Nivethitha
()
About this ebook
இளம் வயதில் தன்னுடைய கல்லூரி நாட்களில் ‘டிரக்’ எனப்படும் போதை மருந்துப் பழக்கத்திற்கு ஆளான ஒரு பெண்ணின் கதை இது. கல்லூரி வாழ்க்கையில் ஒரு மாணவனாகட்டும், மாணவியாகட்டும் நண்பர்கள் சேர்க்கை என்பது அவர்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைக்கக் கூடியது, நல்ல நண்பர்கள் சேர்க்கையால் படிப்பில் ஆர்வம் தூண்டப்பட்டு நல்ல மதிப்பெண்களுடன் தேறி, வாழ்வில் உயர்நிலை அடைந்தவர்கள் எத்தனையோ பேர். அதேபோல பிறப்பில் நல்ல குடும்பத்தில் பிறந்தாலும் வளர்ப்பில் நல்ல முறையில் வளர்க்கப்பட்டாலும், கெட்ட நண்பர்கள் சகவாசத்தால் பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, தன் பேரைக் கெடுத்துக் கொண்டது மட்டுமின்றி தன் பெற்றோருக்கும் தலைகுனிவைத் தேடித் தந்தவர்கள் எத்தனையோ பேர். இந்த நாவலின் நாயகி நிவேதிதாவும் நல்ல உயர்ந்த குடும்பத்தில் பிறந்து செல்வச் சீமாட்டியாய் வளர்க்கப்பட்டாலும் சில கெட்ட தோழிகள் சகவாசத்தால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையையே சீரழித்துக் கொள்கிறாள். மனைமாட்சி எனும் மாத இதழில் இந்த நாவல் வெளிவந்த போது ‘இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய கதை இது’ என பலர் விமர்சனம் எழுதி இருந்தார்கள்.
பொதுவாக நாவல்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு எழுதப்படாமல் ஏதேனும் ஒரு படிப்பினையைத் தருவதாக அமைய வேண்டும் என்று என்னுள் எப்போதும் ஆழமான ஒரு எண்ணம் உண்டு. அந்த எண்ணத்தின்படியே இந்த நாவலை வடிவமைத்திருக்கிறேன் .
இந்நாவலைப் படிக்கும் வாசகர்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கீதா தெய்வசிகாமணி
Read more from Geetha Deivasigamani
Manapenne Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsUngal Uyarvu... Ungal Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu... Aarogyam... Ilamai Rating: 0 out of 5 stars0 ratingsArul Paamalai Rating: 0 out of 5 stars0 ratingsDhinam Oru Samayal Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kuzhanthaikku Aayiram Peyargal Rating: 0 out of 5 stars0 ratingsVazhga Manamakkal Rating: 0 out of 5 stars0 ratingsMagale Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsNambikkai Vetri Perum Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsDhinamum Oru Thiruvaakku Rating: 0 out of 5 stars0 ratingsUn Samayalaraiyil Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Sudha Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kaanungal Rating: 0 out of 5 stars0 ratingsPothu Arivu Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsSappida Vaarigala Rating: 0 out of 5 stars0 ratingsAvvai Sol Virumbu Rating: 0 out of 5 stars0 ratingsMicrowave Ovanil Samaikka Rusikka Rating: 0 out of 5 stars0 ratingsSilaiyum Neeye Sirpiyum Neeye Rating: 0 out of 5 stars0 ratingsUrchagam Ungal Kaiyil Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nivethitha
Related ebooks
Pani Vizhum Malarvanam Rating: 0 out of 5 stars0 ratingsIrattai Naakkugal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsVizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsInithaga Oru Vidiyal Rating: 4 out of 5 stars4/5Tamil Selvi Rating: 0 out of 5 stars0 ratingsPonnaadai Rating: 4 out of 5 stars4/5பொன்னாடை Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothum Rating: 5 out of 5 stars5/5Deivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Ennul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsEnakkul Nee! Rating: 5 out of 5 stars5/5Karuppu Malligai Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Thavam Rating: 0 out of 5 stars0 ratings...Enavey, Ennodu Vaa! Rating: 5 out of 5 stars5/5Irattai Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsVeesum Thendral Naan Unakku Rating: 0 out of 5 stars0 ratingsNillu Nivedha! Rating: 0 out of 5 stars0 ratingsPirivu Ini Illai Rating: 5 out of 5 stars5/5Ramya Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Vaazhthi Paadukirean! Rating: 5 out of 5 stars5/5Uraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5Theruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsThalli Nil Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsIvala En Magal? Rating: 0 out of 5 stars0 ratingsIruthi Othigai Rating: 5 out of 5 stars5/5Vaigarai Ragangal Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiyil Oru Malligai! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nivethitha
0 ratings0 reviews
Book preview
Nivethitha - Geetha Deivasigamani
http://www.pustaka.co.in
நிவேதிதா
Nivethitha
Author:
கீதா தெய்வசிகாமணி
Geetha Deivasigamani
For more books
http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
முன்னுரை
இளம் வயதில் தன்னுடைய கல்லூரி நாட்களில் 'டிரக்' எனப்படும் போதை மருந்துப் பழக்கத்திற்கு ஆளான ஒரு பெண்ணின் கதை இது. கல்லூரி வாழ்க்கையில் ஒரு மாணவனாகட்டும், மாணவியாகட்டும் நண்பர்கள் சேர்க்கை என்பது அவர்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைக்கக் கூடியது, நல்ல நண்பர்கள் சேர்க்கையால் படிப்பில் ஆர்வம் தூண்டப்பட்டு நல்ல மதிப்பெண்களுடன் தேறி, வாழ்வில் உயர்நிலை அடைந்தவர்கள் எத்தனையோ பேர். அதேபோல பிறப்பில் நல்ல குடும்பத்தில் பிறந்தாலும் வளர்ப்பில் நல்ல முறையில் வளர்க்கப்பட்டாலும், கெட்ட நண்பர்கள் சகவாசத்தால் பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, தன் பேரைக் கெடுத்துக் கொண்டது மட்டுமின்றி தன் பெற்றோருக்கும் தலைகுனிவைத் தேடித் தந்தவர்கள் எத்தனையோ பேர். இந்த நாவலின் நாயகி நிவேதிதாவும் நல்ல உயர்ந்த குடும்பத்தில் பிறந்து செல்வச் சீமாட்டியாய் வளர்க்கப்பட்டாலும் சில கெட்ட தோழிகள் சகவாசத்தால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையையே சீரழித்துக் கொள்கிறாள். மனைமாட்சி எனும் மாத இதழில் இந்த நாவல் வெளிவந்த போது 'இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய கதை இது' என பலர் விமர்சனம் எழுதி இருந்தார்கள்.
