Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enbathu Naatkalil Ulagai Sutri
Enbathu Naatkalil Ulagai Sutri
Enbathu Naatkalil Ulagai Sutri
Ebook198 pages1 hour

Enbathu Naatkalil Ulagai Sutri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545801
Enbathu Naatkalil Ulagai Sutri

Read more from Sivan

Related to Enbathu Naatkalil Ulagai Sutri

Related ebooks

Related categories

Reviews for Enbathu Naatkalil Ulagai Sutri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enbathu Naatkalil Ulagai Sutri - Sivan

    http://www.pustaka.co.in

    எண்பது நாட்களில் உலகைச் சுற்றி…

    Yenbathu Natkalil Ulagai Sutri…

    Author:

    சிவன்

    Sivan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஓர் அறிமுகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    ஓர் அறிமுகம்

    ‘விஞ்ஞானக் கதைகள்’ என்ற இலக்கியப் பிரிவின் பிதாமகன் என்று கருதப்படும் ஜூல்ஸ் வெர்னே என்கிற ஷூல் வெர்ன் 1828-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள நான்ட்ஸ் நகரில் பிறந்தவர். அவர் தந்தையார் மத ஆசாரங்களின்படி வாழ்ந்த ஒரு சாதாரண வழக்கறிஞர். நான்ட்ஸ் ஒரு துறைமுக நகரமாக இருந்ததால், குழந்தைப் பருவத்திலிருந்தே வெர்னுக்கு கடலுடன் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் ஏற்பட்டன. அவரது குழந்தைப் பருவத்தில் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு கப்பலில் வேலைக்காரச் சிறுவனாகப் பணிபுரிய ஒப்புக்கொண்டார். வீட்டைவிட்டுச் சென்ற மகனைத் தேடிக் கண்டுபிடித்த அப்பா, அடுத்த துறைமுகம் ஒன்றிலேயே மகனைக் கப்பலிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த அவமானகரமான நிகழ்ச்சிக்குப் பிறகு கற்பனையில் மட்டுமே அந்தச் சிறுவன் நீண்ட கடல் பயணங்களை மேற்கொள்ள நேர்ந்தது. பாரிஸ் நகரில் சட்டப் படிப்பு படிப்பதற்காகச் சேர்க்கப்பட்ட வெர்னுக்கு, அந்தப் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும், பாரிஸ் நகர வாழ்க்கை மிகவும் பிடித்துப்போனது. பையனது மனநிலையை அறிந்த அப்பா, உடனே ஊருக்கு திரும்பி வருமாறு அழைத்தார். ஆனால், வெர்ன் ஊருக்கு திரும்புவதற்கு பதிலாக மாதம் நூறு ஃபிராங்க்குகள் வருமானம் தரக்கூடிய ஒரு வேலையில்-நாடக இயக்குநர் ஒருவரின் காரியதரிசியாகச் சேர்ந்தார்.

    இரண்டு பெண் குழந்தைகளின் தாயான அனோரின் மொரெல் என்ற விதவைப் பெண்மணியை வெர்ன் 1855-ஆம் ஆண்டு திருமணம் புரிந்தார். பாரிஸ் நகரில் மது வகைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த போதிலும், வெர்னின் மனத்தில் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் தணியவே இல்லை! அந்தக் கால கட்டத்திலேயே வெர்ன் சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் என்று சிலவற்றை எழுதினார்.

    இந்தச் சூழ்நிலையில் வெர்னின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. புகைப்பட நிபுணரான ஃபிலிக்ஸ் நாடர் என்பவருடனான நட்புதான் அந்தத் திருப்புமுனைக்குக் காரணம். வாயு நிறைக்கப்பட்ட பலூன்களில் பயணம் செய்து புகைப்படம் எடுப்பதில் தீவிரமான ஆர்வம் கொண்டவர் ஃபிலிக்ஸ். இந்த நோக்கத்துக்கு வசதியாக ஹெலிகாப்டர் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்பதும் ஃபிலிக்ஸின் நீண்ட நாளைய கனவு. வெர்ன் எழுதுவதற்கு இதுவே அடிப்படை. முதலில் அந்தப் பயண அனுபவத்தை டைரிக் குறிப்பு மாதிரி எழுதியிருந்தார். பதிப்பாளர் கேட்டுக் கொண்டதன் பேரில் அதையே வாசகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஒரு கதையாகப் பின்னர் மாற்றினார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘ஒரு பலூனில் ஐந்து வாரங்கள்’ என்பது.

