Kaarsilambu Osaiyile Part - 1
By Pa. Vijay
()
About this ebook
காப்பிய கவிப்பெருந்தகை வாலி அவர்களின் அணிந்துரை
கதையும் கதை மாந்தரும் ஏற்கனவேயே நமக்கு நன்கு பரிச்சயமான போதிலும் சிலம்பைச் சின்னச் சின்ன வார்த்தைகளில் சிறைப்படுத்தியிருப்பதும்; உரைநடைக்கு கவிதைகளுக்கே உரித்தான உத்திகளான -உவமை, உருவகம், உள்ளீடு ஆகிய மூன்றையும் நவீனப்படுத்தி ஆங்காங்கே நிரவியிருப்பதும்; வலிய வைக்காமல் இளைபுத் தொடையை இயல்பாகக் கையாண்டிருப்பதும்;
இந்த நூலுக்கு ஒரு தனித்தன்மை இருப்பதைச் சுட்டுகின்றன. சம்பவங்களை நகர்த்திக் கொண்டு போவதில் உள்ள சமத்காரமும்; கவித்துவத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்த வல்ல சொற்சாலமும்; இளமை கொழிக்கும் இசைத் தமிழோடு இறைச்சிப் பொருளை சரியான சதவிகிதத்தில் கலந்து வழங்குனிற் நேர்த்தியும்;
இனிய இளவல் கவிஞர் பா.விஜய் வாய்த்துள்ள பட்டறிவையும், பாட்டறிவையும் பறை சாற்றுகின்றன. படிக்கும் போது பல்வேறு இடங்கள் என்னை பிரமிக்க வைத்தன.
பசுந்தமிழில் பலரையும் ஈர்க்கவல்ல நவீனகாலப் பாண்டித்தியம்- பா.விஜய்க்கு வெகுவாகவே வசப்பட்டிருக்கிறது எனலாம்.
நின்று நிதானித்து சொல் உளியை சிரத்தையோடு பயன்படுத்தி செதுக்கப் பெற்ற ஒரு செந்தமிழ்ச் சிற்பம் என்று இந்த நூலை நான் முன்மொழிகிறேன்; வையம் வழிமொ ரீயும் என்பதில் எட்டுனை அய்யமும் எனக்கில்லை.
என்னை ஈர்த்த வரிகள் எவ்வளவோ! அனைத்தும் நான் சுட்டுவது ஆகக்கூடிய காரியமல்லவென்றாலும்.
பிடித்தமான சில வரிகளை நான் பட்டியலிட்டுக் காட்ட விழைகிறேன். கீழ்க்கண்ட வரிகள் என்னுள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியவை.
இளங்கோ துறவறம் பற்றி
இசைக்கையில்;
இளங்கோ ஒரு கத்திதான்!
ஆனால்
தலையெடுக்கிற கத்தி அல்ல
களையெடுக்கிற கத்தி
சோழனைப் பற்றிச்
சொல்லுகையில்;
இமயத்தை இழுத்து
இடுப்பில் கட்டிக் கொண்டு
குமரிமுனை வரைக்கும்
குருதி வழிய நடந்தவன்!''
கண்ணகி பற்றிக்
கூறுகையில்;
குற்றாலம்
கறுப்பாகிக் கொட்டுவது
போன்ற
கூந்தல்
மாதவியைப் பற்றிக்
கூறுகையில்;
குழந்தையைக் கூட
குனிந்து தூக்காத
வீர புருஷர்களையும்
ஒரு புருவ அசைவில்
புடவைக்குக் கொசுவம்
மடிக்க வைப்பாளாம்!
இப்படி எவ்ளவோ சொல்லிக் கொண்டு போகலாம். வாசகனை வசமிழக்க வைக்கும் வரிகள் ஏராளமாயிருக்கின்றன.
தொட்டால் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதே ஒரு நல்ல நூலுக்கு அடையாளம். அந்த அடையாளம் இந்த நூலை அடைகாத்து நிற்கிறது. நூலின் இறுதிப் பகுதியில், கண்ணகியின் திருவாயால் ஆலவாயின் பெருமையையும்,, கோலோச்சிய வேந்தனின் அருமையையும் அவள் சினத்தினூடே வெளிப்படல் அற்புதமாக இருக்கிறது. வரலாறும் வண்ணத் தமிழும் வரிக்கு வரி கைகோர்த்து நின்று கவிஞனின் மொழி ஆளுமையை முரசறைகின்றன.
