Aazhkadalin Adiyil…
By Sivan
()
About this ebook
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Read more from Sivan
Homer - Odessey Rating: 1 out of 5 stars1/5Karamazov Sagotharargal Rating: 0 out of 5 stars0 ratingsEzhai Padum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsIzhantha Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsBuddha Jathaga Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNana Rating: 0 out of 5 stars0 ratingsTom Sawyer Rating: 5 out of 5 stars5/5Ooz Nagarin Mayavi Rating: 0 out of 5 stars0 ratingsAal Kadathal Rating: 0 out of 5 stars0 ratingsRobinson Crusoe Rating: 1 out of 5 stars1/5Hitchcock Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsCasterbridge Nagara Mayor Rating: 0 out of 5 stars0 ratingsGeorge Eliot's Atrankaraiyora Aalai Rating: 0 out of 5 stars0 ratingsKalivarin Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsRobin Hood Rating: 0 out of 5 stars0 ratingsBhoomiyin Maiyathai Nokki Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsSiruvargalukkana Greekka Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnbathu Naatkalil Ulagai Sutri Rating: 0 out of 5 stars0 ratingsKannukku Theriyatha Manithan Rating: 0 out of 5 stars0 ratingsRobinson Kudumbam Rating: 0 out of 5 stars0 ratingsMobydick Rating: 3 out of 5 stars3/5Prabu Maandi Cristo Rating: 0 out of 5 stars0 ratingsUlagangalin Porattam Rating: 1 out of 5 stars1/5
Related to Aazhkadalin Adiyil…
Related ebooks
Aal Kadathal Rating: 0 out of 5 stars0 ratingsMohini Illam Rating: 0 out of 5 stars0 ratingsIraiyuthir Kaadu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Mohini Rating: 5 out of 5 stars5/5Pala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Anbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsNayakkar Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsVeli Rating: 0 out of 5 stars0 ratingsKadathal Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsSarppa Pali Rating: 0 out of 5 stars0 ratingsVendatha Varam Rating: 0 out of 5 stars0 ratingsVannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Vannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Marma Bungalow Rating: 0 out of 5 stars0 ratingsElla Saalaikalum Kutrangalai Nokki Rating: 5 out of 5 stars5/5Oonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsMarupadi Yen Vanthaai Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Antha Gnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Ezhuthanaal... Nee Vaarthaiyaavai... Rating: 0 out of 5 stars0 ratingsKulire! Kulire! Kollathey! Rating: 5 out of 5 stars5/5Unnai Kan Theduthe Rating: 0 out of 5 stars0 ratingsKaathalaai Vanthu Pogiraai Rating: 5 out of 5 stars5/5Kalyana Kaithi Rating: 0 out of 5 stars0 ratingsVaa! Arugil Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Kaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsNenjinile Oonjalaai Rating: 5 out of 5 stars5/5Kankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Aazhkadalin Adiyil…
0 ratings0 reviews
Book preview
Aazhkadalin Adiyil… - Sivan
http://www.pustaka.co.in
ஆழ்கடலின் அடியில்...
Aazhkadalin Adiyil...
Author: Jules Verne
ஜூல்ஸ் வெர்னே
Translated by:Sivan
சிவன்
For more books
http://www.pustaka.co.in/home/author/sivan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
ஆழ்கடலின் அடியில்...
ஜூல்ஸ் வெர்னே
தமிழில்: சிவன்
ஓர் அறிமுகம்
‘விஞ்ஞானக் கதைகள்’ என்ற இலக்கியப் பிரிவின் பிதாமகன் என்று கருதப்படும் ஜூல்ஸ்வெர்னேளன்கிற ஷூல்வெர்ன் 1828 - ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள நான்ட்ஸ் நகரில் பிறந்தவர். அவர் தந்தையார் மத ஆசாரங்களின்படி வாழ்ந்த ஒரு சாதாரண வழக்கறிஞர். நான்ட்ஸ் ஒரு துறைமுக நகரமாக இருந்ததால், குழந்தைப் பருவத்திலிருந்தே வெர்னுக்கு கடலுடன் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் ஏற்பட்டன. அவரது குழந்தைப் பருவத்தில் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு கப்பலில் வேலைக்காரச் சிறுவனாகப் பணிபுரிய ஒப்புக் கொண்டார், வீட்டைவிட்டுச் சென்ற மகனைத் தேடிக் கண்டுபிடித்த அப்பா, அடுத்த துறைமுகம் ஒன்றிலேயே மகனைக் கப்பலிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த அவமானகரமான நிகழ்ச்சிக்குப் பிறகு கற்பனையில் மட்டுமே அந்தச் சிறுவன் நீண்ட கடல் பயணங்களை மேற்கொள்ள நேர்ந்தது. பாரிஸ் நகரில் சட்டப் படிப்பு படிப்பதற்காகச் சேர்க்கப்பட்ட வெர்னுக்கு, அந்தப் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும், பாரிஸ் நகர வாழ்க்கை மிகவும் பிடித்துப் போனது. பையனது மனநிலையை அறிந்த அப்பா, உடனே ஊருக்குத் திரும்பி வருமாறு அழைத்தார். ஆனால், வெர்ன் ஊருக்குத் திரும்புவதற்கு பதிலாக மாதம் நூறு ஃபிராங்க்குகள் வருமானம் தரக் கூடிய ஒரு வேலையில்-நாடக இயக்குநர் ஒருவரின் காரியதரிசியாகச் சேர்ந்தார்.
