Manjal Paravai
By Pa. Vijay
()
About this ebook
பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.
கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.
இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது
Read more from Pa. Vijay
Aranmanai Ragasiyam Part -2 Rating: 0 out of 5 stars0 ratingsIntha Sippikkul Rating: 5 out of 5 stars5/5Udaintha Nilakkal - Part 1 Rating: 4 out of 5 stars4/5Aranmanai Ragasiyam Part -1 Rating: 4 out of 5 stars4/5Silmishiye… Rating: 4 out of 5 stars4/5Puligalin Puthalvargal Rating: 5 out of 5 stars5/518 Vayasule Rating: 3 out of 5 stars3/5Pa. Vijay Oru Paarvai Rating: 5 out of 5 stars5/5Udaintha Nilakkal Part 2 Rating: 5 out of 5 stars5/5Sowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal@Kaadhaligal.com Rating: 0 out of 5 stars0 ratingsMothu... Munneru... Rating: 0 out of 5 stars0 ratingsPorpura Rating: 0 out of 5 stars0 ratingsKanne Nee Chaos Theory Rating: 0 out of 5 stars0 ratingsKaarsilambu Osaiyile Part-2 Rating: 5 out of 5 stars5/5Udaintha Nilakkal Part 3 Rating: 5 out of 5 stars5/5Bachelor Arai Rating: 0 out of 5 stars0 ratingsApple Mathiri Unnai Appadiye Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Kalvettugal Rating: 2 out of 5 stars2/5Kaarsilambu Osaiyile Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsInnum Enna Thozha Rating: 1 out of 5 stars1/5Vaanavil Poonga Rating: 5 out of 5 stars5/5Pengal Pandigai Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Nila Rating: 0 out of 5 stars0 ratingsIcekatti Azhagi Rating: 0 out of 5 stars0 ratingsIravulaavigal Rating: 0 out of 5 stars0 ratingsGnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Thedi Vanambaadigal Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Marangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manjal Paravai
Related ebooks
Puzhuthi Kaattu Thendral Rating: 0 out of 5 stars0 ratingsJakartavil 100 Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsPoonkothu Rating: 0 out of 5 stars0 ratingsManasai Vittra Vekkam Rating: 0 out of 5 stars0 ratingsAkanaanuru Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsAmuthey, Vazhikaattu! Rating: 0 out of 5 stars0 ratingsKamba Ramayanam - Bala Kandam Rating: 0 out of 5 stars0 ratingsUtharayanam Rating: 0 out of 5 stars0 ratingsAmmavukku Oru Parisu Rating: 0 out of 5 stars0 ratingsPuranaanuru Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Thedi Vanambaadigal Rating: 0 out of 5 stars0 ratingsPorpura Rating: 0 out of 5 stars0 ratingsApple Mathiri Unnai Appadiye Rating: 0 out of 5 stars0 ratingsSowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsTamizhiyal Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsMalarntha Mottu Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 11 Rating: 0 out of 5 stars0 ratingsUdalengum Oru Sirumi Rating: 0 out of 5 stars0 ratingsAntha Onbathu Per Rating: 5 out of 5 stars5/5Pachai Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsVanamalli Rating: 0 out of 5 stars0 ratingsIthazhgal Rating: 0 out of 5 stars0 ratingsKallil Kasintha Thulikal! Rating: 0 out of 5 stars0 ratingsOru Koppai Vithi Rating: 0 out of 5 stars0 ratingsPaadi, Aadu Papa Rating: 0 out of 5 stars0 ratingsParavaigalin Isaiyamaippaalan Rating: 0 out of 5 stars0 ratingsPoovey! Poovey! Penn Poovey! Rating: 0 out of 5 stars0 ratingsMuganool Kavithaigal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Manjal Paravai
0 ratings0 reviews
Book preview
Manjal Paravai - Pa. Vijay
http://www.pustaka.co.in
மஞ்சள் பறவை
Manjal Paravai
Author:
பா.விஜய்
Pa. Vijay
For more books
http://www.pustaka.co.in/home/author/pa-vijay
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
தென்றலின் தொட்டில்
மஞ்சள் பறவை
நிலா காய்கிறது
இது கீதா உபதேசமல்ல...