கூடல் மாநகரைக் கண்ணகி தீக்கிரையாக்குகையில் கூறுகின்ற வாசகங்களில் இளைபுத் தொடை கோலோச்சுகிறது.
'விட்டுவிடு விட்டுவிடு' என்று தொடங்கி 'சுட்டுவிடு' 'நட்டுவிடு' என்று இயல்பாக முடிகின்ற வாக்கியங்களில் பழங்காப்பியம் புதுமுலாம் பூசிக்கொண்டு நிற்கிறது எனலாம்.
சாத்தனார் சொல்லி முடித்தபின், கடந்து சென்ற காலத்தைச் சொல்லுகையில்
மாதங்கள்
கொக்கின் வரவறிந்த
மீன்களாய் ஓடின
என்றுரைப்பது ஏரார்ந்த தமிழுக்குப் பா.விஜய்யின் பேனா ஏற்றம் சேர்ப்பதாக இருக்கிறது.
சுருங்கச் சொன்னால் 'காற்றிலம்பு ஓசையிலே' என்னும் இக்குறுங் காப்பியத்தில் படவுலகைத் தாண்டியும் ஒரு பிரபல்யத்தைக் கவிஞர் பா.விஜய்க்கு ஏற்படுத்தித் தருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.
படவுலகில், பாடலாசிரியர்கள் பட்டியலில் புதிய வரவுகள் என்று நிறையக் கவிஞர்கன் இன்று பிறக்கின்றார்கள். எல்லோருமே அவரவர் எழுத்தில் அவரவர்க்குரிய மொழி ஆளுமையையும் கற்பனை வளத்தையும் பிலிற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்கிறேன்.
தமிழின் தகவை ஒருவர் இருவர் சொல்லி முடியாது. எண்ணிறந்த கவிஞர்களின் தோறற்ம் இங்கு வைகலும் ஏற்பட வேண்டும். அவர்களது எழுதுகோல்களால் தமிழ் வலிவும் பொலிவும் மேலும் பெற்று மேதினியை வாழ்விக்க வேண்டும்.
என் இனிய இளவல் பா.விஜய் நல்ல கவிஞர்; நல்ல மனிதர்; நல்ல அன்பர்; நல்ல பண்பர்.
அவர் இதுபோன்ற இசைமிகு காவியங்களை இன்னும் யாக்க வேண்டுமென்று வாழ்த்தி, இறையருளை இறைஞ்சி, மீண்டும் என் மனமார்ந்து வாழ்த்துகளை நூலாசிரியருக்குச் சொல்லி இந்த அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.
சென்னை
13.10.04
வாலி
Read more from Pa. Vijay
Aranmanai Ragasiyam Part -2 Rating: 0 out of 5 stars0 ratingsIntha Sippikkul Rating: 5 out of 5 stars5/5Udaintha Nilakkal - Part 1 Rating: 4 out of 5 stars4/5Silmishiye… Rating: 4 out of 5 stars4/518 Vayasule Rating: 3 out of 5 stars3/5Puligalin Puthalvargal Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Part -1 Rating: 4 out of 5 stars4/5Pa. Vijay Oru Paarvai Rating: 5 out of 5 stars5/5Udaintha Nilakkal Part 2 Rating: 5 out of 5 stars5/5Sowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal@Kaadhaligal.com Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Kalvettugal Rating: 2 out of 5 stars2/5Kanne Nee Chaos Theory Rating: 0 out of 5 stars0 ratingsApple Mathiri Unnai Appadiye Rating: 0 out of 5 stars0 ratingsKaarsilambu Osaiyile Part-2 Rating: 5 out of 5 stars5/5Bachelor Arai Rating: 0 out of 5 stars0 ratingsMothu... Munneru... Rating: 0 out of 5 stars0 ratingsIthazhiyal Kalloori - Muthalaji Pirivu Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Nilakkal Part 3 Rating: 5 out of 5 stars5/5Kaagitha Marangal Rating: 0 out of 5 stars0 ratingsPengal Pandigai Rating: 0 out of 5 stars0 ratingsPorpura Rating: 0 out of 5 stars0 ratingsIravulaavigal Rating: 0 out of 5 stars0 ratingsManjal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Poonga Rating: 5 out of 5 stars5/5Gnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsIcekatti Azhagi Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Thedi Vanambaadigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaarsilambu Osaiyile Part - 1
