Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhkai Thedi Vanambaadigal
Vazhkai Thedi Vanambaadigal
Vazhkai Thedi Vanambaadigal
Ebook181 pages2 hours

Vazhkai Thedi Vanambaadigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580127104818
Vazhkai Thedi Vanambaadigal

Read more from Pa. Vijay

Related to Vazhkai Thedi Vanambaadigal

Related ebooks

Reviews for Vazhkai Thedi Vanambaadigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhkai Thedi Vanambaadigal - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    வாழ்க்கை தேடி வானம்பாடிகள்

    Vazhkai Thedi Vanambaadigal

    Author:

    பா.விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 1

    மேற்கு....!

    சந்தனமும் குங்குமமும் சரிவிகிதாச் சாரத்தில் குழைக்கப்பட்டு மெழுகப்பட்டிருந்த மேற்கு!

    முதலிரவுக்கு முன்கூட்டியே ஆயத்தமாகி ஆசையோடு அலங்கரித்துக் கொள்ளும் மணப்பெண் போல் மஞ்சள் பூசிக்கொண்டு மேக மாராப்பை சரிசெய்யும் மேற்கு...!

    வாதாபியை விழுங்கிய அகத்தியனின் தொப்பை போல் மேனி கறுத்து... தோற்றம் பெருத்து... கன்னங்கறுத்து... காணப்படும் கருமலை!

    பஞ்சுக்குவியல்கள் பறப்பது போல் வடிவங்களை வேறுபடுத்தி மாறுபடுத்தி வலம் வரும் மேகங்கள்...!

    உற்சாக கொடி கொண்டு ஊர்வலம் போய்கொண்டிருக்கும் குருவிகள்...!

    சலங்கையின்றி சப்தித்துச் செல்லும் ஆறு... நெய்யாறு!

    பட்டாம்பூச்சிகளின் சிறகைப் போல் பற்பல நிறத்தில்.... பற்பல விதத்தில்... கரையோரம் நிறைந்திருக்கும் பூக்கள்....!

    இன்னும் இடப்பக்கம்....

    கரிகாலச் சோழனைப் போல கறுத்த கம்பீரத்தில் கால்களை அகட்டி நின்று கொண்டிருக்கும் ஆத்தங்கரையோர ஆலமரம்...!

    உள்ளங்கையிலிருந்து முளைத்திருக்கும் விரல்களைப் போல் அதன் வேர்கள் மண் பற்றியிருக்கும் பலமான வேர்கள்...!

    ஒவ்வொரு வேரும் ஒரு ஆசனம்! ரம்மியத்தை நிரப்பும் ராஜவிழுதுகள்!

    சுற்றிலும் மரம்! சுற்றிலும் சுவர் கட்டியிருந்தது!

    சமணர் படுக்கை போல் வழவழப்பாய் அமர்வதற்கு ஏதுவாய் அமைந்திருந்தது அதன் ஆணி வேர்!

    மேலே... அதன் மேலே,

    கரங்களில் காகிதங்கள்; எண்ணைப் பிசுக்கேறாத தரிசுத்தலை; துவைத்து துவைத்து துவண்டு போயிருந்த வெள்ளை வேட்டி...!

    இன்னும் இரண்டு நாள்தான் இருப்பேன் என்று உத்திரவாதம் சொல்லும் ஊதாநிறத்து ஜிப்பா...!

    உதிர்ந்து இருந்தாலும் ரோஜாவின் அடிப்பாகத்தில் அப்பியிருக்கும் அழகைப்போல் முகத்தில் ஏதோ ஒரு கலை மூலையில் ஒதுங்கியிருந்த கலை...!

    இலட்சம் முறை இடித்தாலும் பெருக்காத அல்லது இளைக்காத உரல்வாய் போல் இரட்டைநாடி தேகம்....!

    எல்லாம் கடந்து, இவையெல்லாம் கடந்து பார்வையில் மட்டுமொரு பௌர்ணமி வெளிச்சம்...! ஒரு சூரிய கிரகணம்...! ஒரு தாமரை சிரிப்பு...!

    தென்றல் வந்து தொட்டதும் வெள்ளை காகிதங்கள் பயத்தில் படபடத்தன அவற்றை மடியில் அழுத்தி ஆபாயம் போக்கினான் வாசன்.

    பொங்கலன்று மட்டும் புதுசாய் தெரிகிற பாமரனின் குடில்போல் சாயங்காலம் மட்டும் சந்தோஷமாய் தெரியும் வாசனின் வதனம்.

    சுகம்!

    மயிலின் இறகைப் புத்தகத்தில் பொதித்து குட்டிபோடும் என்று எண்ணி... எண்ணி.... வலம் வரும் வகுப்பு ஆசிரியருக்குத் தெரியாமல் பக்கம் புரட்டி இறகு பார்ப்பது சுகம்!

    சிரிக்கும் போது அல்லது சிவக்கும் போது கன்னத்தின் மையத்தில் குழிவிழுகிறதா என்று குளியலறைக்குள் கண்ணாடி கொண்டு சென்று குறும்பாய் சிரித்துப் பார்ப்பது சுகம்!

