Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannadi Kalvettugal
Kannadi Kalvettugal
Kannadi Kalvettugal
Ebook200 pages52 minutes

Kannadi Kalvettugal

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

வணக்கம்

சரித்திரம் என்பது மன்னர்கள் செய்தது மாத்திரமல்ல.

மன்னர்கள் செய்த சாதனைகள், அதிசயங்கள் எல்லாம் கல்வெட்டுகளிலும் பனை ஒலை பழஞ்சுவடிகளும் கல்வெட்டு வாசகங்களும் இல்லாத காரணத்தால் அந்த மக்களின் வாழ்க்கை இருள் மூடிக்கிடக்கிறது. அந்த மக்கள் செய்த சரித்திரங்களும், மக்களால் சொல்லப்படும் நிஜங்களுமே இந்தத் தொடர்பின் சாரம்!

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு பாதிப்பு உண்டு! அவை அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும் தலை முறையாய் அந்த சம்பவங்கள் வயதானவர்களால் வாலிபர்களுக்கு சொல்லப்பட்டு காலம் காலமாய் பயணமாகும்!

அந்த கதைகள் நடந்தவையாக நிஜங்களாக சில இதயங்களுக்குள் வாழ்ந்து வரும்! அப்படிப்பட்ட ஊருக்கு ஒரு நிஜத்தைக் தேடி எடுத்து எழுத நினைத்த்தே இந்தத் தொடர் உருவாக முதல் பொரி!

அப்படி ஊர் ஊராய் அறிந்தவர் அறியாதவர் என அனைவரிடமும் விசாரித்து கேட்ட போது அவர்களில் சிலர் சொன்ன சம்பவங்கள் சரித்திரங்களை விட பிரமிப்பாய் வியப்பாய் பாதிப்பாய் இருந்தன.

இந்த சம்பவங்களுக்கு ஆதாரமில்லை! இவைகள் அவ்வூர் பகுதியில் உள்ள ஒரு சிலருக்கோ அல்லது ஒருவருக்கு மட்டுமோ தெரிந்த செய்திகளாக இருக்கலாம்! காது வழி கேட்ட கனமான நிகழ்வுகளை கவிதை மூலம் நிறம் கூட்டி கொஞ்சம் திரைக்கதை அமைத்த போது இந்த எழுத்தோட்டம் உருவானது. ஒரு சில சம்பவங்களில் சமுதாயம் கருதி ஊர் அல்லது நபர்களின் பெயர்களை மாற்றம் செய்திருக்கிறேன்!

இதை நம்பினால் நிஜம்! நம்பாவிட்டால் கதை! நம்புவீர்கள் என்ற நம்பிக்கையோடு முன்னுரையை முடிக்கிறேன்.

என்றும் அன்புடன் பா.விஜய்

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127104369
Kannadi Kalvettugal

Read more from Pa. Vijay

Related to Kannadi Kalvettugal

Related ebooks

Reviews for Kannadi Kalvettugal

Rating: 2.3333333333333335 out of 5 stars
2.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannadi Kalvettugal - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    கண்ணாடி கல்வெட்டுகள்

    Kannadi Kalvettugal

    Author:

    பா. விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கண்ணாடி கல்வெட்டுகள் -1

    காவல் மரம் -1

    காவல் மரம் - 2

    காவல் மரம் - 3

    கண்ணாடி கல்வெட்டுகள் -2

    கவிஞனின் ஜனனம் - 1

    கவிஞனின் ஜனனம் - 2

    கவிஞனின் ஜனனம் - 3

    கண்ணாடி கல்வெட்டுகள் -3

    கண்ணகி வந்த ஊர் - 1

    கண்ணகி வந்த ஊர் - 2

    கண்ணகி வந்த ஊர் - 3

    கண்ணாடி கல்வெட்டுகள் - 4

    ஒரு தேவதை கல்லானாள் -1

    ஒரு தேவதை கல்லானாள் - 2

    ஒரு தேவதை கல்லானாள் - 3

    கண்ணாடி கல்வெட்டுகள் - 5

    யாருமில்லாத கோட்டை - 1

    யாருமில்லாத கோட்டை - 2

    யாருமில்லாத கோட்டை - 3

    கண்ணாடி கல்வெட்டுகள் - 6

    கருப்பன் - 1

    கருப்பன் - 2

    கருப்பன் - 3

    கண்ணாடி கல்வெட்டுகள் - 7

    சிறைக்குள்ளே சிறுத்தை -1

    சிறைக்குள்ளே சிறுத்தை - 2

    சிறைக்குள்ளே சிறுத்தை – 3

    முன்னுரை

    வணக்கம்

    சரித்திரம் என்பது மன்னர்கள் செய்தது மாத்திரமல்ல.