Related ebooks
Porpura Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Kalvettugal Rating: 2 out of 5 stars2/5Purananootru Sirukadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsPengal Pandigai Rating: 0 out of 5 stars0 ratingsUpasaram Rating: 5 out of 5 stars5/5Mayiliragu Rating: 4 out of 5 stars4/5Panuval Pottruthum Rating: 0 out of 5 stars0 ratingsKaiyoppam Rating: 4 out of 5 stars4/5Uthayam Rating: 0 out of 5 stars0 ratingsAntha Onbathu Per Rating: 5 out of 5 stars5/5Naalu Vari Note Rating: 0 out of 5 stars0 ratingsSarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsKhan Shahib Rating: 0 out of 5 stars0 ratingsKaarsilambu Osaiyile Part-2 Rating: 5 out of 5 stars5/5Uzhaithean Uyarnthean Rating: 4 out of 5 stars4/5Gnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsVanji Nagar Vanji Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Nila Rating: 0 out of 5 stars0 ratingsTherkku Vaasal Mohini Rating: 0 out of 5 stars0 ratingsSowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Konja Vaa Rating: 5 out of 5 stars5/5Mothu... Munneru... Rating: 0 out of 5 stars0 ratingsPutru Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Kazhugu Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsPuthra Rating: 0 out of 5 stars0 ratingsKovur Koonan Rating: 5 out of 5 stars5/5Nodiku Nodi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaarsilambu Osaiyile Part - 1
0 ratings0 reviews
Book preview
Kaarsilambu Osaiyile Part - 1 - Pa. Vijay
http://www.pustaka.co.in
காற்சிலம்பு ஓசையிலே பாகம் - 1
Kaarsilambu Osaiyile Part - 1
Author:
பா. விஜய்
Pa. Vijay
For more books
http://www.pustaka.co.in/home/author/pa-vijay
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1.நிலா நேரத்தில்
2. பூ மொழி பேசியது புயல்
3. அருவி நதியாக
4. பெய்யெனப் பெய்யும் மழை
5. சரித்திரம் பூப்பறிக்கிறது
6. புகார் நகரம்-புகழின் சிகரம்
7. திருமணக் கூடமா...? திரிசங்கு லோகமா...?
8. சுவாசம் தந்த வாசம்
9. அமளி மீது அமளி
10. கால்கள் எழுதிய கவிதை
11. ஆடியது பாதமா பம்பரமா?
12. காற்றுக்கா கடிவாளம்
13. கற்புக்கரசி மாதவி
14. கல்லணைக்கும் காதல் அணைக்கும் திறப்பு விழா
15. வீதியில் விழலாமா வெண்ணிலா
16. உதடுகளால் ஒரு வேள்வி
17. செய்தியா? செந்தீயா?
18. இந்திர விழாவும் இமயத்தை வீழ்த்திய விழாவும்!
19. வாசலில் பூசினர் வாசனைச் சந்தனம்
20. மதுவில் குளித்த காற்று
21. தீப்பிடித்த வீணை
22. சேற்றில் உதிக்கலாமா வானவில்
23. மரத்துக்கு குயில் சுமையா?
24 .தாரமா? அவதாரமா?
காப்பியக் கவிஞர்
வாலி அவர்களுக்கு
இந்நூல் சமர்ப்பணம்!