    முற்றத்தில் முடங்கிய வண்ணம் நட்சத்திரங்களை எண்ணிப்பார்த்து.. எண்ணிப்பார்த்து தடம் மாறி, மீண்டும் விட்ட இடமிருந்து தொடங்கி... தொடர்ந்து.... இரவோடு விழித்து இருப்பது சுகம்!

    ஓடச் சவாரியின் போது ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு துடுப்புகள் பிரசவித்து மிதக்கும் குமிழ்களை பிடிக்க நினைத்து பிடிக்க முடியாமல் உடைப்பது சுகம்!

    வெளியூர் பயணத்தில் வெளியே மழை தூர... சன்னலைச் சாத்தி, தடுமாறாமல் பாட்டு ஒலிக்கும் தனியார் பேருந்தில் பயணிப்பது சுகம்!

    படகோரம் மறைந்து காதலியின் பட்டுநிற பாதங்களை கடல் மண்ணால் மூடி, மறுபடி தோண்டி, மீண்டும் மூடி, மீண்டும் தோண்டி, பாதச் சருமத்தில் விரல்களின் நுனிகளை பரவவிடுவது சுகம்!

    பழங்கால அரண்மனைகளின் ஜமீன் படங்களில் படிந்திருக்கும் தூசுகளை முகத்திற்கு நேரே மட்டும் துடைத்துவிட்டு முறுவலித்துப் பார்ப்பது சுகம்!

    மான்தோலின் மேல் பகுதி - மாட்டின் கழுத்துப் பகுதி - முயலின் முதுகுப் பகுதி - பெண்ணின் இடைப் பகுதி - புறாவின் அடிப்பகுதி - பாறையின் பாசிப்பகுதி - தொட்டுத் தொட்டு வருடுவது சுகம்!

    இமைகள் மேல்நோக்கி இறுக - இதயம் விட்டுவிட்டு உருக - நகங்களை நகங்கள் சுரண்ட - கீழுதடை மேற்பற்கள் வந்து வந்து பதம்பார்க்க - அடிக்கடி எச்சில் விழுங்க - சுற்றிச் சுற்றி விழிகள் சுழற்ற - பேனாவை விரல்கள் பிராண்ட - காகிதத்தை நிரப்ப கற்பனித்து இருப்பது சுகமோ சுகம்!

    வாசன் பொற்கொல்லன்...!

    பொன் கோர்ப்பது போல் தன் தாள்களைத் தேடித்தடவி சொல் கோர்த்துக் கொண்டிருந்தான்.

    கவிதை என்பது கார்பரேசன் குழாய் மாதிரி வரவே வராது வந்தால் காவிரிநீர் பாசனம் போல் பொழியும்!

    அடிநீர் வேண்டுமென்றால் நிலம் குடைய வேண்டும் -

    அசல்முத்து வேண்டுமென்றால் கடல் குடைய வேண்டும் -

    குகைப்பாதை வேண்டுமென்றால் மலை குடைய வேண்டும்

    கவிதை வேண்டுமென்றால் மனம் குடைய வேண்டும்!

    குடைந்தான்!

    குடைந்து... குடைந்து... வார்த்தை குச்சிகளால் கவிதை கூடை முடைந்தான்.

    எதை எழுதுவது... எதை எழுதுவது. பாடுபொருள் என்னது... எதைத் தீர்மானிப்பது? ஆசு கவிஞன் பாடுபொருள் தேடி பாடுபடமாட்டான். அவனுக்கு பார்க்கும் பொருள் எல்லாம் பாடுபொருளாய் தெரியும்.

    எதை எழுதலாம் என்று யோசிப்பவனை விட எதையும் எழுதலாம் என்று முடிவெடுப்பவனையே பஞ்சமில்லாத கவிஞன் என்று தமிழ் பறைசாற்றும்.

    ஆம்! எதையும் எழுதலாம். காணும் பொருள் யாவும் கவிதையாய் எழுதலாம்.

    பூவைப் பற்றி எழுதலாம் - தீயைப் பற்றி எழுதலாம்

    பாவை பார்த்து எழுதலாம் - பாறை பார்த்து எழுதலாம்

    வாள் போரும் எழுதலாம் - வைக்கோல் போரும் எழுதலாம்

    மூர்க்கம் கண்டும் எழுதலாம் - முளை கண்டும் எழுதலாம்.

    கவிதை என்பது வானத்தை தீண்டும் இமயத்தைத் தாண்டும் தீயைச் சீண்டும்.

    கவிதை எழுதும் போது உண்டாகும் சுகத்தை உரை கேட்டானாம் ஒருவன்.

    முதல்முறை கலவியின் போது இறுதி நிமிஷம் போல் இருக்கும்

    சொல்லுக்குப் பஞ்சமில்லாத பாரசீக கவியொருவன் சொன்னானாம்.

    கவிதை எழுதும் போது வரும் வலியை அறிவி - கேட்டானாம் ஒருவன்.