    விசித்திரமான கருப் பொருளை உருவாக்கி, அதில் தேவையான அளவுக்கு விஞ்ஞான உண்மைகளைக் கலந்து, படிப்பவர்களை நம்ப வைப்பது என்பது ஷூல்வெர்ன் கண்டுபிடித்த உத்தி எனலாம். இதுதான் விஞ்ஞானக் கதைகளின் கட்டமைப்பு. இது இலக்கியத்துக்கு ஷூல் வெர்னின் பங்களிப்பு என்றுகூடச் சொல்லலாம். இன்றுவரை விஞ்ஞானக் கதைகளின் இயல்பு இதுதான்.

    வெர்னின் பலூன் கதை மகத்தான வரவேற்பு பெற்றது. அதன் விளைவாகப் பதிப்பாளர் ஒருவர், வெர்னுடன் இருபத்தோரு ஆண்டுகளுக்கு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி ஆண்டு ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு நாவல்களை வெர்ன் எழுதிக் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தால் வெர்ன் எழுதிக் கொண்டே இருந்தார். இப்படித்தான் அவரது பெரும்பாலான நூல்கள் வெளியாகின. எழுத்தாளரான ஷூல் வெர்ன் இறந்த பிறகு கூட ஆறு வருடங்கள் தொடர்ந்து அவரது புதிய புத்தகங்கள் வெளியாகின. அந்த அளவுக்கு எழுதிக் குவித்தவர் வெர்ன். இந்த வரிசையில் அறுபத்தைந்து நாவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆழ்கடலின் அடியில் (20இ000 லீக்ஸ் அண்டர் தி ஸீ) 1870, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் (எ ஜர்னி டு தி சென்டர் ஆஃப் தி எர்த்)-1864, பூமியிலிருந்து ஒரு நிலவுப் பயணம் (ஃபிரம் தி எர்த் டு தி மூன்)-1865, எண்பது நாட்களில் உலகைச் சுற்றி (அரௌண்ட் தி வேர்ல்டு இன் எய்ட்டி டேய்ஸ்)-1873-போன்றவை அவரது குறிப்பிடத் தக்க புகழ்பெற்ற நூல்கள்.

    புத்தக விற்பனை மூலமாகப் பெரிய அளவுக்கு வருமானம் வந்ததால், வசதியான வாழ்க்கைக்காக வெர்ன், ஆமியே என்ற நகருக்குக் குடிபெயர்ந்தார். பிரான்ஸ்-பிரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டபோது, தனது சொந்தப் படகில் பயணம் செய்து, கடற்புறக் காவல் பணியை மேற்கொண்டார். அதிர்ஷ்டவசமாக அதில் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், அவர் தம்பி மகன் துப்பாக்கியால் சுட்டதால் வெர்னின் கால் பாதிக்கப்பட்டது. மனநிலை பாதிப்பு அடைந்த காஸ்ட்டன் அவரைச் சுட்டுவிட்டான்!

    விஞ்ஞான உலகில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் கண்டுபிடிப்பையும் உடனுக்குடன் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார் வெர்ன். அவரது ஐம்பதாண்டு கால இலக்கியப் பணியில், புழக்கத்திலேயே இல்லாத பல புதிய கருவிகளை நாவல்களின் ஊடாகப் படைத்திருக்கிறார். அவரது பிந்தைய கால நாவல்களில் காரும், ரேடியோவும் கூட இடம் பெற்றிருக்கின்றன. அந்தக் கால கட்டத்தில்தான் வெர்னின் எழுத்துக்கள் மீதிருந்த கவர்ச்சி குறையத் தொடங்கியது. புதிய எழுத்தாளர்களும் அவர்களின் வித்தியாசமான படைப்புகளும் அறிமுகமானது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். படிப்படியாக வாசகர்களின் வரவேற்பு குறையத் தொடங்கியது. 1905-ம் ஆண்டு நீரிழிவு நோய் பாதிப்பால் வெர்ன் இறந்தார்.