பொதுவாக நாவல்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு எழுதப்படாமல் ஏதேனும் ஒரு படிப்பினையைத் தருவதாக அமைய வேண்டும் என்று என்னுள் எப்போதும் ஆழமான ஒரு எண்ணம் உண்டு. அந்த எண்ணத்தின்படியே இந்த நாவலை வடிவமைத்திருக்கிறேன்
எழுத்தார்வத்தை என் இரத்தத்தில் ஊட்டிய என் தாய் நாவலாசிரியை திருமதி லீலா கிருஷ்ணன் அவர்களுக்கும் என் எழுத்துப் பணிக்கு என்றும் துணைக்கரம் கொடுத்து வரும் கணவர் வழக்கறிஞர் என். தெய்வசிகாமணி அவர்களுக்கும் என் இதயபூர்வ நன்றி.
அடுத்தடுத்து புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்று என்னுள் தணியாத தாகத்தை ஏற்படுத்திய வானதி திருநாவுக்கரசு அய்யா அவர்களுக்கும், அவர்தம் குமாரர் திரு. ராமனாதன் அவர்களுக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்நாவலைப் படிக்கும் வாசகர்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி. வணக்கம்.
கீதா தெய்வசிகாமணி
1
டி.வியில் விளம்பரப் படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. துள்ளலும் துடிப்புமாய் குழந்தைகளும் இளம் நங்கைகளும், இளைஞர்களும் சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் கும்மாளமிடுகிறார்கள். எதிரே பார்த்துக் கொண்டு அமர்ந்து கொண்டிருந்த நிவேதிதாவின் மனதில் துள்ளலும் இல்லை. துடிப்பும் இல்லை. கண்கள் டி.வி திரையில் பதிந்து இருந்தாலும் எண்ணங்கள் எங்கெங்கோ கடந்து சென்ற வசந்த காலத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இப்போது அவள் வாழ்க்கையில் இலையுதிர் காலம். விதி எனும் வெப்பக் காற்று வீச வீச தன் உற்சாகங்கள், துள்ளல்கள், துடிப்புகள், சந்தோஷங்கள் இலைகளாக உதிர்ந்து கொண்டிருக்கின்றன.
ஏய்... நிவேதிதா...
ஏய்... உன்னைத்தாண்டி. காது கேட்குதா? செவிடாயிடுச்சா?
இதோ வரேன்.
கணவன் ராகேஷின் கர்ண கொடூரமான குரலுக்குக் கட்டுப்பட்டவளாய் எழுந்து உள்ளே போகிறாள்.
ஃபிரிட்ஜினுள் குடைந்து கொண்டிருந்த ராகேஷ் இவளைக் கண்டதும் நிமிர்கிறான்.
எங்கே இங்க வச்சிருந்த புது பாட்டில்?
தெரியலைங்க.
என்னடி தெரியலைன்னு அசால்ட்டா பதில் சொல்றே? புது ப்ராண்டுடி அது. ஃபிரெண்ட் லண்டன்லே இருந்து கொண்டு வந்தான். இங்கே வந்து தேடு.
நிவேதிதா தன் தலைவிதியை நொந்தவளாய் ஃபிரிட்ஜினுள் தேடி அந்த ஃபாரின் பிராந்தி பாட்டிலை வெளியே எடுக்கிறாள்.
இதா பாருங்க.
அதைக் கண்ட ராகேஷின் முகம் ஆயிரம் வால்ட் பல்ப் மாதிரி பிரகாசிக்கிறது.
எங்கே இருந்து எடுத்தே? என் கண்ணில படலையே.
இந்த தயிர் ஜாடிக்குப் பின்னாலதானே இருந்துச்சு.
இதோ பாரு. இப்ப சொல்றேன் கேட்டுக்க. வேணும்னா உங்கப்பாகிட்டே சொல்லி இன்னொரு பிரிட்ஜ் வாங்கி தயிர் மோர் கண்றாவியெல்லாம் வச்சுக்க. என் பாட்டிலை உள்ளே தள்ளி விட்டுட்டு உன் தயிரை வைக்க வேண்டிய தேவை இல்லை. அரைமணி நேரமா தேட விட்டுட்டியே சனியனே...
வார்த்தைகளின் சூடு பொறுக்க மாட்டாமல் நிவேதிதாவின் கண்களிலிருந்து கண்ணீர் வெளிப்படுகிறது.
"ஆ...