காப்பிய கவிப்பெருந்தகை
வாலி அவர்களின் அணிந்துரை
கதையும் கதை மாந்தரும் ஏற்கனவேயே நமக்கு நன்கு பரிச்சயமான போதிலும்
சிலம்பைச் சின்னச் சின்ன வார்த்தைகளில் சிறைப்படுத்தியிருப்பதும்; உரைநடைக்கு கவிதைகளுக்கே உரித்தான உத்திகளான -உவமை, உருவகம், உள்ளீடு ஆகிய மூன்றையும் நவீனப்படுத்தி ஆங்காங்கே நிரவியிருப்பதும்; வலிய வைக்காமல் இளைபுத் தொடையை இயல்பாகக் கையாண்டிருப்பதும்;
இந்த நூலுக்கு ஒரு தனித்தன்மை இருப்பதைச் சுட்டுகின்றன. சம்பவங்களை நகர்த்திக் கொண்டு போவதில் உள்ள சமத்காரமும்; கவித்துவத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்த வல்ல சொற்சாலமும்; இளமை கொழிக்கும் இசைத் தமிழோடு இறைச்சிப் பொருளை சரியான சதவிகிதத்தில் கலந்து வழங்குனிற் நேர்த்தியும்;
இனிய இளவல் கவிஞர் பா.விஜய் வாய்த்துள்ள பட்டறிவையும், பாட்டறிவையும் பறை சாற்றுகின்றன. படிக்கும் போது பல்வேறு இடங்கள் என்னை பிரமிக்க வைத்தன.
பசுந்தமிழில் பலரையும் ஈர்க்கவல்ல நவீனகாலப் பாண்டித்தியம்- பா.விஜய்க்கு வெகுவாகவே வசப்பட்டிருக்கிறது எனலாம்.
நின்று நிதானித்து சொல் உளியை சிரத்தையோடு பயன்படுத்தி செதுக்கப் பெற்ற ஒரு செந்தமிழ்ச் சிற்பம் என்று இந்த நூலை நான் முன்மொழிகிறேன்; வையம் வழிமொ ரீயும் என்பதில் எட்டுனை அய்யமும் எனக்கில்லை.
என்னை ஈர்த்த வரிகள் எவ்வளவோ! அனைத்தும் நான் சுட்டுவது ஆகக்கூடிய காரியமல்லவென்றாலும்.
பிடித்தமான சில வரிகளை நான் பட்டியலிட்டுக் காட்ட விழைகிறேன். கீழ்க்கண்ட வரிகள் என்னுள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியவை.
இளங்கோ துறவறம் பற்றி
இசைக்கையில்;
இளங்கோ ஒரு கத்திதான்!
ஆனால்
தலையெடுக்கிற கத்தி அல்ல
களையெடுக்கிற கத்தி
சோழனைப் பற்றிச்
சொல்லுகையில்;
இமயத்தை இழுத்து
இடுப்பில் கட்டிக் கொண்டு
குமரிமுனை வரைக்கும்
குருதி வழிய நடந்தவன்!''
கண்ணகி பற்றிக்
கூறுகையில்;
குற்றாலம்
கறுப்பாகிக் கொட்டுவது
போன்ற
கூந்தல்
மாதவியைப் பற்றிக்
கூறுகையில்;
குழந்தையைக் கூட
குனிந்து தூக்காத
வீர புருஷர்களையும்
ஒரு புருவ அசைவில்
புடவைக்குக் கொசுவம்
மடிக்க வைப்பாளாம்!
இப்படி எவ்ளவோ சொல்லிக் கொண்டு போகலாம். வாசகனை வசமிழக்க வைக்கும் வரிகள் ஏராளமாயிருக்கின்றன.
தொட்டால் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதே ஒரு நல்ல நூலுக்கு அடையாளம். அந்த அடையாளம் இந்த நூலை அடைகாத்து நிற்கிறது. நூலின் இறுதிப் பகுதியில், கண்ணகியின் திருவாயால் ஆலவாயின் பெருமையையும்,, கோலோச்சிய வேந்தனின் அருமையையும் அவள் சினத்தினூடே வெளிப்படல் அற்புதமாக இருக்கிறது. வரலாறும் வண்ணத் தமிழும் வரிக்கு வரி கைகோர்த்து நின்று கவிஞனின் மொழி ஆளுமையை முரசறைகின்றன.
கூடல் மாநகரைக் கண்ணகி தீக்கிரையாக்குகையில் கூறுகின்ற வாசகங்களில் இளைபுத் தொடை கோலோச்சுகிறது.
