Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolla Pirantha Uravu
Kolla Pirantha Uravu
Kolla Pirantha Uravu
Ebook60 pages55 minutes

Kolla Pirantha Uravu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466565
Kolla Pirantha Uravu

Read more from V.Thamilzhagan

Related to Kolla Pirantha Uravu

Related ebooks

Related categories

Reviews for Kolla Pirantha Uravu

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolla Pirantha Uravu - V.Thamilzhagan

    18

    1

    ஹோட்டல் ஐஸ்வர்யா.

    தனியறை. ஏ.ஸியின் குளுமை. மெலிதான இருள். கவலையுடன் பார்த்தாள் இனிதா.

    தேவக்.

    சொல் இனிதா.

    உங்களுக்கு இது தேவைதானா?

    எது? பேரர் வெச்சிட்டுப் போன ‘கட்லெட்’ டை கேட்கிறாயா?

    நான்... சீரியஸா பேசறேன், தேவக். இந்த ‘நிருபர்’ தொழில். நீங்கள் எடுத்துக் கொள்ளும் ரிஸ்க். இதெல்லாம் தேவைதானான்னு கேட்கிறேன்.

    எதில் ரிஸ்க் இல்லை இனிதா? பத்திரிக்கை தொழிலில் தான் ஆத்ம திருப்தி கிடைக்கிறது. சமுதாயப் புல்லுருவிகளை பகல் வேஷம் போட்டு பாமரர்களை ஏமாற்றும் அயோக்கியர்களைப் பட்டவர்த்தனமா துகிலுரித்துக் காட்ட வேறு எப்படி முடியும்?

    என்றவன் கண்ணாடித் தம்ளரை எடுத்து ஐஸ்வாட்டரைப் பருகினான்.

    இந்த இஷ்யூல ‘சாராய சாம்ராஜ்யம்’னு நீங்க எழுதின கட்டுரை படிச்சேன்.

    கட்டுரை எப்படி?

    ரொம்ப பயமா இருக்கு. ஆனா கட்டுரை அற்புதம். ‘சாராய சக்கரவர்த்தியா’ திகழ்ற ஒரு அயோக்கியனின் முகத்திரையைக் கிழிச்சிருக்கீங்க.

    - அவள் சொல்ல, தேவக் அதிர்ந்தான். வியப்புடன் கேட்டான்.

    இனிதா! உங்கப்பாவையே அயோக்கின்னு சொல்றியே?

    தப்பு செய்கிற யாராக இருந்தாலும் குற்றவாளிதான் தேவக்.

    என் வருங்கால மாமனாரை என் முன்னாலேயே தரக்குறைவா பேசறதை நான் அனுமதிக்க முடியாது. இனிதா என்றுகூறிச் சிரிக்க,

    உங்களுக்கு எல்லாமே விளையாட்டு. எப்பவும் சிரிப்பு. என் அப்பாவைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா?

    அரசியலில் முக்கியப் புள்ளி.

    அவருக்கு பத்திரிக்கைக்காரர்களையே பிடிக்காது. அதுவும் இந்த கட்டுரை எழுதினது நீங்கதான்னு தெரிஞ்சா... அதே இடத்தில் டுமீல். எப்படி நம்ம காதல் நிறைவேறும்னு எனக்கு பயமா இருக்கு தேவக்.

    டோன்ட் வொர்ரி இனிதா. அக்கறை கொண்ட பத்திரிகையாளன் நான் நம் காதல் வலுவானது. எப்படியும் ஜெயித்துக் காட்டவிடலாம் திருமணம் என்றால் அது உன்னோடுதான் நம்பு.

    - அவள் கையை அழுத்தப் பற்ற, அவள் விழிகள் கண்ணீரில் பளபளத்தது. ஏக்கமும் நம்பிக்கையுமாய் அவளைப் பார்த்தான்.

    அந்தக் கட்டுரை மேல எழுதியிருந்த, கவிதையை சொல்லுங்க தேவக்!

    "ஏய்த்து வாழுபவர் நாய்கள் - இவர்

    எளியவரை வீழ்த்தும் நோய்கள்!

    மாய்த்து தீய்த்துவிடு தமிழா - இந்த

    மானங்கெட்டவரை இன்றே!"

    - அவன் சொல்ல, அவள் பீதியுடன் பார்த்தாள்.

    இவ்வளவு உஷ்ணம் ஆவேசம், கடுமை... இவையெல்லாம் வேண்டாம். ஆபத்து. நான் பணம் தருகிறேன். நல்ல பிஸினஸ் செய்யலாம். என்றாள்.

    அவன் அவனை ஏறிட்டான். இதழ்களில் புன்னகை நெளிந்தது.

    "பிஸினஸ்தானே? தாராளமா செய்யலாம். ஆனா அது சமூக

    Enjoying the preview?
    Page 1 of 1