Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pengal Pandigai
Pengal Pandigai
Pengal Pandigai
Ebook149 pages8 minutes

Pengal Pandigai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580127104843
Pengal Pandigai

Read more from Pa. Vijay

Related to Pengal Pandigai

Related ebooks

Reviews for Pengal Pandigai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pengal Pandigai - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    பெண்கள் பண்டிகை

    Pengal Pandigai

    Author:

    பா.விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஒரு காதலி பேட்டி காண்கிறாள்

    சிறைக்குள் கண்கள்

    கண்களால் கண்களை உழு!

    அன்புள்ள.............!

    ஒரு டைரியின் பக்கத்தில்...

    நீதி மன்றம்

    வாக்குறுதிகள்!

    வலியா...? சுகமா...?

    அடியே செங்கமலம்!

    இது கடிதம் அல்ல!

    யார்? யார்? யார்?

    ராட்சஸ காதலி!

    வண்ண வண்ண நினைவுகள்!

    கண்களில் வயலின் வாசித்தாய்

    தவம்

    ஞாபகமிருக்கா?....

    இலவம் பஞ்சுக் கனவுகள்

    நீ கோப்பை - நான் உதடு

    கூட்டிக் கழித்தால்

    ஒரு காதலி பேட்டி காண்கிறாள்

    காதலி:

    "இரவு ஏன்

    மௌனமாக இருக்கிறது?"

    காதலன்:

    "கால்கொலுசைக்

    கழற்றி வைத்துவிட்டு

    நடந்து போகிறது நிலா!"

    காதலி:

    "நீங்கள் எனக்கெழுதிய

    முதல் கடிதத்தில்

    ஆங்காங்கே சில

    அடித்தல் திருத்தல்

    இருந்ததே ஏன்?"

    காதலன்:

    "முதலிரவு அறையில்

    ஓரிரு வளையலாவது

    உடையாமல் இருக்குமா!"

    காதலி:

    "அலைகள்

    பாறையில் மோதிச்

    சிதறுகிறதே ஏன்?"

    காதலன்:

    "பாறையிடம் அலைகளால்

    காதல் கடிதம் எழுதி

    நீட்டியிருப்பான் கடல்.

    சுக்கலாய் கிழித்துத்

    தூக்கிப் போடுகிறாள் பாறை!"

    ***

    காதலி:

    "கவிதை

    உங்களுக்குப் பிடிக்குமா?"

    காதலன்:

    "உன்னை

    எனக்குப் பிடிக்காதா!"

    ***

    காதலி:

    "வானவில் என்பது என்ன?

    அது எதற்கு வருகிறது?"

    காதலன்:

    "மேகத்தின்

    தாவணிதான் வானவில்.

    மழையில் நனைந்துவிட்ட

    மேலாடையை

    காயப்போடுகிறது மேகம்!"

    ***

    காதலி:

    "வண்ணத்துப் பூச்சி

    பறந்ததும்

    அது உட்கார்ந்திருந்த பூ

    உடனே அதிர்ந்தாடுகிறதே

    Enjoying the preview?
    Page 1 of 1