'விட்டுவிடு விட்டுவிடு' என்று தொடங்கி 'சுட்டுவிடு"நட்டுவிடு' என்று இயல்பாக முடிகின்ற வாக்கியங்களில்
பழங்காப்பியம் புதுமுலாம் பூசிக்கொண்டு நிற்கிறது எனலாம்.
சாத்தனார் சொல்லி முடித்தபின், கடந்து சென்ற காலத்தைச் சொல்லுகையில்
மாதங்கள்
கொக்கின் வரவறிந்த
மீன்களாய் ஓடின
என்றுரைப்பது ஏரார்ந்த தமிழுக்குப் பா.விஜய்யின் பேனா ஏற்றம் சேர்ப்பதாக இருக்கிறது.
சுருங்கச் சொன்னால் 'காற்றிலம்பு ஓசையிலே' என்னும் இக்குறுங் காப்பியத்தில் படவுலகைத் தாண்டியும் ஒரு பிரபல்யத்தைக் கவிஞர் பா.விஜய்க்கு ஏற்படுத்தித் தருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.
படவுலகில், பாடலாசிரியர்கள் பட்டியலில் புதிய வரவுகள் என்று நிறையக் கவிஞர்கன் இன்று பிறக்கின்றார்கள். எல்லோருமே அவரவர் எழுத்தில் அவரவர்க்குரிய மொழி ஆளுமையையும் கற்பனை வளத்தையும் பிலிற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்கிறேன்.
தமிழின் தகவை ஒருவர் இருவர் சொல்லி முடியாது. எண்ணிறந்த கவிஞர்களின் தோறற்ம் இங்கு வைகலும் ஏற்பட வேண்டும். அவர்களது எழுதுகோல்களால் தமிழ் வலிவும் பொலிவும் மேலும் பெற்று மேதினியை வாழ்விக்க வேண்டும்.
என் இனிய இளவல் பா.விஜய் நல்ல கவிஞர்; நல்ல மனிதர்; நல்ல அன்பர்; நல்ல பண்பர்.
அவர் இதுபோன்ற இசைமிகு காவியங்களை இன்னும் யாக்க வேண்டுமென்று வாழ்த்தி, இறையருளை இறைஞ்சி, மீண்டும் என் மனமார்ந்து வாழ்த்துகளை நூலாசிரியருக்குச் சொல்லி இந்த அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.
சென்னை
13.10.04
வாலி
1.நிலா நேரத்தில்
நான் கவிஞன்!
மானுடத்தின் கிரீடமும்
நான்!
மானுடத்தின் பாதுகையும்
நான்!
சூரியனின் உதிப்பும்
நான்!
பூமியின் சுழல்வும்
நான்!
சுயமரியாதையின் தலைவனும்
நான்!
சுத்த மனசுக்குத் தொண்டனும்
நான்!
கர்வத்திற்கு முகவரி
நான்!
கம்பீரத்தின் முதல்வரி
நான்!
உணர்ச்சிகளுக்குப் பக்தனும்
நான்!
உலகில் உலவும்; கடவுளும்
நான்!
இப்படி
ஓலைச் சுவடியும்
எழுத்தாணியுமாய்
உரக்கக் கவிதை பாடி
உலவிக் கொண்டிருந்தான்
சேர நாட்டு இளவரசன்
இளங்கோ!
அரசியல் தேடித்
துருவ வேண்டிய
கண்கள்
அழகியல் தேடித்
துளாவியது!
வாள் பிடித்து
வடுவிழ வேண்டிய
கையில்ஞ்
எழுத்தாணி பிடித்து
வடு
விழுந்தது!
முத்தங்களில்
மூழ்க வேண்டிய
ராஜகுமாரன்
சந்தங்களில்
மூழ்கிக் கொண்டிருந்தான்!
நேர் கொண்ட பார்வை
நெஞ்சு நிமிர்த்திய
பேச்சு!
திரட்டியெடுத்த தமிழை
உருட்டியெடுத்து உண்டு
ஏப்பம் விட்ட தொனியுடன்
அரண்மனைத்