Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Othapanai
Othapanai
Othapanai
Ebook87 pages34 minutes

Othapanai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஊராளும் பேரன். பேரனையாளும் பாட்டி. எத்தனை தூரம் தான் ஒத்தப்பனையாய் அவள் தாங்குகிறாள் . வாருங்கள் படிக்கலாம்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142806755
Othapanai

Read more from Mala Madhavan

Related to Othapanai

Related ebooks

Reviews for Othapanai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Othapanai - Mala Madhavan

    https://www.pustaka.co.in

    முற்றத்து முல்லை

    Muttrathu Mullai

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 1

    "யாரோடு யாரென்று

    யாரறியக் கூடும் – மணம்

    யாருக்கு யாரென்று

    யார் சொல்லக் கூடும்?"

    நித்யா வெட்ஸ் ரஜீவ்

    பலகை பல வண்ண விளக்குகளால் கட்டப்பட்டிருக்க மின்னும் அவ்விளக்குகளுக்கு நேர்மாறாக இறுக்கமான முகத்துடன் மேடையில் இருந்தனர் மணமக்கள்.

    வாசலில் குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் பட்டுப் புடவை சரசரக்க முன்னும் பின்னுமாய் போய்க் கொண்டிருந்தனர்.

    மண்டபத்தில் ஊஞ்சல் இருந்தாலும் ஊஞ்சலில் மணமக்கள் உட்கார்ந்து பார்க்க வில்லை. ஒரு சின்னக் குழந்தையை இன்னொரு பெரிய குழந்தை லேசாக ஊஞ்சலாட்ட குழந்தையின் அம்மா அதன் வாயில் சாப்பாட்டு ஹாலில் இருந்து எடுத்து வரப்பட்ட இட்லியை ஊட்டிக் கொண்டிருந்தாள். அக்குழந்தை விளையாடியதில் ஊஞ்சல் எங்கும் இறைந்து கிடந்தது இட்லித் துண்டுகள்.

    மணமக்களின் பெயர் எழுதப்பட்ட பலகையைப் பார்த்து நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர் சென்னையில் இருந்து வந்த காலேஜ் ப்ரெண்ட்ஸ். என்னடா இப்படி ஆயிடுச்சு? இதையே தான் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    எல்லோருக்கும் அந்தப் பெயர் பலகையின் கீழ் கழற்றி வைக்கப்பட்ட இன்னொரு பலகையின் கீழ் கண் சென்ற வண்ணம் இருந்தது.

    பின்னே.. அவர்கள் வந்தது இந்தக் கல்யாணத்துக்கு இல்லையே. கழற்றி வைத்த அந்தப் பெயர் பலகையில் இருந்தது ஆனந்த் வெட்ஸ் மீனா.

    ஆனந்த் இந்த ரஜீவின் உயிர்தோழன். இருவரும் சென்னையில் ஒன்றாக காலேஜ் முடித்தவர்கள். ஆனந்தின் கல்யாணம் பார்க்க வந்தவனை இப்படி மாப்பிள்ளையாக்கி..

    இன்னும் மணமக்கள் அப்படியே தான் நின்று கொண்டிருந்தனர்.

    நித்யாவை விட ரஜீவ் இன்னும் இறுக்கமாக. ரஜீவின் பக்கத்தில் இருந்த ஆனந்த் அவன் கையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

    அதனால் எல்லாம் அவன் இறுக்கம் தளர்ந்து விடுமா என்ன? நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல் ரஜீவ் தன் வாயாலேயே கெடுத்துக் கொண்ட காரியம் தான் இது. இன்னும் இங்கில்லாத பெற்றோர் என்ன சொல்லப் போகிறார்களோ என்று வேறு மனதில் யோசனை ஓடியது.

    இதெல்லாம் அறியாத நித்யா அவனோடு ஒட்டி நிற்க இயலாது சற்று இடைவெளி விட்டு நின்று கொண்டு அவனை பார்த்தும் பாராமலும் ஓரத்தில் விழிநீர் துளிர்க்க எடுப்பார் கைப்பிள்ளையாய் யாரிவனோ? எந்த ஊரோ? எனத் தவித்துக் கொண்டிருந்தாள்.

    ஆனந்தின் அம்மா இரட்டை நாடி கனகம் தன் உடம்பைத் தூக்க முடியாது நடந்து வந்து

    ஏம்ப்பா ரஜீவு! இப்பக் கூட நீ விலகலாம். எம் புருஷன் சவால் விட்டாருன்னு இந்தப் பொண்ணை ஏத்துக்க வேணாம். உன்னப் பெத்தவங்க பாவம்யா... நித்யாவுக்கு என்ன.. மாப்பிள்ளையா கிடைக்காது? அவங்க சொந்தத்துல யாராவது கிடைப்பாங்க.. நீ இறங்கி வாய்யா! கைபிடித்து இழுத்தாள் அவள்.

    கனகம்! விட்ட சவால்ல ஜெயிக்கணுமுல.. அவன் தான் ஆம்புள. சும்மா வந்து அவன் மனசைக் கலைக்கற வேலை வச்சுக்கிடாத! சத்தம் போட்டார் ஜமீந்தார் லிங்கம். ஆனந்தின் அப்பா.

    ஏங்க! அவங்க அப்பாரு என்ன சொல்வாரு? இழுத்த கனகத்திடம்...

    ம்...நொன்ன சொல்வாரு..போடி உள்ள.. கர்ஜித்த லிங்கத்தைக் கண்டு சர்வாங்கமும் ஆட நின்றாள் நித்யா.

    கைபிடிக்க நின்றவனோ விறைத்தான். அதற்குள் யாருக்கோ போன் பண்ணி வெகு நேரம் பேசி விட்டு வந்த ஆனந்த் அவன் காதருகில் சொன்னான். காம் டவுன்டா நண்பா. நித்யாவும் நல்லா படிச்ச பொண்ணு தான். உனக்கு ஈடா இன்ஜினியருக்குப் படிச்சிருக்கு!

    அடுத்த சில நிமிடங்களில் மாங்கல்யம் தந்துனானே என அய்யர் மந்திரம் சொல்ல நித்யாவின் கழுத்தில் மஞ்சள் கயிறைக் கட்டினான் ரஜீவ்.

    நித்யாவின் பெற்றோரைப் பார்த்து எகத்தாளமாகச் சொன்னார் லிங்கம்.

    என்னப்பா! வலசி! சந்தோஷமா? என் வீட்டுல தோட்டக்காரனா இத்தனை காலம் உழைச்சதுக்கு கை மேல பலன் கிடைச்சிருக்கு பார்த்தியா? நல்ல மாப்பிள்ளையா புடிச்சு போட்டுட்டேன்.. உன்னால முடிஞ்சிருக்குமா? ஹான்!"

    "

    Enjoying the preview?
    Page 1 of 1