இரண்டு பெண் குழந்தைகளின் தாயான அனோரின் மொரெல் என்ற விதவைப் பெண்மணியை வெர்ன் 1855-ம் ஆண்டு திருமணம் புரிந்தார். பாரிஸ் நகரில் மதுவகைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த போதிலும், வெர்னின் மனத்தில் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் தணியவே இல்லை! அந்தக் கால கட்டத்திலேயே வெர்ன் சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் என்று சிலவற்றை எழுதினார்.
இந்தச் சூழ்நிலையில்தான் வெர்னின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. புகைப்பட நிபுணரான ஃபிலிக்ஸ் நாடர் என்பவருடனான நட்புதான் அந்தத் திருப்புமுனைக்குக் காரணம். வாயு நிறைக்கப்பட்ட பலூன்களில் பயணம் செய்து புகைப்படம் எடுப்பதில் தீவிரமான ஆர்வம் கொண்டவர் ஃபிலிக்ஸ். இந்த நோக்கத்துக்கு வசதியாக ஹெலிகாப்டர் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்பதும் ஃபிலிக்ஸின் நீண்ட நாளையக் கனவு. வெர்ன் எழுதுவதற்கு இதுவே அடிப்படை. முதலில் அந்தப் பயண அனுபவத்தை டைரிக் குறிப்பு மாதிரி எழுதியிருந்தார். பதிப்பாளர் கேட்டுக் கொண்டதன் பேரில் அதையே வாசகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஒரு கதையாகப் பின்னர் மாற்றினார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘ஒரு-பலூனில் ஐந்து வாரங்கள்’ என்பது.
விசித்திரமான கருப் பொருளை உருவாக்கி, அதில் தேவையான அளவுக்கு விஞ்ஞான உண்மைகளைக் கலந்து, படிப்பவர்களை நம்பவைப்பது என்பது ஷூல் வெர்ன் கண்டுபிடித்த உத்தி எனலாம். இதுதான் விஞ்ஞானக் கதைகளின் கட்டமைப்பு. இது இலக்கியத்துக்கு ஷூல் வெர்னின் பங்களிப்பு என்றுகூடச் சொல்லலாம். இன்று வரை விஞ்ஞானக் கதைகளின் இயல்பு இதுதான்.
வெர்னின் பலூன் கதை மகத்தான வரவேற்பு பெற்றது. அதன் விளைவாகப் பதிப்பாளர் ஒருவர், வெர்னுடன் இருபத்தோரு ஆண்டுகளுக்கு ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி ஆண்டு ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு நாவல்களை வெர்ன் எழுதிக் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தால் வெர்ன் எழுதிக் கொண்டே இருந்தார். இப்படித்தான் அவரது பெரும்பாலான நூல்கள் வெளியாகின. எழுத்தாளரான ஷூல் வெர்ன் இறந்த பிறகு கூட ஆறு வருடங்கள் தொடர்ந்து அவரது புதிய புத்தகங்கள் வெளியாகின. அந்த அளவுக்கு எழுதிக் குவித்தவர் வெர்ன். இந்த வரிசையில் அறுபத்தைந்து நாவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஆழ்கடலின் அடியில் (20,000 லீக்ஸ் அண்டர் தி ஸி) 1870, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் (எ ஜர்னி டுதி சென்டர் ஆஃப் தி எர்த்)-1864, பூமியிலிருந்து ஒரு நிலவுப் பயணம் (ஃபிரம் தி எர்த் டு தி மூன்)-1865, எண்பது நாட்களில் உலகைச் சுற்றி (அரெளண்ட் தி வேர்ல்டு இன் எய்ட்டி டேய்ஸ்)-1873-போன்றவை அவரது குறிப்பிடத் தக்க புகழ் பெற்ற நூல்கள்.
