Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanavil Poonga
Vaanavil Poonga
Vaanavil Poonga
Ebook200 pages20 minutes

Vaanavil Poonga

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

முன்னுரை அல்ல

வாசகர்களுக்கு வணக்கம்!

வானவில் பூங்கா அது என்ன இது முன்னுரை! சலிப்பாய் இருக்கிறது! எல்லா கடிதங்களிலும் "அன்புள்ள... என்று தொடங்கி ….நிற்க..." என்பது வரை செயற்கை உணர்வுகள் போல இந்த முன்னுரைகளும்... ஆகிவிட்டது!

"இதில் என்ன எழுதியிருக்கிறேன் என்றால்....' என்று எழுத வேண்டி வரும்!

வாங்கி விட்டவருக்கும் வாசித்து விட்டவருக்கும் இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெரியாதா?

தெரியாமல் போய்விட இது என்ன அகழ்வாராய்ச்சிக் குறிப்புகளா?

முன்னுரை என்பது எழுத்தாளன் – வாசகனுக்கு தடக்... தடக்... ரயில் பாலமாக இருக்கலாம்! அந்தப் பாலம் இந்தப் புத்தகத்திற்கு அவசியமில்லை!

ஏனெனில்… இஸங்களில் இது பாமர இஸம்! இஸ்டுகளில் நான் மக்களிஸ்ட்! நேராக புத்தகத்திற்குள் செல்லலாம்!

நேரம் மிச்சம்! நன்றிகளுடன்

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127104370
Vaanavil Poonga

Read more from Pa. Vijay

Related to Vaanavil Poonga

Related ebooks

Reviews for Vaanavil Poonga

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanavil Poonga - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    வானவில் பூங்கா

    Vaanavil Poonga

    Author:

    பா. விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நான்

    2. சிற்பியைத் தேடும் கல்

    3. கடவுளின் காதலி

    4. பேனா பேசுச்சு

    5. மெரினா பீச்

    6. ஒரு சகாப்தம் நிசப்தமாய்

    7. சுதந்திர தின விழாவில்

    8. சங்கே முழங்காதே

    9. வித்தியாசமில்லை

    10. அலாவுதீனும் அற்புத விளக்கும் -

    11. ரோஜாக்களோடு ஒரு நாள்

    12. லப்டப் லப்டப்

    13. மனசு

    14. அடங்காதது அடக்கப்படும்

    15. விதியெனும் வியாதி

    16. கணக்கு

    17. வானவில் பூங்கா

    18. மிருகம் - மனிதன்

    19. ஆசையயோ… ஆ... ஆசை…

    20. எமலோகம்

    21. நா

    22. துணி

    23. படிகள்

    24. ஓட்டம்

    25. விலாசம்

    26. தவம்

    27. நாம் ஒரு கடிகாரம்

    28. ஒரு புத்தகக் கடையில்....

    29. பூக்களின் தேசத்தில் தேர்தல்

    30. ஒரு கிறுக்கனின் தத்துவப் பேச்சு!

    முன்னுரை அல்ல

    வாசகர்களுக்கு

    வணக்கம்!

    வானவில் பூங்கா

    அது என்ன இது முன்னுரை!

    சலிப்பாய் இருக்கிறது!

    எல்லா கடிதங்களிலும்

    "அன்புள்ள... என்று தொடங்கி

    ….நிற்க..." என்பது வரை

    செயற்கை உணர்வுகள் போல

    இந்த முன்னுரைகளும்... ஆகிவிட்டது!

    "இதில் என்ன எழுதியிருக்கிறேன்

    என்றால்....' என்று எழுத வேண்டி

    வரும்!

    வாங்கி விட்டவருக்கும்

    வாசித்து விட்டவருக்கும்

    இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது

    தரியாதா?

    தெரியாமல் போய்விட

    இது என்ன அகழ்வாராய்ச்சிக்

    குறிப்புகளா?

    முன்னுரை என்பது

    எழுத்தாளன் – வாசகனுக்கு

    தடக்... தடக்...

    ரயில் பாலமாக இருக்கலாம்!

    அந்தப் பாலம் இந்தப்

    புத்தகத்திற்கு

    அவசியமில்லை!

    ஏனெனில்…

    இஸங்களில்

    இது பாமர இஸம்!

    இஸ்டுகளில்

    நான் மக்களிஸ்ட்!

    நேராக புத்தகத்திற்குள்

    செல்லலாம்!

    நேரம் மிச்சம்!

    நன்றிகளுடன்

    1. நான்

    'நான்' என்று

    நினைப்பது

    அகந்தையாம்.

    யோசிப்போம்

    நான் என்று

    நினைக்கவில்லையென்றால்

    என்னென்ன விபத்துக்கள்

    நேரும் தெரியுமா?

    முதலில்

    நமக்கு நாமே

    அன்னியமாகி விடுவோம்!

    'நான்' என்று

    நினைக்காத சிங்கம்

    அழுகிய சில கேரட்டுகளுக்காக

    பொதி சுமந்து போகும்.

    'நான்' என்று

    நினைக்காத புலி

    ஓட்டு வாங்கச் சிரிக்கும்

    அரசியல்வாதிகளைப் போல்

    புல்லுக்கட்டுக்காக

    விவஸ்தை இல்லாமல் சிரிக்கும்

    நான் என்று

    நினைக்காத மயில்

    ஏதாவது ஒரு

    சேட்டுக் கடையில்

    தோகையை வெட்டி

    அடகு வைக்கும்

    நான் என்று

    நினைக்காத மனிதன்

    கால்களில் கூட

    பிச்சைப் பாத்திரங்களை

    ஏந்திக் கொண்டிருப்பான்.

    நான் என்று.

    நினைக்கக் கூடாதாம்!

    நான் என்பது என்ன

    இழிவா?

    நான் என்பது என்ன

    கெட்ட வார்த்தையா?

    'நான்' என்பது என்ன

    அகோரமா?

    'நான்' என்று மட்டும்

    நினைத்திரா விட்டால்

    உலகப் போர்ப் படைத்

    தளபதிகள்

    ஜவுளிக் கடைகளில்

    புடவை கட்டும்

    பொம்மைகளாய்

    நின்றிருந்திருப்பார்கள்.

    'நான்' என்று மட்டும்

    நினைத்திரா விட்டால்

    புரட்சிக் கவிஞர்கள்

    தங்கள் பேனாக்களை

    யாராவது ஒரு

    முதலாளிக்கோ,

    அழகிக்கோ

    காது குடையக்

    கொடுத்திருந்திருப்பார்கள்.

    நான் நான் என்று

    நினை மனிதா!

    'புயல்' தன்னை

    புயலென்று

    நினைக்காவிட்டால்

    கிழிந்து போன கந்தல்

    அதை 'செளக்கியம்’

    கேட்கும்

    தீ தன்னை

    தீயென்று

    நினைக்காவிட்டால்

    விட்டில் பூச்சி

    அதன்மீது

    எச்சில் துப்பிப் போகும்.

    எந்த சக்தியும்

    தன்னை

    தானென்று

    நினைக்காவிட்டால்

    தோல்வியையே

    அறுவடை

    செய்யும்.

    ஆதலால்

    'நான்' என்று

    நினை

    ஆனால்,

    'நான்' மட்டும்தான்

    என்று மட்டும்

    நினைத்தாதே.

    2. சிற்பியைத் தேடும் கல்

    "ஒரு ஊருக்குள்

    ஆளுயரக் கல்லொன்று

    வந்து விழுந்தது!

    பஞ்சாயத்து கூடியது!

    Enjoying the preview?
    Page 1 of 1