    மன்னர்கள் செய்த சாதனைகள், அதிசயங்கள் எல்லாம் கல்வெட்டுகளிலும் பனை ஒலை பழஞ்சுவடிகளும் கல்வெட்டு வாசகங்களும் இல்லாத காரணத்தால் அந்த மக்களின் வாழ்க்கை இருள் மூடிக்கிடக்கிறது. அந்த மக்கள் செய்த சரித்திரங்களும், மக்களால் சொல்லப்படும் நிஜங்களுமே இந்தத் தொடபின் சாரம்!

    ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு பாதிப்பு உண்டு! அவை அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும் தலை முறையாய் அந்த சம்பவங்கள் வயதானவர்களால் வாலிபர்களுக்கு சொல்லப்பட்டு காலம் காலமாய் பயணமாகும்!

    அந்த கதைகள் நடந்தவையாக நிஜங்களாக சில இதயங்களுக்குள் வாழ்ந்து வரும்! அப்படிப்பட்ட ஊருக்கு ஒரு நிஜத்தைக் தேடி எடுத்து எழுத நினைத்த்தே இந்தத் தொடர் உருவாக முதல் பொரி!

    அப்படி ஊர் ஊராய் அறிந்தவர் அறியாதவர் என அனைவரிடமும் விசாரித்து கேட்ட போது அவர்களில் சிலர் சொன்ன சம்பவங்கள் சரித்திரங்களை விட பிரமிப்பாய் வியப்பாய் பாதிப்பாய் இருந்தன.

    இந்த சம்பவங்களுக்கு ஆதாரமில்லை! இவைகள் அவ்வூர் பகுதியில் உள்ள ஒரு சிலருக்கோ அல்லது ஒருவருக்கு மட்டுமோ தெரிந்த செய்திகளாக இருக்கலாம்!

    காது வழி கேட்ட கனமான நிகழ்வுகளை கவிதை மூலம் நிறம் கூட்டி கொஞ்சம் திரைக்கதை அமைத்த போது இந்த எழுத்தோட்டம் உருவானது 1 சில சம்பவங்களில் சமுதாயம் கருதி ஊர் அல்லது நபர்களின் பெயர்களை மாற்றம் செய்திருக்கிறேன்!

    இதை நம்பினால் நிஜம்! நம்பாவிட்டால் கதை! நம்புவீர்கள் என்ற நம்பிக்கையோடு முன்னுரையை முடிக்கிறேன்.

    இந்த கண்ணாடிக் கல்வெட்டுகள் என்ற கவிதைத் தொடரை வாராவாரம் ஒரு இழகிய நட்சத்திர ஊர்வலமாய் வெளிக்கொண்டு வந்த கல்கி வார இதழுக்கும், அதன் ஆசிரியர் தமிழுலகம் பெற்ற களஞ்சியமான கல்கி அவர்களின் புதல்வி திருமதி சீதாரவி அவர்களுக்கும், தொடரில் ஓவியங்கள் எழுதிய ஷ்யாம் அவர்களுக்கும். இந்தப் புத்தகத்தின் ஓவியப்பணி செய்த செந்தமிழ் அவர்களுக்கு.

    எப்போதும் போல் இப்போதும் என் நூலை ஜாரிகை வேலைப்பாடுடன் கவனமாக செய்து வெளியிட்ட குமரன் பதிப்பகம் திரு.வைரவன் அவர்களுக்கும் நன்றி!

    என்றும் அன்புடன்

    பா.விஜய்

    கண்ணாடி கல்வெட்டுகள் -1

    காவல் மரம் -1

    காலம்

    2ஆம் நூற்றாண்டு!

    தமிழகத்தின் வயல்வெளிகளில்

    நெல்லுக்கு பதில்

    முத்து விளைந்த காலம்!

    புல்லுக்கு பதில்

    பவழம் கொழித்த காலம்!

    இமயம் தமிழகத்திற்கு

    இடுப்பளவு இருந்த

    இறுமாப்பான காலம்!

    போர்க்களத்தில்

    கறை படிந்த கத்திகளைத்

    தேன் குளத்தில்

    கழுவி வைத்து விட்டு

    போகக் குளத்தில்

    இறங்கிக் குளித்தப் பிறகு

    பக்திக் குளத்தில்

    நீராடினர் தமிழர்கள்!

    வில் மீன் புலி

    தமிழ் மண்ணில் பறந்த

    ஒருக் கட்டத்தில்...

    ஆனமலைப் பகுதி!

    பொள்ளாச்சிக்கு அருகே

    மலைசார்ந்த இடம்!

    தென்னிந்தியாவின்

    மிக உயர்ந்த சிகரம்!

    ஆழியாற்றங் கரையில்

    அமைந்த ஒரு நகரம்!

    அதுதான் கொன்காணம்!

    கொன்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1