Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaarsilambu Osaiyile Part-2
Kaarsilambu Osaiyile Part-2
Kaarsilambu Osaiyile Part-2
Ebook247 pages30 minutes

Kaarsilambu Osaiyile Part-2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

காப்பிய கவிப்பெருந்தகை வாலி அவர்களின் அணிந்துரை

கதையும் கதை மாந்தரும் ஏற்கனவேயே நமக்கு நன்கு பரிச்சயமான போதிலும் சிலம்பைச் சின்னச் சின்ன வார்த்தைகளில் சிறைப்படுத்தியிருப்பதும்; உரைநடைக்கு கவிதைகளுக்கே உரித்தான உத்திகளான -உவமை, உருவகம், உள்ளீடு ஆகிய மூன்றையும் நவீனப்படுத்தி ஆங்காங்கே நிரவியிருப்பதும்; வலிய வைக்காமல் இளைபுத் தொடையை இயல்பாகக் கையாண்டிருப்பதும்;

இந்த நூலுக்கு ஒரு தனித்தன்மை இருப்பதைச் சுட்டுகின்றன. சம்பவங்களை நகர்த்திக் கொண்டு போவதில் உள்ள சமத்காரமும்; கவித்துவத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்த வல்ல சொற்சாலமும்; இளமை கொழிக்கும் இசைத் தமிழோடு இறைச்சிப் பொருளை சரியான சதவிகிதத்தில் கலந்து வழங்குனிற் நேர்த்தியும்;

இனிய இளவல் கவிஞர் பா.விஜய் வாய்த்துள்ள பட்டறிவையும், பாட்டறிவையும் பறை சாற்றுகின்றன. படிக்கும் போது பல்வேறு இடங்கள் என்னை பிரமிக்க வைத்தன.

பசுந்தமிழில் பலரையும் ஈர்க்கவல்ல நவீனகாலப் பாண்டித்தியம்- பா.விஜய்க்கு வெகுவாகவே வசப்பட்டிருக்கிறது எனலாம்.

நின்று நிதானித்து சொல் உளியை சிரத்தையோடு பயன்படுத்தி செதுக்கப் பெற்ற ஒரு செந்தமிழ்ச் சிற்பம் என்று இந்த நூலை நான் முன்மொழிகிறேன்; வையம் வழிமொ ரீயும் என்பதில் எட்டுனை அய்யமும் எனக்கில்லை.

என்னை ஈர்த்த வரிகள் எவ்வளவோ! அனைத்தும் நான் சுட்டுவது ஆகக்கூடிய காரியமல்லவென்றாலும்.

பிடித்தமான சில வரிகளை நான் பட்டியலிட்டுக் காட்ட விழைகிறேன். கீழ்க்கண்ட வரிகள் என்னுள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியவை.

இளங்கோ துறவறம் பற்றி
இசைக்கையில்;
இளங்கோ ஒரு கத்திதான்!
ஆனால்
தலையெடுக்கிற கத்தி அல்ல
களையெடுக்கிற கத்தி

சோழனைப் பற்றிச்
சொல்லுகையில்;

இமயத்தை இழுத்து
இடுப்பில் கட்டிக் கொண்டு
குமரிமுனை வரைக்கும்
குருதி வழிய நடந்தவன்!''

கண்ணகி பற்றிக்
கூறுகையில்;

குற்றாலம்
கறுப்பாகிக் கொட்டுவது
போன்ற
கூந்தல்

மாதவியைப் பற்றிக்
கூறுகையில்;

குழந்தையைக் கூட
குனிந்து தூக்காத
வீர புருஷர்களையும்
ஒரு புருவ அசைவில்
புடவைக்குக் கொசுவம்
மடிக்க வைப்பாளாம்!

இப்படி எவ்ளவோ சொல்லிக் கொண்டு போகலாம். வாசகனை வசமிழக்க வைக்கும் வரிகள் ஏராளமாயிருக்கின்றன.

தொட்டால் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதே ஒரு நல்ல நூலுக்கு அடையாளம். அந்த அடையாளம் இந்த நூலை அடைகாத்து நிற்கிறது. நூலின் இறுதிப் பகுதியில், கண்ணகியின் திருவாயால் ஆலவாயின் பெருமையையும்,, கோலோச்சிய வேந்தனின் அருமையையும் அவள் சினத்தினூடே வெளிப்படல் அற்புதமாக இருக்கிறது. வரலாறும் வண்ணத் தமிழும் வரிக்கு வரி கைகோர்த்து நின்று கவிஞனின் மொழி ஆளுமையை முரசறைகின்றன.

