Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avvai Sol Virumbu
Avvai Sol Virumbu
Avvai Sol Virumbu
Ebook56 pages20 minutes

Avvai Sol Virumbu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஔவை சொல் விரும்பு எனும் இந்த நூல் ஔவையாரது நூல்களான ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை நல்வழி பாடல்களை திறனாய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத இந்த நூல்களில் ஒரே கருத்து. உதாரணமாக "ஈகை குணம்" என்று எடுத்துக் கொண்டால் இந்த நான்கு நூல்களிலும் வெவ்வேறு இடங்களில் எவ்வாறு வலியுறுத்தி அறிவுரை புகட்டுகிறார் என்பதை கூறியுள்ளார். இந்த கருத்துக்களை தொடுத்து கோர்வையாக ஒரு கதை போல ஔவை பாட்டியிடம் ஒரு இளம்பெண் உரையாடுவது போல மிக அழகாக எழுதி இருக்கிறார் ஆசிரியர் கீதா தெய்வசிகாமணி.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134805747
Avvai Sol Virumbu

Read more from Geetha Deivasigamani

Related to Avvai Sol Virumbu

Related ebooks

Reviews for Avvai Sol Virumbu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avvai Sol Virumbu - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    ஒளவை சொல் விரும்பு

    Avvai Sol Virumbu

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    ஒளவையார் தோற்றம், வரலாறு

    ஆத்திச்சூடிதான் நாம் எழுதப்படிக்க ஆரம்பிக்கும் போதே தமிழில் கற்கப்படும் முதல்நூல். இதை உலகிற்குத் தந்த பெருமைக்குரியவர் ‘தமிழ்ப்பாட்டி' என்று அன்புடன் அழைக்கப்படுகிற ஔவையார்.

    ஔவையார் வரலாறு காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. அவர் ஆதிபகவன் ஆகிய இருவருக்குப் பிறந்து (2ஆம் நூற்றாண்டு B.C) பிறந்ததும் பெற்றோர்களால் கைவிடப்பட்டுப் பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். கன்னிப் பருவத்திலேயே முதுமையையும், துறவறத்தையும் விநாயகப் பெருமானின் பேரருளால் பெற்றதாகவும், அதியமானிடம் நெருங்கிய நட்பு கொண்டு அவரால் ஆதரிக்கப்பட்டு அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப் பெற்று உண்டு அதனால் அழியாத உடலையும், நீண்ட ஆயுளையும் பெற்றார். (2-8 நூற்றாண்டு) அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்ற அவர் தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார். பல மன்னர்களுக்கு நல்ல ஆலோசனையும், புத்திமதிகளையும் வழங்கியிருக்கிறார். அற்புத ஆற்றல்கள், இறைவனின் திருவருள், சித்திகள் கைவரப் பெற்ற இவர் மிக்க மனஉரம் கொண்டவர். சங்கப் புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காகப் சங்க புலவர்களை மீண்டும் கூட்டி. மதுரை கோவில் பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப் பலகையைத் தோன்றச் செய்து அதன் மீது திருக்குறள் சுவடியை வைத்துத் தாங்கச் செய்து குறளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார். குறளை அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்பிற்குப் பிறகு அவருடைய மகள்கள் அங்கவை, சங்கவை இருவருக்கும் மலையமான் மன்னரை மணமுடித்து வைத்தார். (8ஆம் நூற்றாண்டு)

    சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை, குதிரை மீதேறிக் கொண்டு திருக்கயிலாயம் செல்லும் பொழுது விநாயகர் பூஜையை செய்து, விநாயகர் அகவலைப் பாடி, விநாயகப் பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரே உடலுடன் திருக்கயிலாயம் அடைந்தார்.

    இவை அனைத்தும் மரபு வழிக்கதைகளாலும், பாடல்களாலும் அறியப்படுபவை.

    ஆராய்ந்து பார்க்குமிடத்து, மூன்று ஔவையார்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1