Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Sudha
Meendum Sudha
Meendum Sudha
Ebook84 pages32 minutes

Meendum Sudha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"கற்பெனும் ஒரு நிலை சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்” எனும் மகாகவியின் வாக்குப்படி ஆணும் கற்புநெறி தவறாமல் வாழ்க்கை வாழ வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி எழுதிய நாவல் இது. நாவல் கதாநாயகன் மனோகருக்கு வாழ்க்கைப்பாடம் புகட்டிய சுதாவின் கதை இது.

இந்த நாவல் பற்றி வாசகர்கள் கருத்தினை வரவேற்கிறேன்.

கீதா தெய்வசிகாமணி

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134805748
Meendum Sudha

Read more from Geetha Deivasigamani

Related to Meendum Sudha

Related ebooks

Reviews for Meendum Sudha

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Sudha - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    மீண்டும் சுதா

    Meendum Sudha

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    என்னுரை

    "கற்பெனும் ஒரு நிலை சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்" எனும் மகாகவியின் வாக்குப்படி ஆணும் கற்புநெறி தவறாமல் வாழ்க்கை வாழ வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி எழுதிய நாவல் இது. நாவல் கதாநாயகன் மனோகருக்கு வாழ்க்கைப்பாடம் புகட்டிய சுதாவின் கதை இது.

    எழுத்துலகப் பணியில் உடனிருந்து ஊக்கம் அளித்து வரும் கணவர் வழக்கறிஞர் என்.தெய்வசிகாமணி அவர்களுக்கு நன்றி. தாயார் மறைந்த நாவலாசிரியை திருமதி லீலா கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த நாவலை சமர்ப்பிக்கிறேன்.

    இந்த நாவல் பற்றி வாசகர்கள் கருத்தினை வரவேற்கிறேன்.

    கீதா தெய்வசிகாமணி

    23, 'அபிநவ் பேலஸ்'

    ஜெத்நகர் முதல் மெயின்ரோடு,

    மந்தவெளி, சென்னை - 28

    தொலைபேசி: 044-24933886

    1

    மாலை...

    வழக்கம் போல அந்தப் பேருந்து சுதா உள்பட மற்ற பயணிகளை வெளியே தள்ளிவிட்டு மறுபடியும் புழுதியைக் கிளப்பிக் கொண்டு விரைகிறது.

    பஸ்ஸிலிருந்து இறங்கிய சுதா சுற்று முற்றும் பார்த்தவளாய் புடவையை இழுத்துப் போர்த்திக்கொண்டு வீடு நோக்கி விரைகிறாள். துள்ளலும் துடிப்புமாய் இருக்கும் அவளது நடையில், இன்று ஒரு தொய்வு, தளர்ச்சி! மகிழ்வும் குறும்பும் போட்டிபோடும் அவளது முகத்தில், இன்று ஒரு வாட்டம், வேதனை! தெருமுனையில் விளையாடும் குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம் கூட, இன்று அவளுக்கு வேம்பாகக் கசக்கிறது.

    வீட்டினுள் நுழையும் போதே மனதின் இறுக்க மேகமூட்டம், எங்கே கண்ணீர் மழையாய்ப் பொழிந்து விடுமோ என நினைத்துத் தன்னை முற்றிலும் கட்டுப்படுத்தியவளாய்...

    அம்மா... வென்னீர் போடுங்க. தலைக்குக் குளிக்கணும்

    குளிக்கலாம். முதல்ல காப்பியைக் குடி. என்ன, முகமெல்லாம் என்னவோ போல இருக்கு, காய்ச்சலா?

    அருகில் வந்து சுதாவின் கழுத்தில் கை வைத்துப் பார்க்கிறாள், ஜானகி.

    ஒண்ணுமில்லேம்மா... லேசா... தலைவலி

    தலை வலிக்கிறப்ப... என்ன தலைக்குக் குளியல்? பேசாமா உடம்போட ஊற்றிக்கோ... இதப் பாரு... தெருவே அல்லோல கல்லோலப்படறது. உனக்குத் தெரியுமா? அந்தக் கோடி வீட்டுக் கோமளா, அந்த கிறிஸ்தவப் பையனோட ஓடிட்டாளாம்!

    என்னோட இந்த நிலைக்கு அவளே பரவாயில்ல. உன் பொண்ணு வந்து நிக்கிற கோலம் புரியாம ஊர் அலங்கோலத்தைப் பத்திப் பேசறியேம்மா.

    என்னடி காதில் விழுந்ததா நான் சொன்னது? கோமளாவைத்தான் உனக்கு நல்லாத் தெரியுமே!

    தலைவலின்னு சொல்றேன். ஏம்மா நீயும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க? கோமளா புராணம் இப்ப நமக்குத் தேவையா? கொஞ்சம் என்னைத் தனியா விடுங்களேன்.

    அம்மாவை பார்த்துக் கத்திய சுதா, டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்கு விரைகிறாள்.

    'என்ன தான் தண்ணீரை மொண்டு மொண்டு தலையில் ஊற்றினாலும், நான் பழைய சுதாவாக ஆக முடியுமா? தலையில் எழுதிய எழுத்து தண்ணீரால் அழிந்து விடுமா என்ன?'

    ஒரு வெறி வந்தது போல், தண்ணீரை மொண்டு மொண்டு தலைக்கு ஊற்றிக் கொள்கிறாள். வென்னீரைக் காட்டிலும் சூடான கண்ணீர் கண்களில் வெளிப்பட்டுக் கன்னங்களை நனைக்கிறது. ‘ஓ' வென்று கதறிக் கதறி அழ வேண்டும் போல இருக்கிறது. மனதைச் சிறிது அமைதிப்படுத்திக் கொண்டவளாய்ப் பாத்ரூமை விட்டு வெளியில் வந்து தன் அறைக்குள் புகுந்து கொள்கிறாள்.

    இரவு...

    புரண்டு புரண்டு படுத்த சுதாவின் மனதில் எண்ண அலைகள் புரள ஆரம்பிக்கின்றன. திரும்பத்திரும்ப அன்று மாலை நடந்த நிகழ்ச்சியே அவள் எண்ணத்தில் நிழலாடுகிறது. மனம் மறுபடியும் அந்த நிகழ்ச்சிக்குத் தாவுகிறது.

    சுதாம்மா... உங்களை ஜி.எம். கூப்பிடறாரு

    ப்யூன் ஏகாம்பரத்தின் குரல் கேட்டு நிமிர்கிறாள் சுதா.

    அன்று டைப் செய்த கடிதங்களை எடுத்துக்கொண்டு மனோகர் எம்.பி.ஏ. என்ற பிராஸ் பெயர் பலகையைத் தாங்கியிருந்த தள்ளு கதவைத் திறந்து கொண்டு, அந்த ஏஸி அறைக்குள் நுழைகிறாள் சுதா.

    ஒரு ஃபைலினுள் மூழ்கியிருந்த மனோகர், சுதா வந்ததைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1