Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iranduadukku Aagayam
Iranduadukku Aagayam
Iranduadukku Aagayam
Ebook166 pages14 minutes

Iranduadukku Aagayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580127104770
Iranduadukku Aagayam

Read more from Pa. Vijay

Related to Iranduadukku Aagayam

Related ebooks

Reviews for Iranduadukku Aagayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iranduadukku Aagayam - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    இரண்டடுக்கு ஆகாயம்

    Iranduadukku Aagayam

    Author:

    பா. விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கல்

    அழிந்த திலகம்

    தொடர்புகள்

    குயில்பாட்டு

    பூக்கள்...

    சிலேட்டும்... பல்பமும்...

    ஞானக்குளியல்

    நதிமூலம்

    தாவரபரணி

    உலகப் பொதுமறை

    உயிர்களிடத்தில் அன்பு வேணும்!

    மொழிபெயர்ப்பு

    தாய்ப்பால்

    கனவு மெய்ப்பட வேண்டும்!

    முதுகெலும்பு

    நினைவின் குரல்

    வேண்டுதல்

    விருப்பம்

    அமைதி

    தூக்கம்

    எல்லை

    உருவம்

    மௌனம்

    அறிவிப்பு

    கண்ணாடி...

    சிலை

    தாரக மந்திரம்

    ஏப்ரல் 1

    கல்

    கல்...

    கல்லில்தான் எத்தனைக் கல்

    அத்தனை வகைக் கல்லிலும்

    மனிதருண்டு.

    சுமைதாங்கிக் கல்...

    ஒவ்வொரு வீட்டுக்கும்

    ஏதாவது ஒரு மனிதன்

    சுமைதாங்கிக் கல்லாகவே இருப்பான்!

    மைல்கல்...

    இந்த வகை மனிதர்கள்

    வெற்றிப் பாதையிலிருப்பவர்கள்

    லட்சியவாதிகள் தங்களின்

    பயணத்தில் இலட்சியங்களைக் கொண்டு

    அடைந்த தூரத்தை அறிவர்!

    பாறாங்கல்...

    எல்லாத் திண்ணைகளிலும்

    'தேமே' என தூங்கி வழியும்

    மனிதர்கள் இவ்வகையினரே!

    செங்கல்...

    இந்த வகை மனிதர்கள்

    தொழிலாளர்களே!

    அவர்களை வைத்தே ஆலைகள் கட்டப்படும்!

    ஆனால் வெளித்தெரியாதபடி

    பூசப்பட்டு விடுகிறார்கள்!

    கருங்கல்...

    இந்த வகை மனிதர்கள்

    நமது முன்னோர்களே!

    அவர்கள் எழுப்பிய

    கட்டிடங்கள் (எண்ணங்கள்)

    காலம் வென்று வாழ்கின்றன

    கூழாங்கல்...

    இன்றைய இளைஞர்கள் எல்லாம்

    இவ்வகையே.

    ஒரு தோல்வி பாரம் அழுத்தியதும்

    பொடிந்து போவார்கள்!

    ஓடைக்கல்...

    இந்த வகை மனிதரை

    டீக்கடை-பேருந்து நிறுத்தம்

    பொதுவிடங்களில் பார்க்கலாம்.

    சதா ஒரு சலசலப்பை

    உண்டுபண்ணிக் கொண்டே இருப்பார்கள்!

    அரிசிக்கல்...

    இலக்கியமென்ற அரிசியில்கூட

    இப்படி சில கல்லுண்டு.

    படிப்பவர்கள் சிந்தையில் கடிபட்டு

    வலியும் கொடுப்பதுண்டு!

    துவைக்கும் கல்...

    இந்த வகை மனிதர்கள் சிலரே!

    வள்ளலார், விவேகானந்தர், பெரியார்

    என சிறு பட்டியலே

    சமுதாய அழுக்குகளைத் தீர்த்தவர்கள்!

    ஆட்டாங்கல்...

    இவ்வகை பெரும்பாலும் பெண்களே!

    அக்கம் பக்க ரகசியங்களை

    வதந்திகளோடு சேர்த்து

    அரைத்துக்கொண்டே இருப்பார்கள்!

    தெருக்கல்...

    இதிலும் மனிதவகையுண்டு

    இந்த கற்கள் போலவே

    தெருவில் கிடப்பார்கள்

    இந்தியாவில் இவ்வகைதான்

    அதிகரிப்பில் உள்ளது!

    கண்ணாடிக் கல்...

    இவர்கள் கலைஞர்களே!

    உண்மையைப் பிரதிபலிப்பவர்கள்

    மிகமிக மென்மையுடையவர்கள்.

    விழுந்தாலோ! யாராவது

    உடைத்தாலோ

    சட்டென உடைந்து போய்விடுபவர்கள்!

    பளிங்குக் கல்...

    ஏசு-புத்தர்-காந்தி

    அதற்கு பின்

    இந்த வகை கல்லை

    யாரும் காணவில்லை!

    நவரத்தினக் கல்...

    இந்த வகை கற்களாய்

    மாறிடத்தான்

    பல கற்கள் வாழ்வில்

    முண்டியடிக்கின்றன!

    படிக்கல்...

    இந்த வகை மனிதர்களாக

    இப்போதைக்கு உள்ள

    எந்த வகைக் கற்களும்

    தயாராக இல்லை!

    அழிந்த திலகம்

    ஒரு விசித்திர உருவம்

    தென்பட்டது.

    இதயத்தின் வடிவில்

    தேவதை லட்சணத்தில்

    பூவின் சாயலில்

    அந்த உருவம் இருந்தது!

    ஆனால்!

    பயங்கரக் காயங்களோடு

    காணப்பட்டது

    குழந்தையின் குரலில்

    Enjoying the preview?
    Page 1 of 1