    இளம் பருவ வாசகர்களைப் பிடித்து இழுக்கக் கூடியவை வெர்னின் கதைகள். சராசரி வாசகர்களை மனத்தில் கொண்டே அவர் தனது கதைகளை எழுதியிருக்கிறார். எளிமையான நடை, அவருக்கே உரித்தான கதையமைப்பு, தெளிவான கதைப் போக்கு, ஆவலைத் தூண்டும் சம்பவங்கள் போன்ற விஷயங்களால் வாசகர்கள் கதையுடன் ஒன்றி முன்னேற முடிகிற வாய்ப்பு போன்றவை குறிப்பிடத் தக்க விஷயங்கள். இயந்திர யுகத்தின் இதிகாசக் கதாநாயகனாக அவர் உயர்வதற்கு உதவிய படைப்பு ரகசியங்கள் இவையெல்லாம்தான். விஞ்ஞானமும், கற்பனையும், உண்மையும், சாகசமும் ஒன்றிணைந்த படைப்புகள் அவருடையவை. இவரது அதிகமான நாவல்கள் நாடகமாகவும் வடிவம் பெற்றன.

    மேற்குறிப்பிட்டவற்றின் மறுபுறம் கவனத்துக்குரியது. இவற்றில் நம்பகத் தன்மை குறைவு என்பது ஒரு சாராரின் வாதம். இந்தக் குறை, இளம்வாசகர்களின் கவனத்துக்குட்படுவதல்ல. கதையில் எப்போதும் ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருப்பதால், படிக்கும் வாசகன் அதை ஒரு குறையாக உணர்வதில்லை. கதாபாத்திரங்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை என்றும் தோன்றலாம். இவரது கதைகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புராண-இதிகாசங்களின் ஆதிக்கமும் தட்டுப்படுகிறது. கடல் பயணமும், காட்டுப் பயணமும், தனிமைத் தீவுகளும், குகைகளும், குகை வழிகளும் மனவியலாளர்களைக் கூடக் கவர்பவை. அதேபோல் விஞ்ஞான உண்மைகளை கதைக்கு நடுவே ஆங்காங்கே இணைத்துக் கதையின் நம்பகத் தன்மையை நிலைநாட்டுவதில் கவனமெடுத்துக் கொண்டுள்ளார்.

    விஞ்ஞானக் கதைகள் எழுதுபவர் என்ற முறையில் ஷூல் வெர்ன் ஒரு தீர்க்கதரிசியாகவும் தெரிகிறார். அவரது நாவல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிற அன்று நடைமுறையில் இல்லாத பல பொருள்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. டார்வினின் பரிணாமத் தத்துவத்தை ஒப்புப்கொள்ளாத ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவர் வெர்ன். இருப்பினும் விஞ்ஞான முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த ஆர்வமும், ஈடுபாடும் கவனத்துக்குரியவை. ஒருவேளை அவரது கதைகளில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் வெகு சாதாரணமாகிப் போனாலும், அதிலுள்ள சாகசத் தன்மை, அறியாமையால் ஏற்படும் ஆர்வக் கவர்ச்சி போன்றவை எந்தக் காலத்திலும் செல்லுபடியாகக் கூடியதென்று கூறலாம். அந்தக் காரணத்தால்தான் ஏறத்தாழ நூற்றி இருபத்தைந்து வருடங்கள் கழிந்த பின்னரும் அவரது கதைகள் உலகின் பல மொழிகளில் விரும்பி வாசிக்கப்படுகிறது. இந்த ஈர்ப்பு, விஞ்ஞான வளர்ச்சி சார்ந்த பெருமிதமும், மனிதக் கற்பனையின் அழகும் எண்பது நாட்களில் உலகைச் சுற்றி-நாவலிலும் உங்களுக்குத் தென்படவே செய்யும். இத்துடன் பூமியிலிருந்து நிலவுக்கு என்ற நாவலும் இதில் இடம் பெற்றுள்ளது.