புத்தக விற்பனை மூலமாகப் பெரிய அளவுக்கு வருமானம் வந்ததால், வசதியான வாழ்க்கைக்காக வெர்ன், ஆமியே என்ற நகருக்குக் குடிபெயர்ந்தார். பிரான்ஸ்-பிரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டபோது தனது சொந்தப் படகில் பயணம் செய்து, கடற்புறக் காவல் பணியை மேற்கொண்டார். அதிர்ஷ்ட வசமாக அதில் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், அவரது தம்பி மகன் துப்பாக்கியால் சுட்டதால் வெர்னின் கால் பாதிக்கப்பட்டது. மனநிலை பாதிப்பு அடைந்த காஸ்ட்டன் அவரைச் சுட்டுவிட்டான்!
விஞ்ஞான உலகில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் கண்டுபிடிப்பையும் உடனுக்குடன் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார் வெர்ன். அவரது ஐம்பதாண்டு கால இலக்கியப் பணியில், புழக்கத்திலேயே இல்லாத பல புதிய கருவிகளை நாவல்களின் ஊடாகப் படைத்திருக்கிறார். அவரது பிந்தைய கால நாவல்களில் காரும் ரேடியோவும்கூட இடம் பெற்றிருக்கின்றன. அந்தக் கால கட்டத்தில்தான் வெர்னின் எழுத்துகள் மீதிருந்த கவர்ச்சி குறையத் தொடங்கியது. புதிய எழுத்தாளர்களும் அவர்களின் வித்தியாசமான படைப்புகளும் அறிமுகமானது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். படிப்படியாக வாசகர்களின் வரவேற்பு குறையத் தொடங்கியது. 1905-ம் ஆண்டு நீரிழிவு நோய் பாதிப்பால் வெர்ன் இறந்தார்.
இளம் பருவ வாசகர்களைப் பிடித்து இழுக்கக் கூடியவை வெர்னின் கதைகள். சராசரி வாசகர்களை மனத்தில் கொண்டே அவர் தனது கதைகளை எழுதியிருக்கிறார். எளிமையான நடை, அவருக்கே உரித்தான கதையமைப்பு, தெளிவான கதைப் போக்கு, ஆவலைத் தூண்டும் சம்பவங்கள் போன்ற விஷயங்களால் வாசகர்கள் கதையுடன் ஒன்றி முன்னேற முடிகிற வாய்ப்பு போன்றவை குறிப்பிடத் தக்க விஷயங்கள். இயந்திர யுகத்தின் இதிகாசக் கதாநாயகனாக அவர் உயர்வதற்கு உதவிய படைப்பு ரகசியங்கள் இவையெல்லாம்தான். விஞ்ஞானமும், கற்பனையும், உண்மையும், சாகசமும் ஒன்றிணைந்த படைப்புகள் அவருடையது. இவரது அதிகமான நாவல்கள் நாடகமாகவும் வடிவம் பெற்றன.
மேற்குறிப்பிட்டவற்றின் மறுபுறம் கவனத்துக்குரியது. இவற்றில் நம்பகத் தன்மை குறைவு என்பது ஒரு சாராரின் வாதம். இந்தக் குறை, இளம்வாசகர்களின் கவனத்துக்குட்படுவதல்ல. கதையில் எப்போதும் ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருப்பதால், படிக்கும் வாசகன் அதை ஒரு குறையாக உணர்வதில்லை. கதாபாத்திரங்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை என்றும் தோன்றலாம். இவரது கதைகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புராண-இதிகாசங்களின் ஆதிக்கமும் தட்டுப்படுகிறது. கடல் பயணமும், காட்டுப் பயணமும், தனிமைத் தீவுகளும், குகைகளும், குகை வழிகளும் மனவியலாளர்களைக் கூடக் கவர்பவை. அதே போல் விஞ்ஞான உண்மைகளை கதைக்கு நடுவே ஆங்காங்கே இணைத்துக் கதையின் நம்பகத்தன்மையை நிலைநாட்டுவதில் கவனமெடுத்துக் கொண்டுள்ளார்.
விஞ்ஞானக் கதைகள் எழுதுபவர் என்ற முறையில் ஷூல் வெர்ன் ஒரு தீர்க்கதரிசியாகவும் தெரிகிறார். அவரது நாவல்களில் கையாளப்பட்டிருக்கிற - அன்று நடைமுறையில் இல்லாத பல பொருள்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. டார்வினின் பரிணாமத் தத்துவத்தை ஒப்புக்கொள்ளாத ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவர் வெர்ன். இருப்பினும் விஞ்ஞான முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த ஆர்வமும், ஈடுபாடும் கவனத்துக்குரியவை. ஒருவேளை அவரது கதைகளில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானக்