Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirin Thavam
Uyirin Thavam
Uyirin Thavam
Ebook75 pages25 minutes

Uyirin Thavam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466572
Uyirin Thavam

Read more from V.Thamilzhagan

Related to Uyirin Thavam

Related ebooks

Related categories

Reviews for Uyirin Thavam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirin Thavam - V.Thamilzhagan

    15

    1

    ராகவியைப் பார்த்த நித்யா அதிர்ந்தாள். உள்ளே அழைத்து அமர்த்தினாள். கையில் செய்தித்தாள். அதில் விளம்பரம் இருந்தது.

    ‘... வாடகைக்கு வயிறு தேவை! விருப்பமுள்ள பெண்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...’ - என விளம்பரம் முகவரியுடன் இருந்தது. விளம்பரத்தின் கீழே ‘நித்யா’ என்றிருந்தது. அந்த நித்யா இவள்தான் என்று ராகவி எதிர்பார்க்கவில்லை.

    ராகவி அவளது தோழி. வசதியான குடும்பத்துப் பெண். வாடகைக்கு வயிறு தர வந்திருக்கிறாள்.

    அப்படி என்ன நிர்ப்பந்தம் இவளுக்கு?

    என்ன நடந்தது ராகவி? இந்த நிலைக்கு என்ன காரணம்? எனக் கேட்டாள் நித்யா.

    வேண்டாம் நித்யா! என் வாழ்க்கையோட திசைமாற்றத்தை தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன செய்யப்போறே? எனக்குத் தேவை பணம். அதுக்காக என் வயிறை வாடகைக்குத் தர வந்திருக்கிறேன். எனக்கு அப்பாய்ன்மென்ட் உண்டா, இல்லையா? என்றாள் ராகவி.

    காலை முதல் பல பெண்கள் வந்து போய் விட்டார்கள். யாரையும் பிடிக்கவில்லை. தன் கணவன் வினுவுடன் சேர்ந்து குழந்தை பெற்றுத் தரும் வேலை.

    அதற்குப் பொருத்தமானவள் ராகவிதான் என முடிவு செய்தாள்.

    உன்னை பிடிச்சிருக்கு. பத்தாயிரம் சம்பளம். மாதந்தோறும். என் கணவனோடு தாம்பத்யம் வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுத் தரணும். பிரசவம் ஆனதும் உன் பெயருக்கு லட்ச ரூபா டெபாசிட் செய்திடுவேன். குழந்தையைத் தந்திட்டு நீ கிளம்பிடனும். புரிஞ்சுதா? நன்றி ததும்பப் பார்த்தாள் ராகவி.

    ஒப்பந்தம் எதுவும் எழுதனுமா?

    வேண்டியதில்லை நித்யா... பந்தம் என்கிற ஒப்பந்தத்தை விடவா எழுத்து ஒப்பந்தம் உசத்தி? உன் வார்த்தையில் நம்பிக்கை உண்டு. அது சரி, ஏன் இப்படியொரு விளம்பரமும் ஏற்பாடும்? என்றாள்.

    நித்யா பதில் சொன்னாள்.

    அவளுக்கும் வினுவிற்கும் மணமாகிப் பல ஆண்டுகள் ஆகிறது. தாய்மையடையவில்லை. டாக்டர் தீபனா அதற்காகப் போராடி வருகிறாள்! நித்யாவை தாய்மை ஏக்கம் வாட்டியது. பொறுமையிழந்தாள். நம்பிக்கை தளர்ந்து விடவே, இப்படியொரு முடிவிற்கு வந்தாள்! விளம்பரமும் கொடுத்து விட்டாள்.

    இதோ, ராகவி கிடைத்துவிட்டாள்! இனி, தன் திட்டத்தில் வெற்றியே என அவள் மனம் குதூகலித்தபோது...

    மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. ராகவியை மாடிக்கு அனுப்பிவிட்டு கதவைத் திறந்தாள்.

    அவளது கணவன் வினு! வெளியூர் கேம்ப் முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வருகிறான்.

    ஹாய் நித்யா! உன்கிட்டே மாறுதல் தெரியுது. என்ன விஷயம்? - அவளை தன்னோடு அணைத்தபடியே வந்தவன் கேட்டான்.

    நான் தாயாகப் போகிறேன்.

    நீ என்ன சொல்றே நித்தி?

    ஆமாங்க வினு. நீங்க மனசு வச்சா உடனே தாயாவேன்.

    நீ பேசறது எனக்குப் புரியலை.

    என்கிட்டே குறை இருக்கு. தாய்மையடைய முடியாது. அதனால இப்படியொரு விளம்பரம் கொடுத்து உங்களுக்கு ஒரு பெண்ணையும் பார்த்து முடிவு பண்ணியாச்சு...!

    - அவள் சொல்ல, கன்னத்தில் பளீரென அறைந்தான்.

    யாரைக் கேட்டு இப்படியொரு முடிவுக்கு வந்தாய்? குழந்தை தேவையென்றால்... ஏதாவது ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளலாமே?

    எனக்கு என் புருஷனோட உண்மையான வாரிசுதான் வேணும்.

    அதுக்காக உன்னை தொட்ட கையில் வேறொருத்தியைத் தொடணுமா?

    ஆமா.

    அது என்னால முடியாது நித்தி! ஐயம் ஸாரி...

    இதுதான் உங்க முடிவா?

    ஆமா...

    அப்ப என் முடிவையும் நான் சொல்றேன் கேட்டுக்கங்க... என்றவள் சுவிட்ச் போர்டு அருகே அவனை அழைத்துப் போனாள்.

    இந்த ப்ளக் துவாரத்துல விரலை வைத்தால்... சுவிட்ச் போட்டால் என்ன ஆகும்?

    ஷாக் அடிக்கும்! உயிர் போகும்.

    நான் சொல்லும் பெண்ணை மணக்க நீங்கள் சம்மதிக்காவிட்டால்... அதுதான் நடக்கும்.

    நித்யா! என பதறியவன் அப்போதுதான் மேல் மாடியிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த ராகவியைப் பார்த்தான். அதிர்ந்தான்.

    அவள் பார்வை அவனது

    Enjoying the preview?
    Page 1 of 1