    சாகசங்கள் நிறைந்த உலகப் பயணத்துடன் துப்புத் துலக்கும் பணியும் உலகைச் சுற்றி எண்பதுநாட்கள் கதையில் இடம் பெறுகிறது. அதே மாதிரி மனிதன் பூமியிலிருந்து மேற்கொள்ளும் நிலவுப்பயணம் இரண்டாவது கதையில் இடம் பெறுகிறது. ஒரு சராசரி வாசகனைக் கவரக்கூடிய எல்லா அம்சங்களும் கொண்ட ஒரு புத்தகம் இது. விமர்சனங்கள் எப்படி இருப்பினும் இலக்கிய உலகம் குறிப்பாக-விஞ்ஞானக் கதையுலகம் மறக்க முடியாத ஒருபெயர் ஷூல் வெர்ன்.

    தோழமையுடன்

    சிவன்

    எண்பது நாட்களில் உலகைச் சுற்றி…

    1

    வருடம்      : கி.பி 1872

    இடம்          : லண்டன்.

    ‘ஒருபோதும் எந்தக் காரியத்திலும் அவசரப்படாதிருத்தல் எனினும், எப்போதும் எதற்கும் தயாராக இருத்தல்’- இதுதான் மிஸ்டர் ஃபிலியாஸ் ஃபோக் என்ற நல்ல மனிதனின் இயல்பு. நேர்மையும் நெறிமுறையும் கொண்ட ஒரு மனிதர். கடுமையான ஒழுங்கும் கட்டுப்பாடுகளும் கொண்டவர். ‘லண்டன் ரீஃபார்ம் கிளப்’பின் முக்கியமான உறுப்பினர்களில் குறிப்பிடத் தக்கவர்.

    பெர்லிங்டன் கார்டன்ஸில் ஏழாம் நம்பர் வீடு, ஃபிலியாஸ் ஃபோகினுடையது. ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் எல்லாவித வாழ்க்கை வசதிகளும் நிறைந்த, ஒதுக்குப் புறமான வீடு. ஒரேயொரு வேலைக்காரர்தான் அவருக்கு. ஆனால், அவன் கடிகார முள்ளைப் போல் நேரந்தவறாமையுடன் முறைப்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதிலும் ஃபோக் பிடிவாதமானவர்.

    ஜேம்ஸ் ஃபாஸ்டர் தான் நீண்ட காலமாக அவரின் வேலைக்காரர். ஆனால், இன்று அதாவது 1872- ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் இரண்டாம் தேதியன்று ஃபாஸ்டரை வேலையிலிருந்து நிறுத்திவிட்டார். காரணம் இல்லாமல் இல்லை. காலையில் சவரம் செய்வதற்கு எண்பத்தாறு டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமுள்ள வெந்நீர்தான் ஃபிலியாஸ் ஃபோகுக்குத் தேவைப்பட்டது. ஜேம்ஸ் ஃபாஸ்டருக்கு இந்த விஷயம் நன்றாகத் தெரியவும் செய்யும். ஆனால், இன்று ஃபாஸ்டர் கொண்டு வந்ததோ எண்பத்து நான்கு டிகிரி சூடுள்ள வெந்நீரை. இந்தக் கவனக்குறைவு, ஃபிலியாஸ் ஃபோகின் நடைமுறையுடன் பொருந்தக் கூடியது அல்ல. எனவே, அவர் தற்போது ஒரு புதிய வேலைக்காரரின் வரவை எதிர்பார்க்கிறார். புதிய நபர் வந்தவுடன் அங்கிருந்த கிளம்பத் தயாராக இருக்கிறார் ஃபாஸ்டர்.

    கதவை யாரோ தட்டும் சத்தம். சரியாக இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு ஜேம்ஸ் ஃபாஸ்டர், ஃபிலியாஸ் ஃபோகின் முன்பாக வந்து நின்றார்.

    புதிய நபர் வந்துவிட்டார்! தகவல் தெரிவித்த ஃபாஸ்டர், உடனே அங்கிருந்து வெளியேறவும் செய்தார்.

    ஏறத்தாழ முப்பது வயதுள்ள இளைஞர் ஒருவர் அந்த அறைக்குள் நுழைந்து, ஃபிலியாஸ் ஃபோருக்கு ‘குட்மார்னிங்!’ கூறினார்.

    அவர், வந்தவரை பாதத்திலிருந்து தலை வரை ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1