கூடல் மாநகரைக் கண்ணகி தீக்கிரையாக்குகையில் கூறுகின்ற வாசகங்களில் இளைபுத் தொடை கோலோச்சுகிறது.

'விட்டுவிடு விட்டுவிடு' என்று தொடங்கி 'சுட்டுவிடு' 'நட்டுவிடு' என்று இயல்பாக முடிகின்ற வாக்கியங்களில் பழங்காப்பியம் புதுமுலாம் பூசிக்கொண்டு நிற்கிறது எனலாம்.

சாத்தனார் சொல்லி முடித்தபின், கடந்து சென்ற காலத்தைச் சொல்லுகையில்

மாதங்கள்
கொக்கின் வரவறிந்த
மீன்களாய் ஓடின

என்றுரைப்பது ஏரார்ந்த தமிழுக்குப் பா.விஜய்யின் பேனா ஏற்றம் சேர்ப்பதாக இருக்கிறது.

சுருங்கச் சொன்னால் 'காற்றிலம்பு ஓசையிலே' என்னும் இக்குறுங் காப்பியத்தில் படவுலகைத் தாண்டியும் ஒரு பிரபல்யத்தைக் கவிஞர் பா.விஜய்க்கு ஏற்படுத்தித் தருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.

படவுலகில், பாடலாசிரியர்கள் பட்டியலில் புதிய வரவுகள் என்று நிறையக் கவிஞர்கன் இன்று பிறக்கின்றார்கள். எல்லோருமே அவரவர் எழுத்தில் அவரவர்க்குரிய மொழி ஆளுமையையும் கற்பனை வளத்தையும் பிலிற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்கிறேன்.

தமிழின் தகவை ஒருவர் இருவர் சொல்லி முடியாது. எண்ணிறந்த கவிஞர்களின் தோறற்ம் இங்கு வைகலும் ஏற்பட வேண்டும். அவர்களது எழுதுகோல்களால் தமிழ் வலிவும் பொலிவும் மேலும் பெற்று மேதினியை வாழ்விக்க வேண்டும்.

என் இனிய இளவல் பா.விஜய் நல்ல கவிஞர்; நல்ல மனிதர்; நல்ல அன்பர்; நல்ல பண்பர்.

அவர் இதுபோன்ற இசைமிகு காவியங்களை இன்னும் யாக்க வேண்டுமென்று வாழ்த்தி, இறையருளை இறைஞ்சி, மீண்டும் என் மனமார்ந்து வாழ்த்துகளை நூலாசிரியருக்குச் சொல்லி இந்த அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.

சென்னை
13.10.04
வாலி

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127104441
Kaarsilambu Osaiyile Part-2

Read more from Pa. Vijay

Related to Kaarsilambu Osaiyile Part-2

Related ebooks

Related categories

Reviews for Kaarsilambu Osaiyile Part-2

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaarsilambu Osaiyile Part-2 - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    காற்சிலம்பு ஓசையிலே

    (பாகம்-2)

    Kaarsilambu Osaiyile

    (Part-2)

    Author:

    பா.விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    25. கல்லாய் விழுந்த சொல்

    26. மறைந்து விட்டது வானவில்

    27. மழையில் கரையுமா மலை?

    28. போதி மரத்தின் ஞானப் பால்

    29. போய்வரவா பூங்காற்றே

    30. சில்லென்ற சிரிப்போசை

    31. ஆசிரமச் சிரமம்

    32. பறவைகளின் பயணம்

    33. முதல் நாள் பயணம்

    34. நனைந்த சிறகுகள்

    31. மர்ம மலை

    36. அன்னவாசல்

    37. மெளன இடி

    38. தூரத்தில் பச்சை வெளி

    39. மதுரை வாழ்க்கை

    40. வசந்த கால வனக் குயில்கள்

    41. காதலாகிக் கசி

    42. பிருந்தாவனத்தில் புயல் பூத்தது

    43. ரத்தம் குளித்த தீர்ப்பு

    44. கொற்றவனே குற்றவாளி

    45. மதுரை எரிந்தது

    46. வஞ்சிக் காண்டம்

    47. கண்ணகி கோவில்

    48. தாயே வாழ்க

    முன்னுரை

    காற்சிலம்பு ஓசையிலே கவிதை நயம்

    கவிஞர் பா.விஜய் படைத்துள்ள 'காற்சிலம்பு ஓசையிலே' என்ற புதுக்கவிதைக் காவியம் புதுவிதமான அனுபவங்களைத் தரவல்லது. தமிழின் தொன்மையான சிலப்பதிகாரக் காப்பியத்தினைப் புதுக்கவிதை வடிவத்தில் படைப்புச் செய்துள்ளார் கவிஞர். பண்டைய இலக்கியங்கள் இவ்வாறு மறுபிறவி எடுப்பதற்கு இன்றைய வாசிப்புச் சூழல் காரணமாக அமைகிறது என்று கூறலாம்.

    சுதந்திரப் போராட்ட காலத்தில் வியாசர் பாரதம் பாரதியின் கைவண்ணத்தில் 'பாஞ்சாலி சபதமாக' மாறியது. மறுமலர்ச்சிக் காலகட்டங்களில் இராமாயணம் இராவண காவியமாகவும், சிலப்பதிகாரம் கண்ணகி புரட்சிக் காவியமாகவும் மறுபிறவி எடுத்தன. வான்மீகி இராமாயணம் மலையாளத்தில் மறுமலர்ச்சி இலக்கிய காலப் பகுதியில் 'சிந்தையில் மூழ்கிய கீதையாக' மகாகவி குமாரன் ஆசான் கைவண்ணத்தில் மீண்டும் உருவானது.

    தமிழில் மிக அண்மைக் காலத்தில் கவிஞர் வாலியின் அவதார புருஷன், பாண்டவர் பூமி போன்ற படைப்புக்களும் இவ்வகையான மறுபிறவி இலக்கியங்கள் என்று கூறலாம்.

    இவ்வரிசையில் கவிஞர் பா. விஜய் அவர்களின் 'காற்சிலம்பு ஓசையிலே' என்ற படைப்பும் அணி வகுக்கிறது. இச்சான்றுகளால் காவியம் காலத்தின் தேவையை நிறைவு செய்யத் தோன்றியதாகிறது.

    தமிழ்க் கவிதை மரபில் குறிப்புத் தன்மை - அதாவது எதனையும் சிறிது மறைவாகக் கூறி பொருளைப் புரிய வைப்பது மிகவும் குறிப்பத்தக்கதாகும். பாரியைக் கபிலர் புகழும் போது கூட இந்த உலகத்தைப் பாதுகாக்கும் கடமையைப் பாரி ஒருவன் மட்டும் செய்யவில்லை.

    ‘மழையும்கூட இந்த உலகத்தினைப் பாதுகாக்கிறது' என்று கூறி வருகிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இதில் பாரியை மட்டம் தட்டுவதைப் போலத் தெரியும். உண்மையில் மழைக்கு நிகராகப் பாரியை உயர்த்திப் பிடிக்கும் செயலைக் கபிலர் செய்கிறார். இதுதான் மரபுக் கவிதை! ஒரு சங்க அகப்பாடலைக் காணலாம்.

    சிறுநனி வரைந்தனை கொண்மோ! பெருநர்

    வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்

    பறைதபு முதுகுருகு இருக்கும்

    துறைகெழு தொண்டியன்ன இவள் நயனே

    என்று ஐங்குறுநூற்றுப் பாடலில் (180) தோழி தலைவனைப் பார்த்து 'நீ விரைவாகத் தலைவியை மணந்து கொள். ஏனென்றால் தலைவியின் ஊரில் முதிய நாரைகள் பல இருக்கின்றன' என்று கூறுகிறார். இக்கவிதை மிகவும் சுருக்கமாகவும் சுற்றி வளைத்தும் தலைவியை மணந்து கொள்ளுமாறு தலைவனுக்கு அறிவுரை கூறுகிறது.

    கால மாற்றங்களின் விளைவாக வாசிக்கும் முறையும் மாறுகிறது. இவ்வாறு சுற்றி வளைத்து எதனையும் அலங்காரமாகக் கூறுவதைவிட நேரடியாகக் கூறுவதையே இன்றைய வாசகர்கள் விரும்புகின்றனர். எனவே இன்றைய சூழலில் புதிய தேவைகளுக்கும் ரசனைகளுக்கும் ஏற்றவாறு இலக்கியங்களை மறு படைப்புச் செய்ய வேண்டியது படைப்பாளியின் கடமையாக உள்ளது. இக்கடமையைக் கவிஞர் பா. விஜய் இப்புதுக்கவிதைக் காப்பியத்தில் செய்திருக்ககிறார்.