தாழ் விலகட்டும்
தூசுகள் மகரந்தமல்ல
வேர்கள் மறந்த விழுதுகள்
துப்பாக்கிகள் தூங்கட்டும்
ஊன்றுகோலோடு ஒரு வேண்டுகோள்
அடுத்த நூற்றாண்டின் அவசரத் தேவை
வேர்கள்
மொழி ஒன்று
அவர்கள் முகவரிகள்
அந்தப் பேனாக்காரர்கள்
பழைய பாற்கடல்
மதம் எனும் மதம்!
கீட்ஸ்
பிரபஞ்ச சுவாசம் சுருங்குவதோ
பூபாளம் முகாரியாவதோ...
வேர்கள் – விழுதுகள் ஒரு விசாரணை
ராஜாளிகள் அணிவகுக்கட்டும்
யுகம் புரட்டும் யுவதிகள்
பேனாவும் - பேனாவும்
விசாரணை
தென்றலின் தொட்டில்
கடற்கரை!
பாதச்சுவடுகளின் மாநாடு!
கடலுக்கும் கடற்கரைக்கும் ஒருதலைக் காதலோ? அலைகளால் எவ்வளவோ கடிதம் எழுதியும் கடலுக்கு இந்தக் கடற்கரை ஒரு பதில்கூட எழுதுவதில்லையே..!
சமுத்திரத்தை நான் நேசிக்கிறேன்! ஏனென்றால் சமுத்திரமும் என்னை நேசிக்கிறது!
இல்லாவிட்டால் அது தன் அலைக்கரத்தால் என்னைத் தழுவிப் போகுமா?
தன் சிப்பிகளை வீசி, அது எனக்கு முத்தம் கொடுக்க முயல்கிறது.
தன் துளிகளை அனுப்பி, அது என்னை ஆசிர்வதிக்கிறது.
என்னைப் பார்த்ததும், அது ஆரவாரித்து சங்கீதம் பாடுகிறது.
அந்த கீதம் குயிலின் சத்தத்தைப்போல் மென்மையானதல்ல. ஆனால் நான் சமுத்திரத்தின் சங்கீதத்தில் ரம்மியத்தைத் தான் தேடுகிறேன்... ராகத்தை அல்ல!
பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வரும் சீருடைச் சிறுவர்களாய் அந்த அலைகளின் நடையில் என்னவொரு மிதப்பு!
அதோ.. ஊருக்குப் போகும் கணவனை வழியனுப்பும் மனைவியாய் அந்த பாய்மரங்கள் ஏனோ கடற்கரையையே எட்டி எட்டிப் பார்க்கின்றனவே.
காற்று அங்கே தினந்தோறும் சுதந்திர தின விழா கொண்டாடுகிறது! என்ன ஒரு சுகிப்பு அதற்கு. அது கரையோரம் கிடக்கும் பாறைகளின் காதில் எந்த ரகசியம் சொல்லிப் போகிறது.
இந்தக் காற்று, மனிதர்களை உரிமையோடு தொட்டு உரையாடுகிறது. இரவின் தனிமையிலே என்ன செய்யும்?
ஈரமான மணற் பரப்பில் நடைபயிலும் நண்டுகளின் கைப்பிடித்து நடந்து போகுமோ!
ஒவ்வொரு பாதச்சுவட்டருகே உட்கார்ந்து வகுப்பு படிக்குமோ!
சிறுவர்கள் கட்டிய மணல்வீடுகளில் கொஞ்ச நேரம் பயணித்து இளைப்பாறுமோ!
சுண்டல் தின்றுவிட்டு வீசிப்போன காகிதத்தில் நாட்டு நடப்பு வாசிக்குமோ!
கால் நீட்டிப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து இருக்கும் கட்டுமரப் பாட்டிகளிடம் பழங்கால கதை கேட்டுக் கொண்டிருக்குமோ!
