிய விளக்குடன் வர அவசர அவசரமாக காரினுள் தன்னை திணித்துக் கொண்டு - காரை கிளப்ப கார் அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்தது.

    2

    ஜாய் ஓட்டமும்நடையுமாக அந்த குறுகலான மாடி படிக்கட்டில் ஏறினான்.

    வானத்தையே இருபத்தி நான்கு மணி நேரமும் பார்த்திருந்ததால் படிக்கட்டுகள் மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து பாசி பிடித்து பச்சை நிறத்தில் பல டிசைன் காட்டியது.

    மாடிப் படிக்கட்டின் உச்சிக்கு வந்த ஜாய் தன்னை ஒருமுறை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அவன் நிமிர்ந்தபோது சூரியன். எழுந்து நகர்ந்து முப்பது டிகிரி கோணத்தில் தன் உஷ்ண கிரகணங்களை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.

    இடது புறம் ஓடிய அந்த நீண்ட காரிடாரின் பக்கம் திருப்பி தன் நார்த் ஸ்டார் தேய நடந்தான். பத்து மீட்டர் தொலைவு ஒரு பெரிய மரக் கதவு அவனை வரவேற்றது.

    ஜோயல்... டேய் ஜோயல்...

    இரண்டு முறை கதவு அவன் அறைகளை வாங்கிக் கொண்டது. விட்டலாச்சாரியார் படத்தில் திறப்பது போல் அந்தக் கதவு திறக்க கண்களில் தூக்கத்தைவிட்டு விடாமல் பிடித்தபடி எதிர்ப்பட்டான் ஜோயல்.

    என்ன ஜாய் நல்ல கனவை கெடுத்திட்டியே...?

    போடா தூங்குமூஞ்சி... என்னைக்குத்தான் நீ உருப்படப்போறியோ...?

    ஜோயலை தன் இடக்கையால் தள்ளியபடி உள்ளே நுழைந்தான் ஜாய்.

    ஒரு பக்கா அன் மேரீட் (கவனிக்க அன்மேரீட்) தங்கும் அறையாக காட்சியளித்தது அந்த ஹால். ஒரு பக்கச் சுவற்றில் பாதியை பிளேபாய் நடுப்பக்க அழகிகள். மறுபக்கத்தில் ஸ்ரீதேவி மழையில் குளித்தாள். அனுராதா அரை அம்மணமாக ஆடினாள். தரை முழுவதும் இறைத்து

    Enjoying the preview?
    Page 1 of 1