    பிரசவத்தின் வலிபோல் பின்னிப்பின்னி இருக்கும் கடைசி நிமிஷத்திலும் காகிதம் கொடு என்று அரபு கவியொருவன் அறிவித்தானாம்.

    கவிதையில் பொய் அழகாய் இருக்குமா?

    இருக்காது... இருக்கவே இருக்காது!

    மல்லிகையில் மருவிருந்தால் அழகாய் இருக்குமா?

    மான்தோலில் வரியிருந்தால் அழகாய் இருக்குமா?

    சூரியனில் கறையிருந்தால் அழகாய் இருக்குமா?

    வானத்தில் மேகம் - வாசலில் கோலம் -

    நெற்றியில் புருவம் - இருட்டில் நிலா - கவிதையில் மெய்.

    இதுதான் அழகாய் இருக்கும்; பொறுத்தமாய் இருக்கும்.

    கவிதைக்கு பொய்யுணர்வு அவசியமல்ல.

    மெய்யுணர்வே அவசியம்!

    புல்லாங்குழலுக்கு காற்றே அவசியம், தண்ணீர் அவசியமா?

    பூவுக்கு சூரியஒளி அவசியம் விளக்கொளி அநாவசியம்!

    வாசன் வரிதொடுத்தான். எழுது எதையாவது எழுது.

    எழுதாமல் விட்டுவிட்டதால் பலகவிஞர்களின் பேனா துருப்பிடித்து தூங்குகிறது. அவர்கள் விரல்கள் இருப்பதை மறந்தவர்கள் உயிரோடு இருக்கையில் இறந்தவர்கள்.

    ஒரு கவிஞன் ஒரு மருத்துவனைப் போல் எப்போதாவது உணர்ச்சிவசப்படக் கூடாது. ஒரு காமுகனைப் போல் எப்போதும் உணர்ச்சிவயப்பட்டே இருக்க வேண்டும்.

    எழுதப்பா எழுது! வாசனின் மனம் வழக்காடியது. அவனை அதுவந்து வந்து அறித்தெடுத்தது எழுதலாம், கண்ணில் காண்பன அனைத்தும் எழுதலாம்!

    அதோ தூக்கனாங்குருவிக் கூடு. இந்தப் பிரபஞ்சத்தில் காற்றில்லாத பகுதியென்று எந்தப் பகுதியும் இல்லை. எழுத முடியாத பொருள் என்று எந்தப் பொருளும் இல்லை. எழுதலாம். தூக்கனாங்குருவி கூடுதானே... எழுதலாம்!

    "பணக்காரப் பறவைகள்

    கிளைகளில் இடம்பிடித்து

    பள்ளிகொண்டு விட்டதால்

    ஏழைப் பறவைகள்

    எங்கே செல்லும்..?

    அந்தரத்தில் வீடுகட்டி

    அடைந்து கொண்டன!"

    இப்படியும் எழுதலாம்.

    "பாவம்

    தூக்கனாங்குருவிக்கு

    பாரசீகப் பழக்கம்

    மதுக்குடுவையை

    தரையில் வைக்காமல்

    மரத்தில் ஏறி

    மாட்டி வைக்கின்றன!"

    இப்படியும் எழுதலாம்.

    அதோ.. அதோ ஆற்றங்கரை ஆமைபோல் அசையாமல் கறுத்திருக்கும் பாறை.

    "காற்று இந்திரனோடு

    கலவி கொண்டதால்

    தண்ணீர் முனிவன்

    கல்லாக்கி விட்டு

    தரை தெரிக்க ஓடுகிறான்"

    "அகலிகை கூட்டம்

    அன்று முதல் இங்கே

    கால்பட வேண்டி

    காத்திருக்கின்றன

    எந்த இராமனும் வரவில்லை

    ஆதலால்

    பாறையில் இருப்பதே

    வாழ்க்கையாய் போச்சுதே"

    இப்படியும் எழுதலாம்.

    "கூடத்தினிலே

    குப்புறப் படுத்த

    கறுத்த கட்டழகியின்

    பெருத்த பின்னழகு"

    இப்படியும் எழுதலாம்.

    கவிதையிருக்கிறதே, அது தேக்கு மரமல்ல் நெத்து குத்தலாய் நிற்கும் மூங்கில் மரம்!

    வார்த்தைக்குச் சூடு காட்ட காட்ட வசதிக்கேற்ப வடிவம் வளையும் மெழுகைப் போல மெதுவாய் குழையும்!

    வாசன், தன்வரிகளை பார்த்து வசமிழந்தான். பூ - தன்னைத்தானே வருடிக்கொண்டால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது.

    தாய், பிரசவம் முடித்து மெல்லிய சிவப்பு வெண்மை சேர்ந்த விரல் கொண்ட மழலையின் உள்ளங்கையைத் தடவி பார்ப்பது போல் தன் கவிதைத் தாளை தடவிப் பார்த்தான்.

    சிலையின் கன்னத்தில் மெழுகு தேய்த்து வழவழப்பாய் வடித்திருந்த சிற்பி

    Enjoying the preview?
    Page 1 of 1