    'காற்சிலம்பு ஓசையிலே (பாகம் 2) என்ற இப்பகுதி சிலப்பதிகாரக் கவிதையைத் தழுவி எழுதப்பட்டிருந்தாலும் பற்பல புதிய சேர்க்கைகள் இதில் அழகினைக் கூட்டுகின்றன. கோவலன் மாதவி இருவரின் இனிய வாழ்க்கையின் விளைவாக மணிமேகலை பிறக்கிறாள்.

    இதனை

    அவள்

    மாணிக்க வயிற்றிலிருந்து

    மரகதக்கல் உதிர்ந்தது!

    என்று குறிப்பிடுகிறார். மணிமேகலை பிறந்ததைக் கொண்டாடும் முறையில் கண்ணகி பல்வேறு பரிசப் பொருள்களை மாதவியின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். மணிமேகலையைத் தாலாட்டும் போது,

    நாருக்குப் பிறந்த முல்லையே

    நீ தூங்கு – இந்த

    நாருக்குப் பறிந்த

    முல்லையே நீ தூங்கு

    என்று பாட கோவலன் மனத்தில் தாழ்வு மனப்பான்மை விதையாக முளைக்கத் தொடங்குகிறது. மாதவியை நடனமாடுவதற்குச் சில ரசிகர்கள் அழைக்க, கோவலன் தடுக்கிறான். மாதவி கோவலனின் தடையை மீறிச் சென்று நடனமாடித் திரும்புகிறாள்.

    பூவிற்கு வேலி போடலாம்

    பூவில் கிளம்பும்

    வாசத்துக்கு வேலியா?

    என்பது மாதவியின் வாதம். கோவலன், இதனால் மாதவியைப் பிரிந்து கண்ணகியை நாடி ஓடி வருகிறான். இந்த இடங்கள் எல்லாம் மிகவும் கவித்துவத்துடன் கவிதையில் கூறப்பட்டுள்ளன.

    கோவலனை எந்த ஆராய்ச்சியும் நிபந்தனையுமின்றிக் கண்ணகி ஏற்றுக் கொண்டாள். இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடங்க மதுரைக்குப் புறப்படுகின்றனர். வழியில் கவுந்தியடிகளின் துணை கிடைக்கிறது. கண்ணகிகோவலன் இருவருக்கும் இடையிலும் நெகிழ்ச்சியூட்டும் பற்பல நிகழ்வுகள் அனுபவப்படுகின்றன. இந்த நிகழ்வுகள் புதியனவாக இப்புதுக்கவிதைக் காப்பியத்தில் படைக்கப்பட்டுள்ளன. மூலத்தில் இல்லாதன. மதுரைக்குச் சென்றபின் மாதரியின் இல்லத்தில் அடைக்கலமாகின்றனர்.

    அன்பென்னும் எண்ணைய்ப் பசை

    இன்னும் இருப்பதால்தான்

    மானிடச் சக்கரம்

    சுமார் வேகத்திலாவது

    சுகமாகச் சுழல்கிறது.

    என்பதற்கிணங்க அன்பின் வழியே இருவரும் அடைக்கலமாகின்றனர். வசந்தகால வனக்குயில்க இருவரும் காதலில் கசிகின்றனர். இந்த இடத்தில் காவியம் மெதுவாக நடைபோடுகிறது.

    மறுநாள் சிலம்பினை விற்கக் கோவலன் மதுரைக்குச் செல்கிறான். கவிதை இங்கு கடுகி நடக்கிறது. கோவலனிடமிருந்து சிலம்பினைப் பெற்றுக் கொண்ட பொற்கொல்லன், பாண்டியனிடம் காட்டிக் கொடுத்துப் பொய் கூறி கோவலனைக் கொன்று விடுகிறான். தொடர் நிகழ்வாக மதுரை நகரம் பற்றி எரிகிறது.

    இந்தக் கதையைச் சாத்தனார் விவரித்துக் கூறுவதைச் சேரன் செங்குட்டு வனும் வேண்மாளும்

    Enjoying the preview?
    Page 1 of 1