குவிக்கப்பட்ட மீன் வலைகளின் துவாரங்களை எண்ணிக் கொண்டிருக்குமோ!
நடுக்கடலில் ஓடிப்போய் குளித்துவிட்டு மணலில் புரண்டு தலை துவட்டிக் கொள்ளுமோ!
அடடா! முதன்முறை முத்தம் பெற்ற காதலியாய் சிவந்து போயிருக்கிறதே வானத்தின் கன்னம்.
அந்த மேகங்கள் எல்லாம் தங்களை அலங்கரித்துக் கொண்டபடி ஏதேனும் அழகிப் போட்டிக்குப் போகிறதோ!
நட்சத்திரங்கள் எல்லாம் கூடி அங்கே கவியரங்கம் நடத்துகிறதோ!
ஓ.. அதனால்தான் இரவானதும் அதிகமாய்க் கைத்தட்டுகிறதா கடல்.
கடல் என்பது எவ்வளவு நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கும் வாழ்க்கைக் கண்ணாடி! மனிதர்களை எப்படி அது மறைமுகமாகப் பிரதிபலித்துக் காட்டிப் பாடம் நடத்துகிறது.
கரையோரக் கடல் ஆரவாரிக்கிறது. நடுக்கடல் அமைதியாயிருக்கிறது
ஆரவாரிக்கும் மனிதனையும் நம்பாதே! அமைதியாக இருக்கும் மனிதனையும் நம்பாதே!
இரண்டும் ஆபத்தென்று சாணக்கிய வாசகம் சொல்கிறதே!
ஆனால், உழைப்பவர்களுக்கு அது சரியான ஊதியம் கொடுத்து விடுகிறது. முதலாளித்துவத்தை பூஜிப்பது கிடையாது.
அதற்கு வியர்வையின் சக்தி தெரியும். அதற்கு வியர்வையின் வலி தெரியும். அதற்குக் கண்ணீரின் சோகம் தெரியும்
அதனால்தான் அது உப்பாகவே இருக்கிறது போலும்!
இந்தப் புனித ஸ்தலத்தை தாடி இளைஞர்கள் ஒப்பாரிக் கூடமாக்கி விட்டார்கள்.
விபச்சாரிகள் விற்பனை இடமாக்கி விட்டார்கள்.
போலீஸ்காரர்கள் மாமுல் ஸ்தாபனமாக்கி விட்டார்கள்.
கவிஞர்கள் அழகியலின் நிறுவனமாக்கி விட்டார்கள்.
காதலர்கள் முத்தங்களுக்கான திரையாக்கி விட்டார்கள்.
தோழர்களே... வாருங்களேன்!
அதன் அலைகளோடு கால் நனைப்போம்! அந்த பாய் மரங்களோடு கொஞ்ச நேரம் பேசுவோம்! அந்தக் காற்றின் முதுகில் ஏறி சுற்றிப் பார்ப்போம்!
கடல் மணலில் படுத்துக்கொண்டு நம்மைப் பார்த்துக் கண்சிமிட்டுகின்ற நட்சத்திரங்களைப் பார்த்து நாமும் கண்ணடிப்போம்!
அங்கே அலையும் நண்டுகளோடு ஓடிப்பிடித்து விளையாடுவோம்!
வாடகை வீட்டில் குடியிருந்த வீட்டுக்கார மாமியார்களின் சீறும் பார்வையில் சிதிலமாகிவிட்டோம்.
ஒரு சிறிய வீடு கட்டி எஜமானர்களாவோமே!
அந்த வீட்டில் தண்ணீர் பிரச்சினை இல்லை!
மின்சாரக் கட்டணம் தேவை இல்லை!
சமையலறைப் புகை இல்லை!
கொசுக்கடி இல்லை!
குருவிகளாய் மாறி குடியிருந்து வருவோம்.
வாருங்கள்!
கடற்கரைக்கு நாம் விருந்தாளியாகவே இருக்கிறோம். நண்பர்களாக வேண்டாமா!
*****
மஞ்சள் பறவை
மலையடிவாரம்!
