Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Porpura
Porpura
Porpura
Ebook121 pages23 minutes

Porpura

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580127104812
Porpura

Read more from Pa. Vijay

Related to Porpura

Related ebooks

Reviews for Porpura

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Porpura - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    போர்ப்புறா

    Porpura

    Author:

    பா.விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 1

    காற்றில் கிழித்துப் போட்டக்

    காகிதத் துண்டுகளாய்

    அந்த மெல்லிய மேகங்கள்

    மிதந்து கொண்டிருந்தது!

    அந்த முகில் தாள்களை

    அலகில் கொத்த ஆசைப்பட்டு

    புறாக்கள் றெக்கையடித்தன!

    முதலிரவுக்குள் நுழையும்

    மணப்பெண் மாதிரி

    தங்க நிலா தயங்கித்தயங்கி

    சாயங்காலத்தின் ஜன்னல் வழியாய்

    இறங்கிக் கொண்டிருந்தது!

    அந்த மொட்டை மாடியில்

    அமர்ந்து கொண்டு

    குயில்கள் வகுப்பு நடத்திக்

    கொண்டிருந்தன!

    இயற்கையின் துளித்துளி

    அசைவுகளும் சுகமான வைபவம்!

    இதயத்தை திறந்து

    பூக்களால் நிரப்பும் சமாச்சாரம்!

    கண்களைப் பனியில் ஒத்தியெடுப்பது போல்

    பரவசம் ததும்பும் பணி!

    ரசனையில் இரண்டு விதம்!

    இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியங்களை

    விழிதிறந்து நேசிப்பதொரு வகை!

    விழிமூடி வாசிப்பதொரு வகை!

    மலர்களின் புன்முறுவல் -

    மணிப்புறாக்களின் சிறகடிப்பு -

    ஆரஞ்சு நிறத்தில் பவுடர் பூசிய

    ஆப்பிள் வடிவச் சூரியன் -

    பனியில் தலைகுளித்திருக்கும்

    பச்சைத் தாவர மடல்கள் -

    ரெட்டை ஜடை உரசும் பின்னழகு -

    மேகத் துண்டுகளின் இடுக்கில்

    முகம் உதிக்கும்

    மூன்றாம் பிறை -

    இவையெல்லாம்

    விழியில் வாங்கி மனசில் நிரப்ப வேண்டியவை.

    ***

    மயிலின் தோகை விரிப்பு -

    இதழுடையாத ரோஜா

    அங்குல அங்குலமாய் திறக்கும் அழகு -

    பட்டாம்பூச்சியின் அணிவகுப்பு -

    பாறைகளின் கன்னத்தில் வந்து

    அறைந்து விட்டுக் கைதட்டிக் கொள்ளும்

    அலைகள் -

    யூக்கலிப்டஸ் காடுகளில்

    பரவி மிதக்கும் புகை மண்டலம் -

    ஒரு அழகியின் நிர்வாணம் -

    இவையெல்லாம்

    மனசில் உதித்து விழிக்குள் பரப்பப்பட வேண்டியவை!

    ***

    கனவுகளைத் தேடிச் செல்வது - தன்னைக்

    கனவுகளால் மூடிக் கொள்வது

    மனித சுபாவத்தின் பிம்பங்கள்!

    ஒரு கவிதைப் புத்தகத்தால் முகம்மூடி

    இன்னொரு மைனாவாய்....

    காற்றுக்கு அசைந்து கொடுக்கும்

    இன்னொரு மரமாய்

    மாறிக் கிடந்தான் ஜீவா

    அவன் விழிகள் காஷ்மீர் குளிரில்

    போர்வைக்குள் புதைந்த கிழவனாய்

    பொதிந்து கிடந்தன!

    உதடுகள் மௌன மந்திரம் ஜெபித்தவாறு

    இதழ் பாவம் மாற்றிக் கொண்டிருந்தது!

    உடம்பில் ஒரு சுகானுபவம் ஓடி

    நாடி தடவி சில்லிட்டது!

    மனசு பேசும் போது

    உதடுகளுக்கென்ன உத்தியோகம்?

    இதயத்தில் மழைதூற மழைதூற

    புலன்கள் நனைந்தது!

    ***

    அந்த இருபத்தி ஐந்து வயது

    இளைஞனுக்குள்,

    சகாராவில் பனிவீடு எழுப்பப்படுகிறது.

    சாய் கோபுரத்தின் மேல்

    விமானம் நின்றிருந்தது!

    பூக்களின் மேல் அவன் அமர்ந்திருந்தான்.

    ஓடிப்போய் அருவியில் நனைந்து

    மேகத்தைப் பிய்த்துத்

    தலைதுவட்டித் துள்ளி ஆடினான்.

    உள்ளங்கையில் இமைமுடி உதிர்த்து

    ஊதிப்பிடித்தான்.

    ராக்கெட்டில் பயணித்து நிலவில் தரையிறங்கி

    அங்கிருந்து பூமிக்கு வணக்கம் சொன்னான்.

    சின்ன வயசின் ஞயாபகத் திரையில்

    சிரிக்கும் கனகா டீச்சரின்

    ப்ளம்ஸ் கன்னம் கடித்தான்.

    அடுப்பூதுங்குழலில் துவாரமிட்டு

    அண்ணாமலை மன்ற மேடையில்

    உற்சாகம் சிதற ஊதினான்.

    காகிதப் படகேறிக் கடல் கடந்தான்.

    மோனோலிசா மணந்து

    கிளியோப்பாட்ராவைத் தாயாக்கினான்!

    அம்புலிமாமாவின் ராஜகுமாரனானான்

    இரத்தினக் கம்பளம் முகில் உரசியது!

    பட்டென்று வெடித்துப் பூக்கும்

    பருத்தியாய் இமை திறந்தான்!

    ஆகாச வெளிச்சம்

    ஆழவிழிவரை இறங்கியது

    வாயுமண்டலம் அளந்தான்!

    ***

    ஓ! வானமே!

    எனக்கு வந்து கொஞ்சம் வகுப்பெடு!

    நான் மலர்களைப் புத்தகமாக்கிய

    மாணவன்!

    Enjoying the preview?
    Page 1 of 1