யானைகள் காட்டில் பாடிக் கொண்டிருக்கின்றன!
சளக்கென்று ஒரு மீன் குஞ்சு தண்ணீரில் சடுகுடு ஆடுகிற சத்தம்!
லட்சோபலட்சம் தாவரங்கள் ஒரே நேரத்தில் குளித்துக் கொண்டிருக்கின்றன அழகான பனித்துளியால்!
மழையில் நனைந்தபடி, பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் குழந்தையை ஓடோடிப் போய் வாசலிலேயே நிறுத்தி தலை துவட்டி விடும் பரிவுள்ள தாயாய், பனித்துளியில் குளித்துக் கொண்டிருந்த தாவரங்களை, மரங்களை துவட்டிக் கொண்டிருந்தது தென்றல்!
அப்பாடா.. !
வைகறையில் பார்த்தால் மலையடிவாரக் காடே குளித்து முடித்து சில்லென்று விளையாடிக் கொண்டிருக்கும்.
எவ்வளவு அமைதியாக நடைபெறுகிறது இந்தக் குளிப்பாட்டு படலம்.
மஞ்சள், செந்நீலம் கலந்த ஒரு பறவை உயர உயர கிளம்புகிறது.
உயர்வதில் உயிரினங்களுக்குத்தான் எவ்வளவு பிரியம்!
அதோ! அதே மாதிரி இன்னொரு பறவை, அதன் பெயரும் எனக்குத் தெரியாது.
கழுத்துக்கடியில் தான் எவ்வளவு மென்மை எப்படியிருக்குமோ?
ஒரு குழந்தையின் உள்ளங்கை மாதிரியா? ஒரு தாமரை இலையின் அடிப்பாகம் மாதிரியா?
இப்படித்தான் ஒரு நாள்
பெயர் தெரியாத அந்தப் பறவையைப் பார்த்துப் பெருமூச்சு விட்ட வைகறை நேரம்.
சட்டைப் பைக்குள் கிடந்த வேர்க்கடலைகளை உரித்து உரித்து ஒவ்வொன்றாகத் தின்னுகிறேன்.
கடைசிக் கடலைத் தவறிப்போய் கீழே விழுந்தது.
வாய்க்குள் என்ற நினைவில் காத்திருந்த நாக்கு வெறுமனே சப்புக் கொட்டுகிறது.
கீழே விழுந்த வேர்க்கடலையைப் பொறுக்குவதற்காக குனிந்து தேடுகிறேன்.
முதல் கடலையாக இருந்தால் விட்டிருப்பேன். அதுதான் கடைசிக் கடலை.
மேகத்தைத் தொட்டு நின்றிருந்த யூக்கலிப்டாஸ் மரங்களின் சருகுகள் பூமிக்கு மெத்தை தைத்துக் கொண்டிருந்த இலையுதிர்க்காலம் அது!
இலைகளில் எல்லாம் எம்பராயடரில்
போட்ட மாதிரி துளித்துளியாய் பனியின் தூவல்.
எங்கே விழுந்தது வேர்க்கடலை. இலைகளை அலசி அலசி விரல்கள் குடைகிறது.
காற்று பருவ முடிக்குள் புகுந்து வெளியேறுகிறது. ஒரு சருகின் நுனி பிய்ந்து கொண்டு கண்ணுக்குள் அமர்கிறது.
கண்களால் மற்றவர்களை சுட்டெரிக்க முடிகிறது. அப்படியானால் கண்களுக்குள் நெருப்பு தகித்துக் கொண்டிருப்பதாகத்தானே அர்த்தம்.
அது தகனம் செய்துவிட வேண்டியது தானே அந்த சருகுப் பிசிறை.
செய்யாது!
கண் அஹிம்சைவாதி, அழத்தெரியுமே தவிர, அழச்செய்யத் தெரியாது.
இப்போது யாருமே அடிக்கவில்லை. ஆனால் கூட பள்ளிக்கூடத்தில் வாத்தியார் பெண் பிள்ளைகளுக்கு முன்னால்..
அன்றொரு நாள்.
டிரவுசரை அவுத்துருவேன்
என்று மிரட்டியபோது முட்டிக்கொண்டு காட்சியை மறைத்ததே ஒரு சுடு கண்ணீர் சொட்டு.
அதே மாதிரிதான் இப்போதும்.
கண்ணுக்குள் விழுந்த சின்ன சருகுத்தூள், ஒரு சொட்டுக் கண்ணீரை கழுத்தைப் பிடித்து தள்ளியதோ என்னவோ, உடனே கன்னத்தில் வந்து வழிந்தது.
ஆனால், அந்தத்துளி வழிந்து போன பாதையில் ஈரக்காற்றும் பட்டதால் என்ன ஒரு சிலிர்ப்பு! அந்தச் சிலிர்ப்பை முழுமையாய் அனுபவிக்க முடிகிறதா?
தண்ணீர் குழாய்க்கு வந்த காதலியை முழுமையாக ரசிக்க முடியுமா? வீட்டுக்குள்ளிருந்து நம் தாய் நம்மை அதட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது!
கண்ணுக்குள் சருகுத்தூசு மீண்டும் ஏதோ செய்தது. கண்ணை விரல்கள் பிசைய பிசைய ஓரங்கட்டி விட்டது ஒரு வழியாய்த் துரும்பு.
இனி வலிக்காது!
இனி தண்ணீர் சுரக்காது!
தேய்த்த தேய்ப்பில் குங்குமம் கொட்டிவிட்ட மூக்கு நுனியாய் கண்ணில் சிவப்பு குவிந்திருக்கலாம்.
சரி! எங்கே அந்த தவறிய வேர்க்கடலை? இலைகளுக்கடியில் போய்ப் பதுங்கிக் கொண்ட அந்தக் கடைசி கடலை எங்கே?
கலங்கிய போதும் கண் அதைத் தேடவே செய்தது. வேல் மார்பில் பாய்ந்த பிறகும், பகைவனைத் தேடும் மானமுள்ள வீரனைப்போல!
கடைசியாக... கடைசியாக..
ஒரு மரத்தின் வேர் முடிகிற இடத்தில், சருகுகள் குகை வாசல் மாதிரி குவிந்த மறைவில் உருண்டு ஒளிந்து கொண்டிருந்தது அந்த ஒற்றைக் கடலை.
அதுவரைத் தின்று முடித்த கடலையின் ருசி இன்னும் தொண்டைக் குழியிலிருந்து இறங்கிப் போகவில்லை.
கடைசிக் கடலையைத் தின்னும் ஆவல்!
தூறலில் நனைந்த குடை மாதிரி நாக்கின் மீது இலேசாக எச்சில் ஊற வைக்கிறது.
மெதுவாகவே சருகை ஒதுக்குகிறேன். குழந்தை ஈரம் பண்ணி விட்ட துணியை அவிழ்ப்பது மாதிரி!
அந்தக் கடலைப் பாதி முகம் காட்டுகிறது. முழுமையாக சருகுளை நீக்கிய பின் கடலை தெளிவாகத் தெரிகிறது.
இந்த முறை தவறவிடாமல் வாய்க்குள் போட்டு கபளிகரம் செய்து விட வேண்டும்.
உற்றுப்பார்த்து உறைகிறேன்.
ஓ..! ஒரு அதிர்ச்சி! ஒரு பின்வாங்கல் ! அதை எடுக்கப் போன கை விரல்களில் பந்த் ஏன்?
அந்த ஒற்றைக் கடலையை மொய்த்துக் கொண்டிருந்தது ஒரு சிவப்பு எறும்பு! வேகவேகமாக அதை உருட்ட முனைந்து தோற்றுக் கொண்டிருந்தது.
பக்கத்து வீட்டு குழந்தையைப் பார்த்ததும் பயந்து போய் சின்ன வயசில் நான் பொம்மைகளை வாரிக்கொண்டு ஓட முயல்வது மாதிரி! என்னைப் பார்த்ததும் அந்த